Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் - முஸ்லிம் உறவின் அவசியத்தை ஏப்ரல் 21 தாக்குதல் உணர்த்தியுள்ளது - விக்கி

Featured Replies

தமிழ் முஸ்லிம் உறவின் அவசியத்தை ஏப்ரல்-21 தாக்குதல் உணர்த்தியுள்ளது  என  மண்முனை பிரதேச மக்கள் சந்திப்பில் தமிழ் மக்கள் கூட்டணியின்செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முஸ்லிம்மக்களின் தன்னிலையை அவர்களுக்கு உணர்த்தியுள்ளதுடன் தமிழ்-முஸ்லிம்மக்களது உறவின் அவசியத்தையும் உணர்த்தியுள்ளதாக மண்முனைபிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில்  தெரிவித்துள்ளார். 

 

unnamed__3_.jpg

 

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்புதொகுதி மண்முனை பிரதேசசெயலகத்திற்குட்பட மகிழூர் கண்ணகிபுரம் கிராமத்தில் இன்று சனிக்கிழமைகாலை 10.30 மணிக்கு நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்று ஆற்றிய உரையிலையே சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

கிழக்கு மாகணம் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் பிட்டும் தேங்காய்பூவுமாக இரண்டறக் கலந்து வாழ்ந்துவந்தமை கடந்த கால வரலாறாகும். இலங்கை அரசாங்கத்தின் திட்டமிட்ட நடவடிக்கைகள் காரணமாக இந்த உறவுநிலையில் விரிசல் ஏற்படுத்தப்பட்டது.

இதன் பின்னணியில் தமிழர்களை சந்தேக கண்ணோட்டத்தில் அணுகிய முஸ்லிம் மக்களும் தலைவர்களும் சிங்களத் தரப்புடன் நெருக்கமான உறவினை பேணத்தலைப்பட்டார்கள். அந்த வரலாற்றுத்தவறின் விளைவை ஏப்ரல்-21 தாக்குதலின் பின்னர் முஸ்லிம்மக்கள் உணர்ந்துள்ளார்கள்.

 

unnamed__1_.jpg

 

இதன்பின்னர் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. தமிழ் மக்களை பெருமளவில் இனப்படுகொலை செய்துபோர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டபோது யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின்பல்வேறு இடங்களில் இருந்த முஸ்லிம்கள் வெடி வெடித்துக்கொண்டாடி பால் சோறு உண்டார்கள்.

 

ஆனால் ஏப்ரல்-21 தாக்குதலின் பின்னர்முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட போதுதமிழர்கள் யாரும் அவ்வாறு கொண்டாடிமகிழவில்லை. தமிழ் மக்களும் முஸ்லீம்மக்களும் ஒற்றுமையாகவாழவேண்டியதன் அவசியத்தைஇனியாவது முஸ்லீம் மக்களும்தலைவர்களும் உணர்ந்து கொள்ளவேண்டும் என மேலும்தெரிவித்திருந்தார்.

 

unnamed__3_.jpg

 

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள்கூட்டணியின் அரசியல்செயற்பாடுகளை வலுப்படுத்தும்நோக்கில் மேற்கொண்டிருக்கும் இரண்டாம் கட்ட கிழக்கு பயணத்தின் முதலாவது நிகழ்வாக மகிழூர் கண்ணகிபுரம் பகுதியில் அமைந்துள்ள முன்பள்ளிகட்டடத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது.

 

unnamed__2_.jpg

 

இந்நிகழ்வில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சோமசுந்தரம், நிர்வாக உப செயலாளரும் கிளிநொச்சி மாவட்ட குழு உறுப்பினருமான ஆலாலசுந்தரம், கிளிநொச்சி மாவட்டஅமைப்பாளர் அன்ரனி கெப்ரியல், ஊடகம் மற்றும் செயற்திட்ட ஆக்கத்திற்கான உப செயலாளர் த.சிற்பரன், இளைஞர் அணி இணைப்பாளர் கிருஸ்ணமீனன், மத்தியகுழு உறுப்பினர் இரா.மயூதரன், கணக்காளர் ராஜாதுரைசிங்கம் மற்றும் ஊடக உதவியாளர் சதீஸ் ஆகியோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/60841

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.