Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்தமிழீழத்தில் விடுதலைப் புலிகளின் வெற்றிகள் விரைவில் அரங்கேறும் - சு.ப.தமிழ்ச்செல்வன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி 13-04-2007 18:12 மணி தமிழீழம் [செந்தமிழ்]

தென்தமிழீழத்தில் விடுதலைப் புலிகளின் வெற்றிகள் விரைவில் அரங்கேறும் - சு.ப.தமிழ்ச்செல்வன்

சிறீலங்கா அரசாங்கம் போர்முனைகளில் இராணுவ வெற்றிகளை பெற்றுவருவதாக முன்னெடுக்கும் பரப்புரைகளுக்கான பதில் விரைவில் வழங்கப்படும் என விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று ஏ.எவ்.பி செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலிலேயே தமிழ்ச்செல்வன் இதனைத் தெரிவித்துள்ளார்.

களமுனைகளில் சிறீலங்கா அரசாங்கம் வெற்றியை ஈட்டியுள்ளதாக அரசாங்கம் முன்னெடுக்கும் பரப்புரைகளுக்கு விடுதலைப் புலிகள் செயற்பாடுகள் மூலம் பதில் வழங்குவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் மீது இனவழிப்பு என்ற கொடிய யுத்தத்தை தொடுத்து மனித அவலத்தை உருவாக்கியுள்ள சிறீலங்கா அரசாங்கம் அவற்றை களமுனை யுத்தமாக திசைதிருப்பும் பரப்புரைகளாக உருவாக்க முன்படுவதாகவும் தமிழ்ச்செல்வன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேவைகளுக்கு எற்றவாறு எமது இயங்கம் இராணுவ யுத்திகளை மாற்றிவருகின்ற போது அது தென்தமிழீழத்திலிருந்து விடுதலைப் புலிகளை பின்வாங்கச் செய்தது என அர்த்தப்படாதது எனவும் தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் பரப்புரைகளை முறியடிக்கும் வகையில் தென்தமிழீழத்தில் விடுதலைப் புலிகள் வெற்றிகள் விரைவில் அரங்கேறும் என தமிச்செல்வன் மேலும் தெரிவித்துள்ளார்

மூலம் - பதிவு

கிழக்கில் விரைவில் பதில் தாக்குதல்: சு.ப.தமிழ்ச்செல்வன் எச்சரிக்கை.

கிழக்குப் பிரதேசத்தில் விரைவில் பதில் தாக்குதல் நடத்தப்படும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் எச்சரித்துள்ளார்.

அனைத்துலக ஊடகமான ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்துக்கு சு.ப.தமிழ்ச்செல்வன் அளித்துள்ள நேர்காணல்:

இலங்கையின் கிழக்குப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் முன்னேறியுள்ள பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல் நடத்துவர். இந்தப் பதில் தாக்குதல் விரைவில் மேற்கொள்ளப்படும். ஒரு உத்தியாகத்தான் கிழக்கில் சில நகர்வுகளை நாம் மேற்கொண்டிருக்கிறோமே தவிர கிழக்கிலிருந்து நாம் விலகிவிடவில்லை.

சிறிலங்காவின் பரப்புரைகளுக்கு எதிர்வரும் காலங்களில் நாங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளே பதிலளிக்கும். கிழக்கில் சிறிலங்கா ஆக்கிரமிப்புப் படையானது இனப்படுகொலைகளை நடத்தி வருகின்றது என்றார் தமிழ்ச்செல்வன்.

-Puthinam-

கிழக்கில் விரைவில் பதில் தாக்குதல்: சு.ப.தமிழ்ச்செல்வன் எச்சரிக்கை.

கிழக்குப் பிரதேசத்தில் விரைவில் பதில் தாக்குதல் நடத்தப்படும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் எச்சரித்துள்ளார்.

அனைத்துலக ஊடகமான ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்துக்கு சு.ப.தமிழ்ச்செல்வன் அளித்துள்ள நேர்காணல்:

இலங்கையின் கிழக்குப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் முன்னேறியுள்ள பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல் நடத்துவர். இந்தப் பதில் தாக்குதல் விரைவில் மேற்கொள்ளப்படும். ஒரு உத்தியாகத்தான் கிழக்கில் சில நகர்வுகளை நாம் மேற்கொண்டிருக்கிறோமே தவிர கிழக்கிலிருந்து நாம் விலகிவிடவில்லை.

சிறிலங்காவின் பரப்புரைகளுக்கு எதிர்வரும் காலங்களில் நாங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளே பதிலளிக்கும். கிழக்கில் சிறிலங்கா ஆக்கிரமிப்புப் படையானது இனப்படுகொலைகளை நடத்தி வருகின்றது என்றார் தமிழ்ச்செல்வன்.

-Puthinam-

என்னதான் இருந்தாலும் எமது படைகள் பின்நகர்வதை எமது மக்கள் விரும்ப மாட்டார்கள் ஆனாலும் எமது வீரர்கள் திருகோணமலையில் முன்னேறி தாக்கியபின் மீண்டும் தங்களின் கட்டுப்பாட்டு இடத்துக்கு திரும்பியது உண்மையில் எம்மை நீதியின் பால் இருக்கின்றோம் என்ற எண்ணக்கருவை தந்துநின்றது ஆயினும் எமது படைபலம் பல முறை நிருபிக்கப்பட்டு விட்டது இருப்பினும் சிங்களத்துக்கு கொடுக்க வேண்டிய படிமங்கள் நிறையவே நாம் கொடுத்து எமது மண்ணும் மக்களும் நிமிர வேண்டும் என்பதில் நாம் உறுதியாய் இருக்கின்றோம் ஆனதால் தலைவன் இருக்கின்றார் அவருக்கு தெரியும் என்ன செய்ய வேண்டும் என்று ஆனால் மக்களாகிய நாம் அவரின் கைகளை பலப்படுத்துவதன் மூலம் தான் சிங்களத்தை மண்டியிட வைக்க முடியும் அத்தோடு துரோகிகளையும் மண்ணைவிட்டு வெருட்ட முடியும் !!!!!!!!!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

தலைவன் இருக்கின்றார் அவருக்கு தெரியும் என்ன செய்ய வேண்டும் என்று ஆனால் மக்களாகிய நாம் அவரின் கைகளை பலப்படுத்துவதன் மூலம் தான் சிங்களத்தை மண்டியிட வைக்க முடியும் அத்தோடு துரோகிகளையும் மண்ணைவிட்டு வெருட்ட முடியும் நிரந்தரமாக.

ஆகா, இதையே தமிழ்மக்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்து இருக்கின்றார்கள்.

"களமுனைகளில் சிறீலங்கா அரசாங்கம் வெற்றியை ஈட்டியுள்ளதாக அரசாங்கம் முன்னெடுக்கும் பரப்புரைகளுக்கு விடுதலைப் புலிகள் செயற்பாடுகள் மூலம் பதில் வழங்குவார்கள்" என தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

அருமையான பதில்!

எல்லாத்துக்கும் தலைவர் இருக்கிறார் அவர் எல்லாத்தையும் பார்ப்பார் எண்டு இருக்காம ,

எல்லாரும் அவரவர் கடமையை ஒழுங்கா செய்தாலே போதும்,தமிழீழம் விரைவிலே மலரும்

தலைவன் இருக்கின்றார் அவருக்கு தெரியும் என்ன செய்ய வேண்டும் என்று ஆனால் மக்களாகிய நாம் அவரின் கைகளை பலப்படுத்துவதன் மூலம் தான் சிங்களத்தை மண்டியிட வைக்க முடியும் அத்தோடு துரோகிகளையும் மண்ணைவிட்டு வெருட்ட முடியும் நிரந்தரமாக.

சரியான வார்த்தைகள். நமது பங்களிப்பு சர்வதேச சமுகத்தில் உண்மையை உரத்து உரைப்பதே. சிரிலங்காவின் முகமூடியை கிழிப்பதன் மூலம் நாம் அதை செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எப்போது செயற்பாடுகள் தொடங்கும் என்று இங்குள்ள விசைப்பலகை வீரர்கள் விரலை நெட்டி முறித்துக் கொண்டு அதிக காலம் இனிப்பான செய்திக்காகக் காத்திருக்கின்றார்கள்.. காத்திருப்பு வீண்போகாமல் இருக்கும் போலுள்ளது!

  • கருத்துக்கள உறவுகள்

செயலில் காட்டவேண்டும் என்ற தலைவனின் வார்த்தைகள் விரைவில் செயல்வடிவம் பெறும் என்பது சந்தோசமான விடயம்.அதை விட மிக முக்கியமானது பல ஆயிரம் மக்கள் அகதிகள் ஆகி விட்டார்கள்.இவர்கட்கு ஒரு வழி காண்பதோடு , மக்களுக்கு பாதுகாப்பும் வழங்கவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

தென் தமிழீழ மக்கள் அகதி வாழ்க்கையில் அல்லல்படத் தொடங்கி எத்தனையோ மாதங்களாகிவிட்டன.. தமிழ் அமைப்புக்கள் எதுவுவே உதவி செய்ததாகத் தெரியவில்லை..

ஈழத்திற்கு முன்னரும் பின்னரும் மிகப்பெரிய கடமைகள் காத்திருக்கு சர்வதேசத்திலும் உள்ள தமிழ் மக்களுக்கு பாரிய கடமைகள் காத்திருக்கு

பிரச்சாரங்கள்--- இலங்கையின் முகமூடி கிழித்தல்

போராட்ட நியாயங்களை எடுத்து விளக்கல்

மக்களை பசி பட்டினியிலிருந்து காப்பாற்றல்,

மருத்துவ வசதிகள்

நாட்டைக்கட்டியெழுப்புதலுக்

நல்ல சேதி :rolleyes:

......... சொற்களிலல்ல, செயலில் ..........

காத்திரமான செயற்பாடுகள் நிச்சயமிருக்கும். எப்பொழுதென்பது நாம் தீர்மானிக்க முடியாததொன்று. சொல்வதும் அதற்குச் செயல்வடிவம் கொடுப்பதும் விடுதலைப் புலிகளே.

......... சொற்களிலல்ல, செயலில் ..........

சொற்களில் இருப்பது புலிகளல்ல செயலில் காட்டுபவர்களே புலிகள்.அதை நல்லா புரிந்து கொள்ளுங்கள்

:angry: :angry:

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவம் A- 5 இன் இரு மரங்கிலுள்ள ஓர் ஒடுங்கிய பகுதியைத்தான் பிடித்துள்ளது.. படுவான்கரையை முழுக்கட்டுப் பாட்டில் வைத்திருக்கவும், புலிகளின் பிரசன்னத்தை இல்லாமல் செய்யவும் குறைந்தது 100 இரணுவ முகாம்கள் அமைக்கவேண்டும். இதெல்லாம் நடக்காது.. எனவே கரந்தடித் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.