Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

•ரோகன விஜயவீரா மகனுக்கு ஒரு நியாயம் பிரபாகரன் மகனுக்கு இன்னொரு நியாயம் இதுதான் இலங்கை அரசின் நியாயம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Rajavarman Sivakumar 
Image may contain: 1 person
Image may contain: 1 person, smiling, hat and closeup
Tholar Balan
 

•ரோகன விஜயவீரா மகனுக்கு ஒரு நியாயம்
பிரபாகரன் மகனுக்கு இன்னொரு நியாயம்
இதுதான் இலங்கை அரசின் நியாயம்?

பத்து வருடங்களுக்கு முன்னர் இதே காலப்பகுதியில் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் இலங்கை ராணவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சரணடைந்த ஒருவரைக் கொல்வதே தவறு. அதைவிட சரணடைந்த சிறுவனைக் கொல்வது மிகப் பெரிய தவறு.

“பிரபாகரன் பயங்கரவாதி. எனவே பிரபாகரன் மகனும் பயங்கரவாதி” என்று சுட்டுக் கொன்றமைக்கான காரணத்தை கோத்தபாய ராஜபக்ச கூறினார்.

1989ம் ஆண்டு ஜேவிபி தலைவர் ரோகன விஜயவீராவை பயங்கரவாதி என்று இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றது.

அப்போது விஜயவீராவின் மனைவி மற்றும் ஆறு பிள்ளைகளும் ராணுவத்தால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

ஆனால் “ரோகன விஜயவீரா பயங்கரவாதி எனவே அவரது பிள்ளைகளும் பயங்கரவாதி” என்று ஒரு பிள்ளைகூட சுட்டுக் கொல்லப்படவில்லை.

மாறாக அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் அனைவரும் இலங்கை அரசால் பாதுகாக்கப்பட்டார்கள். அவர்களுக்கு உரிய அனைத்து செலவுகளும் அரசே பொறுப்பேற்றது.

விஜயவீராவின் மகன் உபுன்டு விஜயவீரா படித்து பட்டம் பெற்றுவிட்டார். அதுமட்டுமல்ல தான் அரசியலில் ஈடுபடப்போவதாகவும் அண்மையில் பேட்டி கொடுத்துள்ளார்.

ரோகண விஜயவீராவின் மகனை படித்து பட்டம் பெற வைத்த இலங்கை அரசு பிரபாகரனின் மகனை சுட்டுக் கொன்றுள்ளது.

விஜயவீராவின் ஆறு பிள்ளைகளையும் மனைவியையும் காப்பாற்றிய இலங்கை அரசு பிரபாகரனின் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளையும் கொன்றுள்ளது.

இதற்கு என்ன காரணம்?
விஜயவீராவும் அவர் மகனும் சிங்கள இனம். பிரபாகரனும் அவர் மகனும் தமிழர் இனம். இதைவிட வேறு என்ன காரணம் இருக்கும்?

இப்படியான இனவாத இலங்கை அரசிடமிருந்து தமிழருக்கு எப்படி நியாயம் கிடைக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்

வியஜவீரவின் மகன் மட்டுமல்ல, சஹரானின் மகள், மனைவிக்கும் வேறு நியாயமே.

நான் இன்னொரு திரியில் சொன்னது போல யாரை எங்கே எப்படி தட்டி வைப்பது என்பதில் உண்மையிலேயே பேரினவதிகள் சூரர்கள்தான்.

நாங்கள்தான் இது புரியாமல் அசாத் சாலிக்கு அறுக்கிறோம் பார், ரிச்சாத்துக்கு இறுக்கிறோம் பார், ஹிஸ்புல்லாவை கிழிக்கிறோம் பார் எண்டு கதைச்சிகொண்டு திரியிறம்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

வியஜவீரவின் மகன் மட்டுமல்ல, சஹரானின் மகள், மனைவிக்கும் வேறு நியாயமே.

நான் இன்னொரு திரியில் சொன்னது போல யாரை எங்கே எப்படி தட்டி வைப்பது என்பதில் உண்மையிலேயே பேரினவதிகள் சூரர்கள்தான்.

நாங்கள்தான் இது புரியாமல் அசாத் சாலிக்கு அறுக்கிறோம் பார், ரிச்சாத்துக்கு இறுக்கிறோம் பார், ஹிஸ்புல்லாவை கிழிக்கிறோம் பார் எண்டு கதைச்சிகொண்டு திரியிறம்.

ரோகணவின் மகனை சிங்களம் தன்ட கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்...தலைவரின் மகனை அப்படி வைத்திருக்க முடியுமா?...நீங்கள் சொன்ன மாதிரி யாரை எங்கே,எப்படி வைத்திருக்க வேண்டும் என்பதில் அவர்கள் சூரர்கள் தான்...இன்னமும் கூட பல தமிழர்கள் அவர்களை மோட்டு சிங்களவன் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்...இவ்வளவு அடி  வாங்கியும் இப்படி எப்படி அவர்களால் கதைக்க முடியுது?...சிங்களவர்களது அதே குணங்கள் முஸ்லீம் மக்களிடமும் உள்ளது 

  • கருத்துக்கள உறவுகள்

டொன்யுவான் டொனாகதரீனா என்ற கோட்டே இராச்சிய இளவரசியையும் இளவரசனையும் வைத்திருந்தது போல 7 வயது பையன் பாலாவையும் வைத்திருக்கலாம்.

எனக்கும் இவர்களால் எப்படி இப்படி எல்லாம் எழுத முடிகிறது எண்டு விளங்கவே இல்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

டொன்யுவான் டொனாகதரீனா என்ற கோட்டே இராச்சிய இளவரசியையும் இளவரசனையும் வைத்திருந்தது போல 7 வயது பையன் பாலாவையும் வைத்திருக்கலாம்.

எனக்கும் இவர்களால் எப்படி இப்படி எல்லாம் எழுத முடிகிறது எண்டு விளங்கவே இல்லை.

 

7 வயதா???

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் 13 வயது 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனிடம் பேரினவாத வெறின்னா.. முஸ்லீம்களிடம்.. மத அடிப்படைவாத வெறி.

இவை இரண்டிலும் இருந்து தமிழ் மக்களை காத்த ஒரே கேடயம்.. விடுதலைப்புலிகள்.

அவர்கள் விட்ட தவறு வல்லாதிக்கங்களின் வால்களாக இருக்க மறுத்தது. மக்களின் நலனை.. மண்ணின் நலனை.. பிராந்திய ஊடுருவல்களுக்கு இடமளிக்காமல்.. பாதுக்காப்பது.

அதற்குச் செலுத்தப்பட்ட உயிர் விலை என்பது மனித இனம் எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு அமைந்திருக்கிறது.

இங்கு சிலர் மெச்சி மகிழ்வது போலன்று..! சிங்களவனை விட.. தமிழனை அழித்தது.. தமிழனின் சுயநலமும்.. தான் தான் பெரிய ஆள் என்ற ஏட்டிக்குப் போட்டியான வெட்டி மமதைகளும்... எஜமான விசுவாசமும்... காட்டிக் கொடுப்பும்.. தான். 

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.