Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழில் இயங்கும் 5 ஹோட்டல்கள் மீது சுகாதாரச் சீர்கேடு வழக்குகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இயங்கும் 5 ஹோட்டல்கள் மீது சுகாதாரச் சீர்கேடு வழக்குகள்

யாழ் மாநகரில் இயங்கும் நட்சத்திர விடுதிகள் ஐந்தின் மீது சுகாதாரச் சீர்கேடு குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் தனித்தனியாக வழக்குத் தொடரப்பட்டது.

 

அவற்றில் பிரபல நட்சத்திர விடுதி ஒன்றின் உரிமையாளர் தன்மீதான குற்றச்சாட்டை மறுத்த நிலையில் அவரை தலா 50 ஆயிரம் ரூபா ஆள் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன், வழக்கை வரும் 28ஆம் திகதிவரை ஒத்திவைத்தார்.

மேலும் நட்சத்திர விடுதிகள் மூன்றின் உரிமையாளர்கள் தம்மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதால் அவர்களில் இருவருக்கு முறையே 21 ஆயிரம் ரூபா மற்றும் 15 ஆயிரம் ரூபா தண்டம் விதித்த மேலதிக நீதிவான், அந்த நட்சத்திர விடுதிகள் இரண்டையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவிட்டார்.

அத்துடன், நட்சத்திர விடுதி ஒன்றின் உரிமையாளர் ஒருவர் குற்றச்சாட்டை ஒத்துக்கொண்ட நிலையில் அவருக்கான தண்டனைத் தீர்ப்பை ஒத்திவைத்த மன்று, அவரது நட்சத்திர விடுதி தொடர்பான சுகாதாரச் சீடுகேடு பற்றிய அறிக்கையை மன்றில் சமர்பிக்க அவகாசம் வழங்கி வழக்கை வரும் 28ஆம் திகதிவரை ஒத்திவைத்தது.

மேலும் இதே குற்றச்சாட்டை முன்வைக்கப்பட்ட நட்சத்திர விடுதி உரிமையாளர் ஒருவர் இன்று மன்றில் முன்னிலையாகத் தவறினார். அவருக்கு அழைப்புக் கட்டளை அனுப்ப உத்தரவிட்ட மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன், வழக்கை வரும் 28ஆம் திகதிவரை ஒத்திவைத்தார்.

 

https://www.virakesari.lk/article/58790

  • கருத்துக்கள உறவுகள்

உணவு விடயத்தில், கண்டிப்பான சுகாதாரம் பேணப்பட வேண்டும் என்ற கொள்கையில்..
ஒருவருக்கும்... மாற்றுக்  கருத்து இருக்க முடியாது.
அந்த வகையில்... யாழ். மாநகர சபை சுகாதார திணைக்களத்தினருக்கு பாராட்டுக்கள்.

சில மாதங்களுக்கு முன்....  கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லீம் உணவகத்தில்,
மலசல கூடத்தில், உள்ள நிலத்தில் வைத்து, இறைச்சி வெட்டிய காணொளியை பார்த்த பின்...
வாழ்க்கையே... வெறுத்துப் போய் விட்டது.   

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, தமிழ் சிறி said:

உணவு விடயத்தில், கண்டிப்பான சுகாதாரம் பேணப்பட வேண்டும் என்ற கொள்கையில்..
ஒருவருக்கும்... மாற்றுக்  கருத்து இருக்க முடியாது.
அந்த வகையில்... யாழ். மாநகர சபை சுகாதார திணைக்களத்தினருக்கு பாராட்டுக்கள்.

சில மாதங்களுக்கு முன்....  கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லீம் உணவகத்தில்,
மலசல கூடத்தில், உள்ள நிலத்தில் வைத்து, இறைச்சி வெட்டிய காணொளியை பார்த்த பின்...
வாழ்க்கையே... வெறுத்துப் போய் விட்டது.   

கொழும்பில், புறக்கோட்டை டாம்வீதி, பழைய சோனகர் தெரு, புதிய சோனகர் தெருக்களில், ஆடுகளை சாப்பாட்டு கடையின் பின்புறத்தில் தான் அறுப்பார்கள். பார்தால் ஜன்மத்துக்கும் அந்த கடைகள் போகமாட்டீர்கள். ஆடு அறுப்பது வேறு, சுகாதாரம், சுத்தம் வேறு..... இந்த இரண்டாவது விசயம்.... ‘சுத்தம்’.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

கொழும்பில், புறக்கோட்டை டாம்வீதி, பழைய சோனகர் தெரு, புதிய சோனகர் தெருக்களில், ஆடுகளை சாப்பாட்டு கடையின் பின்புறத்தில் தான் அறுப்பார்கள். பார்தால் ஜன்மத்துக்கும் அந்த கடைகள் போகமாட்டீர்கள். ஆடு அறுப்பது வேறு, சுகாதாரம், சுத்தம் வேறு..... இந்த இரண்டாவது விசயம்.... ‘சுத்தம்’.

எல்லா முஸ்லீம் கடைக்காரர் வெட்டிய ஆடு எல்லாம், "ஹலால்" ஆடுகளா?
"ஹலால்" ஆடுகள் என்றால், "மௌலவி" ஓதி வெட்டிய ஆடுகள் என நினைக்கின்றேன்.

மக் டொனல்ட்ஸ், பேர்கர்  கிங் போன்ற உணவகங்களில்... 
துருக்கி சனம், நிறைய இருந்து சாப்பிடுவார்கள்.
அங்கு விற்கும்... இறைச்சிகள் எல்லாம், "ஹலால்" செய்யப் பட்டது,  என்பதற்கு.... என்ன உத்தரவாதம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

உணவு விடயத்தில், கண்டிப்பான சுகாதாரம் பேணப்பட வேண்டும் என்ற கொள்கையில்..
ஒருவருக்கும்... மாற்றுக்  கருத்து இருக்க முடியாது.
அந்த வகையில்... யாழ். மாநகர சபை சுகாதார திணைக்களத்தினருக்கு பாராட்டுக்கள்.   

புலிகளின் காலத்தில் பயிர்ச்செய்கைகள் அனைத்துக்கும் அனேகமாக இயற்கை உரங்களே பாவிக்கப்பட்டது. தற்போது செயற்கை உரமிட்டு வளர்ந்த காய்கறிகளில் எத்தனைவீதம் நஞ்சு உள்ளது என்பதையும் இந்த சுகாதாரத் திணைக்களம் பரிசோதிக்குமா? அல்லது அதற்கு வேறு திணைக்களம் உள்ளதா.?  

13 hours ago, தமிழ் சிறி said:

எல்லா முஸ்லீம் கடைக்காரர் வெட்டிய ஆடு எல்லாம், "ஹலால்" ஆடுகளா?
"ஹலால்" ஆடுகள் என்றால், "மௌலவி" ஓதி வெட்டிய ஆடுகள் என நினைக்கின்றேன்.

மக் டொனல்ட்ஸ், பேர்கர்  கிங் போன்ற உணவகங்களில்... 
துருக்கி சனம், நிறைய இருந்து சாப்பிடுவார்கள்.
அங்கு விற்கும்... இறைச்சிகள் எல்லாம், "ஹலால்" செய்யப் பட்டது,  என்பதற்கு.... என்ன உத்தரவாதம்.

பிரான்ஸில் சில இடங்களில் croissant மற்றும் சிலவற்றை தயாரிக்க butter க்கு பதிலாக பன்றி கொழுப்பை பயன்படுத்துவார்கள். அது மலிவு என்பதால். சில முஸ்லிம்கள் அது தெரியாமல் அதை சாப்பிட்டு விட்டு பின்னர் தெரிய வந்ததும் அந்தரப்படுவதை பார்த்திருக்கிறேன். 😂

5FFA9CB8-DCB9-48D9-9ECD-393A60C01F33.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.