Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமானுக்கு... கரும்பு விவசாயி சின்னம் கிடைச்சிருக்கு..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 3/16/2019 at 2:21 AM, manimaran said:

நாம் தமிழர் கட்சியின் அரசியல் ஒரு எதிர்மறை அரசியல். எம்மிடையே உள்ள பிரச்சணைகளுக்கு மற்றவர்களை குற்றம் சாட்டி தமிழர் அல்லாதோரை எதிரிகளாக சித்திரித்து அதன்மூலம் கட்சியின் பிரபல்யத்தை தக்க வைக்கும் முயற்சி.

இது நீண்ட கால நோக்கில் தமிழர் நலனைப் பேண துணைபோகாது

தமிழர் அல்லாதோர் ஆட்சி தமிழ் நாட்டில் 50 வருடங்களாக நடந்து தமிழ் நாட்டை குட்டிசுவர் ஆக்கியது என் கிறார் சீமான்.  அதற்கு உங்கள் பதில் என்ன??
தமிழர் அல்லாதோர்  இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் முதலமைச்சர் ஆகும் சாத்தியம் கிட்டத்தட்ட 0% என் கிறார் சீமான். ஏன் தமிழ் நாடு விதி விலக்கு  என் கிறார் சீமான். அவரின் கொள்கை விளக்கத்தில் காபரேட் கொம்பனிகளின் ஊடுருவல் பற்றி மிக தெளிவாக சொல்லி உள்ளார். அதற்காக போராடிய மக்கள் இந்திய காவல் படையால் சுட்டுக்கொல்லப்பட்டது தெரிந்ததே. இதில் உள்ள நீங்கள் கூறும் எதிர்மறை அரசியல் என்ன? 
தமிழ் நாட்டு மக்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளையுமே  சீமான் மேடைகளில் சொல்கிறார். பிரச்சனைகளுக்கு யார் யார் காரணம் என்பதையும் மக்களுக்கு சொல்கிறார். எவை நீண்ட கால நோக்கில் துணைபோகாது என நினைக்கிறீர்கள்??

  • கருத்துக்கள உறவுகள்

 

16 hours ago, Nathamuni said:

 

  1. புலிகள் பயன்படுத்தியது அறிவார்ந்த அரசியலா, வீரம் செறிந்த போரா?

 

 

வல்லவன் வகுத்ததே வாய்க்கால்

இது சர்வதேச அரசியலின் யதார்த்தம்.

இராயதந்திரம், மனிதஉரிமை, அனைத்துலக சட்டம் இவையெல்லாம் அந்த பலத்தின்பால் பிறப்பன.

முன்னது இன்றி பின்னது இல்லை. (முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான காலப் பகுதியில் நாம் அதனை நன்றாகவே காண்கின்றோம். )

விடுதலைப் புலிகள் அந்த அரசியலை நன்கே அறிந்து வைத்து அப் பலத்தை வளர்த்தெடுப்பதில் முழு அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். வீரம் செறிந்த, பல தியாகங்கள் நிறைந்த போராட்டம் அப் 'பலம்' இனை தக்க வைக்க அரணாக அமைந்தன. 

 

16 hours ago, Nathamuni said:

திராவிடம் என்று கூறி, தமிழகத்தில் கூதல் காய்ந்தது, காய்வது யார்? அந்த தமிழர்கள் மீட்கப் படக் கூடாது, சீமான் முயற்சி தவறு என்கிறீர்களா?

 

 
 

தங்கள் இரண்டாவது கேள்விக்குரிய பதில் திரு.உதயகுமாரன் அவர்களின் கட்டுரையில் நன்கு விளக்கமாக உள்ளது. நேரம் கிடைக்கும் போது நன்கு ஆறுதலாக படியுங்கள். தமிழர் நலனில் அக்கறையுள்ள அனைவருக்கும் பயன்படக்கூடிய ஒரு ஆக்கம். 

http://www.puthinappalakai.net/2018/05/12/news/30831

Edited by manimaran

9 hours ago, nunavilan said:

தமிழர் அல்லாதோர் ஆட்சி தமிழ் நாட்டில் 50 வருடங்களாக நடந்து தமிழ் நாட்டை குட்டிசுவர் ஆக்கியது என் கிறார் சீமான்.  அதற்கு உங்கள் பதில் என்ன??
தமிழர் அல்லாதோர்  இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் முதலமைச்சர் ஆகும் சாத்தியம் கிட்டத்தட்ட 0% என் கிறார் சீமான். ஏன் தமிழ் நாடு விதி விலக்கு  என் கிறார் சீமான். அவரின் கொள்கை விளக்கத்தில் காபரேட் கொம்பனிகளின் ஊடுருவல் பற்றி மிக தெளிவாக சொல்லி உள்ளார். அதற்காக போராடிய மக்கள் இந்திய காவல் படையால் சுட்டுக்கொல்லப்பட்டது தெரிந்ததே. இதில் உள்ள நீங்கள் கூறும் எதிர்மறை அரசியல் என்ன? 
தமிழ் நாட்டு மக்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளையுமே  சீமான் மேடைகளில் சொல்கிறார். பிரச்சனைகளுக்கு யார் யார் காரணம் என்பதையும் மக்களுக்கு சொல்கிறார். எவை நீண்ட கால நோக்கில் துணைபோகாது என நினைக்கிறீர்கள்??

 

திரு.உதயகுமாரன் அவர்களே இதற்கும் பதிலளிக்கின்றார். 

உணர்ச்சி வசப்படுத்தி உருவேற்றும் அரசியல் எமக்கு நன்மை பயக்காது. 

முள்ளிவாய்க்கால் காலப் பகுதியில் இருபதுக்கும் அதிகமான தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் தங்களைத் தாங்களே தீயில் உருக்கினர்.

அதன் பலன் ?

தமிழ்த் தேசியம் 20 தமிழ் தேசியவாதிகளை இழந்தது மட்டுமே. 

சீமான் உள்ளிட்டோரின் அரசியல் இப்படியானவை இன்னும் தொடர்வதற்கே வழிவகுக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, manimaran said:

வல்லவன் வகுத்ததே வாய்க்கால்

இது சர்வதேச அரசியலின் யதார்த்தம்.

இராயதந்திரம், மனிதஉரிமை, அனைத்துலக சட்டம் இவையெல்லாம் அந்த பலத்தின்பால் பிறப்பன.

முன்னது இன்றி பின்னது இல்லை. (முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான காலப் பகுதியில் நாம் அதனை நன்றாகவே காண்கின்றோம். )

விடுதலைப் புலிகள் அந்த அரசியலை நன்கே அறிந்து வைத்து அப் பலத்தை வளர்த்தெடுப்பதில் முழு அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். வீரம் செறிந்த, பல தியாகங்கள் நிறைந்த போராட்டம் அப் 'பலம்' இனை தக்க வைக்க அரணாக அமைந்தன. 

 

தங்கள் இரண்டாவது கேள்விக்குரிய பதில் திரு.உதயகுமாரன் அவர்களின் கட்டுரையில் நன்கு விளக்கமாக உள்ளது. நேரம் கிடைக்கும் போது நன்கு ஆறுதலாக படியுங்கள். தமிழர் நலனில் அக்கறையுள்ள அனைவருக்கும் பயன்படக்கூடிய ஒரு ஆக்கம். 

http://www.puthinappalakai.net/2018/05/12/news/30831

 

6 hours ago, manimaran said:

திரு.உதயகுமாரன் அவர்களே இதற்கும் பதிலளிக்கின்றார். 

உணர்ச்சி வசப்படுத்தி உருவேற்றும் அரசியல் எமக்கு நன்மை பயக்காது. 

முள்ளிவாய்க்கால் காலப் பகுதியில் இருபதுக்கும் அதிகமான தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் தங்களைத் தாங்களே தீயில் உருக்கினர்.

அதன் பலன் ?

தமிழ்த் தேசியம் 20 தமிழ் தேசியவாதிகளை இழந்தது மட்டுமே. 

சீமான் உள்ளிட்டோரின் அரசியல் இப்படியானவை இன்னும் தொடர்வதற்கே வழிவகுக்கும். 

புதிய உறுப்பினர் ஆக தெரிகிறது. முன்னர் வயிரவர் இருந்தார். இப்போது நீங்கள்.

எழுத்தில், அகலம் இருக்கலாம். ஆழம் முக்கியம். இது எனது சிறு ஆலோசனை.

எடுத்ததுக்கு எல்லாம் உதயகுமாரின் ஒரு கட்டுரை மட்டுமே போதும் என்று நினைக்கிறீர்களா?

இதே உதயகுமார், தமிழ் தேசியவாதியாக தன்னால் மதிக்கப்படும் சீமான், கமல் வீடு தேடி சென்று வாழ்த்தியதே தவறு என்று சொன்னார் தெரியுமா?

முள்ளிவாய்களில், 20 பேர் தீயில் உருகினாரா? எப்போது? 
சரி, அப்படியானால், புலிகள் போராட்டமும் தவறு என்கிறீர்களா?

தமிழ்த் தேசியம் 20 தமிழ் தேசியவாதிகளை இழந்தது மட்டுமே என்கிறீர்கள். அப்படியானால் இறந்த ஆயிரக்கணக்கானோர்??

என்ன சொல்ல வாறீர்கள்  என்றே புரியவில்லை. வைரவர் இதே போல தானே எழுதுவார்....

ஆக, வயிரவர்..... வேறு பெயரில் வந்துவிட்டார் என்றே நினைக்க தோன்றுகிறது.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, people smiling, text

  • கருத்துக்கள உறவுகள்
On 3/18/2019 at 9:49 AM, Nathamuni said:

 

புதிய உறுப்பினர் ஆக தெரிகிறது. முன்னர் வயிரவர் இருந்தார். இப்போது நீங்கள்.

எழுத்தில், அகலம் இருக்கலாம். ஆழம் முக்கியம். இது எனது சிறு ஆலோசனை.

எடுத்ததுக்கு எல்லாம் உதயகுமாரின் ஒரு கட்டுரை மட்டுமே போதும் என்று நினைக்கிறீர்களா?

இதே உதயகுமார், தமிழ் தேசியவாதியாக தன்னால் மதிக்கப்படும் சீமான், கமல் வீடு தேடி சென்று வாழ்த்தியதே தவறு என்று சொன்னார் தெரியுமா?

முள்ளிவாய்களில், 20 பேர் தீயில் உருகினாரா? எப்போது? 
சரி, அப்படியானால், புலிகள் போராட்டமும் தவறு என்கிறீர்களா?

தமிழ்த் தேசியம் 20 தமிழ் தேசியவாதிகளை இழந்தது மட்டுமே என்கிறீர்கள். அப்படியானால் இறந்த ஆயிரக்கணக்கானோர்??

என்ன சொல்ல வாறீர்கள்  என்றே புரியவில்லை. வைரவர் இதே போல தானே எழுதுவார்....

ஆக, வயிரவர்..... வேறு பெயரில் வந்துவிட்டார் என்றே நினைக்க தோன்றுகிறது.

நாதமுனி, இவரின் கருத்து பதிவுகளை விகடன் இணையதளத்திலும் youtube  இணையதளத்திலும்  நிறையவே பார்த்திருக்கிறேன். எங்கெல்லாம் சீமானின் செய்திகள் வருகிறதோ அங்கெல்லாம் இப்படியான எதிர்வினை பதிவுகளை எழுதுவதே இவரின் வேலை. கண்டுகொள்ளாமல் விட்டால் சரி.

இவர் இங்கு 20 பேர் என குறிப்பிடுவது கடைசிக்கட்ட போரின்போது தமிழ் நாட்டில் தீக்குளித்து இறந்தவர்களை என்று நினைக்கிறேன்??

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Eppothum Thamizhan said:

நாதமுனி, இவரின் கருத்து பதிவுகளை விகடன் இணையதளத்திலும் youtube  இணையதளத்திலும்  நிறையவே பார்த்திருக்கிறேன். எங்கெல்லாம் சீமானின் செய்திகள் வருகிறதோ அங்கெல்லாம் இப்படியான எதிர்வினை பதிவுகளை எழுதுவதே இவரின் வேலை. கண்டுகொள்ளாமல் விட்டால் சரி.

இவர் இங்கு 20 பேர் என குறிப்பிடுவது கடைசிக்கட்ட போரின்போது தமிழ் நாட்டில் தீக்குளித்து இறந்தவர்களை என்று நினைக்கிறேன்??

தமிழ் சினிமா படங்களில், ஹீரோ, ஹீரோயின் பாடும் போது, சில பெண்கள், பின்னாலும், பக்கங்களிலும் ஓடி ஓடி ஆடுவார்கள். இவர்களை முன்னர் '10 ரூபாவும், சோத்துப்  பார்சலும்' என்பார்கள். (இப்போது  சங்கம் அமைத்து, பலமடைந்து விட்டார்கள்)

அதேபோல ஆட்கள் தான், திமுகவிடம் காசு வாங்கிக் கொண்டு, சமூக வலைத் தளங்களில் கொஞ்சையாக எழுதுகிறார்கள்.

இன்றும் கூட சீமான், யாரையோ திட்டுவதாக மிமிக்கிரி செய்து போட்டு உள்ளார்கள். எவ்வளவு கடின உழைப்பு. 

  • கருத்துக்கள உறவுகள்
On 3/17/2019 at 10:16 PM, manimaran said:

திரு.உதயகுமாரன் அவர்களே இதற்கும் பதிலளிக்கின்றார். 

உணர்ச்சி வசப்படுத்தி உருவேற்றும் அரசியல் எமக்கு நன்மை பயக்காது. 

முள்ளிவாய்க்கால் காலப் பகுதியில் இருபதுக்கும் அதிகமான தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் தங்களைத் தாங்களே தீயில் உருக்கினர்.

அதன் பலன் ?

தமிழ்த் தேசியம் 20 தமிழ் தேசியவாதிகளை இழந்தது மட்டுமே. 

சீமான் உள்ளிட்டோரின் அரசியல் இப்படியானவை இன்னும் தொடர்வதற்கே வழிவகுக்கும். 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.