Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பயங்கரவாதிகளின் உறவினர்களே..!! சற்றுமுன் பதில் பொலிஸ்மா அதிபர் வெளியிட்டுள்ள எச்சரிக்கை

Featured Replies

பாதுகாப்பின் காரணமாகவே நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த நேரிட்டது என பதில் பொலிஸ்மா அதிபர் C.D. விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிலை குறித்து சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இதை குறிப்பிட்டுள்ளார். மேலும்,

மதுபோதையில் சிலர் குளியாபிட்டிய – ஹெட்டிபொல பகுதியில் நேற்று சில வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நிலைமையைக் கட்டுப்படுத்த நேற்றிரவு குறித்த பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த நேரிட்டது. இந்த நிலை முடிவடையும் என நாங்கள் நம்பினோம்.

எனினும், இன்றும் சிலர் சொத்துகளுக்கு சேதங்களை ஏற்படுத்தியுள்ளனர். இதன் காரணமாக பாதுகாப்பின் நிமித்தம் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த நேரிட்டது.

இதன்போது பொலிஸார் மிகவும் பொறுமையுடன் செயற்பட்டனர். எனினும், சில தீவிரவாதிகள் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டனர். பொலிஸார் அமைதியாக செயற்பட்டமை, பொலிஸார் பலவீனமானவர்கள் என அவர்கள் நினைப்பார்களாயின் அது அவர்களின் முட்டாள்தனம்.

30 வருட யுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த பொலிஸாருக்கு இந்த சிறிய தீவிரவாத குழுவை ஒழிப்பது பெரிய விடயமல்ல. கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலையடுத்து, இனம், மதம் கடந்து பொதுமக்கள் பொலிஸாரின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பை வழங்கினர்.

மக்களின் வாழ்க்கை மற்றும் சொத்துக்களை இல்லாதொழிக்கும் தீவிரவாதிகளின் செயற்பாட்டை இல்லாது செய்ய வேண்டும். நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்த முயற்சிப்பவர்களுக்கு இடமளிக்கப் போவதில்லை.

பயங்கரவாதிகளின் உறவினர்களுக்கு இந்தவேளையில் அறிவிப்பொன்றை விடுக்க விரும்புகின்றோம். இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என உங்களின் உறவினர்களுக்கு அறியப்படுத்துங்கள். இல்லையென்றால் சட்டத்தின் தன்மையை காண்பிக்க நேரிடும்.

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோர் பிணை வழங்காது 10 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும்.

இவ்வாறான செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை பொலிஸ் சார்பில் எச்சரிக்கை விடுப்பதாக, பதில் பொலிஸ்மா அதிபர் அறிவித்தல் விடுத்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/119880?ref=home-imp-parsely

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, போல் said:

30 வருட யுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த பொலிஸாருக்கு இந்த சிறிய தீவிரவாத குழுவை ஒழிப்பது பெரிய விடயமல்ல.

சொறீலங்கா... இராணுவம் சொல்லுதான் தான் தான் இதைச் செய்தது என்று. மகிந்த சொல்லுறார் தான் தான் செய்ததென்று. சொறீலங்கா.. பொலிஸ் சொல்லுது தான் என்று. சொறீலங்கா நேவி சொல்லுது தான் தான் செய்ததென்று.

உலகின் பிராந்திய.. மற்றும் வல்லாதிக்க சக்திகள் சொல்கின்றன.. தாம் தாம் செய்ததென்று.

ஆனால்.. உலகின் மனித உரிமைகளை கொஞ்சம் என்றாலும் மதிப்பவர்கள் சொல்கிறார்கள்.. 30 வருட யுத்தம் வெல்லப்படவில்லை.. மாறாக பெரும் இனப்படுகொலையும்... மனித அழிவும்.. போர்க்குற்றங்களும் நிகழ்த்தப்பட்டுள்ளது என்று.

ஆக இப்படி உரிமை கோரும் அனைவரும் போர்க்குற்றவாளிகள் என்பதை உலகம் உடனடியாக ஏற்க வேண்டும்.

இலங்கையில் தமிழ் மக்களின் பாதுகாப்பை ஐநா படையை அனுப்பி ஐநா சபை உறுதி செய்து கொடுக்க வேண்டும்.

2006  இல் தமிழ் மக்களின் கோரிக்கையை செவிமடுக்காமல்.. அவர்களை நடுத்தெருவில் கொலைக்கரங்களிடம் கையளித்தது போன்று ஐநா எனி செய்ய விளையக் கூடாது. 

3 hours ago, nedukkalapoovan said:

இலங்கையில் தமிழ் மக்களின் பாதுகாப்பை ஐநா படையை அனுப்பி ஐநா சபை உறுதி செய்து கொடுக்க வேண்டும்.

2006  இல் தமிழ் மக்களின் கோரிக்கையை செவிமடுக்காமல்.. அவர்களை நடுத்தெருவில் கொலைக்கரங்களிடம் கையளித்தது போன்று ஐநா எனி செய்ய விளையக் கூடாது. 

NWO இன் முழு உலகையும் “One World Government” மூலம் ஆளும் முயற்சியின் ஒரு பகுதியாக தான் elite ஆல் UN உம் உருவாக்கப்பட்டது. அதே NWO இல் depopulation உம் ஒரு பகுதி.

அப்ப UN வெளிக்கு தான் நல்ல மாதிரி காட்டிக்கொள்ளும். மறைமுகமாக கொலையை ஆதரிக்கும்.

Elite க்கு தேவை ஏற்படாத வரை ஐநாவும் ஐநா படையையெல்லாம் அனுப்ப மாட்டுது.

Edited by Lara

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.