Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருந்தவே மாட்டோமா?

Featured Replies

திருந்தவே மாட்டோமா?

அழகு தமிழில - தலைப்புக்கள்! மாற்றம்...!!

அழகாதான் இருக்கு..........!!!

பிச்சிட்டோம்தான் - !!!

ஆனா?.............

குழுமங்களும்...

நிர்வாகத்தின் - நியமனமும்...

அதனூடு புடுங்குப்பாடும்...................

நல்லாவா இருக்கு?

ஒரு கட்டமைப்புக்கு - ஒழுங்கு படுத்தலுக்கு... உதவி தேவைதான்...

ஆனா - அதை உங்களுக்குள்ளையே - தீர்மானித்துவிட்டு

நிர்வாகம்..செய்திருக்க கூடாதா?

வெளிப்படையா சொல்லணுமா?

அதுக்கு சிலர் வாக்கெடுப்பும் - கருத்தும் - கவலையும் ........

சரியாதான் இருக்குமா?

இது என்ன பாராளுமன்றமா?

நியமனமும் - ஆமோதிப்பதும் - அதை மறுப்பதும்?

ஒரே பள்ளிக்கூடத்தில ...கணிதம் வர்த்தகம்னு ....

பிரிவு... பிறகு ஊர்..வட்டாரம்....மாவட்டம்....மாகா

கருத்துக்களத்தில் புடுங்குப்பாடுகள் இருக்கவே செய்யும். அதில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

ஆனால்

சிலர் கருத்துக்களுக்காக வாதிடுகிறார்கள். சிலர் ஆக்களுக்காக வாதிடுகிறார்கள்.

அதைவிட நிர்வாகம் அமைக்கும் குழுக்களை விட யாழ்களத்தில் ஏற்கனவே குழுக்கள் இருப்பதாகவே எனக்கு படுகிறது.

வட்டம் மாவட்டம் என்று சொன்னிங்கள் அண்ணா. அதைப்பற்றி தெளிவான கருத்தை இன்னொரு முறை எழுதுகிறன். குடும்பம் என்பது முதலாவது வட்டம் அதில் அன்பாகவும் உண்மையாகவும் இருப்பவர்கள்தான் அதற்கு அடுத்து வரும் வட்டங்களிலும் உண்மையாக இருப்பார்கள் என்பது எனது கணிப்பு.

வர்ணன் அண்ணா,

சில நேரங்களில் புதியவர்களையும், என்னை போண்ற தமிழீலம் அல்லாத மக்களையும் தமிழீதிர்க்கான போரட்டத்தில் வழு சேர்க்க இது போண்ற மாற்றங்களும், புதுமைகளும், வரலாறு சம்மந்தமான க்ருத்தாடல்களும் மிகவும் அவசியம்.

நன்றி

Edited by வெங்கட்

தவறுகளைச் சுட்டிக்காட்டினால் நாம் நிச்சயம் திருந்துவோம். திருந்த மாட்டோம் என்று சொல்வதற்கில்லை!

அதுசரி, ஏன் இப்படி ஆளாளுக்கு ஒரு புதிய தலைப்பினை திறந்து அண்மையில் களத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் பற்றி கருத்தாடல் செய்ய வேண்டும்? ஏன் ஏற்கனவே களத்தில் ஆரம்பிக்கப்பட்ட தலைப்புகளின் கீழ் இவ்விடயங்களைப் பற்றி கதைக்க முடியாதா? ஏற்கனவே இதுசம்மந்தமாக சுமார் ஐந்திற்கும் மேற்பட்ட தலைப்புக்கள் ஏற்கனவே களத்தில் ஒட்டப்பட்டுள்ளது. :)

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

களத்திற்கான விதிகளை நிபந்தனைகளை இறுக்கமாக்குவது கள நிர்வாகத்துக்குள்ள உரிமை..! ஆனால் கள உறுப்பினர்களை குழுமங்களாக்குவதற்கு அவர்கள் கள உறுப்பினர்களின் விருப்பங்களை நாடியிருக்க வேண்டியது கட்டாயம். களத்தில் மாற்றங்கள் கொண்டு வர எண்ணிய போது அபிப்பிராயம் கேட்டவர்கள் ஏன் குழுமங்கள் பிரிப்புத் தொடர்பாக எதுவும் சொல்லாமல் ரகசியமாக செய்தனர்..!

குழுமங்களில் இணைய தனிமடல் மூலம் தொடர்புகொள்ள வேண்டும் எங்கிறார்கள். அதன் மூலம் சில நடைமுறைகளைச் செய்யலாம் என்று அவர்கள் கருதி இருந்தனர். ஆனால் தனிமடல் மூலம் குழுமத்தில் இணைந்த பின்னர் வழமை போலவே நடந்து கொண்டால் எதைக் கட்டுப்படுத்த முடியும்..??!

யாழ் இணையம் யாழ் கருத்துக்களத்தை மையமாக வைத்தே இயங்குவதால் செய்திகளை ஒழுங்கமைத்ததைப் பாராட்டலாம். ஆனால் செய்தி குழுமப் பிரிப்பில் களத்தில் தற்போது அங்ரிவ் இல்லாத சிலர் இணைக்கப்பட்டுள்ளனர். அது ஏன் என்ற மர்மம் கடவுளுக்குத்தான் தெரியும்..! இதே நிலை மற்றைய குழுமங்களிலும் நிகழலாம்..??!

குழுமப் பிரிப்பு தொடர்பில் எழுந்த குழப்பங்கள் காரணமாக சாணக்கியன் வெளியேறிவிட்டிருக்கிறார்..! இப்படிப் பலர் சரியாக விளங்கிக் கொள்ள முடியாதபடிக்கு நடந்து கொண்டத்தை நிர்வாகம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்..!

களவிதிகளை இறுக்கமாக்குவதன் மூலம் குழுமப் பிரிப்பை அவசியமில்லாது ஆக்கலாம்..! ஏன் இதை முன்னரே அறிவிக்கவில்லை. திடீர் மாற்றங்கள் கள உறுப்பினர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகளை அதிகரிக்கவே செய்யும். அதனால் தான் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அது தவறான அணுகுறை அல்ல. காரணம் இங்கு வாக்கெடுப்பு நடத்த சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருக்கிறது. கள உறுப்பினர்களை வெளியேற்ற வாக்கெடுப்பு நடத்த முடியும் என்றால் கள மாற்றம் குறித்து அபிப்பிராயம் கேட்க ஏன் வாக்கெடுப்பு நடத்த முடியாது..??! எம்மைப் பொறுத்தவரை வாக்கெடுப்பு உதவுதோ இல்லையோ கள உறுப்பினர்களின் எண்ணங்கள் வெளிப்பட சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது என்பதையிட்டு நிறைவடைய முடிகிறது..! :P :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன்,யெசு,காந்தி,நபிகள்,,63 நாயன்மார்,வள்ளுவர்....சொல்லியெ கேட்க வில்லை...புதுச வந்த யாழ் சொல்லி கேட்கபோறோம்.........ம்....ம்.....ம்....ம்.

...

  • தொடங்கியவர்

அட முதலில் இங்கு எழுதப்பட்டிருப்பது கவிதை இல்லைத்தானே?

நல்லகாலம்! இம்முறை நான் தப்பிவிட்டேன்! :rolleyes:

பிறகு, இதை நான் கவிதை என்று நினைத்து கவிஞரை பாராட்டி கருத்து எழுத, பின் கவிஞரே இது கவிதை இல்லை என்று மறுத்துரைக்க, பின் நமது மானம்போய், ஒரே குழப்பமாய் போய்விடும்! :rolleyes:

தவறுகளைச் சுட்டிக்காட்டினால் நாம் நிச்சயம் திருந்துவோம். திருந்த மாட்டோம் என்று சொல்வதற்கில்லை!

ஒரு தலைப்பில வந்த விடயங்கள் பத்தி- அந்த தலைப்பில பேசுவதோட - நிறுத்தணும் இல்லையா?

நான் எழுதினது கவிதை இல்லைனு நானே சொன்னால்- உங்களூக்கு மானம் போயிடுமா?எப்பிடி?

மானம் போயிட்டுதா? சரி- பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன் -உங்க கிட்ட!

ஒரு தலைப்பில் நடந்ததை ( நான் ஏதும் சொல்லாவிடினும்) 3 இடம்வரை தொடருறீங்க!

அரட்டையின் ஆரம்பம்- இது போன்ற செயல்களில்லையா?

இது போன்ற செயல்கள்தானே - களம் சீர்குலைவுக்கு ஊக்கம்னு நிர்வாகம் கவலைபடுது!

தவறை சுட்டி காட்டிட்டன் - திருந்துவது எப்போது?? கலைஞன் நீங்க? :rolleyes:

  • தொடங்கியவர்

புத்தன்,யெசு,காந்தி,நபிகள்,,63 நாயன்மார்,வள்ளுவர்....சொல்லியெ கேட்க வில்லை...புதுச வந்த யாழ் சொல்லி கேட்கபோறோம்.........ம்....ம்.....ம்....ம்.

...

புத்தனின் கருத்து ஏதோ - சொல்ல வருது...

ஒரு வகையில் -சரியேதான்!

நான் நினைச்சது எல்லாம்............

இப்போ தேவைபடுவதெல்லாம் - ஒற்றுமை - நிறைய!- இல்லையா?

யாழ்களம் - யாருக்குமெதிராய் போய் - தலையில் குண்டுபோட முடியாது!

அதில் கருத்து எழுதும் - நாங்களும்தான்!

எதிராய் போக நினைக்கிறவங்களையும் - நட்பா பேசி ...

அவங்கமனசில - மாற்றம் கொண்டு வரணும்!

அதன் மூலம் - நிறைய வெற்றிவரலாம் -!

அவசர படாம -யோசித்து பார்த்தால்! !:rolleyes:

தவறை சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி! தவறு திருத்தப்பட்டுள்ளது, தொடர்ந்து நாம் கருத்தாடல் செய்யும் முறைகளில் பிழைகள் இருப்பின் சுட்டிக்காட்டவும், அவை உண்மையில் பிழை என நாம் அறிந்தால்/ தீர்மானித்தால் அவற்றை உடனடியாகவே திருத்த நடவடிக்கை எடுக்கின்றோம். :unsure:

சில வேளைகளில் களத்தில் நகைச்சுவையாக கூறப்படும் கருத்துக்கள், மற்றைய கள உறவுகளிற்கு குழப்பத்தை/ கோபத்தை ஏற்படுத்தக்கூடும், எனவே, அவ்வாறு நகைச்சுவைகள் குழப்பம்/ கோபம் ஏற்படுத்தும் பட்சத்தில், அதை மனதில் சுமந்து காவாது, கருத்தை எழுதியவருக்கு அறிவிப்பது வரவேற்கத்தக்கது. நன்றி! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்து சுதந்திரம் மட்டும் மறுக்கப்படவில்லை, மனித உரிமை மீறலும் நடக்கிற மாதிரி ஒரு feelings. Avtar வைக்கிறதிலையும் கட்டுப்பாடா?

நல்ல முன்னேற்றம். வாழ்கதமிழ் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.