Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரபாகரனை அமிர்தலிங்கம் ஊக்கப்படுத்தினார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
July 15, 2019

mavai.jpg?zoom=0.9024999886751175&resize
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் தமிழ் அரசியல் தலைவர் அமிர்தலிங்கமும் சந்தித்துக் கொண்டதாகவும் பிரபாகரனை அமீர் ஊக்கப்படுத்தியதாகவும்   இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

 

அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நிழலைக்கூடக் காணாதவர்களே இப்போது  அவரைப் பற்றி அதிகமாகப் பேசுவதாகவும் தம்மால் புலிகளின் வரலாற்றை எழுத முடியும் என்றும் குறிப்பிட்டார்.

வலி.மேற்குப் பிரதேச சபை மண்டபபத்தில் நேற்று இடம்பெற்ற அமிர்தலிங்கத்தின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்தின் போராட்ட வரலாற்றைக் கூறிய மாவை சேனாதிராஜா, அவருடன் சேர்ந்து இயங்கிய சம்பவங்களையும் பதிவு செய்தார்.

அமிர்தலிங்கம் இந்தியாவில் இருந்தபோது அனுப்பிய கடிதம் ஒன்று தவறாக மொழிபெயர்க்கப்பட்டதால் சிறைசெல்ல நேரிட்டதாகவும் அது தொடர்பில் மயிலிட்டி துறைமுகத்துக்கான நிகழ்வில் கலந்து கொண்ட அரச தலைவரிடமும் தாம் தெரிவித்ததாகவும் நினைவுபடுத்தினார்.

 

அத்துடன் அமீர்தலிங்கம், பிரபாகரனை சந்தித்தார் என்பதும் அவர் எவ்வளவு தூரம் அவர்களை நேசித்தார் என்பதையும், அவர்களை ஊக்கப்படுத்தினார் என்பதையும் தமக்கு நன்கு தெரியும் என்றும் மாவை குறிப்பிட்டார்.

அவர் இந்தியாவில் இருக்கும்போதும் புலிகளை ஊக்கப்படுத்தியதாகவும் ஆனால் காலம் தவறாகக் கையாளப்பட்டிருப்பதாகவும் அவ்வாறு நடக்காத பட்சத்தில், இன்றுவரையும் பிரபாகரன், புலிகள் இயக்கத்தை கொண்டு நடத்தியிருக்ககூடிய சந்தர்ப்பங்கள் இருந்திருக்கும் என்றும் இது பலருக்கு தெரியாதபோதும் தமக்குத் தெரியும் என்றும் மாவை கூறினார்.

அத்துடன் தன்னால் புலிகளின் வராலாற்றை எழுதமுடியும் என்றும் எல்லாவற்றையும் எழுதுவது கடினம் என்றும் தெரிவித்த அவர், புலிகள் இயக்கத்துடன் தாம் எப்படி இயங்கினோம் என்பதை இப்போது சொல்லப்போனால் நாடு தாங்கிக்கொள்ளுமோ தெரியாது என்றும் ஆனாலும் சொல்லித்தான் ஆகவேண்டும் என்றும் அவர் கூறினார்.சென்ற மாதத்திலே பழநெடுமாறனைச் சந்தித்தபோது, அவரும் அந்த விடயங்களை எழுதித்தான் ஆகவேண்டும் என்று வற்புறுத்தியதாகவும் ஆனபடியால் வரலாறுகளைத் திரித்து மறந்து குற்றஞ்சுமத்தி, பிரபாகரனுடைய நிழலைக்கூடத் தரிசிக்காதவர்கள், தெரியாதவர்கள், காணாதவர்கள் எல்லாம் இப்போது அதிகமாகப்பேசுகிறார்கள் என்றும் மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்தார். 
  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் வேறை. தேர்தல் காலங்களில் தான் பிரபாகரன் நினைவுக்கு வருகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா இப்ப என்ன சொல்ல வாறார் ??

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

ஐயா இப்ப என்ன சொல்ல வாறார் ??

சம்பந்தமில்லாமல்... உளறிக்  கொட்டுவதுதான், மாவையின்  தனிச் சிறப்பு. :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.