Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் தாக்குதல் நடத்தப்பட்ட செபஸ்டியன் தேவாலயம் மீண்டும் திறப்பு

Featured Replies

தà¯à®µà®¾à®²à®¯à®®à¯

இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் சேதமடைந்த நீர்கொழும்பு - கட்டுவாபிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயம் மூன்று மாதங்களுக்கு பின்னர் இன்று திறந்து வைக்கப்பட்டது.

தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் மூன்று மாதங்கள் ஆகின்ற நிலையிலேயே இந்த தேவாலயம் புனரமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது.

கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இன்று இடம்பெற்ற விசேட ஆராதனைகள் நடத்தப்பட்டு தேவாலயம் மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.

ஏப்ரல் 21ஆம் தேதி தாக்குதல் சம்பவத்தில் நீர்கொழும்பு - கட்டுவாபிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டிருந்தது.

முப்படையினரின் முழுமையான ஒத்துழைப்புடன் இந்த தேவாலயம் புனரமைக்கப்பட்டது.

தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்தியை வேண்டி இன்று விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

இன்றைய விசேட திருப்பலி ஆராதனைகளுக்காக பெருந்திரளான பக்தர்கள் வருகைத் தந்திருந்ததுடன், பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டிருந்தன.

இலங்கையில் ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர விடுதிகளை இலக்கு வைத்து பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.

கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு - கட்டுவாபிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம் மற்றும் கொழும்பிலுள்ள மூன்று நட்சத்திர விடுதிகளை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் 260க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 500க்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

à®à®²à®à¯à®à¯ : பயà®à¯à®à®°à®µà®¾à®¤à®¤à¯ தாà®à¯à®à¯à®¤à®²à¯à®à¯à®à¯ à®®à¯à®©à¯à®±à¯ மாதà®à¯à®à®³à¯ - à®à¯à®ªà®¸à¯à®à®¿à®¯à®©à¯ தà¯à®µà®¾à®²à®¯à®®à¯ திறநà¯à®¤à¯ வà¯à®ªà¯à®ªà¯

https://www.bbc.com/tamil/sri-lanka-49063608

 

 

Edited by ampanai

  • தொடங்கியவர்

 

‘ஐ.எஸ் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளது’

வெவ்வேறு வழிமுறைகளை ஏற்படுத்தி, ஐ.எஸ்.பயங்கரவாதம் மீண்டும் நாட்டில் தலைத்தூக்கா வகையில் ஒழிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இன்று (21) மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலற்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தப் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 3 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மீண்டும் இவ்வாறானதொரு அச்சம் ஏற்படாமலிருப்பதற்கான சரியான வழிமுறை உள்ளதா என்பதை உறுதிப்படுத்துவது அனைவரின் பிரார்த்தனை என்றும் இதற்காக வெவ்வேறு முறைகள் அவசியம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/ஐ-எஸ்-பயங்கரவாதம்-ஒழிக்கப்பட்டுள்ளது/175-235674

" இஸ்லாமிய அடிப்படைவாதிகளை முஸ்லிம்கள் முற்றாக  ஓரங்கட்ட வேண்டும் "

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு சுயாதீனமான உறுப்பினர்களைக் கொண்ட ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும். ஏனெனில் இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் மீதோ அவற்றினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் மீதோ எவ்வித நம்பிக்கையும் எமக்கு இல்லை என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

melcom.jpg

அத்துடன் இஸ்லாத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை திரிவுபடுத்தி அடிப்படைவாதத்தில் ஈடுப்படுபவர்களை முஸ்லிம்கள் அவர்களது சமூகத்திலிருந்து முற்றாக ஒதுக்கி விடுங்கள் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் மூன்று மாத பூர்த்தியடைந்துள்ளதை முன்னிட்டு கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில் இடம்பெற்ற விஷேட ஆராதனையில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

https://www.virakesari.lk/article/60893

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.