Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்சில் பயங்கரவாத தாக்குதல் - மூவர் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் பயங்கரவாத தாக்குதல் - மூவர் பலி

பிரான்சின் ஸ்டிராஸ்போக் நகரில் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

ஸ்டிராஸ்பேர்க் நகரின் கிறிஸ்மஸ் சந்தைக்கு அருகில் இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட பகுதியி;ல் பெருமளவு மக்கள்  காணப்பட்ட தருணத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கி தாக்குதலை மேற்கொண்டவரை தங்களிற்கு நன்கு தெரியும் என குறிப்பிட்டுள்ள காவல்துறையினர்  அவர் இரு தடவைகள் பாதுகாப்பு படையினருடன் மோதலில் ஈடுபட்ட பின்னர் தப்பியோடியுள்ளார் என தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் நகரின் மூன்று இடங்களில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார் என  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்  தாக்குதலின் போது காயமடைந்து வாகனமொன்றில் ஏறி தப்பிச் சென்றுள்ளார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட நபர் தாக்குதல் இடம்பெற்ற நகரத்தில் பிறந்தவர் ஏற்கனவே பொலிஸார் பயங்கரவாத தொடர்புகள் குறித்து அவர் மேல் சந்தேகம் கொண்டிருந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

france_attack5.jpg

சந்தேக நபரின் தொடர்மாடியை பொலிஸார் சோதனையிட்டவேளை அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார் வீட்டிலிருந்து மூன்று கைக்குண்டுகளை மீட்டுள்ளோம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மூவர் கொல்லப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ள காவல்துறையினர் எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது சந்தேகநபரை தேடி நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்

அனைத்து கிறிஸ்மஸ் சந்தைகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

http://www.virakesari.lk/article/46206

 

  • கருத்துக்கள உறவுகள்

நத்தார் கெண்டாட்டங்களை பாதுகப்பாக கொண்டாட வேண்டும் மக்கள் கூடும் இடங்களில் இப்படியான தாக்குதல் நடத்தி மக்களின் உயிரை பறிக்கும் இந்த கும்பல்கள் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
39 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நத்தார் கெண்டாட்டங்களை பாதுகப்பாக கொண்டாட வேண்டும் மக்கள் கூடும் இடங்களில் இப்படியான தாக்குதல் நடத்தி மக்களின் உயிரை பறிக்கும் இந்த கும்பல்கள் 

Sicherheitsbehörden warnen:: StraÃburg-Attentäter könnte nach Deutschland fliehen

படத்திலை இருக்கிற ஆளைத்தான் தேடினமாம்.... ஆள் முஸ்லீம் எண்டது வேறை விசயம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

Sicherheitsbehörden warnen:: StraÃburg-Attentäter könnte nach Deutschland fliehen

படத்திலை இருக்கிற ஆளைத்தான் தேடினமாம்.... ஆள் முஸ்லீம் எண்டது வேறை விசயம்.

ம்ம் போன வருடமும் தாக்குதல் நடந்த ஞாபகம் எதுக்கும் வெளிநாடுகளில் வசிக்கும் நம்ம ஆட்களும் மக்கள் கூடும் இடங்களில் கவனமாக  இருங்கள்

நீங்கள் பறவாயில்லை சாமி எப்படி சுட்டாலும் வெட்டி வெட்டி ஓடும் ஆள் ஆச்சே:grin: 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, தனிக்காட்டு ராஜா said:

ம்ம் போன வருடமும் தாக்குதல் நடந்த ஞாபகம் எதுக்கும் வெளிநாடுகளில் வசிக்கும் நம்ம ஆட்களும் மக்கள் கூடும் இடங்களில் கவனமாக  இருங்கள்

நீங்கள் பறவாயில்லை சாமி எப்படி சுட்டாலும் வெட்டி வெட்டி ஓடும் ஆள் ஆச்சே:grin: 

இஞ்ச......உந்த நக்கல்தானே வேண்டாம் எண்டுறது...:grin:

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

இஞ்ச......உந்த நக்கல்தானே வேண்டாம் எண்டுறது...:grin:

கோச்சுக்காதீங்க செல்லம் bbm-lucu-telur-ayam.gif

  • கருத்துக்கள உறவுகள்
On 12/12/2018 at 11:43 AM, குமாரசாமி said:

Sicherheitsbehörden warnen:: StraÃburg-Attentäter könnte nach Deutschland fliehen

படத்திலை இருக்கிற ஆளைத்தான் தேடினமாம்.... ஆள் முஸ்லீம் எண்டது வேறை விசயம்.

French-special-forces-secure-720x431.jpg

ஸ்ட்ராஸ்பேர்க் துப்பாக்கிதாரி பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்!

பிரான்ஸின் – ஸ்ட்ராஸ்பர்க் நகரில் உள்ள கிறிஸ்ட்மஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு நடத்தி மூன்று பேரை கொலை செய்த செரிஃப் செகாட் என்ற நபர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பிரான்ஸ் உள்விவகார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த நபர், சிறையில் இருந்தபோது தீவிர இஸ்லாமிய வாதியாக செயற்பட்டு வந்துள்ளார்.

சந்தேகநபர் மறைந்திருந்ததாக கருதப்படும் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி உள்துறை அமைச்சர் கிறிஸ்டோபே காஸ்டனர் தெரிவிக்கையில், மூன்று பொலிஸ் அதிகாரிகள் ஸ்ட்ராஸ்பர்க் பகுதியில் உள்ள நியுடோஃவ் – ரூ டூ லஸார்ட் பிரதேசத்தில் சுற்றிவளைத்து தேடுதல் மேற்கொண்ட போதே சந்தேகநபரை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்தார்.

இதன்போது. குறித்த நபர் தப்பிக்க முயற்சித்ததுடன், பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த போது பொலிஸார் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதன்பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற உள்துறை அமைச்சர் இந்த தகவல்களை ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

துப்பாக்கிதாரியை தேடும் முயற்சியில் நூற்றுக்கணக்கான பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நேற்று முன்தினம் தொடக்கம் பாரிய தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போதும் நேற்று இரவு வரை அது சாத்தியமாகவில்லை.

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய செகாட்டின் உறவினர்கள் 5 பேர்வரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் செகாட்டின் பெற்றோர் மற்றும் அவரது இரண்டு சகோதரர்களும் உள்ளடங்குகின்றனர்.

http://athavannews.com/ஸ்ட்ராஸ்பேர்க்-துப்பாக-2/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.