Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிச்சடி - டயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்ற சுவை உணவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிச்சன் கீர்த்தனா: ஓட்ஸ் கிச்சடி!

1.jpg

டயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்ற சுவை உணவு

அரிசியும் பருப்பும் சேர்த்துச் சமைக்கப்படும் உணவான கிச்சடி என்பது இந்தியாவின் பழைமையான ஆயுர்வேத நூல்களில் மருந்தாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘ரவாபாத்’ என்றும் இதை அழைக்கிறார்கள். பல இன மக்களும், உணவுக் கலாச்சாரமும் கொண்ட இந்தியாவில், தேசிய உணவு என்று ஏதேனும் ஒன்றை மட்டும் அறிவிப்பது கடினமான காரியமே. இருந்தாலும், கிச்சடிக்கு அந்தத் தகுதி இருக்கும் என்று தோன்றுகிறது. அப்படிப்பட்ட கிச்சடியில் பல வகைகள். அவற்றில் ஒன்றுதான் இந்த, ஓட்ஸ் கிச்சடி

என்ன தேவை?

ஓட்ஸ் – ஒரு கப்

பாசிப் பருப்பு – அரை கப்

வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)

தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்)

பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்)

கேரட் – ஒன்று (சிறிய துண்டுகளாக்கவும்)

பீன்ஸ் – 5 (சிறிய துண்டுகளாக்கவும்)

மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை

நெய் – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தண்ணீர் – 4 கப்

தாளிக்க:

கடுகு – கால் டீஸ்பூன்

பெருங்காய்த்தூள் – கால் டீஸ்பூன்

சீரகம் – ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

தோல் சீவி, துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்

அலங்கரிக்க:

நறுக்கிய கொத்தமல்லித் தழை – சிறிதளவு

எப்படிச் செய்வது?

பாசிப் பருப்பை 10 நிமிடங்கள் ஊறவைத்து தண்ணீரை வடிக்கவும். குக்கரில் நெய்விட்டு உருக்கி, தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு கேரட், பீன்ஸ், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துச் சிறிது நேரம் வதக்கவும். அதனுடன் பாசிப் பருப்பு, ஓட்ஸ், தண்ணீர் சேர்த்துக் கிளறி, குக்கரை மூடி இரண்டு விசில்விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கிய பிறகு திறந்து, கிச்சடியின் மேல் கொத்தமல்லித் தழை தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

என்ன பலன்?

ஓட்ஸில் குளூட்டன் என்கிற பொருள், ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்காமல் கட்டுப்படுத்தி இதயத்துக்குச் சீரான ரத்த ஓட்டம் செல்வதை உறுதி செய்கிறது. இதயத் தசைகளை வலுப்படுத்துகிறது. டயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்ற கிச்சடி இது.

 

https://minnambalam.com/k/2019/04/08/1

ஓற்ஸைக் கொண்டு உறைப்பாக ஏதாவது செய்யலாமா என்று யோசித்துக் கொண்டிருக்க இப்படி ஒரு செய்முறையைப் பகிர்ந்தமைக்கு நன்றி கிருபன்.

எத்தனை நாள் தான் தேனுடனும், பால் பழத்துடனும் அதைச் சாப்பிடுவது?!😊

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஹெல்தியான சாப்பாடுகள் செய்யவேண்டும் என்று வெளிக்கிட்டபோது தானியங்களாலான உணவுகளை செய்யவெளிக்கிட்டேன். கிச்சடி அடிக்கடி செய்வதுண்டு. ஓட்ஸ், வரகு, தினை என்று பலவகையான தானியங்களைப் பாவிக்கலாம். உறைப்புக்கும், புளிப்புக்கும்   crushed chilles உம் எலுமிச்சம்பழமும் சேர்ப்பேன்.

Rolled oats பாவித்தால் கரையாது!

மேலதிக தானிய உணவுகளுக்கு:

https://www.padhuskitchen.com/p/millet-recipes.html?m=1

  • கருத்துக்கள உறவுகள்

என்னட்டையும் ஓட்ஸ் வேண்டி பாவிக்காமல் இருக்கு...இப்படி செய்து பார்க்கத் தான் இருக்கு 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிச்சன் கீர்த்தனா: எனர்ஜி தரும் ரைஸ் கிச்சடி

5.jpg

நாள் முழுவதும் துணை இருக்கும்

‘கிச்டி’ அல்லது ‘கிச்சிரி’ அல்லது ‘கிச்சடி’ என்பது தெற்காசிய உணவு. அதன் வயது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் என்கிறார்கள் உணவியல் ஆராய்ச்சியாளர்கள். khicc என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு அரிசியும் பருப்பும் சேர்த்துச் சமைத்தது என்று பொருள். Khichdi அல்லது Khichiri என்ற சொல்லுக்கு மூலம் அதுவே.

முகலாயர்களின் அரண்மனைகளில் தினசரி உணவாக கிச்சடி கமகமத்திருக்கிறது. அரிசி, பாசிப் பருப்பு, நெய் சம அளவில் எடுக்கப்பட்டு, அவற்றுடன் சில மசாலாக்களும் சேர்த்துச் செய்யப்பட்ட கிச்சடி, பேரரசர் அக்பரின் விருப்பத்துக்குரிய உணவாக இருந்திருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

என்ன தேவை?

அரிசி - 2 கப்

பச்சைப் பருப்பு - அரை கப்

பெரிய வெங்காயம் - 2 (நீளமாக நறுக்கவும்)

பூண்டு - 10 பல்

பச்சை மிளகாய் - 10 (நீளமாகக் கீறிக்கொள்ளவும்)

தேங்காய் - அரை மூடி (துருவிக்கொள்ளவும்)

நெய் - அரை ஸ்டீபூன்

லவங்கம் - 4

பட்டை - 2

ஏலக்காய் - 4

உப்பு, எண்ணெய், கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

அரிசி, பச்சைப் பருப்பை அரை மணி நேரம் ஊறவைக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய், நெய்விட்டு, பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு, பொரிந்தவுடன் நறுக்கிய வெங்காயம் போடவும். சிறிது வதங்கியவுடன் பச்சை மிளகாய், பூண்டு போட்டு வதக்கவும். அடுத்து தேங்காய்த் துருவலைப் போட்டு வதக்கவும்.

தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதில் ஊறவைத்த அரிசி, பாசிப் பருப்பு, தேவையான அளவு உப்பு போட்டு வேக வைத்து இறக்கவும்.

என்ன பலன்?

காலை உணவு என்பது அன்றைய நாளுக்குத் தேவையான அனைத்துச் சத்துகளும் உடைய உணவாக இருக்க வேண்டும். ஆனால், நேரமின்மையின் காரணமாகப் பலர் சாப்பிடாமலேயே சென்றுவிடுகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்குக் குறைவான நேரத்தில் சமைக்கப்படும் இந்த ரைஸ் கிச்சடி, முழு எனர்ஜியைத் தரக்கூடியது.

 

 

https://minnambalam.com/k/2019/04/09/5

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிச்சன் கீர்த்தனா: கம்பு கிச்சடி

3.jpg

கர்ப்பிணிப் பெண்களுக்கேற்ற உணவு

ஹரியானாவின் கிராமப் பகுதிகளில் கம்பும் பச்சைப் பயறும் சேர்த்துத் தயாரிக்கப்படும் கிச்சடி, அன்றாட உணவுகளில் ஒன்றாக இருக்கிறது. அதில் தயிரும் சர்க்கரையும் கலந்து இனிப்பாக உண்ணும் வழக்கத்தையும் வைத்திருக்கிறார்கள். ஒடிஸாவில் இந்த உணவு, Khechidi என்றழைக்கப்படுகிறது. பூரி ஜெகன்னாதர் கோயில் பிரசாதங்களில் Adahengu khechidi என்பதும் ஒன்று. பஞ்சாப், ஹரியானா மாநில ஸ்பெஷல் கிச்சடி இது.

என்ன தேவை?

கம்பு – ஒரு கப்

பச்சைப் பயறு – அரை கப்

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்)

தோல் சீவி, துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்

கடுகு – கால் டீஸ்பூன்

சீரகம் – ஒரு டீஸ்பூன்

பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

நெய் – 2 டீஸ்பூன்

தண்ணீர் – 4 கப்

உப்பு – தேவையான அளவு

தாளித்து அலங்கரிக்க:

நெய் – ஒரு டீஸ்பூன்

சீரகம் – ஒரு டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

கம்பை நன்கு கழுவி, சுத்தம் செய்து எட்டு மணி நேரம் ஊறவிடவும். பிறகு களைந்து தண்ணீரை வடிகட்டவும். பச்சைப் பயற்றைக் கழுவி எட்டு மணி நேரம் ஊறவைத்து வடிகட்டவும். கம்பை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் விடாமல் ஒன்றிரண்டாக அரைத்து எடுக்கவும். குக்கரில் நெய்விட்டு உருக்கி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சித் துருவல் சேர்த்து வதக்கவும். பிறகு, அரைத்த கம்பு, பச்சைப் பயற்றைச் சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்கவும். அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்துக் கிளறி, குக்கரை மூடி மூன்று விசில் விட்டு இறக்கவும். கிச்சடி தயார். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து கிச்சடியின் மேலே சேர்த்து அலங்கரித்துப் பரிமாறவும்.

என்ன பலன்?

விரும்பினால் காய்கறிகள் சேர்த்தும் செய்யலாம்; நார்ச்சத்து அதிகம் கிடைக்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கும் வளரும் குழந்தைகளும் மிகவும் நல்லது. ஆனால், பாரம்பரியமாகச் செய்யும்போது காய்கறிகள் சேர்க்க மாட்டார்கள்.

 

 

https://minnambalam.com/k/2019/04/10/3

  • கருத்துக்கள உறவுகள்

நான் கொஞ்ச காலமாய் தானியங்கள் தான் பாவித்து வருகிறேன்...அரிசிக்கு பதிலாய் கம்பு ,தினை,வரகு போன்றவற்றை சோறாக்கி சாப்பிடுவேன்...ஆனால் பருப்போடு இவற்றை சேர்த்து சமைத்ததில்லை...வறுத்து அரிசிமாவோடு சேர்த்து புட்டு அவித்திருக்கிறேன்...தொடர்ந்து இணையுங்கள் கிருபன்...நன்றி 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிச்சன் கீர்த்தனா: குதிரைவாலி கிச்சடி

1.jpg

பெரியவர்களின் சிறப்பு உணவு

பிகார் மக்களையும் கிச்சடியையும் பிரிக்க முடியாது. அரிசி, பருப்பு, கரம் மசாலா சேர்த்துத் தயாரிக்கப்பட்ட கிச்சடி, சில வகை பராத்தாக்களுமே அவர்களது தினசரி மதிய உணவு. குறிப்பாக, நமக்கு ‘சனி நீராடு’ என்பதுபோல, அவர்கள் சனிக்கிழமைதோறும் கிச்சடி சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். சீனியர்களின் ஸ்பெஷல் கிச்சடியாக இந்த குதிரைவாலி கிச்சடியைச் செய்கிறார்கள்.

என்ன தேவை?

குதிரைவாலி - ஒரு கப்

பொடியாக நறுக்கிய காய்கறிகள் - அரை கப்

வெங்காயம் - ஒன்று (நறுக்கிக்கொள்ளவும்)

தக்காளி - 2

இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்

பச்சை மிளகாய் - 3

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

புதினா, கொத்தமல்லித் தழை - சிறிதளவு (நறுக்கியது)

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

கடுகு - அரை டீஸ்பூன்

சோம்பு - அரை டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)

உளுந்து - ஒரு டீஸ்பூன்

கடலைப் பருப்பு - 2 டீ ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

எப்படிச் செய்வது?

எண்ணெய், நெய் சேர்த்து வாணலியில் காயவைத்து தாளிக்கக் கொடுத்தவற்றைப் போட்டுத் தாளிக்கவும். இதனுடன், வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கி, பச்சை மிளகாய் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு, இஞ்சி, பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் அளவுக்கு வதக்கி... தொடர்ந்து, பொடியாக நறுக்கிய காய்கறிகளையும் சேர்த்து வதக்கவும். மஞ்சள் தூள், புதினா, கொத்தமல்லித் தழை சேர்த்து வதக்கி தக்காளி சேர்க்கவும். தேவையான அளவு உப்பைப் போட்டு தக்காளி கரையும்வரை வதக்கி, அதனுடன் இரண்டரை கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் குதிரைவாலியை அதில் கொட்டிக் கிளறி தண்ணீர் வற்றியதும், தீயைக் குறைத்து, 5 நிமிடங்கள் மூடி விடவும். இப்போது சூடான சுவையான குதிரைவாலி கிச்சடி தயார்.

என்ன பலன்?

புரதச் சத்து, கொழுப்புச் சத்து, நார்ச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரம் அடங்கிய குதிரைவாலி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து அடிக்கடி சளி, காய்ச்சல் ஏற்படாமல் தடுக்கும். இதிலுள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுத்து, செரிமானத்துக்கு உதவுவதால் பெரியவர்களின் சிறப்பு உணவாகக் கொண்டாடப்படுகிறது.

 

https://minnambalam.com/k/2019/04/11/1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.