Jump to content

ஜமால் கஷோக்ஜி: "திட்டமிட்ட மிருகத்தனமான கொலை" - முதல் கட்ட அறிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
ஜமால்படத்தின் காப்புரிமை Getty Images

சௌதி பத்திரிக்கையாளர் ஜமால் கஷோக்ஜியின் மரணம் குறித்து விசாரிக்கும், துருக்கியின் திறனை சௌதி அரேபியா "மிகவும் குறைத்து மதிப்பிட்டுவிட்டதாக" ஐநா வல்லுநர் ஒருவர் கூறியிருக்கிறார்.

ஐமால் கஷோக்ஜி தூதரகத்திற்குள் கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்ற 13 நாட்களுக்கு பிறகுதான் அங்கு சென்று விசாரிக்க துருக்கிக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இஸ்தான்புல்லில் உள்ள சௌதி துணை தூதரகத்திற்கு கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி, கசோக்ஜி சென்றபோது அவர் கொலை செய்யப்பட்டார்.

சௌதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சிக்கும் முக்கிய நபராக 59 வயதான கஷோக்ஜி பார்க்கப்பட்டார். இப்படி ஒரு சம்பவம், இளவரசரின் ஒப்புதல் இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியிருந்தன.

ஆனால், இதில் இளவரசர் சம்பந்தப்படவில்லை என்று சௌதி முகவர்கள் சிலர் கஷோக்ஜியை கொலை செய்ததாகவும் அந்நாட்டு அதிகாரிகள் கூறினர்.

இது தொடர்பாக 11 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள சௌதி, அதில் 5 பேருக்கு மரண தண்டனை கோரி வருகிறது.

பல சௌதி அதிகாரிகளுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு மக்களை துருக்கிக்கு வெளியேற்ற சௌதி மறுத்து வருகிறது.

அறிக்கை என்ன கூறகிறது?

பத்திரிக்கையாளர் கஷோக்ஜியின் கொலை குறித்து சர்வதேச மனித உரிமை விசாரணையை நடத்திவரும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் ஆக்னஸ் கலாமார்ட், ஜனவரி 28ம் தேதியில் இருந்து பிப்ரவரி 3ஆம் தேதிவரை துருக்கிக்கு சென்று பார்வையிட்டார்.

கொலை நடந்த துணை தூதரகத்தை பார்வையிட்ட சிறப்பு அறிக்கையாளர் ஆக்னஸ் கலாமார்ட்படத்தின் காப்புரிமை AFP/GETTY Image caption கொலை நடந்த துணை தூதரகத்தை பார்வையிட்ட சிறப்பு அறிக்கையாளர் ஆக்னஸ் கலாமார்ட்

"சௌதி அரேபிய அதிகாரிகளால் முன்னதாகவே திட்டமிடப்பட்டு மிருகத்தனமாக கஷோக்ஜி கொலை செய்யப்பட்டிருக்கிறார்" என்று முதல்கட்ட ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இந்தக் கொலை தொடர்பாக துருக்கியின் விசாரிக்கும் திறனை மிகவும் குறைத்து மதிப்பிட்ட சௌதி அரேபியா, கொலை நடந்த இடத்திற்கு செல்ல துருக்கி விசாரணையாளர்களை அனுமதிக்காமல் 13 நாட்கள் தாமதாக்கியது.

அக்டோபர் 2ஆம் தேதி கொலை நடந்திருக்க, அக்டோபர் 15ஆம் தேதிதான் தூதரகத்திற்குள் நுழைய துருக்கி அதிகாரிகளுக்கு அனுமதி கிடைத்தது. மேலும், அக்டோபர் 17ஆம் தேதிதான் வீட்டில் சென்று விசாரிக்க முடிந்தது. இது முக்கியமாக தடயவியல் விசாரணையை பாதித்ததாக அவர் அறிக்கையில் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக குற்றவாளிகள் என்று 11 பேர் கைது செய்யப்பட்டு நடைபெற்று வரும் விசாரணை வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை குறித்த "பெரும் கவலைகளை" எழுப்புவதாக ஆக்னஸ் கலாமார்ட் குறிப்பிட்டுள்ளார்.

"சம்பந்தப்பட்ட ஆதாரங்களை பெறுவதற்காக, சௌதி அரேபியாவிற்கு அதிகாரப்பூர்வமாக செல்ல அனுமதி கேட்டிருப்பதாகவும்" அவர் எழுதியுள்ளார்.

ஜமால் கஷோக்ஜியின் உடல் இன்று வரை கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது, அவரது அன்புக்குரியவர்களை இன்னும் பெரிய துன்பத்தில் வைத்திருப்பதாக அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறுதி அறிக்கை வரும் ஜுன் மாதத்தில் ஐநா மனித உரிமை கவுன்சிலிடம் சமிர்பிக்கப்படும்.

கஷோக்ஜி வழக்கு - சமீபத்தில் நடந்தது என்ன?

ஜமால்படத்தின் காப்புரிமை Getty Images

விஷ ஊசி செலுத்தி கஷோக்ஜியை கொலை செய்ய உளவுத்துறை அதகாரி ஒருவர் உத்தரவு பிறப்பித்ததாக தங்கள் விசாரணையளர்கள் முடிவுக்கு வந்துள்ளதாக சௌதியின் துணை அரசு வழக்கறிஞர் ஷலான் பின் ரஜிஹ் ஷலான் கூறியுள்ளார்.

தூதரகத்தினுள் கஷோக்ஜி கொலை செய்யப்பட்டு அவரது உடல் பாகங்கள் வெளியே உள்ள இதில் தொடர்புடைய மற்றொரு நபரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகவும் ஷலான் கூறினார்.

சமீபத்தில் ஸ்விட்சர்லாந்தில் நடந்த உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்ட சௌதியின் நிதி அமைச்சர் மொஹமத் அல்-ஜடான் அங்கு கலந்து கொண்டவர்களுக்கு முன்பாக, "ஜமால் கஷோக்ஜிக்கு நடந்ததை நினைத்து தங்கள் நாடு மிகுந்த வருத்தத்தில் இருப்பதாக" பேசினார்.

இந்நிலையில் அவர் கொலை செய்யப்பட்ட காலகட்டத்தில் இஸ்தான்புல் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த மற்றும் அங்கிருந்து புறப்பட்ட சௌதி முகவர்கள் 15 பேரை துருக்கி அடையாளம் கண்டுள்ளது.

மேலும், சௌதி இளவரசரின் முன்னாள் ஆலோசகர் சௌத் அல்-கஹ்தானி உள்ளிட்ட 17 சௌதி அதிகாரிகள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. கஷோக்ஜியின் கொலை திட்டத்தில் அவர்களும் செயல்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த 17 பேரில் யாரேனும் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையில் இருக்கிறார்களா என்பது தெரியவில்லை.

https://www.bbc.com/tamil/global-47167278

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.