Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியலில் இருந்து விலகுவதாக.... தீபா அறிவிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வà¯à®¤à®©à¯

அரசியல் எனக்கு பிடிக்கவில்லை.. வேதனைதான் மிச்சம்.. விலகுகிறேன்.. தீபா அறிவிப்பு

அரசியலில் இருந்தே முழுசா விலகுவதாக ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா அறிவித்து உள்ளதுடன், அரசியல் எனக்கு பிடிக்கவில்லை, வேதனைதான் மிஞ்சியது என்றும் வருத்தப்பட்டு கூறியுள்ளார்.

தீபாவின் முடிவை தற்போது அவரது எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையினர் கொண்டாடிக் கொண்டுள்ளனர். ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா பற்றி, ஜெயலலிதா இறந்தபிறகுதான் நிறைய விஷயங்கள் வேகவேகமாக வெளியே வந்தன.

ஆனாலும் சர்ச்சைகளாலேயே ஃபேமஸ் ஆனவர்தான் தீபா. ஒரு கட்சியை ஆரம்பித்த உடனேயே அலப்பறை என்றால் அது தீபாவின் 'எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை' என்ற அமைப்புதான்.

கட்சி ஆரம்பித்து 2 வருஷம் ஆக போகிறது.. ஆனால் கட்சியின் செயல்பாடுகள் என்ன, கொள்கைகள் என்ன என்று இதுவரை மக்களுக்கு தெளிவாகவே தெரியவில்லை. இந்த நிலையில் அரசியலில் இருந்து விலகுவதாக இன்று காலை ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு போட்டிருந்தார். மேலும் தனது பேரவையை அதிமுகவுடன் இணைத்து விட்டதாகவும், அரசியலை விட்டு விலகுவதாகவும், தன்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் அந்த பதிவில் தெரிவித்து இருந்தார்.

அடிக்கடி தீபா என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றே நமக்கு தெரியாமலும் போனது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் எல்லாம் வருவார், ஏதாவது பேட்டி, அறிக்கை தருவார்.. பிறகு காணாமல் போய்விடுவார். இதைவிட, எல்லா தொகுதிகளிலும் தனித்து போட்டி என்றுகூட அறிவித்து இருந்தார். ஆனால் அந்த அறிவிப்புக்கு பிறகு தேர்தலை சந்தித்தாரா, நிலைப்பாடு என்ன என்பது வெளி உலகுக்கு தெரியவில்லை.

கட்சி ஆரம்பித்து 2 வருஷம் ஆக போகிறது.. ஆனால் கட்சியின் செயல்பாடுகள் என்ன, கொள்கைகள் என்ன என்று இதுவரை மக்களுக்கு தெளிவாகவே தெரியவில்லை. இந்த நிலையில் அரசியல் இருந்து விலகுவதாக இன்று காலை ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு போட்டிருந்தார். மேலும் தனது பேரவையை அதிமுகவுடன் இணைத்து விட்டதாகவும், அரசியலை விட்டு விலகுவதாகவும், தன்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் அந்த பதிவில் தெரிவித்து இருந்தார்.

ஆனால் என்ன ஆனதோ தெரியவில்லை, அவரிடம் நீங்க போகக் கூடாது என்று அவர்கள் வேண்டி விரும்பி வலியுறுத்திக் கேட்டுக் கொண்டனர். இதைப் பார்த்து நெகிழ்ந்து போன தீபா தனது முடிவை கைவிட்டார். முகநூல் பக்கத்திலிருந்தும் தனது பதிவை நீக்கி விட்டார். இதன் மூலம் அவர் தொடர்ந்து அரசியலில் தொடருகிறார் என்றே கருதப்பட்டது.

இந்நிலையில், திரும்பவும் அரசியலில் இருந்து விலக போவதாக செய்தியாளர்களிடமே பகிரங்கமாக அறிவித்து விட்டார். அப்போது அவர் பேசும்போது, தனிப்பட்ட, மற்றும் சூழல் காரணங்களுக்காக அரசியலில் இருந்து விலகுவதாக கூறினார்.

"அரசியல் எனக்கு பிடிக்கவில்லை, வேதனைதான் மிஞ்சியது. அரசியலில் எனக்கு வழி காட்ட சரியான நபர்கள் யாரும் இல்லை. தனிப்பட்ட வாழ்க்கையையும் நான் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன், அதனால் அரசியலில் இருந்து விலகுகிறேன், யாரும் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம். பெண்கள் அரசியலில் நீடிக்க வேண்டும் என்றால், தரம் தாழ்ந்த விமர்சனங்களை சந்திக்க வேண்டி உள்ளது.

ஜெயலலிதா சொத்துக்காக நான் அலையவில்லை. அதில் எனக்கு உரிமை உள்ளது. அவர் எனது அத்தை. என் அப்பாவின் சொந்த சகோதரி. அப்படி இருக்கும்போது சொத்துக்காக நாங்கள் அலைவது போல சொல்லாதீர்கள். அதில் எங்களுக்கு உரிமை உள்ளது. கேட்டே பெற முடியும். அப்படி இருக்கும்போது நாங்கள் ஏன் அலைய வேண்டும்.

அதிமுகவுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத 2 பேர் வழக்கு தொடர்ந்துள்ளனர். பல்வேறு சூழ்நிலை காரணமாக பேரவையை கலைக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. ஜெயலலிதாவின் நினைவுகளை பாதுகாக்கும் வகையிலேயே வீட்டை பராமரிக்க வேண்டும்" என்றார் ஜெ.தீபா

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/j-deepas-new-announcement-about-her-politics-358595.html

வந்தார்… வென்றார்… சென்றார்… - போய்வாருங்கள் தீபாம்மா!

கடந்த 6 மாதங்களாவது தீபா, அரசியல் களத்தில் எந்தவித செயல்பாடும் இல்லாமல் இருக்கிறார். அதற்கு முன்னர், தானாக முன் வந்து பல விஷயங்கள் குறித்து ‘அதிரடி' கருத்துகளை உதிர்த்து பிரேக்கிங் செய்தி போட வைப்பார். ஆனால், எதாவது கேட்க வேண்டும் எனத் தொடர்பு கொண்டால், ‘எனக்கு பேச விருப்பமில்லை' என்பதை மட்டுமே பதிலாக சொல்வார். இப்படிப்பட்ட சூழலில்தான், “பேரவை என்ற ஒன்று இனி செயல்படாது. அதிமுக-வுடன் அதை எப்போதோ இணைத்துவிட்டேன். அரசியலில் இனி நான் செயல்படமாட்டேன. அதையும் மீறி யாராவது என்னை தொடர்பு கொண்டு துன்புறுத்தினால் என் வாழ்க்கையை முடித்துக் கொள்வேன்” என்று முகநூலில் பதிவிட்டு, சிறிது நேரத்திலேயே அதை நீக்கியும் விட்டார். தற்போது அவர் அரசியலில் இருக்கிறாரா இல்லையா என்பது தெரியவில்லை (அவருக்கே தெரியுமா என்று தெரியவில்லை). தலைப்பில் வந்தார், வென்றார், சென்றார் என்று எழுதியிருப்போம். ஏன் வந்தார் என்றே எங்களுக்குத் தெரியவில்லை…

https://www.ndtv.com/tamil/a-brief-history-of-political-journey-of-j-deepa-2077697?pfrom=home-tamil_bigstory

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, people smiling, text

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ விலகாதீங்க.
மக்கள் தீக்குளிக்க போகிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

ஐயோ விலகாதீங்க.
மக்கள் தீக்குளிக்க போகிறார்கள்.

ரஜனிக்கு...  கடும் போட்டியாக இருந்த தீபா, அரசியலில் இருந்து விலகி விட்டதால்... 
இனி ரஜனி பயப்பிடாமல், அரசியலுக்கு வரலாம் என்று... இணையத்தில் கிண்டல் செய்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ச்சீட்டிங் பண்ணுச்சா பேபிம்மா? மாதுக்குட்டியுமா!! தன் கட்சியினரிடமே ஆட்டையை போட்டு கட்சியையே கலைத்த ஒரே தலைவி!!

Deepa.jpg

உலக அரசியல் வரலாற்றிலேயே தன் கட்சியினரை பார்த்துக் கதறிக் கண்ணீர்வடித்து கொண்டு, கட்சியையே கலைத்த ஒரே தலைவி எனும் பெயரை அடித்து நொறுக்கி அள்ளிச் சென்றிருக்கிறார் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான பேபிம்மா என நெட்டிசன்களால் அன்போடு அழைக்கப்படும் தீபா.

இவிங்க தொண்டர்களா இல்ல குண்டர்களாடா? என்னை நிம்மதியா தூங்க கூட விடமாட்டீங்களா? என்னையும் என் புருஷனையும் நிம்மதியா வாழ விடுங்கடா. புள்ளை குட்டி பெத்துக்கிட்டு குடும்பத்தை கவனிக்கணும். என்று உலக அரசியல் வரலாற்றிலேயே தன் கட்சியினரை பார்த்துக் கதறிக் கண்ணீர்வடித்து கொண்டு, கட்சியையே கலைத்த ஒரே தலைவி எனும் பெயரை அடித்து நொறுக்கி அள்ளிச் சென்றிருக்கிறார் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான பேபிம்மா என நெட்டிசன்களால் அன்போடு அழைக்கப்படும் தீபா.

அவர் அள்ளிச் சென்றது பெயரை மட்டுமல்ல, எங்களின் துட்டையும் சேர்த்துத் தான்’ என்கின்றனர் அவரது தீபா பேரவையில் நிர்வாகிகளாக இருந்தவர்கள். ஆமாம் கட்சிக்காரர்களிடம் பல லட்சங்களை ஆட்டையப் போட்டுவிட்டாராம் பேபிம்மா. அது பற்றி அவர்கள் கணக்கு கேட்டும்,  அதை அவர்கள் தொடர்ந்து திருப்பிக் கேட்டும் குடைச்சல் கொடுக்கவும்தான் இப்படி பேரவையை கலைக்கிறேன் என்று வாட்ஸாப்பில் பிரஸ் ரிலீஸ் பண்ணி எகிறி குதித்து எஸ்கேப் ஆகிறார்! என்று தகவல்கள் வருகின்றன.

இது பற்றி மேலும் விசாரித்தால்...ஒரு உறுப்பினர் அட்டைக்கு முப்பது ரூபாய் வீதம் அறுபது மாவட்ட செயலாளர்களிடமிருந்து தலா பத்தாயிரம் உறுப்பினர் அட்டைகளுக்கு பணம் பெற்றார். அப்படிப் பார்த்தால் சுமார் 1 கோடியே 80 லட்சம் ரூபாய் உறுப்பினர் அட்டைக்கான பணம் வடிவில் தீபாவிடம் சென்றது.

மாநில அளவில் பொறுப்பு தர்றேன்னு சொல்லி ஈ.சி.ஆர். ராமச்சந்திரன் அப்படிங்கிறவர்ட்ட இருந்து 80 லட்சம் ரூபாய் கடன் வாங்கிட்டு ஏமாத்திட்டார்ன்னு ஒரு தகவல். திருப்பூர் மாசெ. செந்தில்குமார், கோயமுத்தூர் மாசெ. ஜெயராமன்னு தீபாவுக்கு எதிராக பணப் பஞ்சாயத்தை கூட்டியவர்களின் எண்ணிக்கை நீளுது.

நான் கட்சியை கலைச்சுட்டேன். இனி என்னை தொந்தரவு பண்ணாதீங்க!ன்னு வாட்ஸ்அப்பில் தீபா சொல்லிட்டதாலே மட்டும் அவர் எஸ்கேப் ஆகிட முடியாது. கட்சியின் வளர்ச்சிங்கிற பெயரிலும், கடனாகவும் பணத்தை வாங்கிட்டு சொந்த விஷயத்துக்கு ஜாலியா செலவு பண்ணிட்டு, இப்ப கட்சியையே கலச்ச தீபாவை சும்மா விடமாட்டோம். இது மிகப்பெரிய சீட்டிங். அவர் மேலே பண மோசடி புகாரை போலீஸ்ல கொடுத்து, எடப்பாடியார் கைகாலில் விழுந்தாவது தீபாவை உள்ளே தள்ளுவோம். கூடவே அந்த மாதவனும் போவார். என்று கொதிக்கிறார்கள்.

கட்சியினரிடம் நீங்கள் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக புகார் வருதே? என்று தீபா, மாதவனிடம் விளக்கம் கேட்க போன் செய்து கொண்டே இருந்தோம். ஆனால் ரிங் மட்டும் ஆகிறது, அபா பாருங்க தலைவி நோ ரெஸ்பான்ஸ்.

https://tamil.asianetnews.com/politics/deepa-is-one-and-only-leader-who-dissolved-the-party-pvx4po

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.