Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் கடற்பரப்பில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட 31 மீனவர்களின் 33 ஆவது நினைவுதினம் இன்று அனுட்டிப்பு!

Featured Replies

Image

யாழ் குடாநாட்டின் மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மீனவர்களின் 33 ஆவது நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்தின் மண்டைதீவு கடற்பரப்பில் வைத்து ஸ்ரீலங்கா கடற்படையினர் நடத்திய தாக்குதலில் 31 அப்பாவி தமிழ் மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

1986 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 10 ஆம் திகதி குருநகர் இறங்குதுறையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களை, ஸ்ரீலங்கா கடற்படையினர் அணுகிய போது தாம் பொதுமக்கள் என்பதை தெரிவிக்கும் பொருட்டு அவர்கள் கைகளை உயர்த்தினர்.

எனினும் மீனவர்களை தாக்க ஆரம்பித்த ஸ்ரீலங்கா கடற்படையினர், கூரிய ஆயுதங்களால் தாக்கியும் வெட்டியும் சித்திரவதை செய்து கொலை செய்திருந்தனர்.

இந்த தாக்குதலில் குருநகரைச் சேர்ந்த 30 மீனவர்களும் மண்டைதீவைச் சேர்ந்த ஒரு மீனவரும் இந்த தாக்குதலில் உயிரிழந்ததுடன், ஒரே ஒரு மீனவர் மாத்திரம் உயிர் தப்பியிருந்தார்.

ஸ்ரீலங்கா கடற்படையினரின் கொடூரமான தாக்குதலில் பலியான இந்த 31 மீனவர்களையும் நினைவுகூரும் நிகழ்வு இன்று குருநகரில் உள்ள நினைவு தூபியில் இடம்பெற்றது.

இதன்போது உயிரிழந்தவர்களுக்கான சுடர் ஏற்பட்டு, மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், அஞ்சலி உரைகளும் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், பொதுமக்கள், யாழ் மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னோலட் மற்றும் யாழ்ப்பாணம் பிரதேச செயலர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

https://www.ibctamil.com/srilanka/80/121770

நினைவஞ்சலிகள்!

என்னால் மறக்க முடியாத படுகொலைகளில் ஒன்று.

11 வயதில் பார்த்த கொடூரமான காட்சிகள். கொலை செய்யப்பட்டவர்களின் உடலங்களை வரிசையாக கிடத்தி வைத்து இருந்தனர். குடல்கள் வெளியே வந்தும் கண்கள் சிதைக்கப்பட்டும், உடல் இரண்டாக வெட்டப்பட்டும்...

போன  வருடம் மகளுடன் யாழ்ப்பாணம் போய் காட்டிய இடங்களில் நினைவுத் தூபியும் ஒன்று. முன்னர் இறந்தவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தூண்கள் ஒரு தேவாலயத்தில் எழுப்பி இருந்தனர் என நினைக்கின்றேன். அவற்றுக்கு என்ன நடந்தது என தெரியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.