Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தனியார்,அரச ஊடகங்கள் என பிரிவினையை ஏற்படுத்துகிறாரா வடக்கு ஆளுநர்? இன்று முல்லைத்தீவில் நடந்ததென்ன?

Featured Replies

அரச ஊடகம் தனியார் ஊடகம் என ஊடகங்களுக்குள் பிரிவினை ஏற்படுத்தியுள்ள வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தனியார் ஊடகங்களை பொது நிகழ்வு ஒன்றில் இருந்து வெளியேற்றிய சம்பவம் இன்று முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முல்லைத்தீவு மாவட்டத்துக்கு மேற்கொள்ளும் விஜயத்தின் போது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் ஜனாதிபதியின் கவனம் செலுத்தப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா வலியுறுத்தியமைக்கும் வடக்கு ஆளுநர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

முல்லைத்தீவுக்கு எதிர்வரும் எட்டாம் திகதி சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விஜயம் செய்யவு ள்ளமை தொடர்பாகவும் மூன்றாம் திகதி தொடக்கம் எட்டாம் திகதி வரை “நாட்டுக்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்டம்” நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் உட்பட அரச அதிகாரிகள், ஜனாதிபதி செயலக மேலதிக செயலாளர், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், சாந்தி சிறிஸ்கந்தராஜா, சிவசக்தி ஆனந்தன் ஆகியோருடன், முப்படையினர் பொலிஸார் என பல தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா முல்லைத்தீவுக்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி வெறுமனே இந்த திட்டங்களை மாத்திரமன்றி நீண்ட காலமாக தீர்க்கப்படாது இருக்கின்ற மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்கவும் அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவும் வேண்டும் வலியுறுத்தினார்

இதன் போது வட மாகாண ஆளுநர் குறுக்கிட்டு மன்னிக்க வேண்டும் நடைபெற இருக்கின்ற நிகழ்வுக்கு உங்களுடைய பங்களிப்பு என்ன என்பது மாத்திரமே எங்களுக்கு தேவையாக இருக்கின்றது. இந்த விடயங்கள் தொடர்பாக கதைப்பதற்கு பல்வேறு இடங்கள் இருக்கின்றன என்று தெரிவித்தார்.

இதனை ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்த ஊடகவியலாளர் மத்தியில் வருகைதந்த ஆளுநரின் ஊடகச் செயலாளர், ஊடகவியலாளர்களின் கமராக்களை மறைத்து ஒளிப்பதிவு செய்வதை தடை செய்தார்.

இந்த வேளையில் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தனியார் ஊடகங்கள் அனைத்தையும் வெளியே செல்லுமாறு பணித்துள்ளார்.

எனினும் அரச ஊடகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு அரச ஊடகங்களை சேர்ந்த ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்ததையும் அவர்களுடைய நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒலிவாங்கிகளும் அந்த கூட்டத்தில் வைத்திருப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

இதன் மூலமாக ஆளுநர் அரச ஊடகம், தனியார் ஊடகம் என்ற பிரிவினையை ஏற்படுத்தி தனியார் ஊடகங்கள் உண்மை நிலைமைகளை வெளியில் கொண்டு வர விடாது தடுக்கும் செயற்பாட்டில் ஈடுபடுகின்றாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்நிலையில் கூட்டம் நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா முல்லைத்தீவு மாவட்டத்துக்கான ஜனாதிபதியின் விஜயத்தில் சந்தேகம் காணப்படுவதாக தெரிவித்தார்.

முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொண்டு செல்லவேண்டுமே தவிர விழிப்புணர்வு கூட்டங்களை ஏற்பாடு செய்யக் கூடாது என்றும் சாந்தி குறிப்பிட்டார்.

இந்த நிலையில் சிறிலங்கா ஜனாதிபதி தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், வட மாகாண ஆளுநரின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தினார்.

சில ஊடகங்கள் செய்திகளை திரிவுபடுத்தி வெளியிட்டு வருவதால், அதனை தவிர்ப்பதற்காகவே ஆளுநர் தனியார் ஊடகங்களை வெளியேற்றியிருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

இதேவேளை வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் முல்லைத்தீவுக்கு செல்கின்ற நிகழ்வுகளுக்கு தனியார் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்படும் நிலையிலேயே கூட்டங்களை நடத்தி செல்கின்றமை தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது

மக்களுக்காக வெளிப்படையான செயற்திட்டங்களை ஆற்றக்கூடிய சூழல்களை உருவாக்குவதாக இந்த நல்லாட்சி அரசாங்கம் கூறியபோதும் நல்லாட்சி அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வடமாகாண ஆளுநர் கலந்து கொள்கின்ற இவ்வாறான கூட்டங்களில் ஊடகங்களை தடை செய்வதன் நோக்கம் என்னவென்று மக்களும் ஊடகவியலாளர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.

https://www.ibctamil.com/srilanka/80/121045

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.