Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாலையில் நடப்பது யாரு ? இதனால்தான் இவர் ராஜா ..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாலையில் நடப்பது யார்னு பாருங்க.. இதனால்தான் இவர் ராஜா !!

திருவண்ணாமலை: அங்கே வேற யாராவது இருந்தால் எகிறி ஆட்டமே போட்டிருப்பார்கள்!! ஆனால் வந்தது இவராயிற்றே?!

திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவின் ஆறாம் நாள் அது. நகரெங்கும் தெரு தெருவாக போலீஸ் குவிக்கப்பட்டு இருக்கிறது. நேரம் மதியத்திற்கு மேல் ஆகிவிட்டது. கோயில் பக்கம் இருக்கிற அண்ணாசாலை அருகே ஒரு கார் வந்து நிற்கிறது.

உச்சக்கட்ட டென்ஷனில் இருந்த போலீசார், ம்ஹூம்... இதுக்கு மேல போகக்கூடாது. பெர்மிஷன் கிடையாது. அப்படியே வண்டியை நிறுத்துங்க என்று எச்சரிக்கிறார்கள். உடனே ஒருவர் காரிலிருந்து இறங்கி வந்து அந்த போலீசாரின் காதில் உள்ளே இருப்பவரை பற்றி சொல்கிறார்.

ilayaraja0514-1543298571.jpg

இசைஞானி

கொளுத்தும் வெயிலில் பந்தோபஸ்த்தில் கத்தி கொண்டிருந்த போலீசாரோ எதையுமே காதில் வாங்கவே இல்லை. உடனே அந்த கார் கதவு திறக்கிறது. காரில் உட்கார்ந்திருந்தவர் தெருவில் நடக்க ஆரம்பித்துவிட்டார். பளிச்சென வெள்ளை உடை உடுத்தி மக்களோடு மக்களாக நடந்து சென்று கொண்டே இருந்தவர் இசைஞானி இளையராஜாதான்.

கவலைப்படவில்லை

ரோடில் இறங்கி நடந்தார் .. எதை பற்றியும் கவலைப்படவில்லை.. யாரைப் பற்றியும் யோசிக்கவில்லை... பொதுமக்கள், நெரிசல், கூட்டம், தள்ளு முள்ளு, வெயில், என ஒன்றை பற்றியும் சிந்திக்கவில்லை. ரோடில் நடந்து கொண்டே இருந்தார். அப்படி அவர் ரோடில் இறங்கி நடக்க ஆரம்பித்தவுடன்தான் போலீசாருக்கு தெரிந்தது காதில் ஒருத்தர் வந்து பேசிவிட்டு போனது.

சொன்னார்கள் வருத்தம்

போலீசுக்கு தர்ம சங்கடமாக போய்விட்டது. இப்படியே நடந்து ரமணாஷ்ரமம் வரை சென்றுவிட்டார் இளையராஜா. விஷயம் காவல்துறை மேலிடத்துக்கு பறந்தது. தகவலறிந்து ஓடிவந்தார்கள் . பெரிய தவறு செய்துவிட்டதுபோல புழுங்கினார்கள். பிறகு காத்திருந்து இசைஞானியை நேரில் சந்திந்து வருத்தம் சொன்னார்கள்.

எளிமையையே சுவாசித்தவர் 

ஆனால் இதையெல்லாம் இளையராஜா ஒரு பிரச்சனை ஆக்குவாரா என்ன? எளிமையிலேயே பிறந்து, எளிமையையே பருகி... எளிமையையே சுவாசித்த இளையராஜா இதுபோன்ற விஷயங்களை எப்படி பெரிதுபடுத்துவார் ? இதுவே கட்சிக்காரர்களாக இருக்கட்டுமே? அந்த அண்ணாசாலை அந்நேரம் என்னாயிருக்குமோ தெரியாது !!

https://tamil.oneindia.com/news/thiruvannamalai/isaignani-ilayaraja-thiruvannamalai-road/articlecontent-pf339012-335160.html

டிஸ்கி :

கையில் நாலு காசு , தெரு வார்டு கவுன்சிலர் பதவி வந்தவுடன் பாற்சுனர் , இனோவோ காரில் எனக்கு அவனை தெரியும் இவனை தெரியும் என அலப்பறை செய்யும் அரசியல்வாதிகளோடு ஒப்பிடுகையில் இசைஞானியின் செயல் பாராட்டுக்குரியது .?

 

  • கருத்துக்கள உறவுகள்

ராஜா சார் கோயிலுக்கு நடந்து வருவதாக நேர்த்திக் கடன் வைத்திருப்பார்  
 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே வந்து சொல்லக்கூடிய அளவுக்கு இந்த சம்பவத்தில் என்ன செய்தியிருக்கிறது என்று புரியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.