Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அபிநந்தனின் ஒப்பற்ற தைரியத்தால் தேசமே பெருமை கொள்கிறது: மோடி புகழாரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அபிநந்தனின் ஒப்பற்ற தைரியத்தால் தேசமே பெருமை கொள்கிறது: மோடி புகழாரம்

Published :  02 Mar 2019  11:49 IST
Updated :  02 Mar 2019  11:49 IST
 
modi-abhijpg

பிரதமர் மோடி, இந்திய வீரர் அபிநந்தன் : கோப்புப்படம்

அபிநந்தனின் ஒப்பற்ற தைரியத்தால் தேசமே பெருமை கொள்கிறது என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தன்  நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணியளவில் ராவல் பிண்டி ராணுவ தலைமையகத்தில் விடுதலை செய்யப் பட்டார். அங்கிருந்து அவர் லாகூருக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் சாலை மார்க்கமாக பாகிஸ்தானின் வாகா எல்லைக்கு நேற்று மாலை 5 மணி அளவில் அபிநந்தன் வந்தார். இந்திய தூதரக அதிகாரிகளும் அவருடன் இருந்தனர்.

பஞ்சாப் மாநிலம், வாகா-அட்டாரி எல்லை வழியாக நேற்றிரவு அவர் நாடு திரும்பினார். விமானப் படையின் உயரதிகாரிகளான ஏர் வைஸ் மார்ஷல்கள் பிரபாகரன், ரவி கபூர் ஆகியோர் அபிநந்தனை வரவேற்றனர். அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அட்டாரி எல்லைக்கு அபிநந்தன் வந்தபோது ஆயிரக்கணக்கான மக்கள் ஆரவாரம் செய்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரது விடுதலையைக் காலை முதலே பொதுமக்கள் ஆடல், பாடலுடன் கொண்டாடினர். இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர். அவரது புகைப்படத்துக்கு பாலாபிஷேகமும் செய்தனர்.

இந்நிலையில் அபிநந்தனின் விடுதலையைப் பாராட்டி பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ''வீடு திரும்பிய விங் கமாண்டர் அபிநந்தனை வரவேற்கிறேன். உங்களின் ஒப்பற்ற தைரியத்தால் தேசமே பெருமை கொள்கிறது. நம்முடைய ராணுவப் படைகள் 130 கோடி இந்தியர்களுக்கு உத்வேகம் அளிக்கின்றன. வந்தே மாதரம்'' என்று தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்ட வாழ்த்துப் பதிவில், ''அபிநந்தன் வர்த்தமானை வரவேற்கிறேன். உங்களின் தைரியம், கடமை உணர்வு எல்லாவற்றுக்கும் மேலாக உங்களின் கண்ணியத்தால் இந்தியா பெருமைப்படுகிறது. நீங்களும் ஒட்டுமொத்த விமானப் படையும் வருங்காலத்தில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

https://tamil.thehindu.com/india/article26416441.ece

 

இவங்கள் திருந்தமாட்டாங்கள், விழுந்தாலும்(ஐ மீன் மிக்21) மீசையில்(அபிநந்தன்ர இந்தியாவின்ர இல்ல) மண்படவில்லையாம்!

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அபிநந்தனுக்கு முதல் எண் ஜெர்ஸி: 'வானையும், எங்கள் மனங்களையும் ஆளுகிறாய்': புகழாரம் சூட்டிய பிசிசிஐ

Published :  02 Mar 2019  11:03 IST
Updated :  02 Mar 2019  11:11 IST

ஏ.என்.ஐ.

புதுடெல்லி
1AbhinandanMar2jpg

தாயகம் திரும்பிய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன்: படம் ஏஎன்ஐ

பாகிஸ்தானில் இருந்து தாயகம் திரும்பிய அபிநந்தனை தேசமே புகழ்ந்து வரும் நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) வித்தியாசமாக புகழாரம் சூட்டியுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக  பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று தாக்குதல் நடத்தியபோது, அந்நாட்டு விமானப்படையால் இந்திய விமானப்படை வீரர் அபிந்தன் வர்த்தமான் சிறைபிடிக்கப்பட்டார். அதன்பின் சர்வதேச அழுத்தம், இந்தியாவின் நெருக்கடிகள் காரணமாக, அபிநந்தன் இரண்டரை நாட்களுக்குப்பின் நேற்று இரவு 9.20 மணிக்கு அடாரி-வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தாயகம் திரும்பும் அபிநந்தனை வரவேற்க ஏராளமான மக்கள் காத்திருந்தனர். தாயகத்துக்குள் அபிநந்தன் வந்ததும் அவரை வரவேற்று அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் பலர் ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவித்தனர்.

இதில் வித்தியாசமாக இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) அபிந்தனுக்கு புகழாரம் சூட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.

உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கான ஆடை(ஜெர்ஸி) அறிமுகம் நேற்று நடந்தது. அந்த ஆடை வெளிர்நீலம், அடர்நீலம் கலந்து வடிவமைக்கப்பட்டு இருந்தது. ஒவ்வொரு வீரருக்கும், ஒவ்வொரு ஆடையிலும் பிரத்யேக எண் வழங்கப்பட்டு  இருக்கும்.

அந்த வகையில் அபிநந்தனுக்கு புகழாரம் சூட்டும் வகையில் ஜெர்ஸியில் 'விங் கமாண்டர் அபிநந்தன்' என்று பெயரிட்டு,  முதல் எண்ணை  வழங்கி அவருக்குப் புகழாரம் சூட்டப்பட்டது.

மேலும், ட்விட்டரில் வெளியிட்ட செய்தியில், " அபிநந்தனை வரவேற்கிறோம். வானையும் ஆள்கிறாய், எங்கள் மனங்களையும் ஆள்கிறாய். உன்னுடைய துணிச்சலும், மரியாதையும் அடுத்து வரும் தலைமுறைக்கு உதாரணமாக இருக்கும் " எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

bccciPNG

பிசிசிஐ வெளியிட்ட ட்விட் செய்தி

 

மேலும், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ட்விட்டரில் கூறுகையில், " உண்மையான ஹீரோ உங்களுக்கு தலைவணங்குகிறேன், ஜெய்ஹிந்த்" எனத் தெரிவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கரின் ட்வீட்டில் ". உங்களுடைய துணிச்சல், சுயநலமின்மை, பாதுகாப்புணர்வு மூலம் ஹீரோ என்ற 4 எழுத்து வார்த்தைக்கு அதிகமாக கற்றுக்கொடுத்துவிட்டாய். எங்களுடைய ஹீரோ எங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளார் " எனத் தெரிவித்தார்.

https://tamil.thehindu.com/sports/article26416370.ece

 

வெட்கமே இல்லையாப்பா உங்களுக்கு?!
ஒருவன் உயிரை பணயம் வைச்சு (சவப்பெட்டி(மிக்21)) விமானம் செலுத்தி தாக்கப்பட்டு பாகிஸ்தானால் கைது செய்து அவங்களே நல்லெண்ண நோக்கத்தோட விட்டா பிறகு இவங்கட அலப்பறை.....

 

  • கருத்துக்கள உறவுகள்

😀 

View image on Twitter

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி அபிநந்தனை படம் நடிக்க கூப்பிடுவினம்.......ரம்போ ரேஞ்சிலை படம் எடுப்பினம். சம்பந்தமில்லாமல் இரண்டு மூண்டு கவர்ச்சி கதாநாயகிகளை போட்டு....கிந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் எண்டு வெடி விடுவினம்.😄

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.