Jump to content

2019 ஐ.பி.எல். ரி-20 தொடர் செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.பி.எல். ரி-20 தொடர்: அணிகளில் பல மாற்றங்கள்!

IPL-1.jpg

இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின், அடுத்த கட்டத்துக்கான தயார்படுத்தல்கள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இத்தொடர் குறித்த புதிய செய்திகள் குறித்து அறிந்துக் கொள்ள இரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

இந்த நிலையில், இத்தொடரில் இடம்பெற்றுள்ள அணிகளில், மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பல செய்திகள் வெளிவந்துள்ளன. அந்த மாற்றங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்,

கடந்த தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஷிவம் மவி, கம்லேஷ் நகர்கோடி ஆகியோர் இடம்பிடித்திருந்தனர்.

ஆனால் தற்போது இருவரும் காயம் அடைந்துள்ளனர். இதனால் இந்த தொடரில் அவர்கள் இருவரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெறவில்லை.

இதற்கு பதிலாக ரஞ்சி கிண்ண தொடரில், சிறப்பாக பந்து வீசிய கேரளாவைச் சேர்ந்த சந்தீப் வாரியர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும், அவுஸ்ரேலிய கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஹர்திக் பாண்ட்யா, காயம் காரணமாக அணியில் இருந்து விலகினார். இதனால் அவர் ஐ.பி.எல். தொடரில் விளையாடு சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது.

தற்போது அவர் உடற்தகுதி பெற்றுவிட்டதனால், அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களம் இறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டெல்லி கேப்பிட்டலஸ் அணியின் ஆலோசகராக, இந்திய அணியின் முன்னாள் தலைவரான சௌரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.

நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். ரி-20 லீக் தொடர், மார்ச் 23ஆம் திகதி முதல் மே மாதம் 19ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 17 போட்டிகள், 8 நகரங்களில் நடைபெறுகின்றன.

இந்த ஐ.பி.எல். தொடரில், சென்னை சுப்பர் கிங்ஸ், பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், மும்பை, இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ரோயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

அனைத்து அணிகளும் குறைந்தபட்சம் 4 போட்டிகளில் விளையாடுகின்றன. இதில் டெல்லி கேபிடல்ஸ், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மட்டும் 5 போட்டிகளில் விளையாடுகின்றன. ஒவ்வொரு அணியும் 2 போட்டிகளை சொந்தமாநிலத்திலும், 2 போட்டிகளை வெளிமாநிலத்திலும் விளையாடுகின்றன. டெல்லி கேபிடல்ஸ், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, 3 போட்டிகளை வெளிமாநிலத்தில் விளையாடுகின்றன.

இதற்கிடையில், இத்தொடரின் முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி முதல் போட்டி மார்ச் 23ஆம் திகதி சென்னையில் நடைபெறுகின்றது. இதில் நடப்பு சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

ஏப்ரல் 5ஆம் திகதி வரை அறிவிக்கப்பட்டுள்ள போட்டி அட்டவணையின் இறுதிப் போட்டியில், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் பெங்களூரில் மோதவுள்ளன.

இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 11 ஐ.பி.எல். தொடர்களில் ராஜஸ்தான் ரோயல்ஸ், டேக்கன் சார்ஜஸ், சன்ரைசஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் தலா ஒருமுறையும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி இரண்டு முறைகளும் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா மூன்று முறைகளும், சம்பியன் கிண்ணங்களை ஏந்தியுள்ளன.

 

http://athavannews.com/ஐ-பி-எல்-ரி-20-தொடர்-அணிகளில்/

 

 

Link to comment
Share on other sites

  • Replies 106
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2019: 5 முக்கிய வீரர்களுக்கு இந்த ஐபிஎல் கடைசி சீசன்?

ஐ.ஏ.என்.எஸ்புதுடெல்லி
5-playersjpg

ஐபிஎல் அணிகளில் பல்வேறு அணிகளைச் சேர்ந்த 5 முக்கிய வீரர்களுக்கு இந்த சீசன் கடைசியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

12-வது ஐபிஎல் சீசன் வரும் 23-ம் தேதி தொடங்குகிறது. கடந்த 11 சீசன்களாக ஏராளமான வீரர்கள் பல்வேறு அணிகளில் வந்துள்ளார்கள், வெளியே சென்றுள்ளார்கள். ஆனால், சில வீரர்கள் மட்டுமே நீண்டகாலமாக அணியில் தொடர்ந்து வருகின்றனர். ஆனால், வயது மூப்பு, களத்தில் பிரகாசிக்க முடியாமை,  இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டிய கட்டாயம் போன்ற காரணங்களால் 5 முக்கிய வீரர்களுக்கு இந்த சீசன் கடைசி சீசனாக இருக்கலாம்.

யுவராஜ் சிங்

 

-yuvraj-singh-nets-ptijpg

 

டி20 கிரிக்கெட் போட்டிகளின் நாயகன் என்று யுவராஜ் சிங்கை குறிப்பிடலாம். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரே ஓவரில் 6 சிக்ஸர் அடித்த யுவராஜ் சிங்கின் காட்டடியை இன்னும் யாரும் மறந்திருக்கமாட்டார்கள்.

ஐபிஎல் போட்டிகளில் கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து யுவராஜ் சிங் விளையாடி வருகிறார். கிங்ஸ் லெவன் பஞ்சாப், புனே வாரியர்ஸ், ஆர்சிபி, டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் அணி, என பல்வேறு அணிகளில் விளையாடியுள்ளார். ஆனால், கடந்த இரு சீசன்களாக யுவராஜ் சிங்கின் பேட்டிங் திறமையை கேள்விக்குள்ளாகி வருகிறது. 

இந்த சீசனில் ஏலத்தில் யுவராஜ் சிங்கை எடுக்க யாரும் தயாராக இல்லை என்ற நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.ஓரு கோடிக்கு விலைக்கு வாங்கியது. இந்த முறை 37 வயதாகும் யுவராஜ் சிங் தனது பேட்டிங் திறமயை நிரூபிக்காவிட்டால், இந்த சீசன் அவருக்கு கடைசியாக அமையலாம்.

ஷேன் வாட்ஸன்

ஆஸ்திரேலியாவின் 37 வயது வீரர் ஷேன் வாட்ஸன். பந்துவீச்சு, பேட்டிங் இரு துறைகளிலும் சிறப்பாகச் செயல்படக்கூடியவர். கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து 2015-ம் ஆண்டுவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்த வாட்ஸன், அதன்பின் ஆர்சிபி அணியிலும், கடந்த இரு ஆண்டுகளாக சிஎஸ்கே அணியிலும் உள்ளார்.

கடந்த ஆண்டு சீசனில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்று 15 ஆட்டங்களில் 555 ரன்கள் குவித்து, 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார் வாட்ஸன். சிஎஸ்கே அணிக்கு அதிரடியான தொடக்கத்தை அளிப்பதில் வாட்ஸன் பங்கு முக்கியம். ஆனால், இந்த சீசனில் அவருக்கு 38 வயதாகிறது என்பதால், அடுத்த ஆண்டு சீசனில் வாட்ஸன் பங்கேற்பது சந்தேகம் என ஆஸி. ஊடங்கள் தெரிவிக்கின்றன.

shane-watson-bcjpg

 

360 டிகிரி வீரர்

தென் ஆப்பிரிக்க முன்னாள் வீர் ஏபி டிவில்லியர்ஸ் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து ஐபிஎல் அணிகளில் விளையாடி வருகிறார். தொடக்கத்தில் 2008 முதல் 2012-ம் ஆண்டு வரை டெல்லி டேர்டெவில்ஸ் அணியிலும் 2013 முதல் ஆர்சிபி அணியில் தவிர்க்க முடியாத வீரராக டிவில்லியர்ஸ் வலம் வருகிறார்.

சிறந்த விக்கெட் கீப்பர், 360 டிகிரி கோணத்திலும் மைதானத்தில் பந்துகளை விரட்டி அடிக்கும் வல்லவமை படைத்தவர் என்று டிவில்லியர்ஸ வர்ணிக்கப்பட்டாலும், வயது முக்கியமான காரணியாக இருக்கிறது. தனிவீரராக டெய்லன்டர்களுடன் சேர்ந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார் டிவில்லியர்ஸ்.

ஆனால், ஆர்சிபி அணியில் இளமைக்கும், துடிப்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதனால்தான் ஜெய்பூரில் நடந்த ஏலத்தில் அனுபவம் வாய்ந்த வயது முதிர்ந்த வீரர்களுக்கு பதிலாக இளம் வீரர்களை  ஏலத்தில் எடுத்தனர். 

தற்போது 37 வயதாகும் டிவில்லியர்ஸ் அடுத்த ஆண்டு ஏலத்தில் அணியில் இருந்து நீக்கப்படலாம் என்ற சமிக்ஞையை அணி நிர்வாகம் காட்டிவிட்டது. ஆதலால், சிறப்பாக விளையாடினாலும் டிவில்லியர்ஸ்க்கு இந்த சீசன் கடைசியாக இருக்கும் எனத் தெரிகிறது.

அதிரடி வீரர் கெயில்

யுனிவர்ஸல் பாஸ் என்று தன்னைதானே கூறிக்கொள்ளும் மேற்கிந்தியத்தீவுகள் வீரர் கிறிஸ் கெயில். இதுவரை ஐபிஎல் போட்டிகளில் 111 இன்னிங்ஸ்களில் விளையாடி 3,994 ரன்கள் சேர்த்து மிரமிப்பை ஏற்படுத்தி வருகிறார். கடந்த 2011 முதல் 2013ம் ஆண்டுவரை கெயிலின் பேட்டிங் உச்ச கட்டத்தில் இருந்து, உச்ச ஃபார்மில் இருந்தார். இந்த 3ஆண்டுகளில் கெயின் பேட்டிங் சராசரி 60 ஆக உயர்ந்திருந்தது.

gaylejpg

 

ஆர்சிபி அணிக்காக கெயில் விளையாடியபோதெல்லாம், தனிவீரராக களத்தில் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற ஆட்டங்களும இருந்தன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பேட்டிங்கில் சொதப்பியதால், அணியில் இருந்து ஓரம்கட்டப்பட்டு கடந்த 2018-ம் ஆண்டு கழற்றிவிடப்பட்டார். 

ஆனால், கெயிலை கிங்ஸ்லெவன் பஞ்சாப் விலைக்கு வாங்கியது. கடந்த சீசனிலும் சில போட்டிகளில் சிறப்பாக விளையாடிய கெயிலுக்கு அடுத்த ஆண்டு  40 வயதாகிறது. ஆதலால், வயதுமூப்பை காரணமாகக் கொண்டு கிங்ஸ் லெவன் அணியும் அடுத்த சீசனில் கெயிலை கழற்றிவிடும். மேலும், கெயிலும் இந்த ஆண்டோடு கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து விலகப் போவதாகவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்ரான் தாஹிர்

தென் ஆப்பிரிக்காவின் உணர்ச்சிமிகு சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர். 37 வயதான தாஹிர் டி20 போட்டியில் நம்பர்ஒன் பந்துவீச்சாளராக இருந்து வருகிறார். இம்ரான் தாஹிருக்கும் 40 வயதாகிறது என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம்.

தற்போது சிஎஸ்கே அணியில் இடம் பெற்று சிறப்பாக பந்துவீசி வரும் இம்ரான் தாஹிர் அடுத்த ஆண்டு ஏலத்தில் இருந்து கழற்றிவிடப்பட அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன. 

ஏனென்றால், இந்த ஆண்டு ஏலத்தில்அதிகமான மாற்றங்களைச் செய்யாத சிஎஸ்கே அணி நிச்சயம் அடுத்த சீசன் ஏலத்தின் போது ஏராளமான மாற்றங்களைச் செய்ய காத்திருக்கிறது. ஆதலால், வயது மூப்பின் அடிப்படையில் இம்ரான் தாஹிருக்கு இது கடைசி சீசனாக அமையலாம்.

 

 

https://tamil.thehindu.com/sports/article26597822.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.பி.எல். முதல் போட்டியில் சி.எஸ்.கே.யின் அதிரடி முடிவு

12 ஆவது ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டித் தொடர் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், முதல் போட்டியில் நடப்பு சம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோயல் சேஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

csk.jpg

இப் போட்டி சென்னை சேப்பாக்கம், சிதம்பரம் மைதானத்தில் இரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், இப் போட்டிக்கான டிக்கெட்டுகள் ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தது. 

இந்த நிலையில் ஐ.பி.எல். முதலாவது ஆட்டத்தின் டிக்கெட் மூலம் கிடைக்கும் வருமானத்தை காஷ்மீரின் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த இராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் தோனி, இராணுவத்தில் கெளரவப் பொறுப்பில் உள்ளதனால், நலநிதிக்கான இந்த காசோலையை அவர் வழங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

http://www.virakesari.lk/article/52377

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

12 ஆவது ஐ.பி.எல். திருவிழா நாளை ஆரம்பம் : நீங்கள் அறியாத விடயங்கள் இதோ !

(ஜெ.அனோஜன்)

12 ஆவது ஐ.பி.எல். இருபதுக்கு - 20 கிரிக்கெட் திருவிழாவானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை சனிக்கிழமை கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.

ipl1.jpg

இம்முறை ஐ.பி.எல். தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், ஷிரியாஸ் ஐயர் தல‍ைமையிலான டெல்லி கெப்டல்ஸ், அஸ்வீன் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப், தினேஸ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ், விராட் கோலி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபத் ஆகிய எட்டு அணிகள் களமிறங்குகின்றன.

ipl.jpg

இந் நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை , ஐ.பி.எல். போட்டிக்கான முழுமையான லீக் அட்டவணையை அண்மையில் அறிவித்ததுடன் ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டங்கள் மற்றும் இறுதிப்போட்டி ஆகியவற்றின் போட்டி நேர அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தது.

இந்தியாவிலுள்ள எட்டு கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறவுள்ள 12 ஆவது ஐ.பி.எல். தொடரில் மொத்தமாக 60 போட்டிகள் இடம்பெறவுள்ளன. 

95355651_cricket-xlarge_trans_NvBQzQNjv4

12 ஆவது ஐ.பி.எல் தொடர் நாளை 23 ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் மே மாதம் 19 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்த 60 போட்டிகளைக் கொண்ட தொடரில் 56 லீக் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

லீக் போட்டிகளின் நிறைவில் இறுதிச் சுற்றுக்கான முதலாவது தகுதிகாண் போட்டியும் நீக்கல் போட்டியும் இறுதிச் சுற்றுப் போட்டிக்கான 2 ஆவது தகுதிகாண் போட்டியும் இடம்பெற்று 12 ஆவது ஐ.பி.எல். தொடருக்கான இறுதிப் போட்டி இடம்பெறும்.

கடந்த 2008 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 ஆம் ஆண்டு வர‍ை இடம்பெற்ற ஐ.பி.எல். தொடரின் சாதனைகள் பின்வருமாறு ;

* அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி மும்பை இந்தியன்ஸ் 

மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 171 போட்டிகளை எதிர்கொண்டு 97 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது.

* அதிக தோல்விகளை பதிவு செய்த அணி டெல்லி கெபிடல்ஸ்

டெல்லி கெபிடல்ஸ் அணி இதுவரை 161 போட்டிகளை எதிர்கொண்டு 91 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

* அதிக ஓட்டங்களை பெற்ற அணி ரோயல்ஸ் செலஞ்சர்ஸ் பெங்களூர்

ரோயல்ஸ் செலஞ்சர்ஸ் அணி புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற போட்டியின்போது 5 விக்கெட்டுக்களை இழந்து 263 ஓட்டங்களை குவித்தது.

* குறைந்த ஓட்டங்களை பெற்ற அணி ரோயல்ஸ் செலஞ்சர்ஸ் பெங்களூர்

ரோயல்ஸ் செலஞ்சர்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக கடந்த 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற போட்டியின் போது அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 49 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

* அதிகபடியான வெற்றியிலக்கை துரத்தியடித்த அணி (chases) ராஜஸ்தான் ரோயல்ஸ்

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி கடந்த 2008 ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை துரத்தி அடித்தது (217).

* குறைந்த வெற்றியிலக்கையும் அடையாது தோல்வியடைந்த அணி கிங்ஸ் லெவன் பஞ்சப்

கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற போட்டியின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 116 ஓட்டங்களை குவித்தது. 117 ஓட்டம் என்ற இலகுவான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 92 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

* அதிக ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி மும்பை இந்தியன்ஸ் 

மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 145 ஓட்டத்தினால் வெற்றி பெற்றது.

* அதிக ஓட்டங்களை விளாசிய வீரர் சுரேஷ் ரய்னா

சுரேஷ் ரய்னா 172 இன்னிங்ஸுக்களில் விளையாடி, 4 ஆயிரத்து 985 ஓட்டங்களை குவித்துள்ளார்.

* ஒரு இன்னிங்ஸில் கூடுதாலான ஓட்டங்களை பெற்ற வீரர் கிறிஸ் கெய்ல்

கிறிஸ் கெய்ல் 2013 ஆம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் ஆட்டமிழக்காது 175 ஓட்டங்களை குவித்தார்.

* அதிக ஆறு ஓட்டங்களை விளாசிய வீரர் கிறிஸ் கெய்ல்

கிறிஸ் கெய்ல் 111 இன்னிங்ஸ்களில் விளையாடி 292 ஆறு ஓட்டங்களை விளாசித் தள்ளியுள்ளார்.

*  ஒரு இன்னிங்ஸில் கூடுதலான ஆறு ஓட்டங்களை விளாசிய வீரர் கிறிஸ் கெய்ல்

கிறிஸ் கெய்ல் 2013 ஆம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் 17 ஆறு ஓட்டங்களை விளாசித் தள்ளியுள்ளார்.

* வேகமாக சதம் விளாசிய வீரர் கிறிஸ் கெய்ல் 

கிறிஸ் கெய்ல் 2013 ஆம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் 30 பந்துகளில் சதம் விளாசினார்.

* வேகமாக அரைசதம் விளாசிய வீரர் கே.எல்.ராகுல்

கே.எல்.ராகுல் கடந்த 2018 ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் 18 பந்துகளில் அரைசதம் விளாசினார்.

* துடுப்பாட்ட சராசரியில் முன்னிலையில் உள்ள வீரர் ரஸல்

இவரது சராசரி 177.29 ஆகும்.

* அதிக விக்கெட்டுக்களை எடுத்த வீரர் லசித் மலிங்க

மலிங்க 2009 ஆம் ஆண்டு தொடக்கம் 2017 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் 110 இன்னிங்ஸ்களில் விளையாடி 154 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

* ஒரு இன்னிங்ஸில் குறைந்த ஓட்டங்களை கொடுத்து அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர் சொஹைல் தன்வீர் 

கடந்த 2008 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய தன்வீர் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 14 ஓட்டங்களை கொடுத்து 6 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

* பந்து வீச்சு சராசரியில் முன்னிலையில் உள்ள வீரர் ஆண்ட்ரூ டை

2017 - 2018 காலப் பகுதியில் பஞ்சாப் மற்றும் குஜராத் லயன்ஸ் அணிக்காக ஆண்ட்ரூ டை மொத்தமாக 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவரது சராசரி 16.36 ஆகும்.

* அதிக ஓட்டமற்ற பந்து வீச்சுக்களை (Dot ball) பரிமாற்றிய வீரர் ஹர்பஜன் சிங்

ஹர்பஜன் சிங் 145 போட்டிகளில் பந்து வீசி ஆயிரத்து 128 பந்துளுக்கு எவ்வித ஓட்டமும் வழங்காது கட்டுப்படுத்தியுள்ளார்.

* அதிக ஓட்டமற்ற ஓவர்களுக்காக (maiden over)பந்துப் பரிமாற்றம் மேற்கொண்ட வீரர் பிரவின் குமார்

பிரவின் குமார் 119 போட்டிகளில் விளையாடி பந்துப் பரிமாற்றம் மேற்கொண்ட அவர், மொத்தமாக 14 ஓவர்களுக்கு ஓட்டங்கள் வழங்காது கட்டுப்படுத்தியுள்ளார்.

* முதல் ஹெட்ரிக் எடுத்த வீரர் பாலஜி

சென்னை அணிக்காக விளையாடிய பாலாஜி கடந்த 2008 ஆம் ஆண்டு பஞ்சாப் அணியுடனான போட்டியில் மூன்று விக்கெட்டுக்களை அடுத்தடுத்து வீழ்த்தி ஹெட்ரிக் சாதனை படைத்தார்.

* அதிக பிடியெடுப்புகளை எடுத்த வீரர் சுரேஷ் ரய்னா

சுரேஷ் ரய்னா 95 பிடியெடுப்புக்களை எடுத்துள்ளார்.

http://www.virakesari.lk/article/52486

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்று தொடக்கம்; சென்னை சூப்பர் கிங்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் பலப்பரீட்சை

மு.யுவராஜ்சென்னை
ipl-t20JPG

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் 12-வது சீசன் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்த கிரிக்கெட் திருவிழாவானது வரும் மே 12-ம் தேதி வரை சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, மொஹாலி, ஜெய்ப்பூர், டெல்லி, மும்பை ஆகிய 8 நகரங்களில் நடைபெறுகிறது.

இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், பெங்களூரு ராயல் சேலஞ்

சர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டு பட்டம் வெல்ல மோதுகின்றன.

தொடக்க நாளான இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது. கடந்த சீசனில் அதிக வயதான வீரர்களை உள்ளடக்கிய அணி என விமர்சிக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இரு ஆண்டுகள் தடைக்குப் பின்னர் திரும்பிய நிலையில் சாம்பியன் பட்டம் வென்று விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தது.

‘அப்பாக்களின் ஆர்மி’ என செல்லப் பெயருடன் அழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு 37 வயது ஆகிறது. ஆல்ரவுண்டரான ஷேன் வாட்சனும் 37 வயதை கடந்தவர்தான். டுவைன் பிராவோ 35 வயதையும், டு பிளெஸ்ஸிஸ் 34 வயதையும், அம்பதி ராயடு, கேதார் ஜாதவ் ஆகியோர் 33 வயதையும் எட்டியவர்கள். சுரேஷ் ரெய்னா 32 வயதை விரைவில் எட்ட உள்ளார்.

சுழற்பந்து வீச்சாளர்களான இம்ரன் தகிர் 39 வயதையும், ஹர்பஜன் சிங் 38 வயதையும் எட்டிய போதிலும் தங்களது அனுபவத்தால் ஆட்டத்தின் போக்கை எந்த சூழ்நிலையிலும் மாற்றும் திறன் கொண்டவர்கள். இவர்களுடன் கரண் சர்மா, மோஹித் சர்மா ஆகியோரும் 30 வயதை எட்டிவிட்டனர்.

கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்றதால் சாதிப்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்பதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தங்களது அனுபவத்தால் நிருபித்துக்காட்டினர். பங்கேற்ற அனைத்து தொடர்களிலும் அரை இறுதியில் கால்பதித்த ஒரே அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான். 

இம்முறையும் அதே வீரத்துடன் களம் காண்கிறது சிங்கத்தின் கர்ஜனையை லோகோவாக கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ்.

விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பெயரளவில் பெரிதாக பேசப்பட்டாலும் இதுவரை அந்த அணி ஒருமுறை கூட பட்டம் வென்றதில்லை. பெங்களூரு அணிக்கு 8 ஆண்டுகளாக கேப்டனாக இருந்து வரும் விராட் கோலி பேட்ஸ்மேனாக மட்டையை சுழற்றுவதில் எந்தவித குறையையும் வைக்கவில்லை என்றாலும் கூட கேப்டனாக அணிக்காக ஒருமுறைகூட கோப்பையை வென்று கொடுக்காதது விமர்சனங்களையும் எழுப்பாமல் இல்லை.

இன்றைய ஆட்டத்தைப் பொறுத்தவரையில் சிறப்பாக பந்து வீசும் அணியும், நெருக்கடியான சூழ்நிலையை திறம்பட கையாளும் அணியே வெற்றியை வசப்படுத்தும். ஏனெனில் இரு அணியிலும் ஆட்டத்தின் போக்கை எந்த நேரத்திலும் மாற்றக்கூடிய திறன் உள்ள வீரர்கள் உள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் தேர்வுக்கு பரிசீலனையில் உள்ளதால் இன்றைய ஆட்டத்தில் உயர்மட்ட திறனை வெளிப்படுத்த முயற்சிக்கக்கூடும். அதேவேளையில் பெங்களூரு அணியில் உமேஷ் யாதவும் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறும் வகையில் சிறந்த திறனை வெளிப்படுத்தக்கூடும்.

தொடக்க விழா கிடையாது

ஐபிஎல் தொடரின் தொடக்க விழா வழக்கமாக பிரம்மாண்டமாக நடத்தப்படும். ஆனால் பிப்ரவரி 14-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் இறந்தனர். இதனால் ஜபிஎல் போட்டியின் பிரம்மாண்ட தொடக்க விழாவை பிசிசிஐ  ஏற்கெனவே ரத்து செய்திருந்தது.

மேலும் தொடக்க விழாவுக்காக ஒதுக்கப்படும் தொகை புல்வாமா தாக்குதலில் இறந்த இந்திய ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் எனவும் பிசிசிஐ தெரிவித்திருந்தது. இந்த வகையில் சுமார் ரூ.20 கோடியை பிசிசிஐ வழங்கக்கூடும் என தகவல் வெளியாகியிருந்தது. இந்த தொகையின் ஒரு பகுதி இன்றைய ஆட்டத்தின்போது, ராணுவ உயர் அதிகாரிகளிடம் வழங்கப்படக்கூடும் என தெரிகிறது.

அணிகள் விவரம்

சென்னை சூப்பர் கிங்ஸ் 

மகேந்திர சிங் தோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, ஷேன் வாட்சன், டு பிளெஸ்ஸிஸ், முரளி விஜய், கேதார் ஜாதவ், சேம் பில்லிங்ஸ், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஷோரே, சைதன்யா பிஷ்னோய், ரிதுராஜ் கெய்க்வாட், டுவைன் பிராவோ, கரண் சர்மா, இம்ரன் தகிர், ஹர்பஜன் சிங், மிட்செல் சான்ட்னர், ஷர்துல் தாக்குர், மோஹித் சர்மா, கே.எம்.ஆஷிப், டேவிட் வில்லி, தீபக் ஷகார், என்.ஜெகதீசன்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

விராட் கோலி (கேப்டன்), டி வில்லியர்ஸ், பார்தீவ் படேல், மார்கஸ் ஸ்டாயினிஸ், ஷிம்ரன் ஹெட்மையர், ஷிவம் துபே, நேதன் கவுல்டர் நைல், வாஷிங்டன் சுந்தர், உமேஷ் யாதவ், யுவேந்திர சாஹல், மொகமது சிராஜ், ஹென்ரிச் கிளாசென், மொயின் அலி, காலின் டி கிராண்ட்ஹோம், பவன் நெகி, டிம் சவுதி, அக் ஷ்தீப் நாத், மிலிந்த் குமார், தேவ்தத் படிக்கல், குர்கீரத் சிங், பிரயாஸ் ரே பர்மான், குல்வந்த் கேஜ் ரோலியா, நவ்தீப் ஷைனி, ஹிமாத் சிங்.

நேரம்: இரவு 8

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

நேருக்கு நேர்

சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இதுவரை ஐபிஎல் தொடரில் 23 ஆட்டங்களில் மோதி உள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 15 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ளது. 7 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தது. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் பெங்களூரு அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் வீழ்ந்தது இல்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது பெரும்பாலான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து சமநிலை பெற்றுள்ளது. பெங்களூரு அணியில் இடம் பெற்றுள்ள சில வெளிநாட்டு வீரர்கள் சீசன் முழுவதும் விளையாட முடியாத நிலை உள்ளது. அந்த அணியின் ரிஸ்ட் ஸ்பின்னரான யுவேந்திர சாஹல் கடந்த சீசன்களில் அணியின் துருப்பு சீட்டாக இருந்து வந்துள்ளார். இம்முறையும் அவர், எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சவால் தரக்கூடும்.

சிஎஸ்கே சார்பில் நிதி

புல்வாமா தாக்குதலின்போது இறந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்கும் விதமாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையிலான போட்டியின் மொத்த டிக்கெட் விற்பனை தொகை வழங்கப்பட உள்ளது. இதனை இந்திய ராணுவத்தில் கவுரவ லெஃப்டினென்ட் கர்னலாக  உள்ள தோனி, ராணுவ உயரதிகாரிகளிடம் வழங்க உள்ளார்.

 

https://tamil.thehindu.com/sports/article26616789.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, புலவர் said:

link please

 

crictime.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IPL 2019: கோஹ்லியின் படையை வீழ்த்தியது டோனியின் படை

CSK-vs-RCB-1st-Match-IPL-2019.jpg

2019 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் இலகுவாக வெற்றிகொண்டது.

சென்னை,  சிதம்பரம் மைதானத்தில் ஆரம்பமான குறித்த போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ரோயல் செலன்ஜர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணி களதடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய பெங்களூர் அணி ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கட்டுக்களை இழந்து தடுமாறியது. இதன் காரணமாக அந்த அணி 17.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 70 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

அந்த அணி சார்பில் அதிகபட்சமாக பார்தீ பட்டேல் 29 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் சென்னை அணி சார்பில் ஹர்பஜன் சிங் மற்றும் தாஹீர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இந்நிலையில் 71 என்ற இலகுவான வெற்றியிலக்கினை நோக்கித் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி ஆரம்பத்தில் பெங்களூர் அணி பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சுக்குத் தடுமாறியது. இதில் ஷேன் வொட்சன் ஓட்டங்கள் எதுவுமின்றி ஆட்டமிழந்தார்.

இதையடுத்து நிதானமாக துடுப்பெடுத்தாடிய சென்னை அணி  17.4 ஓவர்களில்  3 விக்கெட்டுகளை இழந்து தனது வெற்றியிலக்கை அடைந்தது.

சென்னை அணி சார்பில் அம்பதி ராயுடு 28 ஓட்டங்களையும் சுரெஷ் ரெய்னா 19 ஓட்டங்களையும், கேதர் யாதவ் 13  பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் பெங்களூர் அணி சார்பில் ஷாகல், மொயின் அலி மற்றும் மொகம்மட் ஷிராஜ் ஆகியோர் தலா ஒவ்வாரு விக்கெட்டை கைப்பற்றினர்.

 

http://athavannews.com/ipl-2019-முதல்-போட்டியில்-சென்ன/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் நாளான இன்று இரு ஆட்டங்கள்

 

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் இன்று இரண்டாம் நாளான இரு போட்டிகள் இடம்பெறவுள்ளன. 

ipl.jpg

அதன்படி இன்று மாலை 4.00 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டனில் இடம்பெறவுள்ள போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதவுள்ளன.

srh.jpg

கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் அணியில் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய முன்னாள் ஐதரபாத் அணியின் தலைவர் டேவிட் வார்னருக்கு கடந்த ஆண்டு ஐ.பி.எல். இல் விளையாட தடை விதிக்கப்பட்டது. 

சர்வதேச போட்டியில் பங்கேற்பதற்கு மார்ச் 28 ஆ திகதி‍ வரை தடை காலம் நீடித்தாலும் கிளப் போட்டிகளில் அவர் விளையாட தகுதியானவராகவே இருக்கிறார். இதனால் இன்றைய ஆட்டத்தில் அவர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தோள்பட்டையில் ஏற்பட்ட உபாதை காரணமாக கேன் வில்லியம்சன் இந்தப் போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவர் இப் போட்டியில் விளையாடாது போனால் அவருக்குப் பதிலாக அணியின் உப தலைவர் புவனேஷ்வர் குமார் அணியை வழநடத்துவார். 

மறுமுணையில் கொல்கத்தா அணியானது தினேஷ் கார்த்திக் தலைமையில் களமிறங்கவுள்ளது. கொல்கத்தா அணியின் முன்னாள் தலைவர் கம்பீர் இந்த ஐ.பி.எல். தொடரில் உள்வாங்கப்படாமையின் காரணமாக அணியின் தலைமைப் பொறுப்பு தினேஷ் கார்த்திக்கிற்கு வழங்கப்பட்டுள்ளது. 

அத்துடன் கொல்கத்தா அணியானது சொந்த ஊரில் ஐதராபாத் அணியை சந்திக்கவுள்ளதனால் போட்டி சுவாரஷ்யமாக இருக்கும். 

இவ்விரு அணிகளும் இதுவரை 15 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஐதராபாத் அணி 6 போட்டிகளிலும், கொல்கத்தா அணி 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

இதேவேளை இன்றிரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் ஆரம்பமாகும் மற்றொரு போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்ரோயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன.

mi.jpg

இத் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி டெல்லி கெப்பிட்டல்ஸ் என்ற பெயர் மாற்றத்துடன் களமிறங்குகின்றது.

இவ் விரு அணிகளும் இதுவரை 22 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் இரு அணிகளும் தலா 11 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/52573

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 6 விக்கட்டுக்களினால் வெற்றி

A70I2214.jpg

ஐ.பி.எல் தொடரின் இரண்டாவது போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 6 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சண்ரைசஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையிலான இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தலைவர் தினேஸ் கார்த்திக் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார்.

இதற்கமைய துடுப்பெடுத்தாட களமிறங்கிய சண்ரைசஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை இழந்து 181 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அந்த அணி சார்பில் அதிகபட்சமாக டேவிட் வோர்னர் 85 ஓட்டங்களையும், தமிழக வீரர் விஜய் சங்கர் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து 182 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 183 ஓட்டங்களை பெற்று 6 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் ரசல் அதிகபட்சமாக 49 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.

 

http://athavannews.com/கொல்கத்தா-நைட்ரைடர்ஸ்-அண/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பமே அமர்க்களம்: மும்பை அணிக்கு அதிர்ச்சி அளித்தது டெல்லி அணி!

286992-720x450.jpg

கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஐ.பி.எல். ரி-20 கிரிக்கெட் தொடர், தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கப்பிட்டல்ஸ் அணியும் மோதின.

மும்பையில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய டெல்லி கப்பிட்டல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக ரிஷப் பந்த் ஆட்டமிழக்காது 78 ஓட்டங்களையும், கொலின் இங்ரம் 47 ஓட்டங்களையும், ஷிகர் தவான் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் மிட்செல் மெக்லினெகன் 3 விக்கெட்டுகளை பெற்றுக்கொண்டனர்.

இதனையடுத்து, 214 என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, 19.2 ஓவர்கள் நிறைவில் 176 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி, 37 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக யுவராஜ் சிங் 53 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் இசாந் சர்மா மற்றும் கார்கிஸோ ரபாடா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 27 பந்துகளில் 7 சிக்ஸர்கள் 7 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 78 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ரிஷப் பந்த் தெரிவுசெய்யப்பட்டார்.

 

http://athavannews.com/ஆரம்பமே-அமர்களம்-மும்பை/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ் கெயில் அதிரடி – Kings XI Punjab அணிக்கு த்ரில் வெற்றி!

9S6A7519.jpg

2019ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரின் 4வது போட்டியில் Kings XI Punjab அணி 14 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

Rajasthan Royals மற்றும் Kings XI Punjab அணிகளுக்கிடையிலான இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Rajasthan Royals அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதற்கமைய துடுப்பெடுத்தாட களமிறங்கிய Kings XI Punjab அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 04 விக்கட்டுக்களை இழந்து 184 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அந்த அணி சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் கெயில் 79 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இதனைத்தொடர்ந்து 185 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய Rajasthan Royals அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களை பெற்று 14 ஓட்டங்களினால் தோல்வியடைந்துள்ளது.

அந்த அணி சார்பில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 69 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்திருந்தார்.

 

http://athavannews.com/கிறிஸ்-கெயில்-அதிரடி-kings-xi-punjab-அ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீண்டிப் பார்த்த டெல்லிக்கு பதிலடி கொடுத்த சி.எஸ்.கே

சீண்டிப் பார்த்த டெல்லிக்கு பதிலடி கொடுத்த சி.எஸ்.கே

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.

DMIPL_2626.jpg

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் ஐந்தாவது போட்டி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கும் டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்றிரவு 8.00 மணிக்கு ஜெய்பூரில் ஆரம்பமானது.

DMIPL_1617.jpg

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களை குவித்தது.

DMIPL_1821.jpg

148 ஓட்டம் என்ற வெற்றியிலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த சென்னை அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக வோட்சன் மற்றும் ராயுடு களமிறங்கி துடுப்பெடுத்தாடிவர 2 ஆவாது ஓவரின் நான்காவது பந்தில் சென்னை அணியின் முதலாவது விக்கெட் தகர்க்கப்பட்டது. 

அதன்படி ராயுடு 5 ஓட்டத்துடன் இஷான் சர்மாவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து 2 ஆவது விக்கெட்டுக்காக ரய்னாவும், வோட்சனும் ஜோடி சேர்ந்தாடி அதிரடி காட்டினார். இதனால் சென்னை அணியின் ஓட்ட எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது.

முதல் 5 ஓவர்களில்  சென்னை அணி ஒரு விக்கெட்டை இழந்த நிலையில் 50 ஓட்டங்களை கடக்க 7 ஓவரை எதிர்கொண்ட வேட்சன் அந்த ஓவரின் 2,4 ஆவது பந்தில் இரண்டு ஆறு ஓட்டங்களை விளாசித் தள்ளினார். எனினும் அவர் அடுத்த பந்தில் ஸ்டம்ப் முறையில் 44 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார் (73 -2). 

இதேவேளை வேட்சனுக்கும் டெல்லி அணியின் பந்து வீச்சாளர்களான இஷான் சர்மா மற்றும் ரபடாவுக்குமிடையில் மைதானத்தில் முறுகல் நிலையே காணப்பட்டது. இருந்தபோதும் நடுவர் முறுகல் நிலையை முடிவுக்கு கொண்டு வந்தார்.

ஒரு கட்டத்தில் சென்னை அணி 10 ஓவர்களின் முடிவில் 97 ஓட்டங்களை பெற்றிருந்தது. ரய்னா 30 ஓட்டத்துடனும், யாதவ் 13 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். எனினும் 10 ஆவது ஓவரின் இரண்டாவது பந்தில் ரய்னா 30 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து சென்றார். 

DMIPL_2599.jpg

இதனால் சென்னை அணியின் மூன்றாவது விக்கெட் 98 ஓட்டத்துக்கு வீழ்த்தப்பட தோனி ஆடுகளம் நுழைந்து, தான் எதிர்கொண்ட முதல் பந்தையே நான்கு ஓட்டமாக மாற்ற சென்னை அணி 100 ஓட்டங்களை கடந்தது.

ஒரு கட்டத்தில் சென்னை அணி 15 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 120 ஓட்டங்களை பெற்றது. தோனி 12 ஓட்டத்துடனும், கேதர் யாதவ் 22 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வர, வெற்றிக்கு 28 பந்துகளில் 30 ஓட்டம் தேவை என்ற நிலையில் இருந்தது.

இறுதியாக சென்னை அணி 19.4 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் டெல்லி அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது. ஆடுகளத்தில் தோனி 32 ஓட்டத்துடனும், பிராவோ 4 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

1K1L4400.jpg

பந்து வீச்சில் டெல்லி அணி சார்பில் அமித் மிஸ்ரா 2 விக்கெட்டையும், இஷான் சர்மா, ரபாடா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா 28 ஓட்டத்தால் இரண்டாவது வெற்றி

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 28 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது.

A70I2700.jpg

12 ஆவது ஐ.பி.எலின் ஆறவாது போட்டி இன்று கொல்கத்தா எடன் கார்டன் மைதானத்தில் இரவு 8.00 மணிக்கு தினேஷ் கார்த்திக் தலைமையிலான  கொல்கத்தா கிநைட் ரைடர்ஸ் அணிக்கும், அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கிடையிலும் ஆரம்பமானது.

DQ0Q1088.jpg

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் அணி முதலில் துடுப்பெடுத்தாடுமாறு கொல்கத்த அணியை பணிக்க, கொல்கத்தா அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 218 ஓட்டங்களை குவித்தது.

A70I2498.jpg

219 ஓட்டம் என்ற வெற்றியிலக்க‍ை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பஞ்சாப் அணியின் முதல் மூன்று விக்கெட்டுக்களும் 60 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டன.

அதன்படி கே.எல்.ராகுல் ஒரு ஓட்டத்துடனும், கிறிஸ் கெய்ல் 20 ஓட்டத்துடனும், சப்ராஸ் கான் 13 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர். 

இதைத் தொடர்ந்து 4 ஆவது விக்கெட்டுக்காக டேவிட் மில்லர் மற்றும் மாயங் அகர்வால் ஜோடி சேர்ந்து அதிரகாட்ட ஆரம்பித்தனர். இதனால் பஞ்சாப் அணியின் ஓட்ட எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது.

எனினும் 15 ஆவது ஓவரின் இரண்டாவது பந்தில் அகர்வால் மொத்தமாக 34 பந்துகளை எதிர்கொண்டு 6 நான்கு ஓட்டம், ஒரு ஆறு ஓட்டம் உள்ளடங்களாக 58 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார் (134 - 4).

தொடர்ந்து மண்டீப் சர்மா களமிறங்கி துடுப்பெடுத்தாட மறுமுணையில் அதிரடி காட்டி வந்த  மில்லர் 19.4 ஓவரில் மொத்தமாக 36 பந்துகளை எதிர்கொண்டு 5 நான்கு ஓட்டம், 2 ஆறு ஓட்டம் அடங்களாக அரைசதம் கடந்தார்.

A70I2762.jpg

இறுதியாக பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 190 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது. ஆடுகளத்தில் மில்லர் 59 ஓட்டத்துடனும், மண்டீப் சர்மா 33 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

SA-i-KAT_-63686.jpg

SA-i-KAT_-63844.jpg

பந்து வீச்சில் கொல்கத்தா அணி சார்பில் ரஸல் 2 விக்கெட்டுக்களையும், லொக்கி பெர்குசன் மற்றும் சாவ்லா தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 

RON_5938.jpg

 

 

நன்றி : ஐ.பி.எல். இணையத்தளம்

 

http://www.virakesari.lk/article/52834

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.பி.எல். ரி-20 தொடர்: பரபரப்பான போட்டியில் பெங்களூர் அணியை வீழ்த்தியது மும்பை அணி!

media-desktop-mumbai-indians-vs-royal-challengers-bangalore-2019-3-20-t-20-30-9-1-720x450.jpg

ஐ.பி.எல். ரி-20 தொடரின் ஏழாவது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 6 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

பெங்களூர் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியும், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக ரோஹித் சர்மா 48 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் அதிகபட்சமாக யுஸ்வேந்திர சஹால் 4 விக்கெட்டுகளையும், மொஹமட் சிராஜ் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைதொடர்ந்து, 188 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ஓட்டங்களை மட்டுமே பெறமுடிந்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 6 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக ஏபி டிவில்லியர்ஸ் 70 ஓட்டங்களையும், விராட் கோஹ்லி 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் அதிகபட்சமாக ஜஸ்பிரிட் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இப்போட்டியின் போது, விராட் கோஹ்லி ஐ.பி.எல். போட்டிகளில் 5,000 ஓட்டங்களை கடந்தார். இதன் மூலம் ஐ.பி.எல். போட்டிகளில் 5,000 ஓட்டங்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

இதற்கு முன்னதாக சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா, 5,000 ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

அத்தோடு, இப்போட்டியில் பெங்களூர் அணிக்கு சற்று வெற்றி வாய்ப்பு இருந்த போதும், இறுதி ஓவரை வீசிய லசித் மாலிங்க இறுதி பந்தில் நோ போல் பந்தை வீசியதை களநடுவர் காண தவறியமை, அந்த அணிக்கு சற்று பாதகமாக அமைந்தது.

இதனால் இச்சம்பவம் தற்போது சமூகவலைதளங்களில் காரசாரமான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, மும்பை அணி சார்பில், 4 ஓவர்கள் வீசி 20 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜஸ்பிரிட் பும்ரா தெரிவுசெய்யப்பட்டார்.

 

 

http://athavannews.com/ஐ-பி-எல்-ரி-20-தொடர்-பரபரப்பா/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் - ஐதராபாத்

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 8 ஆவது லீக் ஆட்டத்தில் இன்றைய தினம் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ரோயல் அணியும் மோதவுள்ளன.

ipl.jpg

இந்தப் போட்டியானது இன்றிரவு 8.00 மணிக்கு ஐதராபாத் காந்தி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. 

ஐதராபாத் அணி கொல்கத்தாவுக்கு எதிரான தனது முதல் போட்டியில் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 181 ஓட்டங்களை குவித்திருந்தது. எனினும் கொல்கத்தா அணி வீரர் ரஸலில் அதிரடி காரணமாக ஐதராபாத் தோல்வியைத் தழுவியது.

A70I1909.jpg

அத்துடன் கடந்த போட்டியில் காயம் காரணமாக ஆட்டத்தை தவிர்த்த கேன் வில்லியம்சன் இன்றைய போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுமுணையில் துடுப்பாட்டத்தில் பலம் பொருந்திய அணியான ராஜஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் 14 ஓட்ட வித்தியாசத்தில் பஞ்சாப்பிடம் தோல்வி அடைந்தது. 

9S6A7132.jpg

இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லர் (69 ரன்) ‘மன்கட்’ முறையில் ரன்–அவுட் செய்யப்பட்டமை அணிக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. இந்த சர்ச்சை இன்னும் ஓயாத நிலையில் அதை ஒதுக்கிவிட்டு வெற்றி வேட்டைய தொடங்கும் நோக்குடன் ராஜஸ்தான் இன்று களமிங்குகிறது.

இவ்விரு அணிகளும் இதுவரை ஒன்பது போட்டிகளில் மோதியுள்ளன. அதில் ராஜஸ்தான் அணி 4 போட்டிகளிலும், ஐதராபாத் அணி 5 போட்டிகளிலும் பெற்றிபெற்றுள்ளன.

ஐதராபாத் அணி காந்தி மைதானத்தில் இதுவரை 11 போட்டிளில் விளையாடியுள்ளது. அதில் 3 போட்டிகளில் மாத்திரம் வெற்றிபெற்றுள்ளது. 

அதேபோன்று ராஜஸ்தான் அணி 8 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மாத்திரம் வெற்றிபெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

நன்றி : ஐ.பி.எல். இணையளத்தளம்

 

http://www.virakesari.lk/article/52945

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வோர்னர் - பெயர்ஸ்டோவின் அதிரடியுடன் ராஜஸ்தானை வீழ்த்திய  ஐதராபாத்

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வோர்னர் மற்றும் பெயர்ஸ்டோவின் அதிரடியான ஆரம்பத்துடன் ஐதராபாத் அணி 5 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.

VRP8236.jpg

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 8 ஆவது லீக் ஆட்டம் இன்றிரவு 8.00 மணிக்கு பெங்களூரு ரஜிவ்காந்தி மைத்தானத்தில் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ரோயல் மற்றம் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைஸர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கிடையே ஆரம்பமானது.

0U5A6432.jpg

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 198 ஓட்டங்களை குவித்தது.

GAZI_0188.jpg

199 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ஐதராபாத் அணிக்கு அந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான வோட்சன் மற்றும் பெயர்ஸ்டோ சிறந்த ஆரம்பத்த‍ை அதிரடியாக பெற்றுக் கொடுத்தனர்.

இதனால் ஐதராபாத் அணி முதல் ஐந்து ஓவர்களில் 54 ஓட்டத்தையும், 10 ஆவது ஓவரில் ஒன்பது ஓவரின் முடிவில் 104 ஓட்டங்களையும் விக்கெட் இழக்காது பெற்றனர். ஆடுகளத்தில் வோர்னர் 69 ஓட்டத்துடனும், பெயர்ஸ்டோ 34 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர்.

VRP8190.jpg

எனினும் 9 ஆவது ஓவரின் நான்காவது பந்து வீச்சில் டேவிட் வோர்னர் மொத்தமாக 37 பந்துகளில் 9 நான்கு ஓட்டம், 2 ஆறு ஓட்டம் உள்ளடங்களாக 69 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேற, அணித் தலைவர் கேன் வில்லியம்சன் ஆடுகளம் நுழைந்து துடுப்பெடுத்தாட ஆரம்பிக்க 10 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் பெயர்ஸ்டோ 28 பந்துகளில் 6 நான்கு ஓட்டம், ஒரு ஆறு ஓட்டம் அடங்களாக 45 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

இதனால் ஐதராபாத்  அணி 11 ஓவர்களில் 2 விக்கெட்டுக்க‍ளை இழந்து 117 ஓட்டத்தை பெற்றது.

ஆடுகளத்தில் கேன் வில்லியம்சன் மற்றும் விஜய் சங்கர் 3 ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்து எதிர்கொண்ட பந்துகளில் வான வேடிக்கை காட்ட 14 ஆவது ஓவரின் முடிவில் ஐதராபாத் அணி 150 ஓட்டங்களை கடந்தது.

இந் நிலையில் அணித் தலைவர் 14 ஆவது ஓவரின் நான்காவது பந்தில் ஆட்டமிழந்து வெளியறினார். 15.3 ஆவது ஓவரில் விஜய் சங்கர் 15 பந்துகளில் 3 ஆறு ஓட்டம், ஒரு நான்கு ஓட்டம் அடங்களாக 35 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க மறுமுணையில் மணீஷ் பாண்டே அடுத்த பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார் (167-5).

இதையடுத்து ஆறவாது விக்கெட்டுக்காக யூசப் பத்தான் மற்றும் ரஷித் கான் ஜோடி சேர்ந்தாட 17 ஆவது ஓவரில் 5 விக்கெட்டுக்களை இழந்து 179 ஓட்டங்களை ஐதராபாத் பெற்றதுடன், வெற்றிக்கு 18 பந்துகளில் 20 ஓட்டங்கள் என்ற நிலை இருந்தது. 

இறுதியாக ரஷத் கான் 19 ஆவது ஓவரை எதிர்கொண்டு ரஜாஸ்தான் அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை அடித்து நொருக்கினார். அதனால் குஜராத் அணி 19 ஓவரில் 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 201 ஓட்டங்களை குவித்தது.

ஆடுகளத்தில் ரஷத் கான் 15 ஓட்டத்துடனும், யூசப் பத்தான் 16 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

0U5A6508.jpg

பந்து வீச்சில் ராஜஸ்தான் அணி சார்பில் ஷிரியாஸ் கோபால் 3 விக்கெட்டுக்களையும், உனாட் கட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

GAZI_0781.jpg

நன்றி : ஐ.பி.எல். இணையத்தளம்

 

 

http://www.virakesari.lk/article/52993

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கட்டுக்களினால் வெற்றி

9S6A0667.jpg

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 9 ஆவது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.

ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன் அணிக்கும், அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையிலான இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களை குவித்தது.

மும்பை அணி சார்பில் ரோகித் சர்மா 32 ஓட்டத்தையும், குயின்டன் டீகொக் 60 ஓட்டத்தையும், ஹர்த்தீக் பாண்டியா 31 ஓட்டத்தையும், பெற்றுக்கொடுத்திருந்தனர்.

பந்து வீச்சில் பஞ்சாப் அணி சார்பில் மொஹமட் ஷமி, ஹார்டஸ் வில்ஜென் மற்றும் முருகன் அஷ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், ஆண்ட்ரூ டை ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 177 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பஞ்சாப் அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 177 ஓட்டங்களை பெற்று 8 விக்கட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

பஞ்சாப் அணி சார்பில் கிறிஸ் கெய்ல் 40 ஓட்டத்தையும், மாயங் அகர்வால் 43 ஓட்டத்தையும் பெற்று ஆட்டமிழந்ததுடன், கே.எல்.ராகுல் 71 ஓட்டத்துடனும், டேவிட் மில்லிர் 15 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

 

http://athavannews.com/கிங்ஸ்-லெவன்-பஞ்சாப்-அணி-8/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் ஓவரில் கொல்கத்தாவை வீழ்த்தியது டெல்லி

A70I4439.jpg

ஐ.பி.எல். தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். தொடரில் நேற்று(சனிக்கிழமை) நடைபெற்ற 10 ஆவது லீக் போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிக்கொண்டன.

இதில் நாணயச் சுழற்றியில் வெற்றி பெற்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி களத்தடுப்பைத் தெரிவு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியானது, ஆரம்பம் முதலேயே தடுமாற்றத்துடன் கூடிய துடுப்பாட்டத்தையே வெளிப்படுத்தி வந்தது.

அந்தவகையில், நிகில் நாய்க் 7 ஓட்டங்களிலும், கிறிஸ் லின் 20 ஓட்டங்களுடனும், உத்தப்பா 11 ஓட்டங்களுடனும், நிதிஷ் ராணா 1 ஓட்டத்திலும், சுப்மான் கில் 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

எனினும், கொல்கத்தா அணித் தலைவர் தினேஷ் கார்த்திக், ஆந்த்ரே ரஸ்செல்லும் அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதனால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் கொல்கத்தா அணியானது 8 விக்கெட் இழப்புக்கு 185 ஓட்டங்களை குவித்தது.

இதனையடுத்து 186 எனும் வெற்றி இலக்கை நோக்கி டெல்லி அணி களமிறங்கியது.

அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய பிரித்வி ஷா 99 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

மேலும், ஷிகர் தவான் 16 ஓட்டங்களுடனும், அணித்தலைவர் ஸ்ரேயாஸ் அய்யர் 43 ஓட்டங்களுடனும், ரிஷாப் பான்ட் 11 ஓட்டங்களிலும் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.

இதனால், 20 ஆவது ஓவரில் டெல்லி அணியானது 185 ஓட்டங்களை பெற்று போட்டியை சமநிலைப்படுத்தியது.

இதையடுத்து வெற்றி தோல்வியை நிர்ணயிக்க ‘சூப்பர் ஓவர்’ முறைமைக்கு இணங்க, டெல்லி அணியானது ஒரு விக்கெட்டுக்கு 10 ஓட்டங்களை எடுத்தது.

இதனைத் தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணியால் சூப்பர் ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 7 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. இதனால் டெல்லி அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தப் போட்டியில் வெற்றிப் பெற்றது.

 

http://athavannews.com/சூப்பர்-ஓவரில்-கொல்கத்தா/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

300 சிக்சர்கள் அடித்து கிறிஸ் கெயில் சாதனை

8 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று மாலை மொகாலியில் உள்ள ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும்  மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்களை எடுத்துள்ளது.

இதைத்தொடர்ந்து  177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுலும்  கிறிஸ் கெயிலும் இறங்கினர். அணியின் எண்ணிக்கை 53 ஆக இருந்தபோது கெயில் 24 பந்தில் 4 சிக்சர், 3 பவுண்டரியுடன் 40 ரன்னில் ஆட்டமிழந்தார்.

http://thinakkural.lk/article/26102

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாவது போட்டியிலும் தோல்வி

 

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 118 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது.

VRP8894.jpg

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 11 ஆவது லீக் ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் இன்று மாலை 4.00 மணிக்கு ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன் ரைஸர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கிடையே ஆரம்பானது.

0U5A6968.jpg

இப் போட்டியில் ஐதராபாத் அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் விளையாடாதாக் காரணத்தினால் தலைமைப் பொறுப்பை புவனேஷ்வர் குமார் ஏற்று அணியை வழி நடத்தினார்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு  அணித் தலைவர் விராட் கோலி களத்தடுப்பை தேர்வு செய்ய ஐதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 231 ஓட்டங்களை குவித்தது.

VRP8711.jpg

ஐதராபாத் அணி சார்பில் பெயர்ஸ்டோ 114 ஓட்டங்களையும், டேவிட் வோர்னர் 100 ஓட்டங்களையும் அதிரடியாக பெற்றுக் கொண்டனர்.

232 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பெங்களூரு அணி அடுத்தடுத்த ஆட்டமிழப்பினால் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 113 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 118 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.

VRP8972.jpg

பெங்களூரு அணி சார்பில் பார்தீவ் படேல் 11 ஓட்டத்துடனும், சிம்ரன் ஹெட்மேயர் 9 ஓட்டத்துடனும், விராட் கோலி 3 ஓட்டத்துடனும், வில்லியர்ஸ் ஒரு ஓட்டத்துடனும், மொயின் அலி 2 ஓட்டத்துடனும், சிவம் டூப் 5 ஓட்டத்துடனும், பிரயாஸ் பார்மன் 19 ஓட்டத்துடனும், உமேஷ் யாதவ் 14 ஓட்டத்துடனும், கிரேண்ட்ஹோம் 37 ஓட்டத்துடனும், சஹால் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர்.

GAZI_1677.jpg

பந்து வீச்சில் ஐதராபாத் அணி சார்பில் மொஹமட் நபி 4 விக்கெட்டுக்களையும், சண்டீப் சர்மா 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

0U5A7236.jpg

0U5A7095.jpg

இந்த தோல்வியின் மூலம் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எதிர்கொண்ட மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி : ஐ.பி.எல். இணையத்தளம்

 

http://www.virakesari.lk/article/53075

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 05:02 PM   கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (26) கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்றும்  இனங்காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.  தொடர்ந்து பொலிசார் மாவட்ட நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமில் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று குறித்த மனித எச்சங்கள் மற்றும் மனித எச்சம் இனங்காணப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். தொடர்ந்து குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் மூலம் கண்ணிவெடி அகற்றும் பணியை முன்னெடுக்குமாறும், கிடைக்கப் பெறுகின்ற எச்சங்கள் மற்றும் தடயங்கள் தொடர்பாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு  கொண்டு செல்லுமாறும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கிடைக்கப்பெற்ற மனித எச்சங்களை சட்ட வைத்திய அதிகாரி மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த அனுப்பி வைக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.  இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை சம்பவ இடத்தினை மீண்டும் சென்று பார்வையிடுவதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182042
    • ஐபிஎல் 2024: பேட்ஸ்மேன்களின் காட்டடியால் கலங்கும் பந்துவீச்சாளர்கள் - டி20இல் நிகழும் மாற்றங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், அயாஸ் மேமன் பதவி, கிரிக்கெட் எழுத்தாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் பணக்கார கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இந்த ஆண்டு பேட்டிங்கில் அபாரமான வாண வேடிக்கையைப் பார்க்க முடிகிறது. நாடு முழுவதும் உள்ள மைதானங்களில், பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையைக் காற்றில் பறக்க விடுகிறார்கள். இரக்கமின்றி பெரிய ஷாட்களை அடிக்கிறார்கள், கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியையும் சிக்ஸர் அடிக்கும் திருவிழாவாக மாற்றுகிறார்கள். இதனால், பந்துவீச்சாளர்கள் வெலவெலத்துப் போயுள்ளனர். டி20 கிரிக்கெட் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என நிபுணர்களும், ரசிகர்களும் குழம்பிப் போயுள்ளனர். நாம் இதுவரை பார்த்த அதிரடி பேட்டிங்கின் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். செவ்வாய்க்கிழமை இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான சீசனின் 39வது போட்டிக்குப் பிறகு, மொத்தம் 1,191 பவுண்டரிகள் மற்றும் 686 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் 2023இல் மொத்தம் 2,174 பவுண்டரிகள் மற்றும் 1,124 சிக்ஸர்கள் பதிவு செய்யப்பட்டன. நடப்பு சீசன் பாதிக்கு மேல் எஞ்சியுள்ள நிலையில் கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் எளிதில் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதே. பவுண்டரிகள், சிக்ஸர்கள் அதிகரித்திருப்பது அணியின் ஸ்கோரையும் அதற்கேற்ப உயர்த்தியுள்ளது.   எளிதில் முறியடிக்கப்படும் சாதனைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டி20 வரலாற்றில் அதிக பவர்பிளே ஸ்கோரை பதிவு செய்ய டிராவிஸ் ஹெட் உதவினார். ஆரம்பக்கால ஐபிஎல் சீசன்களில், 150-160 ரன் என்பது சவால் கொடுக்கும் ஸ்கோராக கருதப்பட்டது. ஆனால் இன்று பெரும்பாலும் 10 போட்டிகளில் 8இல் இது போன்ற ஸ்கோர் அடித்த அணிகள் தோல்வியடைகின்றன. ஸ்கோரிங் முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தை விளக்குவதற்கு இந்த உதாரணத்தைப் பார்ப்போம். 2007ஆம் ஆண்டு தொடக்க டி20 உலகக் கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் யுவராஜ் சிங் ஆறு சிக்ஸர்களை விளாசினார். அப்போது இந்தியா மொத்தம் 218 ரன்கள் எடுத்தது. அந்த நேரத்தில் இது ஒரு பெரிய சாதனை. இருப்பினும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அணி 200 ரன்கள் அடிப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. செவ்வாய்க்கிழமை வரை இந்த ஐபிஎல் சீசனில் நடந்து முடிந்துள்ள 39 ஆட்டங்களில் அணிகள் 19 முறை 200 ரன்களை கடந்துள்ளன. மொத்த ஸ்கோர் ஒன்பது முறை 400 ரன்களை தாண்டியது. வியக்க வைக்கும் வகையில் இரண்டு போட்டிகளில் இரு அணிகளின் மொத்த ஸ்கோர் 500 ரன்களை தாண்டியுள்ளது. சுவராஸ்யமான தகவல்கள் இன்னும் முடியவில்லை. இந்த சீசனில் சராசரி ரன் விகிதம் ஓவருக்கு 10. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சீசனின் தொடக்கத்தில் இருந்தே சாதனைகளை முறியடிக்கும் ஓவர் டிரைவில் உள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான முதல் பவர்பிளேவில் (ஆறு ஓவர்கள்) முன் எப்போதும் இல்லாத வகையில் 125 ரன்களை குவித்தனர். இது ஒரு ஓவருக்கு 20.83 ரன்கள் என்ற வியக்க வைக்கும் சாதனை. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி, மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் எடுத்ததும் இதில் அடங்கும். இதுவொரு ஐபிஎல் சாதனை. இந்தப் போக்கு தொடருமானால் இந்த சீசனிலேயே 300 ரன்கள் என்ற சாதனை படைக்கப்படலாம். டி20 கிரிக்கெட், இயல்பிலேயே அதிரடி ஆட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. பேட்டிங்கிற்கு நிலையான ஸ்ட்ரோக் ஆட்டம் தேவைப்படுகிறது. அங்கு ஒரு டாட் பால்கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்திலும் அதிகபட்ச ரன் எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆகவே மட்டையை வீச தடையற்ற சுதந்திரம் வழங்கப்படுகிறது. இந்த உத்தியால் ஆபத்துகள் இருந்தாலும், பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களால் உந்தப்பட்ட ரன் குவிப்பு இந்த சீசனில் ஒரு விதிவிலக்காகவே உள்ளது.   இத்தகைய அதிரடி பேட்டிங்கிற்கு காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் அஷூதோஷ் ஷர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். எளிதான ஆடுகளங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. உலகமெங்கும் ஒயிட்-பால் கிரிக்கெட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20க்கான ஆடுகளங்கள் எளிதாக விளையாடக் கூடியதாகவே தயார் செய்யப்படுகின்றன. டி20 கண்கவர் ஆக்‌ஷன் வாக்குறுதியைக் கொண்டிருப்பதால், ரசிகர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் ஸ்பான்சர்களுக்கு அதிரடி ஷாட்கள் முக்கிய அம்சமாகிவிட்டன. இதற்காகவே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. மற்ற டி20 லீக்குகளை போல் அல்லாமல் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு உகந்ததாக இருப்பதை ஐபிஎல் உறுதி செய்கிறது. இருப்பினும் ஃப்ளாட் பிட்சுகள் மட்டுமே பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்ளும் ஒரே தடை அல்ல. பேட்டர்கள் தற்போது நல்ல உடல் தகுதியுடனும், நல்ல வலுவுடனும், சாகசங்களுக்குத் துணிந்தவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக இளம் வீரர்கள் தங்கள் ஆரம்ப ஆண்டுகளிலேயே டி20இல் இழுக்கப்படுகின்றனர். அவர்கள் அதிக ரிஸ்குகளை எடுக்கின்றனர். போட்டிகளில் வெற்றிபெற, அற்புதமான சாதனைகளைப் படைக்க முயற்சி செய்கிறார்கள். போட்டியை எதிர்த்து சமாளிக்கவும், அதிக அங்கீகாரம் மற்றும் வெகுமதிக்காகவும் அவர்கள் இதைச் செய்கின்றனர். சில விதிமுறை மாற்றங்களும் பந்து வீச்சாளர்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதில் பங்களித்துள்ளன. உதாரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட் அறிமுகமாகியுள்ளது. சரியான நேரத்தில் ஒரு குறிப்பிட்ட வீரரைக் கொண்டு வருவதற்கு பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்களுக்கு இது வாய்ப்பளித்துள்ளது. சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றிக்கொள்ள இதுவொரு சுவாரஸ்யமான வாய்ப்பைக் கொடுக்கிறது. மேலும் ஒரு பந்து வீச்சாளரைக்கூட இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட்டாக கொண்டு வர முடியும். ஆனால் இதுவரையிலான போக்கு பேட்டிங் வீரர்களுக்கு சாதகமாகவே உள்ளது. கிரிக்கெட் ஒரு பேட்டரின் விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. ஆனால், மட்டைக்கும் பந்துக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த இடைவெளி டி20க்கு நல்லதா என்பதுதான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் நடக்கும் பரபரப்பான விவாதம். இந்தச் சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவு அளித்துள்ளார். "இது இந்த அளவுக்கு ஒருதலைப்பட்சமாக இருந்தால் அது போட்டியின் மீதான ஆர்வத்தைக் குறைத்துவிடும்," என்று அவர் கூறுகிறார்.   பந்துவீச்சாளர்களுக்கு சவாலான நிலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரசல் அடிக்கும் ஒரு ஷாட். வழக்கமான 75 கெஜத்தில் இருந்து 65 அல்லது அதற்கும் குறைவாக பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டது கவாஸ்கரின் கோபத்திற்கு முக்கிய காரணம். "ஒரு பந்து வீச்சாளர் தன் பந்து மூலம் பேட்ஸ்மேனை தவறு செய்யத் தூண்டுகிறார். ஆனால் பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டதால் அது பந்துவீச்சாளருக்கு எதிராகிவிடுகிறது. கேட்ச் ஆக மாற வேண்டிய பந்து சிக்ஸருக்கு சென்றுவிடுகிறது,” என்று அவர் கடுப்புடன் கூறினார். நவீன பேட்டுகளின் வல்லமை காரணமாகத் தவறாக அடிக்கப்படும் ஷாட்டுகளில்கூட பந்து கணிசமான தூரம் பயணிக்கிறது. இது கவாஸ்கரின் கவலையை நியாயப்படுத்துகிறது. முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், பந்து வீச்சாளர்களின் திறமை மற்றும் மனோபாவத்திற்கு சவால் விடும் சூழ்நிலையாக இதைப் பார்க்கிறார். "பௌலர்கள் நான்கு ஓவர்களில் ஹீரோக்களாக மாறுவதற்கான வாய்ப்பும் ஊக்கமும் உள்ளது" என்கிறார் ஸ்டெய்ன். டி20 ஆட்டத்தின் மனநிலை மரபுவழியில் இருந்து வியத்தகு முறையில் மாறியுள்ளது. இந்த மாற்றம் தொடர்கிறது. எனவே கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என்று அனைவருமே ஆற்றல்மிக்கவர்களாக, செயல்திறன் கொண்டவர்களாக, ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆனால் கோல்ஃப் மற்றும் பேஸ்பாலின் சங்கமம் போல டி20 கிரிக்கெட் மாறாமல் இருக்க, பேட் மற்றும் பந்தின் சமநிலை பராமரிக்கப்பட வேண்டும். https://www.bbc.com/tamil/articles/c1038g85e13o
    • டி.ஆர்.பாலுவை விமர்சித்த யூடியூபர் குடும்பத்துக்கு மிரட்டல் என குற்றச்சாட்டு - திமுக தரப்பு விளக்கம் என்ன? பட மூலாதாரம்,சிவராமகிருஷ்ணன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்ரீபெரும்புதூர் திமுக நிர்வாகி ராமலிங்கத்தின் மகன் சிவராமகிருஷ்ணன் ஜப்பானில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தனது சொந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வளர்ச்சித் திட்டங்கள் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் அவருடைய குடும்பத்தாருக்கு திமுகவினரே‌ மிரட்டல் விடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ் பிபிசி தமிழிடம் பேசியபோது, இந்த விவகாரம் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும் சிவராமகிருஷ்ணனின் தந்தை ராமலிங்கத்துடன் தனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது எனவும் விளக்கம் அளித்தார். என்ன நடந்தது? ஜப்பானில் பணியாற்றும் சிவராமகிருஷ்ணன் ஜப்பான் தமிழ் ப்ரோஸ் என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.‌ அதில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர், “அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் பிரம்மாண்டமாக வளர்ந்திருப்பதாக நினைக்கிறார்கள். வளர்ந்துள்ளது என்றால் என்ன‌ பொருள்? வேலை வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், மக்களுக்குத் தரமான வாழ்க்கை இருக்கிறதா? இத்தனை பேர் வாழும் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பூங்கா கிடையாது. சாலை போட இந்த அரசுக்குத் தெரியுமா? பத்து ஆண்டுகளாகப் பல நூறு கோடி செலவு செய்து பாதாள சாக்கடை கட்டப்பட்டு வருகிறது. அது செயல்முறைக்கு வரும்போதுதான், அந்தத் திட்டம் எப்படி இருக்கிறது என்று தெரியும். (டி.ஆர்‌.பாலு) ஸ்ரீபெரும்புதூரில் என்ன செய்து விட்டார் என்று இரண்டாவது முறையாக அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை,” என்று பேசியிருந்தார். அவர் 3 லட்சம் பின் தொடர்பவர்கள் கொண்ட தனது யூ டியூப் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டார்.   பட மூலாதாரம்,திமுக ஸ்ரீபெரும்புதூர் வார்டு அவைத்தலைவர் ராமலிங்கம் இந்த வீடியோவை வெளியிட்டதற்காக திமுக நகரச் செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சித் தலைவர் சாந்தியின் கணவருமான சதீஷ் தன்னை மிரட்டியதாக, ஸ்ரீபெரும்புதூர் இரண்டாவது வார்டு அவைத் தலைவராக உள்ள ராமலிங்கம் கூறுகிறார். இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கடந்த 12 ஆண்டுகளாக பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெறுகின்றன. நானும் என் மனைவியும் ஒருமுறை தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தோம். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, என் மகன் ரூ.8 லட்சம் சிகிச்சைக்காக செலவு செய்தான். பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் எனப் பலரும் அதில் விழுகிறார்கள்," என்று கூறினார். மேலும், அந்த ஆதங்கத்தில் தனது மகன் வீடியோவை வெளியிட்டதாகவும் அதற்காக தாம் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டை இடித்துவிடுவதாக சதீஷ் மிரட்டியதாகவும் கூறினார். பட மூலாதாரம்,YOUTUBE நான்கு நாட்கள் முன்பு “DMK Sriperumbudur MP டி.ஆர் பாலு UPகள் மிரட்டல்” என்று மற்றொரு வீடியோவை வெளியிட்டிருந்தார். முதல் வீடியோவில் தாம் பேசியதற்காக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நகர திமுக செயலாளர் சதீஷ் தனது தந்தையை மிரட்டியதாக அதில் கூறியிருந்தார். அந்த வீடியோவில், “ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் என்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பது இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலுவின் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்றுதான் காணொளி வெளியிட்டிருந்தேன். அதற்காக எனது தந்தையை மிரட்டியுள்ளனர். நான் காணொளி வழியாக வெளிப்படுத்திய பிரச்னைகளை வருங்காலத்தில் நிவர்த்தி செய்வோம் என்று கூறியிருக்கலாம். ஆனால் அதை விட்டு, மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம்? இப்போது என்னை சீண்டிவிட்டார்கள், நான் சும்மா விடமாட்டேன்," எனப் பேசியுள்ளார். மேலும், "ஸ்ரீபெரும்புதூர் பஞ்சாயத்து கடந்த மூன்று ஆண்டுகளில் முறைகேடுகளைச் செய்துள்ளனர். இதுவரை என்னென்ன திட்டங்கள், எவ்வளவு செலவு செய்துள்ளனர் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் முழு தகவல்களையும் வெளியே கொண்டு வரப் போகிறேன். நான் எந்தக் கட்சி சார்பாகவும் பேசவில்லை. பெரிய கட்சிகள் என்று கூறுகிறார்கள், அவர்களின் முகத் திரைகள் கிழிக்கப்பட வேண்டும். நான் என்ன திமுகவுக்கு எதிரியா? நாளை பாஜக, அதிமுக, நாம் தமிழர் என யார் ஆட்சிக்கு வந்தாலும் கேள்வி கேட்கும் சாதாரண மனிதன். பெரிய தலைவர்கள் தங்களுக்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கடிவாளம் போடத் தவறுவதால்தான் திமுக மீது இவ்வளவு அவபெயர் ஏற்படுகிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் லஞ்சம் ஊழல் இருந்தது. ஆனால் அது மக்களை நேரடியாகப் பாதிக்கவில்லை. ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, கல், மண், ஜல்லி என எதைத் தொட்டாலும் லஞ்சம்,” என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார்.   பட மூலாதாரம்,YOUTUBE மேலும் அதே வீடியோவில் தனது தந்தை வீடியோ கால் மூலம் தன்னிடம் பேசியதை வெளியிட்டிருந்தார் சிவராமகிருஷ்ணன். அதில், “செயலாளர் சதீஷ் என்னை அழைத்து, 'எப்படி உன் மகன் இப்படி வீடியோ போடலாம், நீ எப்படி வீட்டு வரி, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வாங்குவாய் எனப் பார்க்கிறேன். அனைத்துக்கும் என்னிடம்தான் வர வேண்டும், எப்படி வாங்குகிறாய் எனப் பார்க்கிறேன்' என்று கூறியதாக" ராமலிங்கம் பேசியிருந்தார். திமுக உட்பட எந்தக் கட்சியில்தான் இல்லை என்று கூறிய சிவராமகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் பேசியபோது, “ஸ்ரீபெரும்புதூரில் பல சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளன. அங்குள்ள நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையிலிருந்து ஆறு வழிச் சாலையாக மாற்றும் திட்டம் நடைபெறுகிறது. வயலுக்குச் செல்ல நாங்கள் இந்த நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வேண்டும். எனவே ஒரு மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை கட்டித் தருமாறு கேட்டோம். அதை இன்னும் செய்யவில்லை. நான் காணொளியில் கூறியது என் கருத்து. ஆனால், எனது அப்பாவை மிரட்டியுள்ளனர். எங்களுக்கு நான்கு வீடுகள் உள்ளன. அதில் ஒன்றில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் கிடைக்காது என்றும், வீடுகளை இடித்து விடுவோம் என்றும் தொடர்ந்து பலரது முன்னிலையில் அவதூறாகப் பேசியுள்ளனர். இதனால் எனது தந்தை மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்,” என்றார் சிவராமகிருஷ்ணன்.   பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ், “இந்த விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது, நண்பர்கள் கூறித்தான் அந்த வீடியோவையே பார்த்தேன். ராமலிங்கம் கட்சி உறுப்பினர்தான். இதே பகுதியில், செல்வபெருமாள் தெருவில்தான் வசிக்கிறார். ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். வாக்குப்பதிவு நாளில் அவரை நான் பார்த்தபோது 'வாக்குப்பதிவு நன்றாக போய்க் கொண்டிருக்கிறது' என்று கூறினார். அவருடன் எனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது. அவர் நிலத்தில் அவர் வீடு கட்டினால் நான் என்ன செய்து தடுக்க முடியும்?” என்று விளக்கம் அளித்தார். https://www.bbc.com/tamil/articles/cw8qd458jjgo
    • Published By: VISHNU 26 APR, 2024 | 08:26 PM (நெவில் அன்தனி) மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் பந்துவீச்சில் இந்தோனேசிய கிரிக்கெட் வீராங்கனை ரொஹ்மாலியா அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்து உலக சாதனை படைத்துள்ளார். 17 வயதான ரொஹ்மாலியா ஒரு ஓட்டமும் விட்டுக் கொடுக்காமல் 7 விக்கெட்களைக் கைப்பற்றி ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான உலக சாதனையை படைத்தார். பாலியில் நடைபெற்ற மொங்கோலியாவுக்கு எதிரான 5ஆவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ரொஹ்மாலி 3.2 ஓவர்கள் பந்துவீசி ஒரு ஓட்டத்தையும் விட்டுக்கொடுக்காமல் 7 விக்கெட்களை வீழ்த்தி உலக சாதனை நிலைநாட்டினார். மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 7 விக்கெட்களை வீழ்த்திய 3ஆவது வீராங்கனை ரொஹ்மாலியா ஆவார். இதற்கு முன்னர் பெரு அணிக்கு எதிராக 2022இல்  ஆர்ஜன்டீனாவின் அலிசன் ஸ்டொக்ஸ் என்பவரும் பிரான்ஸுக்கு எதிராக 2021இல் நெதர்லாந்தின் ப்ரெடரிக் ஓவர்டிக என்பவரும் ஒரே பந்துவீச்சுப் பெறுதியான 3 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற உலக சாதனையை சமமாகக் கொண்டிருந்தனர். ஆடவர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 8 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற சாதனையை சீன வீரர் சியாஸ் ஐத்ருஸ் தன்னகத்தே கொண்டுள்ளாளர். கோலாலம்பூரில் மலேசியாவுக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் அவர் இந்த சாதனைக்கு சொந்தக்காரரானார். இது ஆடவருக்கு மட்டும்  சர்வதேச ரி20 கிரிக்கெட்   உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/182055
    • ஒரு அரசியல் கட்சியின்/ இயக்கத்தின்  கடந்த கால  நடவடிக்கைகளையோ அல்லது கட்சிகளின்/ இயக்கங்களின்  தலைவர்களையோ விமர்சிப்பது என்பது அவர்கள்ளை ஒட்டு மொத்தமாக நிராகரிப்பதாகாது.  அரசியல் விமர்சனம் என்பது அரசியல் பிரமுகர்கள் அல்லது நிறுவனங்களின் நடவடிக்கைகள், கொள்கைகள் அல்லது நம்பிக்கைகளை பகுப்பாய்வு செய்து மதிப்பீடு செய்வதை உள்ளடக்கியது. ஒரு  அரசியல் தலைவரை அல்லது கட்சியை/ இயக்ததை  ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதையோ  அல்லது  அந்த தலைவரை/ அக்கட்சியை/ இயக்கத்தை  விமர்சனத்துக்கு  அப்பாற்பட்டவர்களாக புனிதப்படுத்துவதுவதோ  நேர்மையான அரசியல் கருத்தாடலுக்கு பங்கம் விளைவிக்கும் என்பதுடன் ஆரோக்கியமான அரசியல் கருத்தாடலாக அமையாது. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.