Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிகாரப் பகிர்வை வழங்க அர்ப்பணிப்புடன் உள்ளோம் - பிரதமர்

Featured Replies

அதிகாரப் பகிர்வை வழங்க தாமும், தமது கட்சியினரும் அர்ப்பணிப்புடன் உள்ளனர் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அதிகாரப் பகிர்வை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து கலந்துரையாட வேண்டும். குறிப்பாக, சிங்கள, முஸ்லிம் மற்றும் ஏனைய தரப்பினரால் ஏற்றுக்கொள்ளக்கூடியவாறு எவ்வாறு அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது என்பது குறித்து ஆராய வேண்டும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். 

இந்த நிலையில், மாகாண மட்டத்தில் மட்டுமல்லாது, உள்ளுராட்சி மன்றங்கள் ரீதியாக அதிகாரத்தை எவ்வாறு பகிர்ந்தளிப்பது என்பது தொடர்பில் அடுத்த வருடங்களில் கலந்துரையாடி இறுதி செய்ய வேண்டும் என்றும் பிரதமர் கூறியுள்ளார் . 

இதேவேளை, குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், எதிர்காலத்தில் ஒரு சிறந்த தலைவரைத் தெரிவுசெய்யவேண்டுமாயின், சிறுபான்மையின மக்களின் வாக்குகள் பெருமதியானதாக உள்ளமையினால், சரியான முறையில் தீர்மானம் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

http://www.hirunews.lk/tamil/220349/அதிகாரப்-பகிர்வை-வழங்க-அர்ப்பணிப்புடன்-உள்ளோம்-பிரதமர்

   
  • தொடங்கியவர்

‘அதிகாரப் பகிர்வின் மூலமாக 2 வருடத்துக்குள் தீர்வு’

இனப்பிரச்சனைக்கு அதிகாரப் பகிர்வின் மூலமாக 2 வருடத்துக்குள் தீர்வை ஏற்படுத்திக் கொடுப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க இன்று (15) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட போது தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/அதிகாரப்-பகிர்வின்-மூலமாக-2-வருடத்துக்குள்-தீர்வு/71-235357

  • தொடங்கியவர்

அதிகாரப் பகிர்வுக்கான நேரம் நெருங்கி விட்டது - பிரதமர்

அரசயில் தீர்வு தொடர்பில் இரண்டு ஆண்டுகளில் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வர வேண்டும் எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அதிகாரப் பகிர்வுக்காகவே முன்னரும் பாடுபட்டேன். இன்றும் பாடுபட்டு வருகின்றேன் என்றும் கூறினார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட பிரதமர் சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரிக்கு பொது நோக்கு மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார். 

நானும் எமது கட்சியும் அதிகாரப்பகிர்விற்கு திடசங்கட்பம் பூண்டுள்ளோம். சிங்களவர்களும் தமிழர்களும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வை நாங்கள் கண்டறிய வேண்டும். 

நாங்கள் அதிகாரப்பகிர்வு தொடர்பில் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். இது ஒரு சிக்கலான விடயமாகும். 

அத்துடன் அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஒரு நிலைப்பாட்டை எட்டுவதற்கு நேரம் நெருங்கி விட்டது. இதனைத் தொடர்ந்து நாங்கள் அனைவரும் இலங்கையர்கள் என கூறிக் கொள்வதில் பெருமைபடுவோம். 

https://www.virakesari.lk/article/60514

  • கருத்துக்கள உறவுகள்

maxresdefault.jpg

கள உறவுகள் இந்த திரியில் கருத்து எழுதி ஏன் நேரத்தை வீணாக்க வேண்டும் என ஒதுங்கி கொண்டு விட்டினம்.. 👍

  • தொடங்கியவர்
2 hours ago, ampanai said:

அத்துடன் அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஒரு நிலைப்பாட்டை எட்டுவதற்கு நேரம் நெருங்கி விட்டது. இதனைத் தொடர்ந்து நாங்கள் அனைவரும் இலங்கையர்கள் என கூறிக் கொள்வதில் பெருமைபடுவோம். 

தேர்தல் காலம் நெருங்குகின்றது. தமிழர் வாக்குகளை வாங்குவதற்கு வழமையாக வரும் வாய்ப்பேச்சு

 

2 hours ago, ampanai said:

நாங்கள் அதிகாரப்பகிர்வு தொடர்பில் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். இது ஒரு சிக்கலான விடயமாகும். 

இரண்டு ஆண்டுகள் பின்னால் அதை மறந்துவிடுவார்கள். அந்த இரண்டு ஆண்டுக்குள்ளும் தமிழர் தாயகநிலப்பரப்பை மேலும் ஆக்கிரமிக்கும் பணி  நலமே முன்னெடுக்கப்படும். 

 

7 hours ago, ampanai said:

இந்த நிலையில், மாகாண மட்டத்தில் மட்டுமல்லாது, உள்ளுராட்சி மன்றங்கள் ரீதியாக அதிகாரத்தை எவ்வாறு பகிர்ந்தளிப்பது என்பது தொடர்பில் அடுத்த வருடங்களில் கலந்துரையாடி இறுதி செய்ய வேண்டும் என்றும் பிரதமர் கூறியுள்ளார் . 

இதைக்கேட்டு காது செவிடானதுதான் மிச்சம் 😞 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.