Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புல­னாய்வு துறையில் அதி­க­ளவு முஸ்­லிம்கள் இருந்­து, புலிகளை அழித்­தொ­ழிப்­பதில் பெரும் பங்­காற்றினர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, thulasie said:


பாழாய்ப்போன மனுஷ பிறவிகள்தான்,

அப்படியா நண்பா?! 
நீங்களே ஒத்துக்கொள்ளுறீங்க! விரிசல் ஏற்பட்டுள்ளதை

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, thulasie said:


 

முஸ்லீம்களுக்காக முஸ்லீம்கள் குரல் கொடுக்கப்போவதில்லை என்று சொல்லி நீங்களே முரண்பட்டுக்கொள்கிறீர்கள்.

ஆர்ப்பாட்டம் என்பது, தன் மீதோ தன் சமூகம் மீதோ நிகழ்ந்த அநியாயத்தை வெளிக்கொணர்ந்து, பிறரை அறியச் செய்து, அதற்கு நியாயம் கேட்பதின் ஒரு முதற்படி.

அதன் பின்னால் உள்ள விளைவுகள், நன்மைகள் எல்லாம், ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் குரல் கொடுத்ததன் விளைவுகள்.

அந்த விளைவுகள், அனுகூலமாகவும் அமையலாம், பிரதிகூலமாகவும் அமையலாம். 

ஆர்ப்பாட்டத்திற்கு அப்பால், உருப்படியாக எது நல்லது என்று நினைக்கிறீர்கள்?

இந்த ஆர்ப்பாட்டங்களால், மற்றைய முஸ்லீம்களின்  வாழ்க்கையில் எவ்வாறான மாற்றத்தினை ஏற்படுத்த முடிந்தது? அப்படி எதுவுமே இல்லையென்றால், மத்திய கிழக்கிலிருந்து வரும் அழுத்தத்தின்மூலம் முஸ்லீம்களின் மீதான சிங்கள அடக்குமுறையினைக் கூட நிறுத்தமுடியாது என்பதே எனது வாதம்.

அதாவது, மத்திய கிழக்கிலிருந்து வரும் அழுத்தமோ அல்லது உதவியோ சிங்கள பேரினவாதத்தையும், அதன் பெளத்த மதவாதிகளையும் கட்டுப்படுத்தப்போவதில்லை. மத்திய கிழக்கின் பணபலம் என்பது ரொகிங்கியா முஸ்லீம்களையோ, சீனாவின் சிறுபான்மை முஸ்லீம்களையோ காக்கவில்லை. ஏன், அளுத்கமை, தெகன வரை கூடப் பாயவில்லை. அந்தளவில் இருக்கிறது மத்திய கிழக்கு அழுத்தம்.

உங்களுக்குப் புரியும்படி சொல்வதானால், முஸ்லீம்கள் தமது சகோதரர்களுக்காக குரல்கொடுப்பதைத்தவிர வேறு எதுவும் செய்யப்போவதில்லை. ஆகவே, அடக்குமுறை நாடுகளில் வசிக்கும் அவர்களின் வாழ்வில் மாற்றத்தை இவர்களால் உண்டுபண்ண முடியாது.

இதற்குமேல் உங்களுக்கு விளக்க என்னால் இயலாது. 

இல்லை, நீங்கள் நினைப்பதே சரியென்றால், நான் ஒன்றும் செய்யவும் முடியாது.  

17 minutes ago, ragunathan said:

நான் எழுதியவை அண்மைக்காலமாக முஸ்லீம்கள் தமது சகோதரர்மேல் அவ்வளவாக அக்கறை காட்டுவதில்லை என்பதை விளக்கவே பாலஸ்த்தீனர்களையும், ரொகிங்கியர்களையும் உதாரணமாக எழுதியிருந்தேன்.  

 


 

  

அண்மைக்காலமாக அக்கறை காட்டுவதில்லையென்றால்?

1947 இல் இருந்தா?

ஒருவர், தனது சக்திக்கு உட்பட்ட வரையில்தான், எதிர்ப்பையோ ஆதரவையோ காட்ட முடியும்.

முள்ளிவாய்க்காலில் தமிழினம் கொன்று  குவிக்கப்பட்டதை, தமிழ் நாட்டுத் தமிழர்கள் தனது எதிர்ப்பை வெளிக்காட்ட என்ன முனைவுகளில் ஈடுபட்டனர்?

அந்த முனைவுகளில், ஏதாவது ஆக்கபூர்வமானது இருக்கிறதா?

ஒன்றுமே இல்லை.

தனது சக்திக்கு மேம்பட்டு, எந்த சமூகத்தாலும் எதையும் சாதிக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, thulasie said:


 

  

அண்மைக்காலமாக அக்கறை காட்டுவதில்லையென்றால்?

1947 இல் இருந்தா?

ஒருவர், தனது சக்திக்கு உட்பட்ட வரையில்தான், எதிர்ப்பையோ ஆதரவையோ காட்ட முடியும்.

முள்ளிவாய்க்காலில் தமிழினம் கொன்று  குவிக்கப்பட்டதை, தமிழ் நாட்டுத் தமிழர்கள் தனது எதிர்ப்பை வெளிக்காட்ட என்ன முனைவுகளில் ஈடுபட்டனர்?

அந்த முனைவுகளில், ஏதாவது ஆக்கபூர்வமானது இருக்கிறதா?

ஒன்றுமே இல்லை.

தனது சக்திக்கு மேம்பட்டு, எந்த சமூகத்தாலும் எதையும் சாதிக்க முடியாது.

உண்மைதான், அப்படி சாதிக்கக் கூடியதாக இருந்திருந்தால்;, 150,000 பேர் ஈவு இரக்கமில்லாமல் கொல்லப்படுவதைக் கைகட்டிப் பார்த்துக்கொண்டிருக்கவேண்டிய அவலம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்காது.

 

நான் சொல்வதைத்தான் நீங்களும் சொல்கிறீர்கள். அதாவது, ஒரு அளவிற்குமேல் செய்யமுடியாது. ஆகவே மத்திய கிழக்கு அழுத்தம் என்பதும் அப்படித்தான். சிங்களவர்களையோ, பர்மியர்களையோ, சீனர்களையோ அது எதுவுமே செய்யப்போவதில்லை.

3 minutes ago, ragunathan said:

 

 

நான் சொல்வதைத்தான் நீங்களும் சொல்கிறீர்கள். அதாவது, ஒரு அளவிற்குமேல் செய்யமுடியாது. ஆகவே மத்திய கிழக்கு அழுத்தம் என்பதும் அப்படித்தான். சிங்களவர்களையோ, பர்மியர்களையோ, சீனர்களையோ அது எதுவுமே செய்யப்போவதில்லை.


 

 ஐ. நாவின் அழுத்தங்களையே, இலங்கை அரசு செவி மடுப்பதில்லை.

மத்திய கிழக்கு அரசின் அழுத்தம் எந்த மூலைக்கு உதவும்?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, thulasie said:


 

 ஐ. நாவின் அழுத்தங்களையே, இலங்கை அரசு செவி மடுப்பதில்லை.

மத்திய கிழக்கு அரசின் அழுத்தம் எந்த மூலைக்கு உதவும்?

சரிதான்

12 minutes ago, ragunathan said:

 

உங்களுக்குப் புரியும்படி சொல்வதானால், முஸ்லீம்கள் தமது சகோதரர்களுக்காக குரல்கொடுப்பதைத்தவிர வேறு எதுவும் செய்யப்போவதில்லை. ஆகவே, அடக்குமுறை நாடுகளில் வசிக்கும் அவர்களின் வாழ்வில் மாற்றத்தை இவர்களால் உண்டுபண்ண முடியாது.

  

எந்தெந்த நாடுகளில், சிறுபான்மையாக மக்கள் வாழ்கின்றார்களோ, அவர்கள் பெரும்பாலும் சிறிதளவாவது அடக்கப்படுவார்கள் என்பது எழுதாத சட்டம்.

சில நாடுகள் விதி விலக்காக இருக்கலாம்.

இந்தியாவில், முஸ்லீம், கிறிஸ்தவ மக்கள் அடக்கப்படுகிறார்கள்.

இலங்கையை விட, இந்தியா, சீனா போன்றவை  மிகவும் மோசமான நாடுகள்.

இலங்கைக்குப் பக்கத்தில் இருக்கும் மிகவும் பலமுள்ள இந்து நாடான இந்தியாவே, இலங்கையில்  உள்ள இந்துத் தமிழரைப் பாதுகாக்க முடியவில்லை.

இலங்கையில் உள்ள முஸ்லிம்களை, அரபு நாடுகள் வந்து இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து, பாதுகாக்கும் என்று நம்புகிறீர்களா?

திகன, அளுத்காம, கண்டி, அம்பாறை போன்ற இடங்களில் வாங்கிய அடிகளை வாங்கிக்கொண்டு, உள்ளுக்குள் அழுது புலம்பி, இறைவனின் மேல் பாரத்தைப் போட்டு, அன்றாட வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அரபு நாடுகளில் இருந்து ஓரளவாவது கிடைக்கும் உதவிகளும் அரசியல்வாதிகளிடம் சுழன்று, கடைசியில் சிறிதளவு அவர்களை போய்ச் சேரும். 

இதே கதிதான், தமிழ்ச் சமூகத்திற்கும்.

44 minutes ago, ஏராளன் said:

அப்படியா நண்பா?! 
நீங்களே ஒத்துக்கொள்ளுறீங்க! விரிசல் ஏற்பட்டுள்ளதை

நீங்கள் நினைக்கும் அளவு விரிசல் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ragunathan said:

இந்த ஆர்ப்பாட்டங்களால், மற்றைய முஸ்லீம்களின்  வாழ்க்கையில் எவ்வாறான மாற்றத்தினை ஏற்படுத்த முடிந்தது? அப்படி எதுவுமே இல்லையென்றால், மத்திய கிழக்கிலிருந்து வரும் அழுத்தத்தின்மூலம் முஸ்லீம்களின் மீதான சிங்கள அடக்குமுறையினைக் கூட நிறுத்தமுடியாது என்பதே எனது வாதம்.

அதாவது, மத்திய கிழக்கிலிருந்து வரும் அழுத்தமோ அல்லது உதவியோ சிங்கள பேரினவாதத்தையும், அதன் பெளத்த மதவாதிகளையும் கட்டுப்படுத்தப்போவதில்லை. மத்திய கிழக்கின் பணபலம் என்பது ரொகிங்கியா முஸ்லீம்களையோ, சீனாவின் சிறுபான்மை முஸ்லீம்களையோ காக்கவில்லை. ஏன், அளுத்கமை, தெகன வரை கூடப் பாயவில்லை. அந்தளவில் இருக்கிறது மத்திய கிழக்கு அழுத்தம்.

உங்களுக்குப் புரியும்படி சொல்வதானால், முஸ்லீம்கள் தமது சகோதரர்களுக்காக குரல்கொடுப்பதைத்தவிர வேறு எதுவும் செய்யப்போவதில்லை. ஆகவே, அடக்குமுறை நாடுகளில் வசிக்கும் அவர்களின் வாழ்வில் மாற்றத்தை இவர்களால் உண்டுபண்ண முடியாது.

இதற்குமேல் உங்களுக்கு விளக்க என்னால் இயலாது. 

இல்லை, நீங்கள் நினைப்பதே சரியென்றால், நான் ஒன்றும் செய்யவும் முடியாது.  

ஏன் ரகுநாதன் நான் ஊருல தான் இருக்கிறன் இங்கு தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் விரிசல் இல்லை என்று சொல்கிற ஆளை அனுப்பினால் நான் காண்பிப்பேன் விரிசலையும்  அடாத்தாக தமிழர்கள் நிலங்களை கொள்ளை இட்டதையும் 

அது போக நீங்கள் சொல்வதை விளங்கிகொள்ளாத நிலையில் துளசி :)

5 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஏன் ரகுநாதன் நான் ஊருல தான் இருக்கிறன் இங்கு தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் விரிசல் இல்லை என்று சொல்கிற ஆளை அனுப்பினால் நான் காண்பிப்பேன் விரிசலையும்  அடாத்தாக தமிழர்கள் நிலங்களை கொள்ளை இட்டதையும் 

 :)

விரிசல் இல்லை என்று சொல்லவில்லை.

விரிசல் குறைவு.

குறைந்து கொண்டு போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, thulasie said:

விரிசல் இல்லை என்று சொல்லவில்லை.

விரிசல் குறைவு.

குறைந்து கொண்டு போகிறது.

எப்படி உங்களால் குறைவு என்று சொல்ல முடியும் ??? குறைந்து கொண்டு செல்கிறது என்று சொல்ல முடியும் ??

Just now, தனிக்காட்டு ராஜா said:

எப்படி உங்களால் குறைவு என்று சொல்ல முடியும் ??? குறைந்து கொண்டு செல்கிறது என்று சொல்ல முடியும் ??

நாட்டு நடப்புகள்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, thulasie said:

நாட்டு நடப்புகள்தான்.

காரணத்தை சொல்லாமல் நழுவக்கூடாது வேண்டும் என்றால் களத்தில் பொயட் அண்ணா இருக்கிறார் (ஜெயபாலன் அண்ணா , ஐயா) அவரிடம் நீங்கள் கேட்டு அறிந்து கொள்ளலாம் 👈

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, thulasie said:

எந்தெந்த நாடுகளில், சிறுபான்மையாக மக்கள் வாழ்கின்றார்களோ, அவர்கள் பெரும்பாலும் சிறிதளவாவது அடக்கப்படுவார்கள் என்பது எழுதாத சட்டம்.

சில நாடுகள் விதி விலக்காக இருக்கலாம்.

இந்தியாவில், முஸ்லீம், கிறிஸ்தவ மக்கள் அடக்கப்படுகிறார்கள்.

இலங்கையை விட, இந்தியா, சீனா போன்றவை  மிகவும் மோசமான நாடுகள்.

இலங்கைக்குப் பக்கத்தில் இருக்கும் மிகவும் பலமுள்ள இந்து நாடான இந்தியாவே, இலங்கையில்  உள்ள இந்துத் தமிழரைப் பாதுகாக்க முடியவில்லை.

இலங்கையில் உள்ள முஸ்லிம்களை, அரபு நாடுகள் வந்து இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து, பாதுகாக்கும் என்று நம்புகிறீர்களா?

திகன, அளுத்காம, கண்டி, அம்பாறை போன்ற இடங்களில் வாங்கிய அடிகளை வாங்கிக்கொண்டு, உள்ளுக்குள் அழுது புலம்பி, இறைவனின் மேல் பாரத்தைப் போட்டு, அன்றாட வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அரபு நாடுகளில் இருந்து ஓரளவாவது கிடைக்கும் உதவிகளும் அரசியல்வாதிகளிடம் சுழன்று, கடைசியில் சிறிதளவு அவர்களை போய்ச் சேரும். 

இதே கதிதான், தமிழ்ச் சமூகத்திற்கும்.

நீங்கள் நினைக்கும் அளவு விரிசல் இல்லை.

நீங்கள் நான் எழுதியதைப் புரிந்துகொள்ளாமல் எழுதுவதுபோலத் தெரிகிறது.

மத்திய கிழக்கின் அழுத்தம் எதுவுமே செய்யப்போவதில்லை என்றுதான் நான் கூறுகிறேன். நீங்களோ, அப்படியேதும் நடக்குமா என்று என்னையே திருப்பிக் கேட்கிறீர்கள். 

முடிவாக என்னதான் சொல்லுகிறீர்கள்? 

1 minute ago, ragunathan said:

நீங்கள் நான் எழுதியதைப் புரிந்துகொள்ளாமல் எழுதுவதுபோலத் தெரிகிறது.

மத்திய கிழக்கின் அழுத்தம் எதுவுமே செய்யப்போவதில்லை என்றுதான் நான் கூறுகிறேன். நீங்களோ, அப்படியேதும் நடக்குமா என்று என்னையே திருப்பிக் கேட்கிறீர்கள். 

முடிவாக என்னதான் சொல்லுகிறீர்கள்? 

 

1 hour ago, thulasie said:


 

 ஐ. நாவின் அழுத்தங்களையே, இலங்கை அரசு செவி மடுப்பதில்லை.

மத்திய கிழக்கு அரசின் அழுத்தம் எந்த மூலைக்கு உதவும்?

 

1 hour ago, ragunathan said:

சரிதான்

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

எப்படி உங்களால் குறைவு என்று சொல்ல முடியும் ??? குறைந்து கொண்டு செல்கிறது என்று சொல்ல முடியும் ??

கள ஆய்வு எல்லாம் செய்து  புள்ளிவிபரம் எல்லாம் திரட்டி ஆராய்ந்து அறிக்கை சமர்பித்தா செய்யமுடியும்! சும்மா போகிறபோக்கில எடுத்துவிட்டால் நம்புகிறவர்கள் நம்புவார்கள்தானே. சமூகவலைத் தளங்களில் புனைவுகளை பரப்புவர்களும் அதனை நம்புவர்களும் இருக்குமட்டும் எதுவும் சொல்லலாம்.

10 minutes ago, கிருபன் said:
2 hours ago, thulasie said:

நாட்டு நடப்புகள்தான்.

கள ஆய்வு எல்லாம் செய்து  புள்ளிவிபரம் எல்லாம் திரட்டி ஆராய்ந்து அறிக்கை சமர்பித்தா செய்யமுடியும்! சும்மா போகிறபோக்கில எடுத்துவிட்டால் நம்புகிறவர்கள் நம்புவார்கள்தானே. சமூகவலைத் தளங்களில் புனைவுகளை பரப்புவர்களும் அதனை நம்புவர்களும் இருக்குமட்டும் எதுவும் சொல்லலாம்.

 

2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எப்படி உங்களால் குறைவு என்று சொல்ல முடியும் ??? குறைந்து கொண்டு செல்கிறது என்று சொல்ல முடியும் ??

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.