Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவிலிருந்து பிரிட்டன் சுரண்டிச் சென்ற பணம் எவ்வளவு?!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிலிருந்து பிரிட்டன் சுரண்டிச் சென்ற பணம் எவ்வளவு?!

பிரிட்டன், இந்தியாவிலிருந்து சுரண்டிச் சென்ற செல்வத்தை தற்போது திரும்பச் செலுத்த நினைத்தால், அதன் சாம்ராஜ்யமே ஆட்டம் கண்டுவிடும்.

பிரிட்டன், ஏறக்குறைய 200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட நிலையில், அந்தக் காலகட்டத்தில் பெரும்பாலான இந்தியர்கள் அனுபவித்தது கடுமையான வறுமையையும் பஞ்சத்தையும்தான். அதே சமயம் இந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் வளத்தையும் செல்வத்தையும் சுரண்டி, பிரிட்டிஷார் தங்கள் நாட்டுக்குக் கொண்டு சென்றனர். அவ்வாறு பிரிட்டன், இந்தியாவிலிருந்து சுரண்டிச் சென்ற செல்வத்தை பிரிட்டன் தற்போது திரும்பச் செலுத்த நினைத்தால், அதன் சாம்ராஜ்யமே ஆட்டம் கண்டுவிடும் என்று சொல்லி அதிரவைக்கிறார் பிரபல பொருளாதார நிபுணர் உட்ஸா பட்நாயக். 

பிரிட்டன் காலனி ஆதிக்கம்

இந்தியாவில் பிரிட்டனின் காலனி ஆதிக்கம் நிலவிய காலகட்டத்தில் காலனி இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே நிலவிய நிதி உறவுகள் குறித்து மிக ஆழமாக ஆராய்ச்சியை மேற்கொண்டவர் இந்த உட்ஸா பட்நாயக். 

 

``இந்தியாவிலிருந்து பிரிட்டன் வெளியேறி 70 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டபோதிலும், காலனி ஆதிக்கத்தின் வடுக்கள் இன்னமும் அகன்று விடவில்லை. 1858 லிருந்து 1947 -ம் ஆண்டு வரைக்கும் இந்தியாவில் பிரிட்டன் ஆட்சி நிலவியதாக வரலாறு கூறுகிறது என்றாலும், 1765 முதல் 1938 வரையிலான காலகட்டத்தில்தான் அவர்களது ஆதிக்கம் உச்சத்தில் இருந்தது. அந்த 173 ஆண்டுகளாக இந்தியாவின் வளங்களைச் சூறையாடி, அவர்கள் அள்ளிக்கொண்டு சென்ற செல்வத்தின் மதிப்பு ஏறக்குறைய 9.2 டிரில்லியன் பவுண்டுகள் (45 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்). இந்திய மதிப்பில் இது கிட்டத்தட்ட ஏழாயிரத்து எழுநூறு லட்சம் கோடி ரூபாய்.

இந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்பட்ட உபரி ஏற்றுமதியை, இன்றைய மதிப்பில் 5 சதவிகித வட்டி விகிதத்தோடு கணக்கிட்டால் வரும் இந்தப் பெருந்தொகை, தற்போதைய பிரிட்டனின் 2018-ம் ஆண்டு ஜிடிபி விகிதமான 3 டிரில்லியன் டாலரைவிட அதிகம். இந்தியாவிலிருந்து சுரண்டிச் சென்ற செல்வத்தை பிரிட்டன் தற்போது திரும்பச் செலுத்த நினைத்தால், அதன் சாம்ராஜ்யமே ஆட்டம் கண்டுவிடும்" என்று கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அண்மையில் தாக்கல் செய்த தனது ஆராய்ச்சிக் கட்டுரையில் தெரிவித்துள்ளார் உட்ஸா பட்நாயக். இந்தக் கட்டுரை அந்தப் பல்கலைக்கழகத்தின் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. 

`இந்தியாவிலிருந்து தாராளமாகச் சுரண்டப்பட்ட பொருள்கள் மூலம், தங்கள் நாட்டின் தங்க இருப்பையும் அந்நியச் செலாவணியையும் உயர்த்திக் கொண்டனர். இந்தியாவிலிருந்து உலகளாவிய ஏற்றுமதியாகக் கிடைத்த உபரி வருவாய் அனைத்தும் லண்டனில் இருந்த இந்தியாவுக்கான தலைமைச் செயலாளரது கணக்குக்குச் சென்றது. பின், அதிலிருந்து ஒரு குண்டு மணி தங்கமோ அல்லது நிதியோ இந்தியர்களுக்குத் திரும்பக் கொடுக்கப்படவே இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார் உட்ஸா.

அயல் நாட்டு அந்நியச் செலாவணியை உயர்த்த உழைத்த மக்களுக்கு, அவர்களிடமிருந்து பிடுங்கப்பட்ட வரிப் பணத்திலிருந்தே சொற்பமான கூலி வழங்கப்பட்டது. மக்களிடமிருந்து பெறப்பட்ட வரிப் பணம் அனைத்தும் மக்களின் நலன்களுக்காகச் செலவிடப்படாமல் இறக்குமதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.  அபரிமிதமாக வகுக்கப்பட்ட பட்ஜெட், நாட்டின் வருவாய் மதிப்பைப் பாதித்தது. இது விவசாயிகளின் வயிற்றைச் சுருக்கிக் காய வைத்தது. 1946-ல் இந்தியா சந்தித்த தனிநபர் உணவு பற்றாக்குறையை, இன்றளவும் தெற்குப் பகுதிகளில் எந்த நாடும் சந்தித்ததில்லை என்றும் தனது ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் உட்ஸா.

 

உட்ஸா ப்ட்நாயக்

``1900 முதல் 1945 - 46-ம் ஆண்டு வரை இந்தியாவின் தனிநபர் வருவாய், ஏறக்குறைய ஒரே சீராக இருந்தது. 1900-02-ல் இந்தியரின் தனிநபர் வருவாய் 196.1 ரூபாயாக இருந்தது. அதுவே 1945-46-ல், அதாவது இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஓராண்டுக்கு முன்னர், 201.9 ரூபாயாக இருந்தது. மேற்கூறிய காலகட்டங்களில் இந்தியரின் தனிநபர் வருவாய் அதிகபட்சமாக 223.80 ரூபாய் என்ற அளவுக்கு அதிகரித்தது 1930 -32-ம் ஆண்டுகளில்தான். 

இந்தியாவை ஆண்ட காலத்தில் பிரிட்டிஷார் ஒவ்வோர் ஆண்டும், மத்திய பட்ஜெட்டின் 26 முதல் 36 சதவிகிதத்துக்கு ஈடான செல்வத்தை இங்கிருந்து சுரண்டிக் கொண்டு சென்றனர். இதுதான், இந்தியாவை வளர்ந்த நாட்டை நோக்கிச் செல்லவிடாமல் மிகவும் பின் தங்கவைத்தது. இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்குச் சுரண்டிக் கொண்டு செல்லப்பட்ட செல்வங்கள் மட்டும் அப்படியே இங்கேயே இருந்திருந்தால், இந்தியா சுகாதாரத்திலும், சமூக நலன்களிலும் மிகவும் சிறந்து விளங்கி இருக்கும். 

தற்போது ஒரு நாட்டில் பறவைக் காய்ச்சல் ஏற்பட்டால் எப்படிக் கொத்துக் கொத்தாக உயிரிழப்புகள் ஏற்பட்டதோ அப்படித்தான், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்தியர்கள் ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் பிற தொற்று நோய்கள் போன்றவற்றால் மடிந்தனர். இதன் காரணமாக, 1911-ம் ஆண்டுவாக்கில் இந்தியர்களின் சராசரி வாழ்நாள் வெறும் 22 வயதாகவே இருந்தது. 

இந்தியாவில் காலனி ஆதிக்கம் நிலவிய காலகட்டத்தில் பிரிட்டன், உணவு தானியங்களை அதிக அளவுக்கு ஏற்றுமதி செய்ததோடு, அதிகமான வரி விதிப்பையும் செய்தது. இதனால் இந்தியாவின் வாங்கும் திறன் குறைந்து பஞ்சம் நிலவியது. 1900-ம் ஆண்டில் தனி நபரின் ஒரு நாளைய உணவுத் தேவை 200 கிராமாக இருந்த நிலையில், இரண்டாம் உலகப்போர் நடந்த 1946-ம் ஆண்டு காலகட்டத்தில், 137 கிராமாகச் சுருங்கியது. இது, ஒரு தனி மனிதனின் வாங்கும் திறனை கடுமையாகப் பாதித்தது. நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடி, தனிநபரின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத சூழலை ஏற்படுத்தி, இந்திய மக்கள் மத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தியது. 

உணவு பஞ்சம்

ஏறக்குறைய விடுதலை பெறப்போகும் காலகட்டத்தில் இந்தியா அப்போது இருந்த நிலையில், சமூகக் காரணிகளை மிக மோசமான நிலைக்குத் தள்ளிவிட்டு இந்தியாவிடம் சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டு வெளியேறினர் பிரிட்டிஷார்" என்று அதில் மேலும் தெரிவித்துள்ளார் உட்ஸா பட்நாயக். 

https://www.vikatan.com/news/coverstory/142748-how-much-money-did-britain-take-away-from-india.html?fbclid=IwAR0gUVCaushXwj5xsX4_thF2ueKllDeW5qv908y90xad0nlNsFfy37kyzuE

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டன்காரன் சுரண்டிக் கொண்டு போனது மட்டும் தான் தெரியுது.
அவன் போட்டுவிட்டுப் போன தெருக்கள் பாலங்கள் அணைகள் புகையிரதபாதை என்று நீண்ட பட்டியல்
இத்தனையும் அவன் புண்ணியத்திலேயே இன்னமும் ஓடுது.
கிரிக்கட் விளையாடுவதென்றால் கூட அவன் தான் வந்து முதலாளியாக நிற்க வேண்டும்.
இன்னமும் எத்தனையோ கிராமங்கள் அவன் விட்டுட்டுப் போனபடியே தான் இருக்கிறது.
அவன் இன்னமும் இருந்திருந்தா முழுமக்களுக்குமே கக்கூஸ் என்றாலும் கட்டிக் கொடுத்திருப்பான்.
சில நாட்டு கடற்கரையில் மீனவர்களுக்காக குறைந்த செலவில் வள்ளங்கள் கட்டுவதற்காக எப்படியான மேடைகள் போட்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் அரைவாசி இடங்கள் அவன் விட்டுட்டுப் போனபடியே இருக்கிறது.

அவன் வேற்று நாட்டுக்காரன் கொண்டு போட்டான் என்று ஒப்பாரி வைக்கிறீர்களே?
இப்போது உள்ளவர்கள் தண்ணீர் காடு மலை என்று முழு கனிமவளத்தையும் தோண்டி எடுத்து முழு நாட்டையும் மனிதகுலமே வாழ முடியாமல் செய்து கொண்டிருக்கிறானே? அதைப்பற்றி எப்போதாவது கவலைப்பட்டதுண்டோ?

இது இந்தியாவுக்கு மாத்திரமல்ல இலங்கைக்கும் பொருந்தும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

பிரிட்டன்காரன் சுரண்டிக் கொண்டு போனது மட்டும் தான் தெரியுது.
அவன் போட்டுவிட்டுப் போன தெருக்கள் பாலங்கள் அணைகள் புகையிரதபாதை என்று நீண்ட பட்டியல்
இத்தனையும் அவன் புண்ணியத்திலேயே இன்னமும் ஓடுது.
கிரிக்கட் விளையாடுவதென்றால் கூட அவன் தான் வந்து முதலாளியாக நிற்க வேண்டும்.
இன்னமும் எத்தனையோ கிராமங்கள் அவன் விட்டுட்டுப் போனபடியே தான் இருக்கிறது.
அவன் இன்னமும் இருந்திருந்தா முழுமக்களுக்குமே கக்கூஸ் என்றாலும் கட்டிக் கொடுத்திருப்பான்.
சில நாட்டு கடற்கரையில் மீனவர்களுக்காக குறைந்த செலவில் வள்ளங்கள் கட்டுவதற்காக எப்படியான மேடைகள் போட்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் அரைவாசி இடங்கள் அவன் விட்டுட்டுப் போனபடியே இருக்கிறது.

அவன் வேற்று நாட்டுக்காரன் கொண்டு போட்டான் என்று ஒப்பாரி வைக்கிறீர்களே?
இப்போது உள்ளவர்கள் தண்ணீர் காடு மலை என்று முழு கனிமவளத்தையும் தோண்டி எடுத்து முழு நாட்டையும் மனிதகுலமே வாழ முடியாமல் செய்து கொண்டிருக்கிறானே? அதைப்பற்றி எப்போதாவது கவலைப்பட்டதுண்டோ?

இது இந்தியாவுக்கு மாத்திரமல்ல இலங்கைக்கும் பொருந்தும்.

ஒவ்வொருவரும் சும்மா ஏதாவது சொல்லி அலம்பறை பணண வேண்டியது. இப்படித்தான் சசி தரூர் என்பவர் வந்து பிரிட்டிஸ்காரர் வரமுன்னர் இந்தியாவின் வளர்ச்சிவீதம் 23.6. போகும் போது 6.1 வீதம் என்று அளந்து விட்டார். பிரதமர் மோடி முதல் எல்லாரும் அவரை, ஆகா, ஓகோ என்று புகழ்ந்தார்கள்.

பிரிட்டிஸ்காரன் வரும் போது இந்தியா என்ற நாடே இல்லை. பிறகு எங்க இருந்து வளர்ச்சிவீதம் அவருக்கு கிடைத்தது என்றால் கப்சிப்.

பிரிட்டிஸ்காரன் வராமல் இருந்திருந்தால், மொகாலய இஸ்லாமியர்கள், கொண்டு போயிருப்பார்கள். கைதராபாத் வரை தெற்கே பரவி வந்தார்கள்.... கைதர் அலி, திப்பு சுல்தான், மைசூர் வரையும், நவாப்கள் மதுரைப் பக்கம் கூட வந்தார்கள்.

வெள்ளையன் வந்திராவிடில்.... இந்துமதத்தை சுவாகா பண்ணி இருக்கும் அல்லாவின் அருள்.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.