Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனேடிய பாராளுமன்றத்தில் தமிழின அழிப்பிற்கான ஐ.நா விசாரணை செய்யக்கோரிய தீர்மானம் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கனேடிய பாராளுமன்றத்தில் தமிழின அழிப்பிற்கான ஐ.நா விசாரணை செய்யக்கோரிய தீர்மானம் 3 முறை தோற்கடிக்கப்பட்டு 4 வது முறையாக இத்தீர்மானம் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது

 

20-06-2019-1561035810.jpg
 

 

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கனேடிய பாராளுமன்றத்தில் தமிழின அழிப்பிற்கான ஐ.நா விசாரணை செய்யக்கோரிய தீர்மானம் 3 முறை தோற்கடிக்கப்பட்டு 4 வது முறையாக இத்தீர்மானம் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1)  வன்முறையாலும் போராலும் பாதிக்கப்பட்ட இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் இரங்கலைத் தெரிவிக்கிறது,
2) உயிர்த்தஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குமாறும், மதச் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்குமாறும், அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாக்குமாறும் இலங்கை அரசிடம் கோருகிறது,
3) ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் 30/1 மற்றும் 40/1 ஆகிய தீர்மானங்களின் கீழ் பணிக்கப்பட்டவாறு, தெளிவான கால அட்டவணைக்கு அமைவாக அதன் கடப்பாடுகளை நிறைவேற்றுமாறு இலங்கையிடம் கனேடிய அரசு விடுத்த கோரிக்கையை மீள உறுதிசெய்வதுடன், பொறுப்புக் கூறலை மேற்கொள்வது, சமாதானத்தை ஏற்படுத்துவது, நாட்டில் உள்ள அனைவருக்கும் இடையில் மீளிணக்கத்தை ஏற்படுத்துவது ஆகியவற்றுக்குக் கனடாவின் ஆதரவை மீள உறுதிசெய்கிறது,
4) இலங்கையில் தமிழர்கள் மீது புரியப்பட்டதாகக் கூறப்படும் இனப்படுகொலை மற்றும் 2009 ஆம் ஆண்டில் போரின் இறுதிக் காலம். குறித்த விசாரணை செய்வதற்கு சுதந்திரமான, சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை அமைக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையிடம் கனடிய அரசு கோரிக்கை விடுக்கிறது.

இந்த தீர்மானம் NDP கட்சியின் மனித உரிமைக்கு பொறுப்பான பாராளுமன்ற உறுப்பினர் Cheryl Hardcastle பாராளுமன்றத்தில் முன்வைத்திருந்தார். NDP கட்சிக்கும் மற்றும் அதன் தலைவர் Jagmeet Singh அவர்களுக்கும் கனடிய தமிழர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இம்முயற்சியில் Liberal கட்சியினுடைய முன்முயற்சியை, MP Shaun Chen ன் ஊடாக பாராளுமன்றதில் மே 25ல் தீர்மானமாக கொண்டு வந்ததற்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். Minister Nadeep Bains மற்றும் MP Gary Anadasangaree ஆகியோர் தொடர்ச்சியாக NCCT யுடன் தீர்மான வரைபில் ஈடுபட்டு, NDP கட்சி பாராளுமன்றத்தில் தீர்மானம் முன்வைத்ததை ஆதரித்திருந்தனர். கனடிய பிரதமர் Justin Trudeau மற்றும் கனடிய வெளிநாட்டமைச்சு இந்த விடயத்தில் முக்கிய தலைமத்துவத்தை கொடுத்ததை வரவேற்று கனடிய தமிழர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Conservative கட்சி சார்பில் MP Garnett Genuis அவர்கள் இவ்வரைபை மே 25 பாராளுமன்றத்தில் முன்வைத்ததற்கும், தீர்மானத்தின் திருத்தத்தை ஏற்றுக் கொண்டதற்கும், மீண்டும் அத் தீர்மானத்தை வெளிநாட்டு அமைச்சின் குழுவிற்கு ஜூன் 18ல் சமர்ப்பித்ததற்கும், எதிர்க்கட்சி தலைவர் Andrew Scheer அவர்கள் இவ்விடயத்தில் ஒருமித்த ஆதரவை வழங்கியதற்கும் கனடிய தமிழர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அத்துடன் ஒன்ராரியோ பாராளுமன்ற உறுப்பினரான விஜய் தணிகாசலம் அவர்கள் மத்திய Conservative கட்சியுடனான பேச்சுவார்த்தை பரிமாற்றத்திற்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுத்ததற்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

கனடியத் தமிழர் தேசிய அவை தொடர்ச்சியாக இத் தீர்மானத்தின் வரைபை முன்வைப்பதற்கு அயராது உழைத்து, அனைத்து கட்சியையும் இத்தீர்மானத்தை ஆதரிக்க வைத்திருந்தனர்.

இத் தீர்மான வரைபில், கனடியத் தமிழர் தேசிய அவை தொடர்ச்சியாக, மற்றைய பிரதேச அமைப்புக்கள், தன்னார்வலர்கள், கனடிய தமிழர் தேசிய அவையின் உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களின் கடுமையான உழைப்பினூடகவே நிறைவேற்றி இருந்தனர்.

தமிழர்களின் நீதிக்கான ஒரு சரியான முன்னகர்வாக அமைகின்றது.

 

http://www.thedipaar.com/newsdetail.php?id=24311&fbclid=IwAR3R5Ilb5VjQDhS3DzkSmjg5KGmqaVyTmtgVzAAiI_tM-_A86kHuQsTVhoo

முதல்தடவையாக இந்த பிரேரணை முன்வைக்கப்பட்ட பொழுது, சகல கட்சிகளும் ஆதரிக்கவில்லை.

பிரிவுகளுக்கும் ஒற்றுமையாக செயல்படுதல் வெற்றியை தரும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை தமிழருக்கு சார்பாக/ ஆதரவாக இனி எங்கும் எதுவுமே நடக்கப்போவதில்லை.
 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

இலங்கை தமிழருக்கு சார்பாக/ ஆதரவாக இனி எங்கும் எதுவுமே நடக்கப்போவதில்லை.
 

ப‌ல‌தை ந‌ம்பி ஏமாந்த‌வ‌ர்க‌ளுக்கு , நீங்க‌ள் எழுதின‌து புரியும் தாத்தா  /

ஒரு இட‌த்தில் ஈழ‌ த‌மிழ‌னின் அடி
அகோர‌மாய் விழுந்தா ஒட்டு மொத்த‌ உல‌க‌மும் ஈழ‌ த‌மிழ‌ர‌ உத்து நோக்குவின‌ம் / 

அதுக்கு முத‌ல் அண்டை நாட்டில்
எம‌க்கு என்று ஒரு ந‌ம்பிக்கையான‌ அர‌சிய‌ல் க‌ட்சி தேவை /

மாவீர‌ர்க‌ளின் தியாக‌ம்
ஒரு போதும் வீன் போக‌ கூடாது 😓 /

 


 

6 hours ago, விசுகு said:

தமிழர்களின் நீதிக்கான ஒரு சரியான முன்னகர்வாக அமைகின்றது.

இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கும் சர்வதேச விசாரணையை நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபைக்கு அழுத்தம் கொடுப்பதற்கும் நாம் நீண்ட தூரம் பயணப்பட வேண்டியுள்ளது.

Genocide இனப்படுகொலை என சொல்ல மறுக்கும் தமிழ் கூட்டமைப்பினர்  கூட்டங்களை இனியாவது கதிரைகளில் இருந்து இறக்குங்கள் !

#motion #Genocide #pass #Canadianparliament

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, ampanai said:

இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கும் சர்வதேச விசாரணையை நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபைக்கு அழுத்தம் கொடுப்பதற்கும் நாம் நீண்ட தூரம் பயணப்பட வேண்டியுள்ளது.

மண்ணாங்கட்டி நீண்ட தூரம்.
இன்னும் எத்தனை சந்ததிகளை பலி கொள்ளப்போகின்றீர்கள்?

பà®à®®à¯ à®à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®²à®¾à®®à¯: à®à®°à¯

  • கருத்துக்கள உறவுகள்

2013ம் ஆண்டு ச‌ண‌ல்4 ஊட‌க‌ம் எவ‌ள‌வு உண்மையை எடுத்து சொல்லியும் ந‌ம‌க்கு ந‌ட‌ந்த‌ ந‌ண்மை என்ன‌ /

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கால‌ம் மிக‌ வேக‌மாக‌ ஓடுது /
2000ம் ஆண்டுக்கு பிற‌க்கு ஈழ‌த்தில் பிற‌ந்த‌ பிள்ளைக‌ளுக்கு எம் போராட்ட‌ம் ப‌ற்றி பெரிசா தெரியாது /

அதுங்க‌ளின் உல‌க‌ம் இபோது ( ஜ‌போன் ம‌ற்றும் பேஸ்வுக் )

புல‌ம் பெய‌ர் நாட்டில்  பிற‌ந்த‌ பிள்ளைக‌ளுக்கு , எம் போராட்ட‌ வ‌ர‌லாறுக‌லும் த‌மிழீழ‌ ம‌ண்ணின் பெருமைக‌ளும் தெரியாது / 

யாழ்பாண‌த்தில் சிங்க‌ள‌வ‌னின் 
ஆதிக்க‌ம் அதிக‌ரிக்குது /
ஒரு க‌ட்ட‌த்தில் த‌மிழீழ‌த்தின் த‌லை ந‌க‌ர‌ம் ஆனா திருகோன‌ம‌லையில் த‌மிழர்க‌ள் ம‌ட்டும் தான் வாழ்ந்தார்க‌ள் , 
இப்போ திருகோன‌ம‌லை எங்கும் சிங்க‌ள‌வ‌னின் ஆதிக்க‌ம் /

இன்னும் கொஞ்ச‌க் கால‌ம் பொறுத்தா நான் பிற‌ந்து வ‌ள‌ந்த‌  ஊரிலும் சிங்க‌ள‌னின் குர‌ல்க‌ள் கேக்கும் 😠 /

 

 

கனடாவின் ஐ.நா. பிரதிநிதி ஊடாக இதை, இலங்கையில் நடந்தது ஒரு இனப்படுகொலை என்பதை, அடுத்தகட்டமாக ஐ.நா. சபைக்கு, ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு முன்பாக எடுத்து செல்ல வேண்டும்,

தமிழர்கள் வாழும் நாடெல்லாம் கடனா தீர்மானத்தை முன்னுதாரணமாக காட்டி அந்தந்த நாடுகளின் ஆதரவையும் பெறல் வேண்டும்.  

நம்பிக்கையும் முயற்சியும் இருக்கும் வரை எதையும் வெல்லலாம், சாதிக்கலாம். 

23 minutes ago, ampanai said:

கனடாவின் ஐ.நா. பிரதிநிதி ஊடாக இதை, இலங்கையில் நடந்தது ஒரு இனப்படுகொலை என்பதை, அடுத்தகட்டமாக ஐ.நா. சபைக்கு, ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு முன்பாக எடுத்து செல்ல வேண்டும்,

ஐநா சபையில் ஈழத்தில் நடாத்தப்பட்டது இனப்படுகொலை என தீர்மானம் நிறைவேற்றுவதனால் பெரிதான மாற்றங்கள் எதுவும் ஈழத்தில் இடம்பெறப்போவதில்லை. மியன்மாரில் இடம்பெறுவது இனச்சுத்திகரிப்பு என ஐநாவில் தீர்மானம் செய்யப்பட்டபோதும் அந்த மக்களுக்கு அதனால் தீர்வு எதுவும் கிட்ட வில்லை.

கிழக்கு திமோர், எரித்தேரியா போன்ற நாடுகள் ஐ,நா. தீர்மானம் ஊடான சுயநிர்ணய வாக்கெடுப்பு ஊடாக உருவான நாடுகள். 

 

எதுவும் கிட்டவில்லை என்பதற்காக முயற்சிக்காமல் இருக்க முடியாது. இல்லை சிங்களவன் குடியேறிவிட்டான் என்பது முடிவான முடிவும் இல்லை. என்றோ ஒருநாள் இறக்கப்போகிறோம் என்பதற்காக இன்று வாழ மறுக்கின்றோமா?  

தங்கள் நிலம் பறிபோய் விட்டதால் அதை கேட்டு போராடும் போப்பாபிலவு மக்கள் யார்? 
இன்றும் வவிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் ஏன் போராடுகிறார்கள்? 

அவர்கள் தான் சாதிப்பார்கள்.   

எமக்கான சுயநிர்ணய உரிமை ஏற்கனவே முடிவான ஒன்று, 1977 ஆம் ஆண்டு நடந்தேறிய ஒன்று. 

தமிழ் அரசியல் கட்சிகளின் தமிழர் விடுதலைக் கூட்டணியானது வட்டுக்கோட்டையில் நடத்திய அதன் மாநாட்டில், மாநாடு நடந்த்த கிராமமான வட்டுக்கோட்டையை அடைமொழியுடன் பின்னர் பரவலாக அறியப்பட்ட "வட்டுக்கோட்டைத் தீர்மானம்" என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. 1977 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், சுதந்திரத் தமிழீழக் கொள்கைக்கு மக்கள் ஆணை கோரிப் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி18 இடங்களைப் பெற்று பெரும் வெற்றி பெற்றது. 

Taking part in a side-event on Tamils Right to Self-Determination, Tamil National Alliance (TNA) Parliamentarian Sivagnanam Shritharan on Monday called for a UN referendum among Eezham Tamils to exercise their external Self-Determination. The TNA MP was referring to 1977 democratic mandate for Tamil Eelam and the 2009-2010 referenda held in the Tamil diaspora.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

மண்ணாங்கட்டி நீண்ட தூரம்.
இன்னும் எத்தனை சந்ததிகளை பலி கொள்ளப்போகின்றீர்கள்?

இந்த  திரியில்  இத்தனை எதிர்பார்ப்பு  எழுத்துக்கள்  எதையோ  தேடுபவர்களால் தானே  அண்ணா??

  • சர்வதேசத்தின் தலையீடு இல்லாமல் உள்நாட்டு விசாரணைகள் பயன் தர மாட்டா என்பதை முன்னெடுக்கவேண்டும்
  • முன்மொழியப்பட்ட தீர்மானங்ககளில், இனப்படுகொலை சம்பந்தப்பட்ட தீர்மானம் முன்னெடுக்கப்பட உழைக்கவேண்டும் 
  • Welcoming the move, the Tamil activists in the island urged the Canadian Tamil diaspora to concentrate on educating their host country on the unworkability of transitional justice in the island without international investigations on the genocide taking precedence over the other two demands.

https://tamilnet.com/art.html?catid=79&artid=39487

Time for Canadian Eezham Tamils to chart next course of diaspora action

The latest Canadian move is also a lesson for the dormant Tamil diaspora groups in London, the activists in Jaffna further said.

கனடாவின் தீர்மானம் பிரித்தானியா வாழ் தமிழர்களுக்கும் ஒரு புதுவேகத்தை தரவல்லது

Press Release: TGTE Applauds Call by Canada’s House of Commons for UN Led Int'l Investigation Into Sri Lanka’s Genocide Against Tamils

"The Unanimous motion was passed on June 19th" -

- "TGTE views this resolution as a critical commentary on the continuous structural genocide of the Tamils"

LINK: https://world.einnews.com/pr_news/489242162/tgte-applauds-call-by-canada-s-house-of-commons-for-un-led-int-l-investigation-into-sri-lanka-s-genocide-against-tamils 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.