Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களில் விடுதலைபுலிகள் ஊடுருவல்: பரபரப்பு தகவல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களில் விடுதலைபுலிகள் ஊடுருவல்: பரபரப்பு தகவல்கள்

ராமநாதபுரம், ஏப். 16-

இலங்கையில் விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே போர் மூண்டுள்ள தால் அங்கிருக்கும் தமிழர்கள் பலரும் அகதிகளாக தமிழ் நாட்டிற்கு வருகிறார்கள். ராமேசுவரம் கடற்கரையில் வந்திறங்கும் அவர்களை போலீசார் விசாரணைக்கு பின்னர் மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

அங்கு அகதிகள் அனை வரும் தனித்தனியாக விசாரிக்கப்பட்டு "கியு" பிரிவு போலீசாரின் ஆய்வுக்கு பிறகு தமிழ்நாட்டின் பல்வேறு முகாம்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

இப்படி மண்டபம் முகா முக்கு வந்த அகதிகள் 3 பேர் மீது "கியு" பிரிவு போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவர்களை தனிமைப்படுத்தி அவர்களின் பூர்வீகம் பற்றி போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டனர்.

இதில் அந்த 3 பேரும் இலங்கையில் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதியைச் சேர்ந்த தேவஜோதீஸ்வரன் (வயது28), ஜஸ்டின்ராஜ் (20), சுகந்தன் (27) என்பது தெரிய வந்தது. இவர்கள் இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் சாதாரண மக்களாக குடியிருந்து கொண்டு இலங்கை ராணுவத்தின் நடமாட்டம், அவர்களின் நடவடிக்கைகளை உளவு பார்த்து விடுதலைபுலிகளுக்கு தகவல் கொடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்தது.

இலங்கையில் ராணுவ கெடுபிடி அதிகரித்ததால் இந்த 3 பேரும் அகதிகள் போர்வையில் மண்டபம் முகாமுக்கு வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் உளவுப்படை வீரர்களான இந்த 3 பேரையும் "கியு" பிரிவு போலீசார் சென்னை கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களிடம் ரகசிய விசாரணை மேற்கொள்ளப் பட்டது. பின்னர் அந்த 3 பேரையும் போலீசார் செங்கல் பட்டு சிறப்பு முகாமில் அடைத்தனர்.

"கியு" பிரிவு போலீசாரிடம் பிடிப்பட்ட விடுதலைபுலி களின் உளவுப் பிரிவு வீரர்கள் 3 பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக் கிடும் தகவல்கள் போலீஸ் உயர் அதிகாரி களுக்கு கிடைத்துள்ளது. இது பற்றி உயர் அதிகாரி ஒருவர் கூறிய தாவது:-

மண்டபம் முகாமில் அகதிகள் போர்வையில் விடுதலைப்புலிகள் ஊடுருவி இருப்பது இதற்கு முன்பும் நடந்து இருக்கிறது. ஆனால் உளவாளிகள் ஊடுருவி அவர்கள் எங்களின் பிடியில் மாட்டிக் கொண்டது இதுவே முதல் முறையாகும். அவர்கள் இங்கு வந்திருப்பது தமிழக மக்களின் மனோநிலையை அறிந்து கொள்ளவும் இங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி தெரிந்து கொள்ளவும் வந்திருக்கலாம் என்று நாங்கள் கருதுகிறோம்.

மேலும் இங்கு புதிய தொடர்புகளை ஏற்படுத்தவும் இங்கு வந்து இருக்கலாம் என்று நாங்கள் எண்ணுகிறோம். அதற்கான புதிய முயற்சிகளில் ஈடுபடவும், அதற்கு ஏதாவது வழி இருக்கிறதாப என்பதை பற்றி அறிந்து கொள்ள வும் விடுதலை புலிகளின் உளவாளிகள் இங்கு வந்தி ருக்கலாம் என்றும் நாங்கள் நினைக்கிறோம்.

இதற்காக விடுதலைபுலிகள் அல்லது அவர்களின் உளவாளிகள் பலர் அகதிகள் போர்வையில் தமிழகத்திற்குள் ஊடுருவி இருக்கலாமோ? என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இதற்காக தமிழகத்தின் அனைத்து அகதிகள் முகாம் களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அதிரடிசோதனைகளும் நடத்தப்படுகிறது. அகதி கள் ஒவ்வொருவரும் தனித் தனியாக கண்காணிக்கப்படு கிறார்கள் தீவிர விசாரணைக்கு பிறகே அவர்கள் முகாமுக்கு அனுப்பப் படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே ராமேசுவரம் கடல் பகுதியில் தமிழக கடலோர பகுதி கடற்படையும், கடலோர காவல்படையும் இணைந்து அதிதீவிர கண் காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளன. போர்க்கப்பலும், கடற்படை விமானமும், ஹெலிகாப்டர்களும் 24 மணி நேரமும் ரோந்து சுற்றி வருகிறது.

நவீன ரேடார் கருவிகள், பைனாகுலர் மூலம் கடலில் நடமாடும் கப்பல்கள், படகுகள் கண்காணிக்கப்படுகிறது. கடல் எல்லையில் அத்து மீறும் படகுகள் மடக்கப்பட்டு தீவிர சோதனைக்கு பிறகே தொடர்ந்து செல்ல அனு மதிக்கப்படுகிறது. இதனால் கடல் வழியாக ஆயுதம் கடத்து வது தற்போது கட்டுப்படுத்தப் பட்டுள்ளது.

மூலம் மாலைமலர்

Edited by கறுப்பி

நல்லா கதைவிடுகிறங்கள் ஐயா, புலிகளுக்கு அப்படி வரவேண்டிய அவசியமும் இல்லை,

அவர்கள் முட்டாள்களும் இல்லை, அப்பாவி மக்களை வெருட்டி உருட்டி தங்களுக்கு ஏற்றமாதிரி

கதை எழுதி நம்ப வைத்து தாங்கள் மிக உசாராக இருப்பதாக காட்டிக் கொள்வதும், அதனை வைத்து தமிழ் நாட்டுமக்களுக்கு புலிப்பூச்சாண்டி காட்டுவதும் தான் இவர்கள் தினமும் வேலை.

தொப்பிள் கொடியுறவாக தமிழ் நாட்டிற்கு, இனவெறி கொலைவெறி இராணுவத்திடமிருந்து உயிரை காப்பாற்றிக்கொள்ள கடல் ஆபத்துக்களையும் பார்க்காமல் தன்சம் வந்தால் புலிமுத்திரை குற்றி சிறையில் போடும் நாகரிகம் எந்த நாட்டிலும் இல்லை....

அகதிகள் என்றால் அகதிகள் தான்...... எல்லாத்தையும் கைவிட்டு தன்சம் என வருவபவர்கள்.....

அவர்கள் ஆயுதத்துடன் வருபவர்கள் அல்ல......

உலக நாடுகளில் அகதிகள் பாதுகாப்பு சட்டங்களை ஒழுங்காக பின்பற்ற வேண்டும்......

பின்பற்றாதவர்களை உரியவர்கள் தகுந்த நடவடிக்கைகள் மூலம் பின்பற்ற வைக்கவேண்டும்...

அகதிகள் என்றால் சிறைக்கைதிகள் என்ற நிலை மிகவும் மோசமான மனித நாகரித்திற்க்கு இழுக்கான நிலை....

சிங்களகடற்படை 300இற்கும் மேற்பட்ட தமிழ் நாட்டு மீனவர்களை சுட்டுக்கொன்று விட்டு இறுமாப்பாக திறிகிறார்கள் கேட்பாரில்லை? அடைக்கலம் வந்த பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகள்? என்ன உலகமிது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் சோடிக்கப்பட்ட கதையா முடியப்போகுது

இதற்கெல்லம் பின்னனியில் இருப்பது கேரளத்து நாசமா போன நாராயணன் தான் :angry: :angry: :angry:

அடப்பாவிகளா,

முன்னாடி ஆர்மிகாரன் தான் இப்படி பண்ணினான்,

இப்ப தமிழ்நாடு போலிச் கூடவா.

பாவம் அந்த 3 அப்பாவிகள்.அவர்கள் உயிருக்கு பயந்து இந்தியாவுக்கு வர அங்கு நரகம் வரவேற்றிருகிறது

  • கருத்துக்கள உறவுகள்

இது கியூ பிரிவு, றோ வின் மாஜா ஜால விளையாட்டுக்கள். இவர்கள் தமிழ் நாட்டு மக்களை, தமிழீழ மக்களின் போராட்டத்தினுடன் இணைய விடாமல் செய்யும் நரி தந்திரம். தமிழ் நாட்டு மக்கள் இதற்கு சோடை போக மாட்டார்கள் என்பது அவர்களின் நடவடிக்கைகள் சான்று பகரும்.

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று மாமனிதர் ஜெயக்குமாரின் சிட்னியில் நடைபெற்ற வீரவணக்கத்தில் உரையாற்றிய தமிழக உறவான 'விடுதலை' இராஜேந்திரன்' அகதி முகாம்களில் உள்ள இழஞ்சர்களுக்கு பண ஆசைகாட்டி தென் தமிழீழத்தில் புலிகளுக்கு எதிராக போராட இந்திய உளவுத்துறை செய்தவற்றை விபரித்தார். துவிச்சக்கரவண்டிக்கு தேவையான பாகங்களை கடத்துபவர்களை, புலிகளுக்கு ஆயூதம் கடத்துவதாகவும், சிங்கள இராணுவம் அப்பாவித் தமிழக உறவுகளைக் கொல்லும் போது , புலிகள் தான் கொல்லுவதாகவும், தமிழகத்தில் ஈழ ஆதரவினைக் குறைப்பதற்கு இப்படி கன வித்தைகளை உளவு அமைப்பு செய்து வருகிறது. அதில் ஒரு செய்தி தான் -தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களில் விடுதலைபுலிகள் ஊடுருவல்: பரபரப்பு தகவல்கள்

இப்படியான செய்திகளை நாமேநமக்குள்ளே பகிர்ந்து கொள்கின்றோம் இதனை தெரிவிக்கவேண்டியவர்கள் தெரிவிக்கவேண்டியவர்களுக்கு தெரிவிக்கின்றார்களா?

தழிழ் மக்களுக்கு எங்குபோனாலும் நிம்மதி இல்லை எண்டு பார்த்தால் தமிழ் நாட்டில் கூடவா?

இந்தியா ஒரு அகிம்சைவழி நாடாக இருந்தாலும் ஈழத்தமிழர் பற்றிய கொள்கைகளில் அது ஒரு அறாயகப் போக்கையே கொண்டுள்ளது இலங்கையில் உள்ள இந்திய மக்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் இந்தியாவல் தற்போது அதிகளவில் ஈழத்தமிழர் உள்ளனர் அவர்களது நலனுக்கு இந்திய அரசு என்ன செய்தது?

ஒரு வீடு வாடகைக்கு கூட எடுக்க முடியாத நிலை

இலங்கை அரசு செய்யும் கொடுமையை காட்டிலும் இந்திய அரசின் வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் தன்மை தான் எம்மை அதிகம் வாட்டுகிறது

எம்மால் முடிந்தவரை எமது நண்பர்களுக்கு யாழை அறிமுக படுத்திக்கொண்டுதான் இருக்கிறேன்.

"முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும்"

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.