Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வலப்பனை கோர விபத்து – கர்ப்பிணி தாய் உட்பட இருவர் உயிரிழப்பு 59பேர் காயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

வலப்பனை கோர விபத்து – கர்ப்பிணி தாய் உட்பட இருவர் உயிரிழப்பு 59பேர் காயம்

வலப்பனை – நுவரெலியா பிரதான வீதியில் மாஹா ஊவாபத்தன, பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் கர்ப்பிணி தாய் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன் 59பேர் காயமடைந்துள்ளனர்.

தனியார் பேருந்து ஒன்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணியளவில் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

நுவரெலியாவிலிருந்து வலப்பனை வழியாக அம்பாறை நோக்கி பயணித்த தனியார் சுற்றுலா பேருந்து வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

அம்பாறை செல்லும் வழியில் குறித்த பேருந்து, பாரிய வளைவு பகுதியில் பாதையை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது, பேருந்தில் பயணித்த 61 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் வலப்பனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதோடு, அங்கிருந்து  மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதன்போது நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி தாய் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அத்தோடு வலப்பனை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த 28 வயது மதிக்கத்தக்க அம்பாறை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்தில் காயமடைந்தவர்களில் சிறுவர்களும் அடங்குவதோடு, சிலர் நுவரெலியா ஆதார வைத்தியசாலையிலும், சிலர் கண்டி வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கவலைக்கிடமாக இருந்தவர்கள் சிலர் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் நுவரெலியா மற்றும் வலப்பனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேருந்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக கூறிய வலப்பனை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Photo-12.jpg

Photo-9.jpg

Photo-7.jpg

Photo-23.jpg

Photo-1-1.jpg

http://athavannews.com/வலப்பனை-கோர-விபத்து-கர்ப/

  • கருத்துக்கள உறவுகள்

நுவரெலியாவில் பேருந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்து – இருவர் பலி – 59 பேர் படுகாயம்

 

Photo-20.jpg?resize=800%2C450
வலப்பனை – நுவரெலியா பிரதான வீதியில் மாஹாஊவாபத்தன, பகுதியில் நேற்று (24.03.2019 ) இரவு 7 மணியளவில் தனியார் பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 59 பேர் படுங்காயமடைந்துள்ளனர்.

நுவரெலியாவிலிருந்து நுவரெலியா வலப்பனை வழியாக அம்பாறை நோக்கி பயணித்த தனியார் சுற்றுலா பேருந்து வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

அம்பாறை பகுதியிலிருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு நுவரெலியாவிற்கு சென்று, மீண்டும் அம்பாறை செல்லும் போது மாஹாஊவாபத்தன எனும் இடத்தில் பாரிய வளைவு பகுதியில் பாதையை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதன்போது, பேருந்தில் பயணித்த 61 பேர் காயமடைந்த நிலையில் காயமடைந்தவர்களை உடனடியாக வலப்பனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, அங்கிருந்து அனைவரும் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
இதன்போது வலப்பனை வைத்தியசாலையில் வைத்து 28 வயது மதிக்கதக்க அம்பாறை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, நுவரெலியா வைத்தியசாலையில் வைத்து கர்ப்பணி தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் கவலைக்கிடமாக இருந்த சிலரை கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

பேருந்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக குறித்த பாரிய வளைவு பகுதியில் பேருந்தினை செலுத்த முடியாததன் காரணமாகவே, இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்தவர்களில் சிறுவர்களும் அடங்குவதோடு, சிலர் நுவரெலியா ஆதார வைத்தியசாலையிலும், சிலர் கண்டி வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் நுவரெலியா மற்றும் வலப்பனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த வலப்பனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(க.கிஷாந்தன்)

http://globaltamilnews.net/2019/116867/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.