Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை கட்டாயமாக்குக..! ஸ்ராலின் அதிரடி..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை கட்டாயமாக்குங்கள்... மு.க.ஸ்ராலின் அதிரடி..!

mk-stalin_1200x630xt.jpg

மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் மொழியைக் கட்டாயமாக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்ராலின் வலியுறுத்தியுள்ளார்.

முஸ்லிம் தலைவர்களில் ஒருவரான காயிதே மில்லத்தின் 124-வது பிறந்த தினத்தையொட்டி, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள காயிதேமில்லத்தின் நினைவிடத்தில் மு.க.ஸ்ராலின் மரியாதை செலுத்தினார். அவருடன் தயாநிதி மாறன், அன்பழகன், சுப்பிரமணியன் மற்றும் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மு.க.ஸ்ராலின், ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழிசை கொண்டு வரவேண்டும் என குரல் கொடுத்தவர் காயிதே மில்லத் என்பதை சுட்டிக்காட்டினார். மும்மொழி திட்டம் என்ற பெயரில் இந்தியை திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.

பின்னர் அந்த அறிவிப்பை திரும்ப பெற்றுள்ளது. அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் தமிழை கட்டாய மொழியாக அறிவிக்க வேண்டும். அதற்காக தொடர்ந்து திமுக குரல் கொடுக்கும் என உறுதியாக கூறுகிறேன் என்றார்.

https://tamil.asianetnews.com/politics/central-government-offices-mk-stalin-emphasis-psm3j6

டிஸ்கி :

இப்போதான் கொஞ்சம் அமைதியா போனங்கள் ..

8065f2746acc022d8fe656ac80fe5963.png

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை கட்டாயமாக்குக..! ஸ்ராலின் அதிரடி..!

முதலில் உன்  வீட்டில் கட்டாயமாக்கு ராசா??

வாய்ப்பே  இல்லை  ராசா

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, விசுகு said:

மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை கட்டாயமாக்குக..! ஸ்ராலின் அதிரடி..!

முதலில் உன்  வீட்டில் கட்டாயமாக்கு ராசா??

வாய்ப்பே  இல்லை  ராசா

அவர்கள் வீட்டில் தெலுங்கு பத்திரிகைகள் தானாமே .

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, பெருமாள் said:

அவர்கள் வீட்டில் தெலுங்கு பத்திரிகைகள் தானாமே .

தமிழில் மு.க.ஸ்ராலினின்  புலமையை பார்க்கும்போது  தெரியவில்லையா??

அவர்கள்  வீட்டில்  தமிழில்  பேசுவதில்லை  என்பது?

  • கருத்துக்கள உறவுகள்
114781-ifaxthixer-1559474427-800x445.jpg
NEWS 

அனைத்து மத்திய அரச அலுவலகங்களிலும் தமிழ் உத்தியோக மொழியாக்கப்பட வேண்டும் – மு.க.ஸ்டாலின்

இந்திய ‘மும்மொழித் திட்டத்திற்கு’ தெரிவித்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து அனைத்து மத்திய அரச அலுவலகங்களிலும் தமிழ் உத்தியோக மொழியாக ஆக்கப்பட வேண்டுமென தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வற்புறுத்தியிருக்கிறார்.

மறைந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தலைவர் காயிதே மில்லத் அவர்களின் 124வது பிறந்த நாளை முன்னிட்டு நடந்த வைபவத்தில் அவர்களுக்கு மரியாதை செலுத்திவிட்டு ஊடகவியலாளர்களுடன் பேசும்போது “சகல மத்திய அரச அலுவலகங்களிலும் தமிழ் உத்தியோக மொழியாக்கப்பட வேண்டும் என்பதாக இன்றய நாளில் நாம் உறுதி மொழி எடுத்துக் கொள்வோம்” என்றார் திரு. ஸ்டாலின்.

தமிழக சட்ட சபையில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் திரு. ஸ்டாலின் ‘மத்திய அரசு , மூன்று மொழித் திடடத்தின் மூலம் இந்தியைத் திணிக்க எடுத்த முயற்சி தமிழர்களின் கடும் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தார். திரு C .N .அண்ணாத்துரை அவர்களால் முன்வைக்கப்பட்ட ‘இரு மொழி’ க் கொள்கையே நாடு முழுவதும் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தேசியக் கல்விக் கொள்கை என்ற மும் மொழித் திட்ட வரைவு அறிவிக்கப்பட்ட மறுநாளே இந்தி பேசாத மாநிலங்களின் கடும் எதிர்ப்புக் காரணமாக மத்திய அரசு அவ் வரைவை மீளப் பெற்றிருந்தது. தமிழ் நாட்டில் தி.மு.க. வுடன் ஏனைய கட்சிகளும் இத் திட்டத்திற்குப் பலத்த எதிர்ப்பைத் தெரிவித்திருந்தன.

தமிழ் நாட்டில் 1967ல் அறிஞர் அண்ணாத்துரை தலைமையில் தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றியதன் பின்னர் 1968 இல் தமிழும் ஆங்கிலமும் என்ற இரு மொழிக் கொள்கை நடைமுறையில் இருந்துவருகிறது.

http://marumoli.com/அனைத்து-மத்திய-அரச-அலுவல/?fbclid=IwAR0y-Lg5iloH9Q3B2M9G_QL4X8seNeadaqIM26HRvhGe3R1YBABUHrLsaN0

இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இந்தி எதிர்ப்பு

இந்தி மொழித் திணிப்பு விவகாரம் தமிழ் நாட்டில் பெரும் தலைகளையே ஆட்ட வைத்திருக்கிறது. ஒஸ்கார் விருது பெற்ற இசை இயக்குனர் ஏ.ஆர். ரஹ்மான் கடந்த சில நாட்களாகத் தனது குருவி (ட்வீட்) மூலம் சில ‘கீச்சல்களை’ அனுப்பிக் கொண்டிருக்கிறார்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு பஞ்சாபிக்காரர் பாடும் ‘மாரியான்’ தமிழ்ப் பாட்டை முன்வைத்து ‘பஞ்சாப்பில் தமிழ் பரவுகிறது’ என்றொரு கீச்சலை அனுப்பியிருந்தார். இது ‘இந்தியத்துக்கு ஏதிரானது’ எனப் பலரும் விமர்சித்திருந்தார்கள். நேற்று, மீண்டும் ‘ஹிந்தியைத் திணிக்கும் திட்டம் நகலிலிருந்து நீக்கப்பட்டு விட்டது, அது தான் நல்ல முடிவு’ எனவும் கீச்சல் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.

இன்று அவர் ‘Autonomous’ என்ற ஆங்கிலச் சொல்லைத் தன் கீச்சலில் கேம்பிரிட்ஜ் டிக்சனரி இணையத் தளத்தில் தரப்பட்ட ‘இச் சொல்லலின் கருத்து ‘சுதந்திரமானதும் தனது முடிவுகளைத் தானே எடுக்க வல்லதும்’ என்பதனையும் இணைத்து பூடகமாகத் தன் கருத்தை / எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் வலைப் பாவனையினர் இது குறித்து தமது மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகிறார்கள்.

http://marumoli.com/இசைப்-புயல்-ஏ-ஆர்-ரஹ்மானி/?fbclid=IwAR2Nfg_QaBNKCGepRMlmNCyLbnGZ6qRPf5U2mlVpCAAfKbbMocKQ3djQnFY

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் மத்திய அரசில்... அங்கம் வகித்த போதும், தமிழ் நாட்டை ஆண்ட போதும்....
வராத யோசனை இப்ப வந்திருக்கு.

கர்நாடகம், கேரளா, ஆந்திர மாநிலங்களில்... 
அவர்களின் தாய் மொழி பாடசாலையில் முக்கிய பாடம்.  
ஆனால்... தமிழ்நாட்டில்,  அதனை ஏன் உங்களால் கட்டாய பாடமாக்க  முடியவில்லை?
எதிர்க்கட்சியில் இருந்தால்தான்... தமிழ் நினைவுக்கு வரும் போலை...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.