Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் தலையில் நாங்களே மண்ணைக் கொட்டினோம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலை கன்னியாவில் தென்கயிலை ஆதீன குரு முதல்வர் மீது சுடுநீர் ஊற்றிய சம்பவத்தால் இந்து மக்கள் கடும் வேதனை கொண்டுள்ளனர்.

எனினும் இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை கண்டனமோ கருத்தோ வெளியிடாமல் இருக்கிறது.

இந்த நிலைமையைப் பார்க்கும்போது, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் தன்னிலை இழந்து விட்டாரா என்று சந்தேகிக்கின்ற அளவில் நிலைமை உள்ளது.

என்ன செய்வது, நம்பி வாக்களித்து தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிக் கொட்டியதாக தமிழ் மக்களின் கதை ஆகிவிட்டது.

சரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தான் பட்ட கடனுக்கு நன்றி செலுத்துகிறது என்றால்,

இந்த நாட்டில் இருக்கக்கூடிய ஏனைய மதத் தலைவர்கள் கூட தங்கள் கண்டனத்தை கருத்தைத் தெரிவிக்காமல் இருக்கின்றனர் என்பதுதான் வேதனைக்குரியது.

ஆதீன குரு மீது சுடுநீர் ஊற்றுகின்ற அநாகரிகம் நடப்பதைக் கண்டும் காணாமல் இருப் பது போல ஏனைய மதத் தலைவர்கள் பேசாமலிருக்கின்றனர்.

பரவாயில்லை சைவ சமயத்துறவி ஒரு வருக்கு நடந்த அக்கிரமம் கண்டு இப்போது நீங்கள் பேசாமல் இருந்து சிங்களப் பேரின வாதத்துக்கு வால் பிடிக்கலாம்.

அல்லது பெளத்த பிக்குகளின் தலை தடவி வாழலாம்.

ஆனால் என்றோ ஒருநாள் உங்களுக்கும் பெளத்த சிங்களப் பேரினவாதம் சுடுநீர் வீசும். அப்போது அது சுடுநீரோ அல்லது கொதிக்க வைத்த மனிதக் கழிவு நீரோ என்ற கேள்வி எழும்.

இது நிச்சயம் நடக்கும். இதுவே இயற்கையின் நியதி.

மதகுரு என்ற மரியாதைக்குரிய பதவியில் இருக்கின்றவர்கள் ஒருபோதும் இரட்டை வேடம் போடலாகாது.

இறைவன் என்றொருவன் இருப்பது உண்மையானால், இந்த இரட்டை வேடம் தண்டனைக்குரியவையாக மாறும் என்பதுதான் உண்மை.

எனவே ஒரு இனம் பாதிக்கப்படும்போது, ஒரு சமயத்தின் மதகுருவை இழிவுபடுத்தும்போது நமக்கென்ன என்று யாரும் இருந்துவிடாதீர்கள்.

பாதிக்கப்பட்ட மதகுருவுக்காகக் குரல் கொடுங்கள். இந்து, பெளத்தம், கத்தோலிக்கம், இஸ்லாம் என்று மதபேதமை பாராதீர்கள் என்பது நம் தயவான கோரிக்கை.

இவை ஒருபுறமிருக்க, திருகோணமலை கன்னியா விவகாரத்தில் அமைச்சர் மனோ கணேசன் உடனடியாக ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவைச் சந்தித்து நிலைமையை எடுத்துக்கூறி தற்காலிகத் தீர்வைப் பெற்றுக் கொண்டதன்மூலம் அவர் ஒரு சிறந்த மக்கள் பிரதிநிதி என்பதை நிரூபித்துள்ளார்.

எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒதுங்கி நிற்க, மனோ கணேசன் துணிந்து நின்று செயலாற்றியமை பாராட்டுக்குரியது.

- Valampuri

https://www.tamilwin.com/articles/01/221039?ref=rightsidebar-article

"ஆனால் என்றோ ஒருநாள் உங்களுக்கும் பெளத்த சிங்களப் பேரினவாதம் சுடுநீர் வீசும். அப்போது அது சுடுநீரோ அல்லது கொதிக்க வைத்த மனிதக் கழிவு நீரோ என்ற கேள்வி எழும்.

இது நிச்சயம் நடக்கும். இதுவே இயற்கையின் நியதி."

 ஒருவேளை சூடு சுரணை இல்லாததரவர்களுக்கு  இப்படி நடந்தாலும் உணரும் சக்தி இருக்காதோ ?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

எனவே ஒரு இனம் பாதிக்கப்படும்போது, ஒரு சமயத்தின் மதகுருவை இழிவுபடுத்தும்போது நமக்கென்ன என்று யாரும் இருந்துவிடாதீர்கள்.

பாதிக்கப்பட்ட மதகுருவுக்காகக் குரல் கொடுங்கள். இந்து, பெளத்தம், கத்தோலிக்கம், இஸ்லாம் என்று மதபேதமை பாராதீர்கள் என்பது நம் தயவான கோரிக்கை.

கன்னியாவில் இந்துமதகுருவுக்கு ஏற்பட்ட அவமானத்தைக் கண்டும் ஏன் தமிழர்களே அமைதியாக உள்ளனர்.? இந்நிலையில் வேற்று இனமக்கள் எப்படிக் குரல் கொடுப்பார்கள்.??

ஒரு தத்தைக் கடைப்பிடிக்கும் அந்த மக்கள் இனத்திலிருந்தே மதகுருமார்கள் தோன்றுகின்றனர். ஆனால் இந்து தத்தைக் கடைப்பிடிக்கும் தமிழ் இனத்திலிருந்து இந்து மதகுரு தோன்றுவதில்லை. பிராமணர் என்ற வேறொரு இனத்திலிருந்து வந்தவர்களே மதகுருக்களாகத் தோன்றுகின்றனர்.. ஒன்றில் பிராமணர் என்ற வழக்கொழிந்து அனைவரும் தமிழர்கள் ஆகவேண்டும் அன்றில் தமிழர்கள் என்ற வழக்கொழிந்து அனைவரும் பிராமணர்கள் ஆகவேண்டும். அப்போதுதான் தங்களுடைய இனமென்றும், தங்கள் மதகுருவுக்கு மரியாதை கொடுக்கவேண்டும் என்ற உணர்வும் அந்த மக்களுக்கு ஏற்படும்.

வேற்றுமத இனமக்கள், தங்கள் மதகுருவோடு பழகும் குடும்ப, இன ஒற்றுமை, இன்று இந்துமதத்தைத் தழுவியிருக்கும் தமிழர்கள், மற்றும் இந்துமத குருக்கள் இடையிலும் இல்லை என்பதே உண்மை. அதனாலேயே இந்த இடர்ப்பாடு என்று கொள்ளலாம். எது எப்படியாயினும் மதகுரு என்ற நிலையில் ஒருவரை அவமானப்படுத்துவது மாபெரும் குற்றம். அது தண்டிக்கப்படவேண்டியதே.    

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.