Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வைகோவுக்கு இப்படி ஒரு சிக்கல் இருக்கா..?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அடடா.. வைகோவுக்கு இப்படி ஒரு சிக்கல் இருக்கா.. அதையும் தாண்டி வரவேண்டும்.. பெரும் எதிர்பார்ப்பு.!

vaiko232-1562036226.jpg

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சீக்கிரமாகவே ராஜ்ய சபா சென்றுவிடுவார் என்று பார்த்தால், ஒரு சிக்கல் எழுந்துள்ளது.லோக்சபா தேர்தலில் எதிர்பார்த்த சீட் மதிமுகவுக்கு தரப்படவில்லை என்றதுமே, வைகோவுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக திமுக உறுதி அளித்திருந்தது.அதன்படி வைகோ எம்பியாக போகிறார் என்றும், 23 வருஷங்களுக்கு பிறகு மீண்டும் ராஜ்ய சபாவில் முழங்க போகிறார் என்றும் தொண்டர்கள் ஆர்வமானார்கள்.

தேச துரோக வழக்கு

ஆனால், 2009-ல் குற்றம் சாட்டுகிறேன் என்கிற நூல் வெளியீட்டு விழாவில், இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் வைகோ பேசியதாக திமுக ஆட்சி காலத்தில் தேசதுரோக வழக்கு தொடரப்பட்டது.

தீர்ப்பு

இது சம்பந்தமான விசாரணையும் இவ்வளவு நாள் நடந்து கொண்டு இருந்தது. இதில் வருகிற ஜூலை 5- ந்தேதி தீர்ப்பும் வழங்கப்பட இருக்கிறது. இந்த தீர்ப்பு வைகோவுக்கு சாதகமாக இருக்குமா, பாதகமாக இருக்குமா என்பதை பொறுத்துதான், ராஜ்ய சபாவுக்கு வைகோ போவது முடிவாகும் போல இருக்கிறது.

மனு தாக்கல்

தீர்ப்பு 5-ம் தேதி என்றால், ராஜ்ய சபா வேட்ப தாக்கல் செய்ய வரும் 8-ம் தேதி ரைம் உ ள்ளது. அதனால் தீர்ப்பு சாதகமாக வரும்பட்சத்தில் 5-ம் தேதிக்கு பிறகு வைகோ வேட்புமனுத்தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. எப்படியும், தீர்ப்பு சாதமாகவே வரும் என்றும் வைகோ ராஜ்ய சபாவுக்கு செல்வார் என்றும் மதிமுக தரப்பினர் அதிகபட்சமாகவே எதிர்பார்த்து காத்துள்ளனர்.

எதிர்பார்ப்பு

ஒருவேளை பாதகமாக வந்தால், அதை எப்படி வைகோ உள்ளிட்டவர்கள் எதிர்கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் வைகோ ராஜ்யசபாவுக்குச் செல்ல வேண்டும்.. தமிழக நலன்களுக்காக முழங்க வேண்டும்.. நாடாளுமன்றத்தை தனது வாதத் திறமையால் கிடுகிடுக்க வைக்க வேண்டும் என்பது தமிழகத்தின் பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது.

https://tamil.oneindia.com/news/chennai/vaiko-plan-to-filing-the-nomination-on-after-july-5th/articlecontent-pf385574-355739.html

டிஸ்கி:

576px-Wedge-1.jpg

அன்று 2009 வைத்த ஆப்பு இன்று வேலை செய்கிறது ..கருணாவா கொக்கா..? ஸ்ராலின் இதை சாட்டி நிராகரிக்கவும் வாய்ப்பு உண்டு களிப்பா களியா விரைவில்..

  • கருத்துக்கள உறவுகள்

பாரதீய யனதாவுக்கு இன்று பலமான மட்டை ஒன்று கிடைத்துள்ளது. பந்து எப்படி வந்தாலும் அதனை விளாசிவிடும் வலிமையையும் கொண்டுள்ளது. மட்டை மட்டும் இருந்து பலனில்லை, பந்துபோட பலமான வீச்சாளரும் தேவை. பந்தை மட்டையால் அடித்தால்தான் மக்கள் ரசித்து ஆரவாரிப்பார்கள் என்பதும் அதன்தலைவர் மோடிக்குத் தெரியும். கோபாலசாமி அதிசிறந்த வீச்சாளர் (பேச்சாளர்) ஆகவே தீர்ப்பு சாதகமாக வரும் என எதிர்பார்க்கலாம்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வைகோவுக்கு ஓராண்டு சிறை... நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

Vaiko_1200x630xt.jpg

வைகோ மீதான தேச துரோக வழக்கில் குற்றவாளி என அறிவித்த சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.  வைகோ மீது கருணாநிதி அரசால் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இலங்கையில் நடைபெற்ற போரில் தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசில் அங்கம் வகித்த காங்கிரஸ்- தி.மு.க.வுக்கு எதிராகவும் அப்போது பிரதமராக இருந்த மன்மோகன்சிங்குக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற நூல் வெளியீட்டு விழா 2009-ம் ஆண்டு எழும்பூர் ராணி சீதை அரங்கில் நடைபெற்றது. இதில் வைகோ பங்கேற்று ஆவேசமாக பேசினார்.

அவரது பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதாக கூறி தேசதுரோக வழக்கு தி.மு.க. ஆட்சியில் தொடரப்பட்டது. வெகு நாட்களாக நடைபெற்ற இந்த வழக்கை ‘டிஸ்மிஸ்’ செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் வைகோ முறையிட்டார். ஆனால் வழக்கை ‘டிஸ்மிஸ்’ செய்ய முடியாது என்று ஐகோர்ட்டு அறிவித்து விட்டது. அதன்பிறகு இந்த வழக்கு சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பை இன்று நீதிபதி அறிவித்தார். அதன்படி அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை, 10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

https://tamil.asianetnews.com/politics/vaiko-sentenced-to-one-year-in-jail-pu5lbq

டிஸ்கி :

இறந்தும் கருணா வைத்த ஆப்பு மிக நன்றாக வேலை செய்கிறது.👌

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

"இது தேசத் துரோகமென்றால் இதை நான் தொடர்ந்து செய்வேன்":

தேசத் துரோக வழக்கில் தண்டிக்கப்பட்ட ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தான் தொடர்ந்து விடுதலைப் புலிகளை ஆதரிக்கப்போவதாகவும், தான் செய்தது தேசத் துரோகமல்ல என்றும், இது தேசத் துரோகமென்றால் அதை தான் தொடர்து செய்யப்போவதாகவும் கூறியிருக்கிறார்.

தண்டனை அறிவிக்கப்பட்ட பிறகு நீதிமன்றத்திற்கு வெளியில் செய்தியாளர்களிடம் ஆவேசமாகப் பேசினார்.

"இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள். தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக இந்திய அரசு ஆயுத உதவியும் பண உதவியும் செய்ததால், உலக நாடுகளிடம் ஆயுதம் வாங்கி, சிங்கள பேரினவாத ராஜபக்சே அரசு லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்தது என்பதை பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கிடம் நேரடியாகச் சென்று மனுவாக அளித்தோம். 17 முறை அவரை இதற்காகச் சந்தித்திருக்கிறேன்.

இந்தக் கடிதங்களைத் தொகுத்து, I Accuse என்ற தலைப்பில் அண்ணாமலை மன்றத்தில் நூல் வெளியிடப்பட்டது. அதன்படி என் மீது தேசத் துரோக வழக்குத் தொடரப்பட்டது. 'ஆமாம் நான் அப்படித்தான் பேசினேன். இலங்கைத் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டால் நாதி இல்லையென்று போய்விடாது. இங்கிருந்து ஆயுதம் ஏந்திச் சென்று போராட தயாராகவும் இருப்பார்கள். நான் அதற்கு தலைமை ஏற்றுச் செல்வேன்' என்று பேசினேன்.

அந்த வழக்கில் நீதிமன்றம் விசாரித்தது. இப்படிப் பேசினீர்களா என்றால், ஆமாம் அப்படித்தான் பேசினேன் என்று சொன்னேன். ஈழத் தமிழர் படுகொலைக்கு இந்திய அரசு காரணமென்று பேசினேன். அவர்கள் நாதியற்றுப் போகமாட்டார்கள் என்று பேசினேன்.

இங்குள்ள இளைஞர்களைத் திரட்டிக்கொண்டு போவீர்களா என்று கேட்டபோது, ஆமாம் என்றேன். ஆயுதம் ஏந்திப் போராடச் செல்வீர்களா என்று கேட்டபோது ஆமாம் என்றேன். அந்த வழக்கில் நான் விடுதலை செய்யப்பட்டேன்.

இதற்குப் பிறகு அதே புத்தகத்தை 'குற்றம்சாட்டுகிறேன்' என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்து ராணி சீதை மன்றத்தில், நெடுமாறன் வெளியிட, கவிஞர் இன்குலாப் பெற்றுக்கொண்டார்.

நான் முதல் முறை பேசியதை, பிரதமரிடம் நேரடியாக கொடுத்த கடிதங்கள், மனுக்கள் ஆகியவற்றை இந்தக் கூட்டத்திலும் பேசினேன். இது தொடர்பாக வழக்கு நடைபெற்றது. இப்படிப் பேசினீர்களா என்று கேட்டார்கள். ஆமாம், நான் பேசினேன் என்று பதிலளித்தேன். இந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை சிதைந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் பேசினேன். ஒருமைப்பாடு நீடிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில்தான் இந்தக் குற்றச்சாட்டுகளை வைத்தேன். எதையும் நான் மறுக்கவில்லை. இது ஒன்றும் தேசத் துரோகம் கிடையாது.

ஈழத் தமிழினம் அழிக்கப்பட்டதற்கு, அவர்களுக்காக போராடிய புலிகளைப் பற்றி நாடாளுமன்றத்திலேயே பேசினேன். இதற்காக 19 மாதம் சிறையில் இருந்தேன். நேற்றும் விடுதலைப் புலிகளை ஆதரித்தேன், இன்றும் ஆதரிக்கிறேன், நாளையும் ஆதரிப்பேன். தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசியது குற்றமா என வேலூர் சிறையில் இருந்தபடி ரிட் மனு தாக்கல் செய்தேன். ஆதரித்துப் பேசுவது குற்றமல்ல என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்கள்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு நாள். 'நீங்கள் குற்றவாளி என்று நான் தீர்ப்பளிக்கிறேன்' என நீதிபதி அவர்கள் கூறி, 'தண்டனை குறித்து ஏதும் சொல்ல விரும்புகிறீர்களா?' எனக் கேட்டார். 'தண்டனையை சீக்கிரம் அறிவித்துவிட்டால் நல்லது' என்று சொன்னேன். ஒரு வருட சிறை தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிப்பதாக சொன்னார்.

தீர்ப்பை வாங்கி வாசித்துப் பார்த்தோம். 'Accused sought for leneant punishment' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது குற்றம்சாட்டப்பட்ட நான் குறைந்தபட்ச தண்டனை கொடுக்க வேண்டுமெனக் கேட்டதாக கூறப்பட்டிருந்தது. என் தலையில் இடி விழுந்ததைப் போல இருந்தது. நான் நீதிபதியைப் பார்த்துக் கேட்டேன், 'நான் தண்டனையைக் குறைக்கச் சொல்லி ஒருபோதும் கேட்கவில்லை. அதிகபட்ச தண்டனை எவ்வளவு, ஆயுள் தண்டனையா, கொடுங்கள் ஏற்றுக்கொள்வேன்' என்றேன்.

நான் சொல்லாத வார்த்தையை எழுத வேண்டுமென்றால் நீதிபதியின் உள்ளத்தில் விஷமிருக்கிறது என்று இரண்டு முறை சொன்னேன். அதிகபட்ச தண்டனை கொடுங்கள். ஆயுள் தண்டனையாக ஏற்றுக்கொள்கிறேன்.

தொடர்ந்து விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசிக்கொண்டுதான் இருப்பேன். இளைஞர்களின் உள்ளத்தில் இதை விதைப்பதால் எனக்கு தண்டனை என எழுதியிருக்கிறார்கள். விதைப்பேன். விதைத்துக்கொண்டே இருப்பேன். ஆயுள் தண்டனை என்றாலும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வேன்.

நான் தந்தை பெரியாரின் வழியில் வந்தவன். 1938ல் இதே சென்னையில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்காக நீதிமன்றத்தில் தந்தை பெரியாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அதிகபட்ச தண்டனை எவ்வளவோ அதைக் கொடுங்கள் என்று சொன்னவர், 'மூன்று வருடம், மூன்று வருடம்' என்று சொல்லி சால்வையை தூக்கி தோளில் போட்டபடி சென்றார். நான் அந்த வழியிலே வந்தவன். அன்றைக்குப் பெரியார் சொன்னார்.

இன்றைக்கு நீதிமன்றத்தில் பெரியாரின் பேரன் வைகோ அதே கருத்தை நீதிமன்றத்தில் பதிவுசெய்திருக்கிறேன். நான் செய்தது தேசத்துரோகமல்ல. இது தேசத் துரோகமென்றால் இதை நான் தொடர்ந்து செய்வேன்" என வைகோ பேசினார்.

வேறு கேள்விகளுக்குப் பதிலளிக்க வைகோ மறுத்துவிட்டார்.

https://www.bbc.com/tamil/india-48880296

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
On 7/5/2019 at 7:39 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

வைகோவுக்கு ஓராண்டு சிறை... நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

Vaiko_1200x630xt.jpg

 

மிகவும், கவலையான செய்தி.  இந்த நேரத்தில் அவருக்கு வந்த சோதனையை... இட்டு, கவலை அடைகின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.