Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெடுங்கேணி இராணுவ டிபெண்டர் பனையுடன் மோதியது – படையினர் இருவர் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
January 21, 2019

IMG_3189.jpg?zoom=1.2100000262260437&res

முல்லைத்தீவு, நெடுங்கேணி – தட்டாமலை வீதியில் இராணுவ டிபெண்டர் ஒன்று பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மேஜர் ஒருவரும், கோப்ரல் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 4 இராணுவ அதிகாரிகள் படுகாயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று விஜயம் மேற்கொண்டிருந்தார். அவரது பாதுகாப்புக்காகச் சென்ற இராணுவ கொமாண்டோ படையணி வாகனங்கள் பாதுகாப்புப் பணியை நிறைவு செய்துவிட்டு இன்று மதியம் வவுனியா நோக்கிப் பயணித்தபோதே அதில் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

நெடுங்கேணி – தட்டாமலை வீதியில் உள்ள வளைவில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த குறித்த வாகனம் வீதியில் அருகில் நின்ற பனை மரத்துடன் மோதியுள்ளது.

இந்த விபத்தில் 6 இராணுவ அதிகாரிகள் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக அம்புலன்ஸ் வாகனங்களில் வவுனியா பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். எனினும், அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

IMG_3188.jpg?zoom=1.2100000262260437&res

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களில் எத்தனைபேர் 2009 இல் முடிவுக்கு வந்த தமிழர்க்கெதிரான இனவழிப்புப் போரில் பங்காற்றியவர்கள்?? நிச்சயம், எல்லோருமே தமது பங்கினை செவ்வனே ஆற்றியிருப்பார்கள். சாகும் தறுவாயிலாவது தங்களின் கொடூரங்களை எண்ணி கவலைப்பட்டிருந்தால்ப் பரவாயில்லை.

தெய்வம் நின்றறுக்கும் !!!

http://www.dailymirror.lk/article/Major-and-corporal-killed-four-others-injured-in-accident-161350.html

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு விபத்து ; ஊடகவியலாளர்களுக்கு இராணுவம் அனுமதி மறுப்பு

முல்லைத்தீவு - புளியங்குளம் வீதியில் கோடாலிகல்லு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் செய்தி சேகரிக்கச்சென்ற ஊடகவியலாளர்களுக்கு இராணுவத்தினர் அனுமதி மறுத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

IMG_20190121_142635.jpg

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவில் இடம்பெற்ற போதைப்பொருள் தொடர்பான நிகழ்வு மற்றும் பொதுமக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் கலந்துகொள்ள சென்றிருந்தார்.

ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக சென்ற இராணுவ கொமாண்டோ படையணியே பாதுகாப்பு பணியை நிறைவு செய்துவிட்டு வவுனியா பகுதி நோக்கி வருகைதந்தவேளை இவ் விபத்தில் சிக்கியுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள வளைவில் வேகக்கட்டுப்பாட்டை இழந்தே விபத்துக்காகியுள்ளதுடன் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக நோயாளர் காவு வண்டிகளில் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த விபத்தில் இராணுவ மேஜர் ஒருவரும் கோப்ரல் ஒருவரும் உயிரிழந்துள்ள நிலையில், நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் விபத்து இடம்பெற்ற பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் செய்தி சேகரிப்புக்காகச் சென்ற தமக்கு இராணுவத்தினர் அனுமதி தராதுள்ளது நாட்டில் ஊடக சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டள்ளதாக செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

http://www.virakesari.lk/article/48408

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.