Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயமோகனின் பிதற்றல்கள் - மு.பொ.

Featured Replies

ஜெயமோகனின் பிதற்றல்கள்

1. ஒருமுறை ரஞ்சகுமார் ஜெயமோகனின் புத்தகம் எழுதும் வேகத்தை கண்டு “இதன்ன நாங்கள் காலையில் எழுந்து மலங்கழிப்பதுபோல் இந்தாள் புத்தகங்கள் எழுதிக்கொண்டிருக்கு!” என்று சொன்னதாக எனக்கொரு நண்பர் கூறினார். ரஞ்சகுமார் என்ன கருத்தில் அதைச் சொன்னாரோ தெரியாது, ஆனால் ஜெயமோகன் ஆரம்பத்தில் எழுதிய ‘விஷ்ணுபுரம்’, ‘காடு’, ‘கொற்றவை’ என்பவை போன்ற சிலதைத்தவிர ஏனையவை எல்லாம் மலங்களாய் வெளித்தள்ளப்படும் கழிவுப்பொருட்களே! (உதாரணம்: பாரதம் இரண்டு பாகம்) விந்து கதித்தவன் விலைமாதரிடம் செல்லும் தொழிலே அவர் எழுத்தாகிவிட்டது.

2. இத்தகைய இவருடைய புத்தகங்களை வாசித்து எவரும் விமர்சனம் செய்யாததாலும் அதன் மூலம் இவருக்கு publicity கிடைக்காததாலும், தன்னை ஏதோ விதத்தில் ஒரு பிரபலமான figure ஆக மாற்றிக் கொள்ளத் தனக்குத் தெரியாத விடயங்களில் மூக்கை நுளைத்து மூக்குடைபடுவது வழக்கமாகிவிட்டது. முன்னர் நடிகர் சிவாஜி பற்றி கேலிசெய்யப் போய், கிளர்ந்தெழுந்த சிவாஜி விசிறிகளுக்கு அஞ்சி வீட்டை விட்டோடி ஒளிந்து கொண்டார். பின்னர் தமிழகப் பெண்கவிஞர்களிடம் குட்டுப்பட்டார்.

3. இப்போ ஈழத்து எழுத்தாளர்கள், கவிஞர்கள் என்பவர்களோடு தனக்கு தெரியாதவற்றையெல்லாம் சொல்லப்போய் பெரும் பொல்லாப்புக்குள் வீழ்ந்துள்ளார். இவர் 2010 இல் காலஞ்சென்ற கவிஞர் சு.விலவரத்தினம் என்பவரைப் பற்றி எழுதுவதாக பாவனை பண்ணி, அவரைப்போடு தடியாக்கி இலங்கை கவிஞர்களை மட்டந்தட்டி, தமிழகக் கவிஞர்களை தூக்கி பிடிக்க ‘அகமெரியும் சந்தம்’ என்று எழுதினார். இவரின் பொய்மையை அறிந்த நான் அதற்கொரு எதிர்வினையை ‘அகமெரியும் சந்தத்தில் அடியோடும் நிராகரிப்பு’ என்று எழுதி இவரின் பொய்மையை கிழித்தெறிந்தேன்.

4. இப்போ பல வருடங்களுக்கு பிறகு, நான் மறந்திருப்பேன் என்ற நினைவில் மு.பொன்னம்பலம் ஈழத்தில் இருநூறு கவிஞர்கள் உள்ளனர் என்று பாய் விரிக்கிறார் என்று கூறி, ஈழத்து கவிஞர்களை கொச்சைப்படுத்துகின்றார். நான் காலத்தில் எழுதிய கட்டுரையில் “பன்முகத்தளங்களில் இயங்கும் பெருங்கவிஞர்களும் இளங்கவிஞர்களும் ஈழக்கவிப்பரப்பில் நிறையவே உண்டு” என்று தான் எழுதினேன். ஆனால் ஜெயமோகனோ நான் 200 க்கு மேற்பட்ட கவிஞர்கள் உள்ளனர் என்று எழுதியதாக ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டு, அவர்களை பூச்சிமருந்து அடித்து கொல்லவேண்டும் என்று சொல்லுகிறார், காரணம் இவர்களால் பெண்களின் கற்புக்கு ஆபத்தாம்! இதுவே எழுத்தாளர் ஜெயமோகனின் புதிய கண்டுபிடிப்பு! முன்னர் (கி.மு 400) தத்துவஞானி பிளேட்டோ கிரேக்கத்தில் இருந்தார். அவர் பெரும் சிந்தனையாளர்களே நாட்டை ஆள வேண்டும் என்று நினைத்தார். அவர் கவிஞர்கள் அனைவரையும் உதவாக்கரைகள் என்று சொல்லி கொல்லவேண்டும் என்று சொன்னார். அக்காலத்தில் எழுதியவர்கள் அனைவரையும் poet என்றே கூறினர். இந்தச் சூழலில் நம் ஜெயமோகன் வாழ்ந்திருந்தால், தன்பிதற்றலுகளுக்காக முதலில் கொல்லப்பட்டவர் இவராகவே இருந்திருப்பார்!

5. இயல்விருது பற்றியும் ஜெயமோகன் விகடனுக்கு வழங்கிய பேட்டியில் அலட்டியிருந்தார். பேராசிரியர் செல்வாகனகநாயகம் இருக்கும் வரை அந்த இயல்விருதுக் குழுவில் நானும் ஒரு தெரிவாளனாக இருந்துள்ளேன். ஜெயமோகன் அக்காலங்களில் தனக்கு இயல்விருது கிடைக்கவேண்டும் என்பதற்காக பட்டபாடு நான் அறிவேன். இப்போது இவரின் தெரிவுகளைத்தான் இயல்விருது தருகிறதென்றால் அது எஸ்.பொ போன்றவர்களுக்குத்தான் சரி.

6. ‘ஈழத்தில் விமர்சன வரிசை உருவாக்கப்படவில்லை’ என்று கூறும் இவர், என்னால் எழுதப்பட்ட, 2012 இல் மலேசியாவில் இடம்பெற்ற அனைத்துலக நூல் போட்டியில் சிறந்த நூலிற்கான முதற்பரிசு (தான்ஸ்ரீ விருது) பெற்ற 'திறனாய்வின் புதிய திசைகள்' என்ற நூலினையும் ‘60 களிலிருந்து பீறிட்டெழுந்த ஈழத்து விமர்சனப்போக்கு, தமிழகத்தவர்களுக்கும் பின்னுதைப்பாக இருந்தது’ என்ற எனது கட்டுரையும் மு.த வின் ‘ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி’யையும் படிக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன்.

மு.பொ.

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

ஜெ.மோ வுக்கு மூளையின் நியுரோன்களுக்கும் வாய்க்கும் (அல்லது விரல்களுக்கும்) இடையே தடையில்லாத பாதை இருப்பது தான் அவரது பிரச்சினை என நினைக்கிறேன். 

ஐன்ஸ்ரைன் மிகவும் மெதுவாகத் தான் பேசுவார். அவருக்கு மொழி பேச்சு என்பவற்றில் ஏதாவது குறைபாடு இருக்கலாம் என்று சிலர் சொல்வதுண்டு. ஆனால், அவர் முதலில் யோசித்து வார்த்தைகளை மனதில் கோர்த்த பின்னர் பேசுவதால் மெதுவாகப் பேசினார் என்றும் ஒரு கருத்து உண்டு. இப்படி சில செக்கன்கள் யோசித்துப் பின் பேசுவது அல்லது எழுதுவது என்பது இன்று அறிவார்ந்தோரின், தலைவர்களின்  ஒரு அடையாளமாக இருக்கிறது. கூகிளின் பிச்சை, பில் கேட்ஸ், ஒபாமா போன்றோர் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் போது ஒரு கணநேரத் தயக்கம் அவர்களின் உடல் மொழியில் தெரியும் - அவர்களின் மூளையில் வருவதை அவர்கள் உடனே சொல்லி விடுவதில்லை- அதனால் மிகவும் அரிதாகவே முட்டாள் தனமான கருத்துகளை அவர்கள் வெளியிடுகிறார்கள்! 

அண்மைய ஒரு நரம்பியல்-உயிரியல் ஆய்வில், "மனிதனின் மூளை வேகமாகச் செயற்படுவதற்காக சில தவறுகளை அனுமதிக்கிறது" என்று ஒரு  கருத்தை வெளியிட்டிருந்தார்கள். ஜெ.மோ எழுதும் வேகத்தைக் குறைத்தால் இப்படி விவகாரமான கருத்துகளை வெளியிடுவதைத் தவிர்க்கலாம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.