Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவின் விளையாட்டு அணிகளை புறக்கணிக்குமாறு விடுதலைப் புலிகள் வேண்டுகோள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவின் விளையாட்டு அணிகளை புறக்கணிக்குமாறு விடுதலைப் புலிகள் வேண்டுகோள்

[செவ்வாய்க்கிழமை, 10 ஏப்ரல் 2007, 17:21 ஈழம்] [அ.அருணாசலம்]

"சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அனைத்துலக மன்னிப்புச் சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விழிப்புணர்வு போராட்டத்திற்கு அதரவு அளிப்பதுடன், சிறிலங்காவின் விளையாட்டு அணிகளை முழு அளவில் புறக்கணிக்குமாறு" தமிழீழ விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இத்தகவலை அனைத்துலக ஊடகமான ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவில் அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை அமைப்பதற்கு ஆதரவை திரட்டும் முகமாக அனைத்துலக மன்னிப்புச் சபை 'விதிகளின் அடிப்படையில் விளையாடுங்கள்' எனும் விழிப்புணர்வு போராட்டத்தை நடத்தி வருகின்றது.

இது தொடர்பாக ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திற்கு இன்று கருத்துக்களை வழங்கிய விடுதலைப் புலிகளின் மனித உரிமை தொடர்பகப் பேச்சாளர் நவரூபன் செல்வி தெரிவித்துள்ளதாவது:

"அனைத்துலக மன்னிப்புச் சபையின் நடவடிக்கைகளை நாம் வரவேற்கின்றோம். தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கத்ததினால் மேற்கொள்ளப்பட்டு வரும் கொடுமைகள் தொடர்பாக இது அனைத்துலக மட்டத்திலும், சிங்கள மக்கள் மத்தியிலும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

20070410009ug6.jpg

விடுதலைப் புலிகளின் மனித உரிமை தொடர்பகப் பேச்சாளர் நவரூபன் செல்வி

தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற விடுதலைப் போரின் போது விளையாட்டுக்களை பயன்படுத்தி தென் ஆபிரிக்க வெள்ளை இன மக்களிடையே ஏற்படுத்தப்பட்ட அரசியல் விழிப்புணர்வு நல்ல பலன்களை கொடுத்திருந்தது.

அதே போல அனைத்துலக மன்னிப்புச் சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டம் அனைத்துலக மட்டத்தில் சிறிலங்கா விளையாட்டு அணியினருக்கு எதிரான புறக்கணிப்புக்களை ஏற்படுத்தும் என நாம் நம்புகிறோம்" என்றார் அவர்.

எனினும் "சிறிலங்காவின் துடுப்பாட்ட அணியை குறிவைத்து போராட்டத்தை நடத்தவில்லை" என அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

மன்னிப்புச் சபையின் நடவடிக்கைகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் மற்றும் அதன் துடுப்பாட்ட அணியின் நிர்வாக பிரிவு ஆகியன அனைத்துலக துடுப்பாட்ட சபையில் முறைப்பாடுகளை செய்துள்ளன.

இதனிடையே மன்னிப்புச் சபை துடுப்பாட்டப் போட்டியை தனது விழிப்புணர்வு போராட்டத்திற்கு பயன்படுத்துவது முற்போக்குவாதிகளிடம் கோபத்தை உண்டு பண்ணுவதுடன், சிறிலங்கா அரசாங்கம் மேலும் கடும் போக்கான நிலைப்பட்டை எடுக்கவும் வழி வகுக்காலம் என ஊடகவியலாளர்கள், மனித உரிமைவாதிகளை கொண்ட சுதந்திர ஊடக இயக்கம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது.

சிறிலங்காவில் துடுப்பாட்டம் மிகவும் பிரபல்யமான விளையாட்டு, அது அரசியல் மற்றும் இன பாகுபாட்டை ஊடறுத்துச் செல்வதுண்டு. எனவே மன்னிப்புச் சபையின் நடவடிக்கை சிறிலங்காவில் உள்ள மனித உரிமை செயற்பாடுகளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என அது மேலும் தெரிவித்துள்ளது.

புதினம்

Edited by கறுப்பி

இலங்கைக்கு சப்போட் பண்ணும் எம்மவர்களுக்கு இந்த செய்தி சாட்டை அடி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கைக்கு சப்போட் பண்ணும் எம்மவர்களுக்கு இந்த செய்தி சாட்டை அடி

இனவெறி அரசை வழிக்கு கொண்டுவர விளையாட்டு என்றாலும் விடக்கூடாது

இதே போல தான் தென் ஆபிரிக்காவை வழிக்கு கொண்டுவர முன்பு செய்தார்கள்

அதுக்கு எதிராக இலங்கை தென் ஆபிரிக்காவில் போய் விளையாடியவர்கள் தானே

இதற்கான பதிலடி ஒருதடவை நியூஸிலாந்தில் தமிழர்களால் கொடுக்கப்பட்டது பலருக்கும் ஞாபகமிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கான பதிலடி ஒருதடவை நியூஸிலாந்தில் தமிழர்களால் கொடுக்கப்பட்டது பலருக்கும் ஞாபகமிருக்கலாம்.

இவ்வருடம் அவுஸ்திரெலியாவுக்கு இலங்கை அணி விளையாட வரவுள்ளது. அவுஸ்திரெலியாத் தமிழர்கள் என்ன செய்யப்போகினம். மானங்கெட்டு சிங்கக்கொடியுடன் இம்முறையும் செல்லப்போகினமா?

உலகக் கிண்ண போட்டி காலத்தில் மன்னிப்புசபை மேற்கொண்டுள்ள பிரசாரத்துக்கு புலிகள் வரவேற்பு

இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிக் காலத்தில் சர்வதேச மன்னிப்புச் சபை மேற்கொண்டுவரும் உலகளாவிய ரீதியிலான பிரசாரத்தை வரவேற்றுள்ள விடுதலைப் புலிகள், இலங்கைக்கு எதிராக அனைத்து விளையாட்டுகளிலும் முழுப் பகிஷ்கரிப்பை மேற்கொள்வதை விஸ்தரிக்க வேண்டுமெனவும் கேட்டுள்ளனர்.

இலங்கையில் மிக மோசமாக இடம்பெற்று வரும் மனித உரிமை மீறலைக் கட்டுப்படுத்துமொரு நடவடிக்கையாகவே மேற்கிந்தியாவில் நடைபெறும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து, `விதிக்கமைய விளையாடவும்' எனும் தொனிப் பொருளில் சர்வதேச மன்னிப்புச் சபை இந்த பிரசாரத்தில் இறங்கியுள்ளது.

இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களைக் கண்காணிப்பதற்கு இலங்கை அரசு, விடுதலைப் புலிகள் மற்றும் ஆயுதக் குழுக்கள் சர்வதேச கண்காணிப்பாளர்களை அனுமதிக்க வேண்டுமெனக் கோரி வருகிறது.

சர்வதேச மன்னிப்புச் சபை மேற்கொண்டுவரும் இந்தப் பிரசாரத்தை வரவேற்றுள்ள, புலிகளின் மனிதாபிமான விவகாரங்கள் தொடர்பான பேச்சாளர் செல்வி நவரூபன் இது குறித்து கூறுகையில்;

சர்வதேச ரீதியில் விழிப்புணர்வொன்றை ஏற்படுத்துவதற்காக மன்னிப்புச்சபையால் மேற்கொள்ளப்படும் இந்தப் பிரசாரமானது, தமிழ் மக்களுக்கு எதிராக தங்கள் அரசாங்கம் மேற்கொண்டுவரும் கொடூரச் செயல்களை சிங்கள மக்களும் உணரச் செய்யும்.

தென்னாபிரிக்காவில் கறுப்பின மக்களுக்கு எதிராக வெள்ளையர் அரசாங்கம் மேற்கொண்ட இன ஒடுக்கல்களை, விளையாட்டை பயன்படுத்தியே கறுப்பினத்தவர்கள் உலகளாவிய ரீதியில் விழிப்புணர்வொன்றை ஏற்படுத்தியிருந்தனர்.

அதேபோன்று சர்வதேச மன்னிப்புச் சபை இன்று மேற்கொண்டுள்ள பிரசாரமானது, இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக சர்வதேச ரீதியில் பகிஷ்கரிப்பை கொண்டுவருமெனக் கருதுகிறோம்.

தங்கள் அரசாங்கங்களின் அட்டூழியங்களை கிரிக்கெட் மூலம் மறைக்கலாமென எவராவது நினைத்தால் அது முழுமையாக நிராகரிக்கப்பட்டு விடுமென்பதையும் இது உணர்த்துவதாகவும் தெரிவித்தார்.

thinakkural.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்வருடம் அவுஸ்திரெலியாவுக்கு இலங்கை அணி விளையாட வரவுள்ளது. அவுஸ்திரெலியாத் தமிழர்கள் என்ன செய்யப்போகினம். மானங்கெட்டு சிங்கக்கொடியுடன் இம்முறையும் செல்லப்போகினமா?

சிங்ககொடி கொண்டு செல்வதற்கு பதிலாக புலிக்கொடி கொண்டு சென்று அவர்கள் முன்னால் நில்லுங்கள். தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும்போது எமது கொடியும் தெரியும். சிங்களவர்களிற்கும் வயித்தெரிச்சலாக இருக்கும். ஆனால் யாரும் இப்படி பண்ண மாட்டீர்கள் என்து தெரிந்த விடயமே!!

உந்த சிங்கள அணியள ஒருக்கா இங்கால் பக்கம் வரச்சொல்லுங்கப்பா!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.