Jump to content

பெண்களின் உலக இருபதுக்கு – 20: அரையிறுதியில் அவுஸ்திரேலியா


Recommended Posts

பெண்களின் உலக இருபதுக்கு – 20: அரையிறுதியில் அவுஸ்திரேலியா
 

image_d7090a5acd.jpg

மேற்கிந்தியத் தீவுகளில் இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் பெண்களின் உலக இருபதுக்கு – 20 தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலியா தகுதிபெற்றுள்ளது.

இத்தொடரில் குழு பியில் இடம்பெற்றுள்ள அவுஸ்திரேலியா, தமது முதலாவது போட்டியில் பாகிஸ்தானையும் இரண்டாவது போட்டியில் அயர்லாந்தையும் வென்றிருந்த நிலையில், கயானாவில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற நியூசிலாந்துடனான போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுக் கொண்டது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா: 153/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: அலைஸா ஹீலி 53 (38), றேச்சல் ஹெய்ன்ஸ் ஆ.இ 29 (18), பெத் மூனி 26 (24) ஓட்டங்கள். பந்துவீச்சு: லெய் கஸ்பெரெக் 3/25 [4], சோபி டெவவைன் 2/37 [4])

நியூசிலாந்து: 120/10 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சுஸி பேட்ஸ் 48 (42), கேட்டி மார்ட்டின் 24 (20) ஓட்டங்கள். பந்துவீச்சு: மேகன் ஸ்கூட் 3/12 [3], சோபி மொலினெக்ஸ் 2/20 [3.3], டெலிஸா கிம்மின்ஸ் 2/24 [4])

போட்டியின் நாயகி: அலைஸா ஹீலி

இதேவேளை, இப்போட்டிக்கு முன்பதாக கயானாவில் இன்று அதிகாலை நடைபெற்ற அயர்லாந்துடனான குழு பி போட்டியொன்றில் 38 ஓட்டங்களால் பாகிஸ்தான் வென்றிருந்தது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்

பாகிஸ்தான்: 139/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜாவிரியா கான் ஆ.இ 74 (52) ஓட்டங்கள். பந்துவீச்சு: லூசி ஓ றெய்லி 3/19 [4])

அயர்லாந்து: 101/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: இஸோபல் ஜொய்ஸ் 30 (31), கிளாரி ஷில்லிங்டன் 27 (25) ஓட்டங்கள். பந்துவீச்சு: நஷ்ரா சந்து 2/8 [4], சனா மிர் 2/20 [4], ஐய்மன் அன்வர் 2/25 [4])

போட்டியின் நாயகி: ஜாவிரியா கான்

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/பெண்களின்-உலக-இருபதுக்கு-20-அரையிறுதியில்-அவுஸ்திரேலியா/44-225224

Link to comment
Share on other sites

T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து இலங்கை மகளிர் அணி வெளியேற்றம் (Video)

 

prv_1542426899

மேற்கிந்திய தீவில் நடைபெற்று வரும் ஆறாவது மகளிர் T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து இலங்கை மகளிர் அணி வெளியேறியுள்ளது.

நேற்று (16) கிரோஸ் இஸ்லேட் மைதானத்தில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் 83 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் தோல்வியடைந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அதிரடியாக துடுப்பாடிய ஹெய்லி மெதிவ்ஸ் 36 பந்துகளில் 62 ஓட்டங்களைப் பெற்றார். இலங்கை மகளிர் அணியின் பந்துவீச்சில் ஓசாதி ரணசிங்க, உதேசிகா பிரபோதனி மற்றும் சஷிகலா சிறிவர்தன ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை மகளிர் அணி 17.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 104 ஓட்டங்களை மாத்திரமே பெற்று, 83 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

அணித் தலைவி சமரி அட்டபத்து 44 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். மேற்கிந்திய தீவு அணிசார்பில் ஹெய்லி மெதிவ்ஸ் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், ஆட்ட நாயகியாகவும் தெரிவு செய்யப்பட்டார். (ஸ)
prv_1542426899

http://www.dailyceylon.com/172321

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதன்முறையாக தமிழகத்தில் 10 சதவீத வாக்குகளைப் பெற்ற பாஜக! தமிழ்நாட்டில் முதன்முறையாக 10 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பாஜக பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில், பாஜக 10 சதவீத வாக்குகளை முதல் முறையாக பெற்றுள்ளது. அதன்படி, இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் பாஜக 10.21 சதவீத வாக்குகள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1385958
    • 210 நபர்களின் நிதி மற்றும் சொத்துக்கள் முடக்கம்-அரசாங்கம் நடவடிக்கை! பயங்கரவாத மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 அமைப்புகள் மற்றும் 210 நபர்களின் அனைத்து நிதி மற்றும் சொத்துக்களை முடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 2012 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க ஐக்கிய நாடுகளின் கட்டளைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதனடிப்படையில், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் உள்ளிட்ட 15 தீவிரவாத அமைப்புக்களுக்கும் அவற்றடன் தொடர்புடைய 210 பேரினது நிதி, ஏனைய நிதிச் சொத்துக்களை முடக்கி குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சபை ஒழுங்குவிதிகளின் கீழ், இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவினால் வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், விடுதலைப் புலிகள் அமைப்பு (LTTE), தமிழர் புனர்வாழ்வு அமைப்பு (Tamils Rehabilitation Organisation – TRO), உலக தமிழர் இயக்கம் (WTM), நாடு கடந்த தமிழீழ அரசு (TGTE), உலக தமிழர் நிவாரண நிதியம் (WTRF), தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC) ஆகிய புலம்பெயர் அமைப்புக்கள் முடக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானியின் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், HQ Group, தேசிய தவ்ஹீத் ஜமாத் (NTJ) , ஜமாதே மிலாதே இப்ராஹீம் (JMI), விலயாத் அஸ் செய்லானி (WAS), கனேடியன் தமிழ் தேசிய பேரவை (NCCT), தமிழ் இளைஞர் அமைப்பு (TYO), டருள் அதர் அத்தபவியா, இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம் (SLISM), Save the Pearls போன்ற அமைப்புகளும் முடக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1385906
    • இன்று இப்படித்தான் மக்கள் பலர் சென்று கொண்டிருக்கிறார்கள்........பணத்தை மையப்புள்ளியாக வைத்து சுழலும் இவ்வுலகில் மக்கள் பெரும்பாலும் இப்படித்தான் வாழ்வார்கள்......!  😴
    • கேரளா திருச்சூரில் நடிகர் சுரேஷ் கோபி( பா ஜ க ) வெற்றி 
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.