Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியைத் திணிக்கும் முயற்சி மீண்டும் துவங்கியது

Featured Replies

பால் துறைத் தேர்வில் தமிழைத் தவிர்த்தார்கள்... கொதித்தது தமிழகம். தேர்வை ரத்துசெய்தார்கள். அடுத்தடுத்து தமிழகத்தின் மீது மத்திய அரசு கற்களை வீசிக் கொண்டிருப்பதைப் பார்த்து பலரும் கலங்கி நிற்கும் நிலையில், தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) சட்டத்திருத்தம் என்கிற பெயரில் அடுத்த அஸ்திரத்தைப் பாய்ச்சியிருக்கிறது பி.ஜே.பி அரசு.

‘‘மேலோட்டமாகப் பார்த்தால் இந்தச் சட்டம் பயங்கரவாதிகளுக்கு எதிரானதாகத் தோன்றும். அத்தோடு நின்றுவிட்டால் பராவாயில்லை. ஆனால், பொடா, தடா சட்டங்கள் போல இதையும் அப்பாவிகள் மீதும் பாய்ச்சுவார்கள். குறிப்பாக, தமிழகத்தில் தொடர்ந்து எழுந்துகொண்டிருக்கும் போர்க்குரலை ஒடுக்கும் வகையில், இந்த என்.ஐ.ஏ களத்தில் இறக்கிவிடப்படும் ஆபத்து காத்திருக்கிறது’’ என்கிற கலவரமான பேச்சுகள் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளன.

தேசியப் புலனாய்வு முகமை தொடர்பான சட்டத்தைத் திருத்தம் செய்து, புதிய சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி யிருக்கிறது மத்திய அரசு. கடந்த பத்தாண்டுகளில் அந்த அமைப்பின்மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இந்தச் சட்டத்திருத்தம் பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளது. நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டத்திருத்தத்தை தாக்கல் செய்தபோதே காரசார விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘‘என்.ஐ.ஏ சட்டத்திருத்தத்தைக் கண்டு யாரும் அச்சப்பட வேண்டியதில்லை. இதுவரை இந்த அமைப்பு தனிப்பட்ட முறையில் யாருக்கு எதிராகவும் செயல்பட்டதில்லை. இதுவரை 272 வழக்குகளை விசாரித்து அதில் 199 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. புதிய சட்டத்திருத்தத்தின் அடிப்படையில், ஆள் கடத்தல், கள்ள நோட்டு, ஆயுதத் தயாரிப்பு மற்றும் விற்பனை ஆகியவற்றுடன், பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் இணையக் குற்றங்களையும் இந்த அமைப்பு விசாரிக்கும்’’ என்று அறிவித்தார்.

அமித் ஷா தந்துள்ள இந்த விளக்கம்தான் அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது. ‘‘இந்தச் சட்டத்திருத்தம் கருத்துச் சுதந்திரத்துக்குக் கல்லறை கட்டும் முயற்சி. இனி என்.ஐ.ஏ நினைத்தால் யாருடைய சமூக வலைத்தளத்திலும் நுழைந்து ஆராய முடியும். மத்திய அரசுக்கு எதிராகத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் கருத்துகளை அடியோடு ஒழிப்பதற்கே, இணையதளக் குற்றங்கள் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருக்கின்றனர். இந்த நாட்டின் அதிகாரமிக்க அமைப்பாக இனி என்.ஐ.ஏ மாறும். இந்த அமைப்புக்கு என்று தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும் சொல்கிறது சட்டத் திருத்தம். வெளிநாடுகளில் இந்தியாவுக்கு எதிரான குற்றச்செயல்களை மேற்கொள்வோரைக் கைது செய்யும் அதிகாரத்தையும் என்.ஐ.ஏ அமைப்புக்குத் தருகிறது இந்தச் சட்டத்திருத்தம். ‘இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும்’ என்று மத்திய அரசு தரப்பில் விளக்கம் சொன்னாலும், ஓர் அமைப்புக்கு இத்தனை அதிகாரம் ஆபத்தை ஏற்படுத்திவிடாதா என்கிற கேள்வியும் எழுகிறது’’ என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

சிவா, சுப.உதயகுமார், வானதி சீனிவாசன்
 
சிவா, சுப.உதயகுமார், வானதி சீனிவாசன்

இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, ‘‘என்.ஐ.ஏ சட்டம் குறித்தே வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அதற்குள் இந்த மசோதாவை மத்திய அரசு ஏன் கொண்டுவருகிறது?’’ என்று காங்கிரஸ் தலைவர் மனீஷ் திவாரி கேள்வி எழுப்பினார். அதேபோல இந்தச் சட்டம் குறிப்பிட்ட ஒரு சமூகத்துக்கு எதிராக மட்டுமே பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்று பலரும் சுட்டிக்காட்டிப் பேசினார்கள். குறிப்பாக ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி, ‘‘இஸ்லாமியர்களை அச்சுறுத்தவே இந்தச் சட்டம் கொண்டு வரப்படுகிறது. இந்துத்துவத் தீவிரவாதிகள் இந்த அமைப்பால் கைது செய்யப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டபோது, அவர்களின் விடுதலையை எதிர்த்து என்.ஐ.ஏ ஏன் மேல்முறையீடு செய்யவில்லை?’’ என்று கேள்வி எழுப்பினார்.

ஒவைசியின் கேள்விக்குப் பதில் அளித்த அமித் ஷா, ‘‘பயங்கரவாதச் செயல்களைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் மதம், இனம் பாகுபாடு பார்க்காமல் உறுதியான நடவடிக்கை எடுப்போம். இது இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டம் என்று சொல்லவேண்டாம்’’ என்றார். “மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் அரசு வக்கீலாக ஆஜராகியிருந்த ரோகிணி சலியன், ‘இந்த வழக்கில் அமைதியாகப்போகும்படி என்னை என்.ஐ.ஏ அதிகாரிகள் வற்புறுத்தினர்’ என்று சொல்லிவிட்டு வெளியேறியிருக்கிறாரே?’’ என்று அமித் ஷாவிடம் சில உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘‘இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், கருத்துக் கூற முடியாது’’ என்று பின்வாங்கினார் அமித் ஷா.

அமித் ஷாவின் பதிலில் தமிழகத்தைச் சேர்ந்த சமூகப்போராளிகளுக்கு மறைமுக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் பலரும் சந்தேகிக் கின்றனர். ‘‘தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களுக்கு எதிராகப் போராடுவோரும்,

பி.ஜே.பி-யின் சித்தாந்த அணுகுமுறைகளைக் கடுமையாக எதிர்க்கும் பலரும் ‘அர்பன் நக்சல்’ என்று வர்ணிக்கப்படுகின்றனர். தமிழ்த்தேசியம் பேசுவோர் தீவிரமாகக் கண்காணிக்கப் படுகின்றனர். இந்த நிலையில் என்.ஐ.ஏ சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டிருப்பது மேலும் அச்சமூட்டுகிறது’’ என்கின்றனர், தமிழகத்தைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர்கள்.

நம்மிடம் பேசிய தமிழ் உணர்வாளர்கள் சிலர், ‘‘மாநில காவல்துறையின் அனுமதி இல்லாமலே ஒருவரை என்.ஐ.ஏ கைதுசெய்து விசாரிப்பதற்கு இந்தச் சட்டத்திருத்தம் அனுமதிக்கிறது. அதேபோல், சமூக ஊடகங்களில் பதிவிடும் கருத்துகளை வைத்து ஒருவரை விசாரணைக்கு உட்படுத்தவும் முடியும். நாட்டிலேயே சமூக ஊடகங்களில் பி.ஜே.பி-யையும் மத்திய அரசையும் கடுமையாக விமர்சிக்கும் மாநிலங்களில் தமிழகமே முன்னிலையில் இருக்கிறது. அந்த வகையில் அதை முடக்கும் பொருட்டு தமிழகத்துக்காகவே இந்தச் சட்டத்திருத்தம் வந்துள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது. குறிப்பாக, தமிழ்த் தேசியவாதிகளுக்கு எதிராக இந்தச் சட்டம் பாய வாய்ப்புள்ளது. அமித் ஷா ஏற்பாட்டில் நடக்கும் ‘ஆபரேஷன் தமிழ்’ ஆகத்தான் இதைப் பார்க்கிறோம்’’ என்றனர்.

இந்தச் சட்டத்திருத்தம் குறித்து மாநிலங்களவை தி.மு.க தலைவரான திருச்சி சிவாவிடம் கேட்டோம். ‘‘கள்ளநோட்டு அச்சடிப்பு, சைபர் க்ரைம், ஆயுதக்கடத்தல், வெடிமருந்து தயாரிப்பு போன்ற சில குற்றங்களையும் என்.ஐ.ஏ அதிகாரிகள் கூடுதலாக விசாரிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவந்திருக்கிறார்கள். இதன் மூலமாக மாநில அரசின் அனுமதியின்றி மத்திய அரசின் அதிகாரிகள் தன்னிச்சையாக யாரை வேண்டுமானாலும் விசாரிக்கலாம். இது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. இதற்கு முன்பு என்.ஐ.ஏ வழக்குகளை விசாரிப்பதற்குத் தனி நீதிமன்றம் இருந்தது. இப்போது அதிலும் மாற்றம் செய்திருக்கிறார்கள். ஏற்கெனவே செயல்பட்டுவரும் செஷன்ஸ் கோர்ட்டுகளை இனி என்.ஐ.ஏ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களாக மாற்றப்போகிறார்கள்.

நாட்டின் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கிற அளவுக்கோ, சி.பி.ஐ போன்ற விசாரணை அமைப்புகளால் விசாரிக்க முடியாத வழக்குகளையோ, இந்திய நாட்டின் எல்லையோரத்தில் நாடு கடந்து நடக்கக்கூடிய பயங்கரவாதத்தையோ, என்.ஐ.ஏ விசாரிப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், அரசியல் ஆதாயங்களுக்காகப் பழிவாங்கும் விதமாக இந்தப் புதிய சட்டத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும். கடந்த காலத்தில் தடா, பொடா சட்டங்கள் தோல்வியைச் சந்தித்தன. இப்போது மீண்டும் என்.ஐ.ஏ-க்கான புதிய சட்டத்தை அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள். எக்காரணம் கொண்டும் இந்தச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்று மாநிலங்களவையில் நான் பேசினேன். ஆளும் பி.ஜே.பி அரசு நிச்சயமாக இதைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என்று நம்புகிறேன்’’ என்றார்.

பச்சைத் தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் நம்மிடம், ‘‘நீதிமன்ற நடவடிக்கைகள் ஏதுமில்லாமல், எவ்வளவு காலம் வேண்டும் என்றாலும் சிறையில் வைத்திருக்க முடியும் என்கிற அதிகாரத்தை என்.ஐ.ஏ-வுக்கு இந்தச் சட்டத்திருத்தம் வழங்கியுள்ளது. மீத்தேன், கூடங்குளம் அணு உலை, நியூட்ரினோ போன்ற பல்வேறு அழிவுத் திட்டங்களுக்கு எதிராகப் போராடி வருகிறோம். வருங்காலங்களில் இந்தப் போராட்டங்களை ஒடுக்குவதற்கு என்.ஐ.ஏ-வின் இந்தச் சட்டத்திருத்தம் பயன்படுத்தப்படலாம். இது ஜனநாயகத்தையே கேள்விக்குறி ஆக்கியிருக்கிறது. மக்களுக்கும் இயற்கைக்கும் எதிரான திட்டங்களை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு நெருக்கடியை உருவாக்கும் சதித்திட்டம்தான் இது’’ என்றார்.

மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயனிடம் பேசினோம். ‘‘இந்தச் சட்டத்திருத்தத்தை முழுமையாக நான் இன்னும் படிக்கவில்லை. பொதுவாக, நாட்டின் எல்லைகள் வெறும் கோடுகள்தான். வாழ்வாதாரத் துக்காக பங்களாதேசத்திலிருந்து புலம்பெயர்ந்து மேற்கு வங்கத்துக்கும் அசாமுக்கும் நிறைய பேர் வந்துள்ளனர். இவர்களை எல்லாம் எல்லையைக் காரணம் காட்டித் திருப்பி அனுப்புவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. வாழ்வாதாரத்துக்காக உலகம் முழுவதும் இந்தியர்களும் சீனர்களும்தான் அதிகமாகப் பரவியிருக்கின்றனர். மற்ற நாடுகளில் உள்ள இந்தியர்களை இதுபோல திருப்பி அனுப்பினால் என்னாகும்? ‘எல்லோருக்கும் ஒரு தேச உரிமை உண்டு’ என்று ஐ.நா. கூறியிருக்கிறது. தேசிய புலனாய்வு முகமையின் சட்டம் அதையெல்லாம் கேள்விக்குறியாக்குகிறது. இவ்விவகாரத்தைத் தீர்க்க விசாலமான பார்வை தேவை’’ என்றார்.

தமிழக பி.ஜே.பி பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனிடம் இதுகுறித்து கேட்டபோது, ‘‘தொழில்நுட்ப வசதிகளாலும் நவீன ஆயுதங்களாலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது பயங்கரவாதம். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இப்போதிருக்கும் சட்டங்களின் மூலம் முற்றிலுமாக பயங்கர வாதத்தை ஒழித்துவிட முடியாது. எனவே, என்.ஐ.ஏ-வில் புதியச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. சமூக வலைத்தளங்களின் வாயிலாகவே இன்று சமூகத்தின் அமைதியைக் குலைத்துவிட முடியும் என்பதற்கு, சமீபத்திய சில வழக்குகளே உதாரணமாக இருக்கின்றன. எந்தவொரு சட்டத்திருத்தமும் செய்யப் படும்போது, ‘இது அரசியல் எதிரிகளைப் பழிவாங்கப் பயன்படுத்தப் படும்’ என்று எதிர்க்கட்சியினர் கூறுவது வாடிக்கைதான். இதற்கான பதில்களை சட்டத்திருத்த விவாதத்தின்போதே அமித் ஷா மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். எனவே, பொதுமக்கள் இதுகுறித்து எந்தவித அச்சமும் அடையத் தேவையில்லை!’’ என்றார்.

தீவிரவாதிகளை ஒடுக்கக் கடுமையான சட்டங்கள் தேவைதான். ஆனால், அரசாங்கத்துக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களையெல்லாம் ஒடுக்குவதற்கான கறுப்புச் சட்டமாக அதைப் பயன்படுத்தாமலிருக்க வேண்டும். கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில்கூட இப்படி கறுப்புச் சட்டங்களைக் கொண்டு வந்து எதிர்க்கருத்து சொல்பவர்களை முடக்கினார்கள். ஒருகட்டத்தில் அவர்களே அத்தகைய சட்டத்தைத் திரும்பப் பெற்ற வரலாறு இங்கே உண்டு என்பதை மறந்துவிடக் கூடாது.

பி.ஜே.பியை எதிர்ப்போர் யார்?

பத்திரிகையாளர்கள் பட்டியல் தயார்!

பி.ஜே.பி-க்கு எதிராக எந்தெந்த ஊடகங்கள் செயல்படுகின்றன, எந்தெந்தப் பத்திரிகையாளர்கள் இதில் முன்னணியில் உள்ளனர் என்று பட்டியல் தயாரிக்குமாறு பி.ஜே.பி தலைமை, தமிழகத்திலுள்ள ஒரு பத்திரிகையாளரிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறது. சாணக்கியத்தனம் நிறைந்த அந்தப் பத்திரிகையாளர் நீளமான ஒரு பட்டியலைத் தயாரித்து டெல்லியில் ஒப்படைத்துவிட்டு, தமிழக ஊடகங்களை முடக்க சில ஆலோசனைகளையும் வழங்கியிருப்பதாக ஊடக வட்டாரத்தில் ஒரு தகவல் பரவிக்கொண்டிருக்கிறது.

https://www.vikatan.com/government-and-politics/politics/nia-amendment-bill-amit-shah-attack

  • கருத்துக்கள உறவுகள்

நாஜிக்களிடம் பாடம் படித்தவர்கள், அவர்களின் அழிவிலிருந்து பாடம் படிக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 7/20/2019 at 8:51 AM, ampanai said:

சாணக்கியத்தனம் நிறைந்த அந்தப் பத்திரிகையாளர் 

யாரது ..? நெறியாளராக .. ஒன்டுக்கும் உதவாத விவாத நிகழ்ச்சிகளில் பாண்டியா போல சிக்ஸ் அடித்து ஆடுவாரே அவரா..? 😄

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.