Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துருக்கியை அழித்துவிடுவோம்! – டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

trump-Reuters-720x450.jpg

துருக்கியை அழித்துவிடுவோம்! – டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை

சிரியாவில் குர்திஸ் போராளிகள் மீது தாக்குதல் நடத்தினால், பொருளாதார ரீதியில் துருக்கியை அழித்துவிடுவோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள இரண்டு டுவிட்டர் பதிவுகளில் அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக சிரியாவில் குர்திஸ் போராளிகளுடன் இணைந்து அமெரிக்க துருப்புகள் சண்டையிட்டு வந்தன. எனினும், குர்திஸ் போராளிகளை பயங்கரவாதிகள் என சித்தரித்துள்ள துருக்கி, அமெரிக்கா அவர்களுக்கு உதவுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அத்தோடு, குர்திஸ் போராளிகளை ஒடுக்குவோம் என துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது, ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிரியாவில் அழிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அமெரிக்கா, தமது துருப்புகளை மீளப் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், தமது துருப்புக்கள் மீளப்பெறப்பட்டதன் பின்னர் குர்திஸ்கள் மீது தாக்குதல் நடத்தினால், துருக்கியை பொருளாதார ரீதியாக அழிப்போம் என அமெரிக்க ஜனாதிபதி கடுமையாக எச்சரித்துள்ளார்.

அத்தோடு, 20 மைல்கள் தொலைவில் பாதுகாப்பு வலயமொன்றை நிறுவவுள்ளதாகவும் ட்ரம்ப் குறப்பிட்டுள்ளார். ஐ.எஸ். பயங்கரவாதிகள் உருவெடுத்தால் அங்கிருந்து தாக்குதல் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

அதேசந்தர்ப்பத்தில், தாம் குர்திஸ் போராளிகளை துருக்கிக்கு எதிராக தூண்டிவிடவில்லை என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குர்திஸ் போராளிகளை பாதுகாப்பது தொடர்பாக துருக்கியுடன் ஒப்பந்தமொன்றை எட்டும் சந்தர்ப்பம் காணப்படுவதாக, அமெரிக்கா இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ கடந்த வாரம் தெரிவித்திருந்தார். துருக்கி வெளிவிவகார அமைச்சருடனான கலந்துரையாடலை தொடர்ந்து அவர் இவ்விடயத்தை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/துருக்கியை-அழித்துவிடுவ/

  • கருத்துக்கள உறவுகள்
குர்து போராளிகள் மீது தாக்குதல் நடத்தினால் துருக்கி பேரழிவை சந்திக்க நேரிடும் : டிரம்ப் எச்சரிக்கை

குர்து போராளிகள் மீது தாக்குதல் நடத்தினால் துருக்கி பேரழிவை சந்திக்க நேரிடும் : டிரம்ப் எச்சரிக்கை
 
 

வாஷிங்டன்,

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2011–ம் ஆண்டு உள்நாட்டு போர் தொடங்கியது. அந்த சூழலை பயன்படுத்தி ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு சிரியாவில் காலூன்றியது. அவர்கள் அரசு படைகள் மற்றும் ளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி நாட்டின் பெரும்பாலான நகரங்களை கைப்பற்றினர்.

 

இதையடுத்து, சிரியாவை சேர்ந்த குர்து இன போராளிகள் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒடுக்கும் முயற்சியில் இறங்கினர். அவர்களுக்கு உதவுவதற்காக அமெரிக்க படைகள் சிரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 2015–ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஒபாமா உத்தரவின்பேரில் 2,000 அமெரிக்க வீரர்கள் சிரியா சென்றனர்.

அவர்கள் குர்து இன போராளிகளுடன் இணைந்து, ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தி, பல நகரங்களை அவர்களிடம் இருந்து மீட்டனர். இப்படி குர்து இன போராளிகளுக்கு அமெரிக்க வீரர்கள் பக்கபலமாக இருந்து வந்தனர்.

இந்தநிலையில், சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டதாகவும், எனவே அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்படுவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கடந்த மாத இறுதியில் அதிரடியாக அறிவித்தார். இது குர்து இன போராளிகளுக்கு பேரிடியாக அமைந்தது. மேலும் குர்து இன போராளிகள் மீது துருக்கி தாக்குதல் நடத்துவதற்கான சூழல் உருவானது.

அமெரிக்க படைகளை வாபஸ் பெறும் முடிவு, ‘‘ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, ஐ.எஸ். அமைப்பு மீண்டும் உயிர்த்தெழ வழிவகுக்கும்’’ என்று குர்து போராளிகள் தலைமையிலான ஐ.எஸ். எதிர்ப்பு கூட்டணி எச்சரிக்கை விடுத்தது.

இதையடுத்து, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், ‘‘சிரியாவில் குர்து இன போராளிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படாது’’ என அறிவித்தார்.

ஆனால் சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் தொடங்கிவிட்டதாகவும், அமெரிக்க வீரர்கள் ராணுவ தளவாடங்களுடன் சிரியாவில் இருந்து வெளியேறி வருவதாகவும் அமெரிக்க தலைமையிலான கூட்டுபடைகளின் செய்தி தொடர்பாளர் கடந்த 11–ந்தேதி தெரிவித்தார். இது குர்து இன போராளிகளை மீண்டும் கலக்கமடைய செய்துள்ளது.

இந்த நிலையில் சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்ட பின்னர் குர்து இன போராளிகள் மீது தாக்குதல் நடத்தினால் பொருளாதார ரீதியில் துருக்கி பேரழிவை சந்திக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். அதே சமயம் துருக்கியை எரிச்சலூட்டக்கூடாது என குர்து இன போராளிகளை அவர் வலியுறுத்தி இருக்கிறார். இது குறித்து டிரம்ப் தனது டுவிட்டரில் கூறியதாவது:–

சிரியாவில் குர்து இன போராளிகள் மீது துருக்கி தாக்குதல் நடத்தும் பட்சத்தில் அந்நாடு பொருளாதார பேரழிவை சந்திக்க நேரிடும். குர்து இன போராளிகளை நெருங்காமல் பல மைல்களுக்கு அப்பால் இருப்பதே துருக்கிக்கு பாதுகாப்பாக இருக்கும்.

அதே போல் குர்து இன போராளிகளும் துருக்கியை எரிச்சலடைய செய்யாமல் விலகி இருக்க வேண்டும். சிரியாவில் இன்னும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் குறைவான எண்ணிக்கையில் இருக்கும் நிலையில் அமெரிக்க படைகளை வாபஸ் பெறுவது கடினமாகத்தான் இருக்கிறது. ஒருவேளை ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீண்டும் தலைத்தூக்கினால் அமெரிக்க படைகள் அவர்களை அழிக்க தவறாது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இந்த நிலையில் டிரம்புக்கு பதில் அளிக்கும் விதமாக துருக்கி அதிபர் தயீப் எர்டோகனின் செய்தி தொடர்பாளர் இப்ராஹிம் காலின் தனது டுவிட்டரில் ‘‘சிரிய குர்து மக்களையும், குர்து இன தீவிரவாதிகளையும் சமமாக ஒப்பிட்டு டிரம்ப் மிகப்பெரிய தவறிழைத்து வருகிறார். நாங்கள் தீவிரவாதிகளுக்கு எதிராகதான் போராடுகிறோம். குர்து இன மக்களுக்கு எதிராக இல்லை’’ என தெரிவித்துள்ளார்.

https://www.dailythanthi.com/News/World/2019/01/15022613/Turkey-may-face-catastrophe-Trump-Warning.vpf

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, nunavilan said:
குர்து போராளிகள் மீது தாக்குதல் நடத்தினால் துருக்கி பேரழிவை சந்திக்க நேரிடும் : டிரம்ப் எச்சரிக்கை


சீறிவிட்டு அடங்குவது ரம்பின் வாடிக்கையாகி விட்டது.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் வாய் சாவாடலை கேட்டு 
வடகொரியர்கள் துண்டை காணோம் துணியை காணோம் 
என்று ஓடி திரிகிறார்கள் .....

இனி துருக்கி!
துருக்கியை ரசியாவுக்கு எதிராக திருப்ப யூதன் 
ஒரு ரசிய போர் விமானத்தை துருக்கி எல்லையில் வைத்து சுட்டு வீழ்த்தினான் 
பின்பு துருக்கியில் இருந்து கிளம்பிய ரசிய பயணிகள் விமானத்தை குண்டு வைத்து 
தகர்த்தான்.

எல்லாம் புரிந்த திருவாளர் புட்டின் அவர்கள் 
துருக்கி பிரதமரை ரஸ்யாவுக்கு அழைத்து விருந்து கொடுத்து 
யூதனின் சித்து விளையாட்டு பற்றி கொஞ்சம் அறிவுரையும் கூறி அனுப்பினார்.

எல்லாம் தோல்வியில் முடிந்து போனதால் ....
இப்போ அண்ணர் நேரடியாகவே மேடைக்கு வந்து பேச தொடங்கி இருக்கிறார். 

இதில் கையோட கம்மார்ஸ் அடித்தது துருக்கிதான் !
அமெரிக்காவிடம் அனுமதி வாங்கிக்கொண்டுதான் ஐ ஸ் ஸ்ஸ் இடம் இருந்து 
அவ்வளவு எரிபொருளை அறா விலையில் வாங்கி தள்ளியது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.