Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

என் துரோகம்-சுப.சோமசுந்தரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

                           என் துரோகம்

                                                    -சுப.சோமசுந்தரம்

                 வாழ்வில் இளமை வந்தது; கல்வி வந்தது;செல்வமும் வந்தது. என்னதான் வரவில்லை? நோயும் வந்தது. முதுமையால் அல்ல....பயணத்தால். அண்டை மாநிலம் சென்று பண்டம் வாங்கி வருவதைப் போல கண்ட வைரஸும் தொற்றி வந்தது. அறிகுறிகளைப் பார்த்து தமிழில் காக்கைக் காய்ச்சல் என்றார்கள். ஆங்கிலத்தில் West Nile என்றார்கள். தீர்வு என்று மருந்து இல்லாவிட்டாலும் ஆறுதலாக அபாயம் இல்லை என்றார்கள்; மனிதனிடம் இருந்து மனிதனுக்குப் பரவும் ஆற்றல் அதற்கு இல்லை என்றார்கள்; பறவையிடமிருந்தே மனிதனுக்குப் பரவும் என்றார்கள். இடையிடையே ஒரு காய்ச்சல் மாத்திரை என்னை வழக்கம் போல் இயங்க வைத்தது. விருப்பமானதை உண்ண அனுமதித்தது. சிலருக்கு வாரக் கணக்கிலும் சிலருக்கு மாதக் கணக்கிலும் நீடிக்கும் என்றார்கள்.

                 வைரஸின் பெருந்தன்மையில் அளவுக்கு அதிகமாக உரிமை எடுத்தேன். நண்பர்களுடன் எண்ணெயில் தோய்ந்த உருளைக் கிழங்கு போண்டாவை வெட்டிச் சாய்த்தேன். என் உடற்கூரு அவ்வளவு பெருந்தன்மையாக என்னை விட்டுவிடவில்லை. அது நச்சு உணவானது. வாந்தியும் அதுவரை நான் அறிந்திராத தலைவலியும் எனக்கு ஏற்கெனவே இருந்த கருணையான காய்ச்சலுடன் ஈவு இரக்கமின்றி என்னைப் போட்டுப் பார்த்தது.

                 அடுத்த வீட்டில் நான் பார்க்க இன்று வானுயர வளர்ந்த மருத்துவர் சங்கரநாராயணின் மருத்துவமனையில் சேர்ந்தேன். எங்கள் நகரிலேயே ஒரு தலைசிறந்த MD DM படித்த நரம்பியல் வல்லுநர் அவர். உரிமையின் காரணமாக இனி 'அவன்' என்றே குறிப்பிடலாம் என நினைக்கிறேன். அவனும் என்னை 'அண்ணன்' என்றே விளிப்பது வழக்கம்.

                 வாழ்க்கையில் 58 வருடங்களாக தலைவலி என்றால் என்னவென்றே தெரியாத எனக்கு முதலில் வரும்போதே தலை சுக்கு நூறாக வெடிப்பது போல வந்திறங்கியது. 'தலைவலியோடு மனிதன் எப்படி வாழ்ந்து வருகிறான்?' என்பதே எனக்குக் கேள்விக்குறியானது. வயிற்றுக்கடுப்பு, ஆஸ்துமா என்று பல நோய்களும் இப்படித்தான் இருக்கலாம். வாராது வந்த அந்தத் தலைவலி 'என்றைக்கு விலகும்?' என்று தெரியாத அந்தக் காய்ச்சலுடன் சேர்ந்து எனது மன உறுதியைக் குலைத்தது. அன்று மாலை ஒரு சிறிய பரிசோதனை செய்து பார்க்கலாம் என்று மருத்துவர் சங்கர் சொன்ன போது எனது தம்பிமார்கள் என் மீது கொண்ட அளவற்ற பாசத்தின் காரணமாக பெங்களூருவில் உள்ள ஒரு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம் என தீர்மானித்தார்கள். எனக்கு மனதில் சிறிது உறுத்தல். மருத்துவர் சங்கர் மீது எனக்கு உள்ள நம்பிக்கையை உதறிச் செல்கிறோமோ என்று. ஆனால் நோயுற்ற உடல் நோயுற்ற மனதைத்தானே தாங்கி நிற்கும்! அவர்கள் சொன்னதால்தான் நான் சரி என்றேன் என்று தப்ப முடியாது. உறுதிகுலைந்த என் மனந்தான் முழுமுதற் காரணம். எனக்கு ஏற்பட்டது சாதாரண நோயாகக் கூட இருக்கலாம்; இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். வசதியும் வாய்ப்பும் அமைந்த காரணத்தால் பாதுகாப்பு எல்லைக்குள்ளேயே இருக்க வேண்டும், என்ன ஆனாலும் வாழ்ந்தே ஆக வேண்டும் என்ற பெருமுனைப்பு. எந்த நேரமும் எனக்காகத் தொலைபேசியில் மருத்துவ ஆலோசனை வழங்கும் மருத்துவர் சங்கர் போன்றோரைக் கைவிடும் குற்ற உணர்வையும் தாண்டிய ஒரு பாய்ச்சல். பெங்களூரு மருத்துவமனையில் சேர்ந்த பின் அச்சூழல் தந்த பாதுகாப்புணர்வு அனைத்தையும் மறக்கடிக்கச் செய்தது. ஆனாலும் மனதில் ஒரு பேராசை. இத்தனை வசதி உள்ள மருத்துவமனையில் எனக்கு மிகவும் நம்பிக்கையுள்ள தம்பி சங்கரநாராயணனே என்னைக் கவனிக்க வேண்டும் என்று. 'அத்தனைக்கும் ஆசைப்படு' என்பது இது தானோ?

              நான் வாழ்க்கைப் பாடம் அனைத்தையும் தொழிற்சங்கத் தோழர்களிடமிருந்தே கற்றதாக உணர்கிறேன். மக்களுக்கான போராட்டங்களில் நிற்கும் போதெல்லாம் 'நான் சுயநலமற்றவன், நான் மக்களுக்கானவன், குறிப்பாக இளைய தலைமுறையினருக்கானவன்' என்ற இறுமாப்பு என் ஆழ்மனதில் உண்டு. அத்தனையும் நொறுங்கிப் போனது இந்தப் பாழாய் போன நோயால். நான் இங்கு சுயநலம் சார்ந்து கைவிட்டது இளைய தலைமுறையைச் சார்ந்த ஒரு தலைசிறந்த மருத்துவனை!  இதனால் நஷ்டம் அவனுக்கில்லை. அவனைப் பொறுத்தவரை நான் ஒரு நோயாளி. அவ்வளவே.       தண்ணீரில் நீந்தத் தெரியாமல் தத்தளிக்கும் போது எந்த ஒரு சாதாரண மனிதனும் தன்னைக் காப்பாற்ற முற்படுபவனையும் நீரில் அழுத்தி தான் மேலே எழ முற்படுவானாம். 'நான் அப்படியானவன் அல்லன்' என்று போலியாக எனக்குள் ஒரு பிம்பத்தை உருவாக்கி இருந்தேன். கேவலம், ஒரு சாதாரண நோய் அந்த பிம்பத்தை உடைத்தெறிந்தது. Survival of the fittest என்ற டார்வினின் நாகரிகம் அடையாத ஜீவராசிகளின் கோட்பாட்டிற்கு நான் விதிவிலக்கல்ல.           

                                                 -சுப.சோமசுந்தரம்

Edited by சுப.சோமசுந்தரம்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மனவேதனை புரிகிறது, ஆனால் உங்கள் இயலாமை தானே அம்முடிவிற்கு காரணம்.
சந்தர்ப்பம் கிடைக்கும் போது புரியும்படி உங்கள் மருத்துவ தம்பிக்கு கூறினால் புரிந்துகொள்வார்.

  • கருத்துக்கள உறவுகள்

சில நேரங்களில் எமக்கென்று இருக்கும் தனிப்பட்ட  விருப்பு வெறுப்புகளையும் உறவினர்களின் கரிசனத்துக்காக  விட்டு விட வேண்டியுள்ளது...... இதுக்கு துரோகம் என்பதெல்லாம் மிக மிகப் பெரிய வார்த்தை..... நீங்கள் நலம் பெற வேண்டும் நண்பரே.....!   🙂

சோமசுந்தரனார் அண்ணலின் உட்கிடை அன்னாரின் மருத்துவர் தம்பியின்பால் கொண்ட வற்றாயிருப்பான அன்பின் வெளிப்பாடு. மானுடத்தின் அழகியலான அன்பியல்.

ஒன்றை நாம் எல்லோரும் ஏற்றுக்கொண்டாக வேண்டும். நாம் தனிமனிதர்கள் அல்லோம்.

'பாயில் படுத்து நோயில் வீழ்ந்தால்' நம் உடல் மீதான உரிமை நம் உற்றார் உறவினரிடம் செல்வதும் இயல்பே!

நம் இருப்பின் நன்மை கருதி அவர்தம் அன்பின் வெளிப்பாடே அனைத்து உடல்நலன் சார்ந்த முடிவுகளும்.

அதில் நம் பங்கு ஒன்றும் இல்லை என்பதுதான் உண்மை.

அனைத்தும் அன்பின் வெளிப்பாடேயன்றி வேறொன்றும் அறியாத சூழலில்,  அன்பே சிவமாக அமர்ந்திருக்கும் சங்கரனார் (Dr. Sankaranarayanan) அன்பின் வெளிப்பாடுகளை  நன்கறிவார்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.