Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெனீவாவில் கோரிக்கைகளை முன்வைக்க யாழ்.மக்களுக்கு வாய்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

suren-rahavan-720x450.png

ஜெனீவாவில் கோரிக்கைகளை முன்வைக்க யாழ்.மக்களுக்கு வாய்ப்பு

ஜெனீவா மனித உரிமை பேரவையில் முன்வைக்க வேண்டிய கோரிக்கைகளை எதிர்வரும் 13ஆம் திகதி வரை மக்கள் கையளிக்க முடியுமென வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே சுரேன் ராகவன் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கோரிக்கைகளை வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் எழுத்து மூலமாகவோ அல்லது நேரடியாகவோ மக்கள் வந்து வழங்க முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு மக்களின் கோரிக்கைகளை சேகரிப்பதற்கு தனியான அமைப்பொன்றினை உருவாக்கவுள்ளதாகவும் சுரேன் ராகவன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் 40ஆவது கூட்டத்தொடர் கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ஜெனிவாவில்-கோரிக்கைகளை-ம/

  • கருத்துக்கள உறவுகள்

அரசை எதிர்த்தரப்பாக நிறுத்தி பலதரப்பட்ட குற்றச்சாட்டுகளுடன் மக்கள் வழங்கும் கோரிக்கைகளை  அதே அரசாங்கத்தின் பிரதிநிதியாயிருக்கக்கூடிய ஆளுனர் பெறுவதும் அவற்றை ஜெனிவாவில் சமர்ப்பிப்பதும் நகைப்பிற்கிடமானது. மக்களின் கோரிக்கைகளை சேகரிக்க ஆளுனர் உருவாக்கிய தனியான அமைப்பு பக்கச்சார்பின்றி செயற்படும் எனவும் சொல்லமுடியாது.

இனப்பிரச்சினை சம்பந்தமாக தமிழ் அரசியல்வாதிகளின் நெறிப்படுத்தப்படாத செயற்பாடுகளும் ஒற்றுமையற்ற சுயநலப்போக்கும் அரசை இவ்வாறு செய்யத்தூண்டுகிறது.  

மக்களிடமிருந்து இந்தக்கோரிக்கைகளை  பெற்று ஜெனிவாவுக்கு அனுப்பிவைப்பதற்கு  ஐநாவின் பிரதிநிதிகள் எவரும் தமிழ்பிரதேசங்களில் இல்லையா? அல்லது அவர்கள்மேல் அரசுக்கு நம்பிக்கையில்லையா?

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்

ஆளுநர் தன் கடமையை செவ்வனே செய்கிறார்!👎

22 hours ago, தமிழ் சிறி said:

ஜெனீவாவில் கோரிக்கைகளை முன்வைக்க யாழ்.மக்களுக்கு வாய்ப்பு

22 hours ago, தமிழ் சிறி said:

வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் எழுத்து மூலமாகவோ அல்லது நேரடியாகவோ மக்கள் வந்து வழங்க முடியுமெனவும்

தமிழர்களுக்கு நம்பிக்கையான சர்வதேச நீதிபதிகளை இங்கு வரவழைத்து அவர்களை சுதந்திரமாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை சந்திக்கவிட்டால் அதுவே சிறப்பாக இருக்கும்.

ஆளுநருக்கு என்று ஒரு அலுவலகம் இருக்கையில் அதைவிட்டுவிட்டு வடமாகாணசபை முதலமைச்சர் அலுவலகத்தில் கோரிக்கைகளை முன்வைக்க கேட்பது சிங்கள-பௌத்த அரச படுகொலைகாரர்களின் திட்டமிட்ட சதித்திட்டம் எனவும், அதை சிங்கள-பௌத்த அரச படுகொலைகாரர்களின் முகவரான வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் நடைமுறைப்படுத்துவதாகவும் மக்கள் நினைக்கிறார்கள்.

இந்த கபட திட்டத்துக்கு அமைய ஏற்கனவே விலைபோனவர்கள் சிலரை ஏற்பாடு செய்து கேலித்தனமான கோரிக்கைகளை முன்வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதன் மூலம் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் ஏற்கனவே சமர்ப்பித்துள்ள ஆவணத்தை கேலிக்குரியதாக்கலாம் என்பது சிங்கள-பௌத்த அரச படுகொலைகாரர்களினதும் எடுபிடிகளான சுரேன் ராகவன் சுமந்திரன் வகையறாக்களினதும் நம்பிக்கை.  

இப்படி ஒரு அறிவிப்பை செய்துவிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை  ஏமாற்றியது மட்டுமல்ல அவர்களைச் சந்திக்கவே இல்லை என்பதன் மூலம் தமிழர்களுக்கு எதிரான ஒரு மோசமான சதித்திட்டத்தை சிங்கள-பௌத்த அரச படுகொலைகாரர்களினது முகவரான சுரேன் ராகவன் முன்னெடுக்கிறார் என்பது உறுதிப்படுத்துகிறது.

இவர்களின் கபட திட்டத்துக்கு அமைய ஏற்கனவே விலைபோனவர்கள் சிலரை ஏற்பாடு செய்து கேலித்தனமான கோரிக்கைகளை முன்வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

முன்னாள் வடமாகாண முதலமைச்சர் ஏற்கனவே சமர்ப்பித்துள்ள ஆவணத்தை கேலிக்குரியதாக்கலாம் என்பது சிங்கள-பௌத்த அரச படுகொலைகாரர்களினதும் எடுபிடிகளான சுரேன் ராகவன் சுமந்திரன் வகையறாக்களினதும் நம்பிக்கை.

சிவாஜி மற்றும் அனந்தியின் ஜெனீவாவிற்கான கடிதம் ஆளுநரிடம் ஒப்படைப்பு!

Geniva-720x450.jpg

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் உள்ளிட்டோர் ஜெனீவாவில் சமர்ப்பிக்க வேண்டியதென கருதும் தமது கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை ஆளுநர் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

கோரிக்கைகள் அடங்கிய குறித்த கடிதத்தை இன்று (சனிக்கிழமை) ஆளுநரின் தனிப்பட்ட செயலாளர் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் ஆகியோரிடம் கையளித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் கடந்தமாதம் ஆரம்பமாகியுள்ளது.

மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கலந்துகொள்வதற்காக வட. மாகாண ஆளுநர் சுரேன் ராகவனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.

இந்தநிலையில் வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் வட. மாகாண சபை உறுப்பினர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சமய தலைவர்கள் ஆகியோர் ஜெனீவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் வட. மாகாணம் சார்ந்து முன்வைக்க வேண்டியதென கருதும் தமது கோரிக்கைகளை எழுத்துமூலம் சமர்ப்பிக்கலாமென ஆளுநர் அறிவித்திருந்தார்.

இதற்கான கடிதம் மக்கள் பிரதிநிதிகளுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் தமது கோரிக்கைகளினை ஆளுநர் செயலகத்தில் சமர்ப்பிக்க முடியுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பொதுமக்கள் தமது கோரிக்கைகளினை எதிர்வரும் 13ஆம் திகதி கைதடி முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெறும் மக்கள் சந்திப்பில் இதற்கென விசேடமாக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் கையளிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

http://athavannews.com/சிவாஜி-மற்றும்-அனந்தியின/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.