Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘தியாகி, ‘துரோகி’ என்ற இரு அந்தங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘தியாகி, ‘துரோகி’ என்ற இரு அந்தங்கள்

Editorial / 2019 ஜனவரி 24 வியாழக்கிழமை, மு.ப. 12:31 Comments - 0

image_27364e1aa6.jpg

 

போர் முடிவடைந்து, பத்தாண்டுகள் நிறைவடையும் நிலையில், எம்மை நாமே கேட்ட வேண்டிய கேள்விகள் உள்ளன. அக்கேள்விகளை, மனச்சுத்தியுடன் கேட்க வேண்டும். அதற்கான பதில்களையும் தேட வேண்டும்.   

இதைச் செய்வதாயின் எம்மை நாமே சுயவிமர்சனம் செய்தாக வேண்டும். சுயவிமர்சனத்துக்குத் தயாரில்லாத மனிதர்களிடமோ, சமூகத்திடமோ எதிர்பார்க்க அதிகம் இல்லை.   

இன்று விமர்சனத்துக்கோ, சுயவிமர்சனத்துக்கோ தயாரில்லாத சமூகமாக இலங்கையில் உள்ள தமிழ்ச் சமூகமும் அதனிலும் மேலாக, புலம்பெயர் தமிழ்ச் சமூகமும் உள்ளது.   

முப்பதாண்டு கால ஆயுதப் போராட்டமும், அதற்கு முந்தைய தமிழ்த்தேசிய அரசியலின் குறுந்தேசியவாதக் குணங்களும் அதற்கு வலுவான காரணிகளாக உள்ளன. ஜனநாயக மறுப்பின் அடிப்படையில் கட்டியமைக்கப்பட்டு, வளர்க்கப்பட்ட விடுதலைப் போராட்டமும் அதன் வழிவந்த அரசியலும் இன்றுவரை தொடர்கிறது.  

 இன்று தமிழ்ச்சமூகம், ஒரு முக்கியமான திருப்பு முனையில் நிற்கிறது. ஒரு சமூகமாகத் தன்னைச் சுயவிமர்சனம் செய்து, தவறுகளில் இருந்து திருத்திக் கொண்டு, முன்செல்வதற்கான தேவை தமிழ்ச் சமூகத்துக்கு உண்டு.   

இதில் எம் அனைவருக்கும் பங்குண்டு. நாம் அனைவரும் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளவும் கலந்து பேசவும் சேர்ந்து பணியாற்றவும் வேண்டும். அதற்கான அடிப்படை எமது சமூகத்தில் ஜனநாயகத் தன்மையை உறுதிப்படுத்துவதும் மாற்றுக் கருத்தை மதிப்பதுமே ஆகும்.   

ஆண்டாண்டு காலமாக, இதைச் செய்யத் தவறியதன் துர்பலன்களை, இன்றும் தமிழர்கள் அனுபவிக்கிறார்கள். 1976ஆம் ஆண்டு, “தமிழீழத்தை வென்று தர, உங்களிடம் என்ன வேலைத்திட்டம் இருக்கிறது” என்று, ஒரு பகிரங்க விவாதத்தின் போது, கொம்யூனிஸ்ற்றான சண்முகதாசன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தருமலிங்கத்திடம், ஒறேற்றர் சுப்பிரமணியத்தின் முன்னிலையில் கேட்டபோது, தருமலிங்கம் கூறிய பதில், “அது எங்கள் இரகசியம்” என்பது தான்.   

அந்த இரகசியமும், ‘சிதம்பர இரகசியம்’ மாதிரி, இல்லாத ஒரு இரகசியமே. தருமலிங்கத்தின் பதில், தப்பியோடப் போதுமானதாக இருந்ததே ஒழிய, நேர்மையானதல்ல என்பதைப் பலரும் அறிவர்.   

ஆனாலும், அந்தவிதமான இரகசியங்களாலேயே தமிழ் மக்கள் இன்னமும் வழிநடத்தப்படுகின்றனர். இதைத் தொடர்ந்து, “தனித் தமிழீழம் முடிந்த முடிவு; அது விவாததத்திற்குரியதல்ல” என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் கூறி, பகிரங்க விவாதங்களைத் தடைசெய்தது, தமிழ்த் தேசிய ஜனநாயக மறுப்பு அரசியலின் ஒரு பகுதியாகும். ‘ஈழத்து காந்தி’, ‘தந்தை’ என மகுடமிடப்பட்டு அழைக்கப்பட்ட எஸ்.ஜே.வி. செல்வநாயகமோ அவரது ‘மைந்தர்களோ’, ‘பேரப்பிள்ளைகளோ’ தமிழ்ச் சமூகத்தை ஜனநாயகப்படுத்துவதற்கு அன்றும் சரி, இன்றும் சரி, தயாராக இல்லை.   

விடுதலைப் போராட்டம், ஆயுதப் போராட்டமாக விரிவடைந்த முதற்கொண்டு, தமிழ்ச் சமூகம், ‘தியாகி, ‘துரோகி’ என்ற இரு அந்தங்களில் இயங்கி வந்துள்ளது. இதன் எச்சங்கள், இன்னமும் எம்மத்தியில் உயிர்ப்புடன் இருக்கின்றன.   

மாற்றுக் கருத்துகளைக் பேசவும், எழுதவும் கூடிய ஜனநாயக சூழல் உருப்பெறும் போதே, அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் எமது எதிர்காலத்தின் திசைவழிகள் குறித்துப் பரந்துபட்டதும் ஒன்றிணைந்ததுமான உரையாடலை எம்மால் நிகழ்த்த முடியும்.   

இவற்றில் இருந்து ஒதுங்கிச் சும்மா இருப்பது சுகமாய்த் தெரியலாம். ஆனால், அவ்வாறு நினைப்பவர்களுக்கு எமது கடந்த காலத்தை நினைவூட்ட விரும்புகிறேன்.   

துரோகி எனத் தீர்த்து   
முன் ஒரு நாள் சுட்ட வெடி  
சுட்டவனைச் சுட்டது  
சுடக் கண்டவனைச் சுட்டது  
சுடுமாறு ஆணை இட்டவனைச் சுட்டது  
குற்றம் சாட்டியவனை  
வழக்குரைத்தவனை  
சாட்சி சொன்னவனை  
தீர்ப்பு வழங்கியவனைச் சுட்டது  
தீர்ப்பை ஏற்றவனைச் சுட்டது  
எதிர்த்தவனைச் சுட்டது  
சும்மா இருந்தவனையும் சுட்டது.  

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தியாகி-துரோகி-என்ற-இரு-அந்தங்கள்/91-228463

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

மாற்றுக் கருத்துகளைக் பேசவும், எழுதவும் கூடிய ஜனநாயக சூழல் உருப்பெறும் போதே, அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் எமது எதிர்காலத்தின் திசைவழிகள் குறித்துப் பரந்துபட்டதும் ஒன்றிணைந்ததுமான உரையாடலை எம்மால் நிகழ்த்த முடியும்.

சுதந்தரம்  சுய நிர்ணயம் உரிமை இவற்றுக்கு மாற்று தமிழ் ஈழம்
தமிழ் ஈழத்திற்கு மாற்றுக்கருத்து...  சமஷ்டி
சமஷ்டிக்கு மாற்றுக்கருத்து.....  ஒரு நாட்டுக்குள் தீர்வு
ஒரு   நாட்டுக்குள் தீர்வு  மாற்றுக்கருத்து....  அதிகாரப்பரவலாக்கல்
அதிகாரப்பரவலாக்கல்  என்றால் மாற்றுக்கருத்து......  அபிவிருத்தி
அபிவிருத்தி என்றால் மாற்றுக்கருத்து......  கிடைப்பதை பெற்றுக்கொள்ளல்
கிடைப்பதை பெற்றுக்கொள்வது என்றால் மாற்றுக்கருத்து.......  சலுகை
சலுகை என்றால் மாற்றுக்கருத்து........  கையூட்டு

கையூட்டுப் பெறுவது என்பது தண்டனைக்குரியது  

ஆரம்பத்தில் எல்லோருமே மனிதர்கள் தான்
மக்களின் உரிமைகளை வென்றெடுக்கச் சென்றவர்கள் மாற்றுக்கருத்து.......   தியாகிகள்  

கையூட்டல்களைப்  பெற்று மக்களின் உரிமைகளைக் குழி தோண்டிப் புதைத்தவர்கள் மாற்றுக்கருத்து........  துரோகிகள்

தியாகிகளும் ஒரு காலத்தில் மாற்றுக் கருத்தாளர்கள் தான்.

துரோகிகளும்  ஆரம்பத்தில் தியாகிகளாகத் தெரிந்தவர்கள்தான்  

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாத்தியார் said:

சுதந்தரம்  சுய நிர்ணயம் உரிமை இவற்றுக்கு மாற்று தமிழ் ஈழம்
தமிழ் ஈழத்திற்கு மாற்றுக்கருத்து...  சமஷ்டி
சமஷ்டிக்கு மாற்றுக்கருத்து.....  ஒரு நாட்டுக்குள் தீர்வு
ஒரு   நாட்டுக்குள் தீர்வு  மாற்றுக்கருத்து....  அதிகாரப்பரவலாக்கல்
அதிகாரப்பரவலாக்கல்  என்றால் மாற்றுக்கருத்து......  அபிவிருத்தி
அபிவிருத்தி என்றால் மாற்றுக்கருத்து......  கிடைப்பதை பெற்றுக்கொள்ளல்
கிடைப்பதை பெற்றுக்கொள்வது என்றால் மாற்றுக்கருத்து.......  சலுகை
சலுகை என்றால் மாற்றுக்கருத்து........  கையூட்டு

கையூட்டுப் பெறுவது என்பது தண்டனைக்குரியது  

ஆரம்பத்தில் எல்லோருமே மனிதர்கள் தான்
மக்களின் உரிமைகளை வென்றெடுக்கச் சென்றவர்கள் மாற்றுக்கருத்து.......   தியாகிகள்  

கையூட்டல்களைப்  பெற்று மக்களின் உரிமைகளைக் குழி தோண்டிப் புதைத்தவர்கள் மாற்றுக்கருத்து........  துரோகிகள்

தியாகிகளும் ஒரு காலத்தில் மாற்றுக் கருத்தாளர்கள் தான்.

துரோகிகளும்  ஆரம்பத்தில் தியாகிகளாகத் தெரிந்தவர்கள்தான்  

 

ம்..வார்த்தை ஜாலம் செய்திருக்கிறீர்கள்! எல்லாம் மாற்றுக் கருத்தென்றால் தவறு சரி என்ற objective ஆன இயற்கை விதிகளால் அல்லது நாடொன்றின் சட்டங்களால் நிர்ணயிக்கப் படும் எதுவும் இல்லையா? உதாரணமாக, ஒரு நாட்டில் நான் எந்தக் கட்சியையும் அரசியல் கொள்கையையும் ஆதரிக்க உரிமை இருப்பதாக சட்டம் சொல்கிறது என வைத்துக் கொள்வோம். அந்த ஆதரிப்பை ஒருவர் துரோகம் என்றால் அது மாற்றுக் கருத்தா அல்லது எனக்கெதிரான குற்றமா? 

  • கருத்துக்கள உறவுகள்

 

இவரையும் துரோகியாக சில சிங்களவர்கள் சொல்கிறார்கள். யாருக்கு எதிராக மாற்றுக்கருத்து தெரிவித்தார்? யாருக்கு எதிராக குற்றம் விளைவித்தார்??  எந்த சட்டத்தின் கீழ் யாரை ஆதரித்தார்??

 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nunavilan said:

 

இவரையும் துரோகியாக சில சிங்களவர்கள் சொல்கிறார்கள். யாருக்கு எதிராக மாற்றுக்கருத்து தெரிவித்தார்? யாருக்கு எதிராக குற்றம் விளைவித்தார்??  எந்த சட்டத்தின் கீழ் யாரை ஆதரித்தார்??

 

இதையே தான் நானும் கேட்டேன்? வாத்தியாட் தான் விளக்க வேண்டும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

துரோகி எனத் தீர்த்து   
முன் ஒரு நாள் சுட்ட வெடி  
சுட்டவனைச் சுட்டது  
சுடக் கண்டவனைச் சுட்டது  
சுடுமாறு ஆணை இட்டவனைச் சுட்டது  
குற்றம் சாட்டியவனை  
வழக்குரைத்தவனை  
சாட்சி சொன்னவனை  
தீர்ப்பு வழங்கியவனைச் சுட்டது  
தீர்ப்பை ஏற்றவனைச் சுட்டது  
எதிர்த்தவனைச் சுட்டது  
சும்மா இருந்தவனையும் சுட்டது.

பேராசிரியர் சிவசேகரம் எழுதிய கவிதை!

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, கிருபன் said:

பேராசிரியர் சிவசேகரம் எழுதிய கவிதை!

வாவ்..சிவசேகரத்தாரின் கவிதையா? எல்லாரையும்  சுட்ட கவிதை நுணாவையும் சுட்டு விட்டது போல, அது தான் சிங்களவனும் செய்தான் தானே என்று இருக்கும் கோட்டுக்குப் பக்கத்தில் பெரிய கோடு கீறிக்காட்டியிருக்கிறார் (சும்மா சொன்னன், கோவிக்கக் கூடாது!)

என்ன இருந்தாலும் கோடு கோடு தானே?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

ம்..வார்த்தை ஜாலம் செய்திருக்கிறீர்கள்! எல்லாம் மாற்றுக் கருத்தென்றால் தவறு சரி என்ற objective ஆன இயற்கை விதிகளால் அல்லது நாடொன்றின் சட்டங்களால் நிர்ணயிக்கப் படும் எதுவும் இல்லையா? உதாரணமாக, ஒரு நாட்டில் நான் எந்தக் கட்சியையும் அரசியல் கொள்கையையும் ஆதரிக்க உரிமை இருப்பதாக சட்டம் சொல்கிறது என வைத்துக் கொள்வோம். அந்த ஆதரிப்பை ஒருவர் துரோகம் என்றால் அது மாற்றுக் கருத்தா அல்லது எனக்கெதிரான குற்றமா? 

யாரும் யாரையும் அல்லது எந்தக்கட்சியையும் ஆதரிக்கலாம்.
ஒரு கட்சியையோ   அல்லது ஒரு தனிநபரையோ ஆதரிப்பவர்கள் துரோகிகள் என்றால் எல்லோரும் துரோகிகள் தான்.
 உங்களின் கட்சி நிலைப்பாட்டினை முன்னிறுத்து உங்களைத் துரோகி என்று எழுதியவர்கள்   மாற்றுக்கருத்தாக அதனை முன்வைக்கவில்லை என்று நினைக்கின்றேன்.
ஒருவர மீது  வன்முறையில் ஈடுபடுபவர் , அவரை வன்முறைக்குத் தூண்டுபவர், அந்த வன்முறையை ஆதரிப்பவர்கள், அந்த வன்முறைக்கு எந்த விதத்திலும் காரணமாக இருப்பவர்கள் என எல்லோருமே அந்த வன்முறை சார்ந்து இருப்பவர்கள்
அதுபோலத்தான் அரசியலில் யார் எந்த நோக்குடன் எவருக்காக
யாருடன் சேர்ந்து இருக்கின்றார், யாருக்கு எதிராகச் செயற்படுகின்றார், அவருடைய இலக்கு என்ன , அவரால் ஏதாவது ஒரு குழுவிற்கு நன்மையையும் இன்னொரு குழுவிற்குத் தீமையும் ஏற்படுகின்றதா இப்படிப் பல பல விடயங்கள் ஆராயப்பட்டால்
நீங்கள் ஆதரவு கொடுக்கும் கட்சியும் இந்தப்பட்டியலில் வந்தால்
அதே போன்ற பார்வையில் நீங்களும் என்னை நோக்கினால்
நாம் மட்டும் அல்ல எல்லோருமே எல்லோருக்கும் துரோகிகள் தான்
இதற்கு மாற்றுக்கருத்து இருப்பதாக நான் நினைக்கவில்லை.   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.