Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அச்சுறுத்தலுக்குள்ளான இலங்கையின் சுற்றுலாத்துறையை கட்டியெழுப்ப துணையாக அமைந்த ஜேர்மன் கப்பலின் வருகை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அச்சுறுத்தலுக்குள்ளான இலங்கையின் சுற்றுலாத்துறையை கட்டியெழுப்ப துணையாக அமைந்த ஜேர்மன் கப்பலின் வருகை

இலங்கையின் சுற்றுலாத்துறையை மீள்புதுப்பிக்கும் வகையில் எம்.எஸ். யுரோப்பா - 2 என்ற ஆடம்பரக் கப்பலின் வருகை அமைந்திருந்த்து.

IMG_20190607_090138.jpg

சுற்றுலாத்துறையை மீளக்கட்டியெழுப்பும் நோக்கில் உலகின் மிகவும் விசாலமான ஆடம்பர கப்பலான எம்.எஸ். யுரோப்பா -2 கடந்த புதன்கிழமை (05.06.2019) இலங்கைக்கு வருகை தந்திருந்தது.

கடந்த புதன்கிழமை இலங்கைக்கு வருகைதந்த எம்.எஸ். யுரோப்பா - 2 கப்பலில் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த சுமார் 900 பயணிகள் வருகை தந்திருந்தனர். 

IMG_20190607_080011.jpg

இந்நிலையில் , காலி மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களில் தரித்து நின்ற நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள முக்கிய இடங்களை பார்வையிட்ட நிலையில், அங்கிருந்து கடந்த 7 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

IMG_20190607_080008.jpg

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு அன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத்தாக்குதலுக்கு பின்னர் வருகை தந்துள்ள முதலாவது பயணிகள் கப்பலென்பதுடன் குறித்த கப்பலின் வருகையானது இலங்கையில் மீள சுற்றுலாத்துறையை கட்டியெழுப்புவதற்கு பெரும் பக்கபலமாக அமைந்துள்ளது.

IMG_20190607_075446.jpg

இலங்கையின் கொழும்புத்துறைமுகத்தை வந்தடைந்த எம்.எஸ். யுரோப்பா - 2 என்ற கப்பலுக்கு இலங்கை உல்லாசப்பயண ஊக்குவிப்பு சபையினரால் வரவேற்கப்பட்ட நிலையில் ஜேர்மன் உல்லாசப்பயணிகள் கலாசார நிகழ்வுகளைக் கண்டு கழித்தனர். 

IMG_20190607_075551.jpg

இலங்கை வருகை தந்த ஜேர்மன் உல்லாசப்பயணிகள் கலபொட தேயிலை நிறுவனம் , அக்குரெஸ்ஸ பந்த தேசிய பூங்கா , கதிர்காமம் , எல்ல , சீகிரியா மற்றும் கண்டி உற்பட கொழும்பின் பிரபல வர்தக சந்தைக்கும் விஜயம் செய்தனர்.

IMG_20190607_075404.jpg

கப்பல் தரித்துநின்ற நாட்களில் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் தங்கியிருந்து யால, பண்டாரகம, கொக்கல ஏரி ஆகியவற்றை பார்வையிட்டதுடன் கலபொட தேயிலை நிறுவனம் , அக்குரெஸ்ஸ பந்த தேசிய பூங்கா, கதிர்காமம், எல்ல, சீகிரியா மற்றும் கண்டி உட்பட கொழும்பின் பிரபல வர்தக சந்தைக்கும் விஜயம் செய்தனர்.

IMG_20190607_075224.jpg

உலகிலேயே அதிக இடவசதி கொண்ட அதிசொகுசு உல்லாசப்பயணக்கப்பல் எம்.எஸ்.யுரோப்பா - 2 இலங்கைக்கு வந்துள்ளமை இலங்கை உல்லாசப்பயணத்திற்கு பாதுகாப்பானதும் ஏற்புடையதுமானது என்பதற்கு சான்று பகர்கின்றது என சுற்றுலாத்துறை  அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

IMG_20190607_075325.jpg

எம்.எஸ்.யுரோப்பா எனும் இந்த அதிசொகுசு உல்லாசக்கப்பலின் வருகை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

IMG_20190607_075146.jpg

இலங்கையில் இடம்பெற்ற அண்மைய பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களுக்கு பின்னர் வருகை தந்த முதலாவது வெளிநாட்டு உல்லாசப்பயணக்கப்பல் என்ற வகையில் இது முக்கியத்துவம் பெறுகின்றது. 

IMG_20190607_075220.jpg

அழகிய இலங்கை தீவிற்கு வருகை தர தீர்மானித்ததற்காக உல்லாசப்பயணிகள் அனைவருக்கும் உளமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

உங்கள் வருகை இலங்கை உல்லாசப்பயணத்திற்கு பாதுகாப்பானதும் ஏற்புடையதுமானது என்பதற்கு சான்று பகர்கின்றது என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

IMG_20190607_075123.jpg

இந்த உல்லாசப் பயணக்கப்பலுக்கு இலங்கையில் ஏட்கன் ஸ்பென்ஸ் தனியார் நிறுவனம் உபசரிப்பு முகவராகச் செயற்பட்டது. எம்.எஸ்.யுரோப்பா உல்லாசக் கப்பல் கடந்த சனிக்கிழமை கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச்சென்றது.

 

 

http://www.virakesari.lk/article/57923

  • கருத்துக்கள உறவுகள்

கப்பல் வந்து போன பின்தான் செய்தியில் வருகிறது அவ்வளவுக்கு தங்களில் நம்பிக்கை இல்லையாக்கும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

IMG_20190607_075446.jpg

IMG_20190607_075220.jpg

IMG_20190607_075146.jpg

உதுகளை குலுங்காமல் நலுங்காமல்  ஏசி பஸ்லை ஏத்தி உள்ள இடங்களை சுத்தி காட்டி..... ஒரு தேயிலை பக்கற்ரையும் யானை சிலையையும் பரிசாய் குடுத்து....  திருப்பி  கொண்டுவந்து கப்பல்லை ஏத்தி விடுவாங்கள்.அதுகளும் நாட்டுக்கு வந்து ரூரிஸ்ற் பேப்பர்களுக்கு சிலோன் பியூட்டி ஃபுல் கன்றி..... நோ பிறொப்பளம் எண்டு வீணீர் வடிக்குங்கள். அதை வாசிச்சுப்போட்டு எங்கடை புலன்பெயர்ந்த அவையளும் அதை உதாரணமாய் காட்டி நாட்டிலை பிரச்சனை இல்லை எண்டு சொல்லிக்கொண்டு இஞ்சையே இருப்பினமாம்....

 

இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வகையானது, 2019ஆம் ஆண்டில், 2.5 மில்லியனைத் தாண்டுமென எதிர்பார்க்கப்பட்டது.

அதன் மூலமாக, சுமார் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை, நாட்டுக்கு வருமானமாகக் கொண்டுவரவும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போதுள்ள நிலவரத்தின் பிரகாரம், இலங்கை அரசாங்கமானது, குறைந்தது 3 பில்லியன் அமெரிக்க டொலர்களையே வருமானமாகப் பெற்றுக்கொள்ள முடியுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. 

இது, இலங்கையின் வருமானத்தில் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பை, நேரடியாக ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலையில், பெரும்பாலான நாடுகள்,  இலங்கை மீதான பயணக்கட்டுப்பாடுகளில் விதித்திருந்த இறுக்கமான நடைமுறைகளைத் தளர்த்தி வருகின்றபோதும், நாட்டுக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையானது, எதிர்பார்த்த மட்டத்தைக் கொண்டிருக்கவில்லை. இந்த நிலை, சீரடைவதற்கு, குறைந்தது ஆறு மாதங்கள் ஆகலாமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/business-analysis/வலுவிழந்துள்ள-பொருளாதாரமும்-சுற்றுலாத்துறையும்/145-233996

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு முயற்சி.

என் நண்பர்கள் பலர் இவ்வாறு சிறிய அளவில் இத்துறையில் முதலிட்டு நடத்தி வந்தார்கள். குண்டு வெடிப்பின் பின்னர் 
மிகவும் நஷ்டப்பட்டு போனர்கள்.

சுற்றுலாத்துறை விரைவாக மீண்டெல வேண்டும். பலர் இதை நம்பி வாழ்கினறார்கள்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.