Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மத போதனைகள் நடத்துகின்ற இடம் தொடர்பில் அனுமதி பெற வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
July 31, 2019

ponnalai.jpg?resize=800%2C600
மத போதனைகளை நடத்துகின்ற இடம் தொடர்பாக உரிய வகையில் அனுமதி பெறப்பட்டு அந்த நிலையத்தை பதிவு செய்த பின்னரே அங்கு மதக் கூட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களை நடத்த முடியும் என வட்டுக்கோட்டை காவல்துறை பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

பொன்னாலையில் குடும்பம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட வீட்டில் அக்குடும்பம் வசிக்காத நிலையில், அந்த வீட்டில் கிறிஸ்தவ மதமாற்ற சபையொன்று சண்டே ஸ்கூல் என்ற பெயரில் மத போதனையை நடத்திக்கொண்டிருந்தது.

இதற்கு எதிராக அப்பகுதி மக்கள் திரண்டு அவர்களை வெளியேறுமாறு வற்புறுத்தினர். எனினும், அவர்கள் தொடர்ந்தும் அங்கு மதக் கூட்டம் நடத்தப்படும் எனக் கூறியதால் மக்கள் கடுமையான தொனியில் எச்சரித்து வெளியேற்றினர். கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) இச்சம்பவம் இடம்பெற்றது.

இது தொடர்பாக குறித்த கிறிஸ்தவ சபையின் போதகர், பொன்னாலையைச் சேர்ந்த சிவில் சமூக செயற்பாட்டாளர்களான ந.பொன்ராசா மற்றும் செ.றதீஸ்வரன் ஆகியோருக்கு எதிராக வட்டுக்கோட்டை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

றதீஸ்வரன் தன்னைத் தாக்க முற்பட்டார் எனவும் பொன்ராசா ஊடகங்கள் வாயிலாக செய்திகளைப் பரப்பிவிட்டார் எனவும் இதனால் தங்களுக்கு அவமானம் நேர்ந்தவிட்டது எனவும் போதகர் தனது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக நேற்று (30) செவ்வாய்க்கிழமை வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில், காவல்துறை பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணை இடம்பெற்றது.

இதன்போது, எவரும் எந்த மதத்தையும் பின்பற்ற உரிமை இருக்கின்றது எனக் கூறிய காவல்துறை பொறுப்பதிகாரி, மத போதனை செய்தவர்களுடன் முரண்பட்டமை தவறான செயல் எனக் கூறினார். தமது பிரதேசம் சைவக் கிராமம் என்பதைச் சுட்டிக்காட்டிய சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கிறிஸ்தவ சபைகளின் மதமாற்றச் செயற்பாடுகளை மக்கள் விரும்பவில்லை எனக் கூறினர்.

மதம் மாற்றும் சபைகளின் செயற்பாடுகளை மக்கள் விரும்பாவிட்டால் உரிய சட்டத்தின் அடிப்படையில் அவர்களின் செயற்பாடுகளை நிறுத்துமாறு காவல்துறை பொறுப்பதிகாரி அறிவுறுத்தினார். கிராம சேவையாளர், பிரதேச செயலாளர் போன்றோருக்கு அறிவிப்பதன் மூலம் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, உரிய அனுமதி இன்றி பொன்னாலையில் மதச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம் என குறித்த கிறிஸ்தவ சபையின் போதகருக்கு காவல்துறை பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

சபைக்குரிய அனுமதி இருக்கின்ற போதிலும், பிரதேசங்களில் கிளை நிலையங்களை நடத்துவதாயின் அதற்குரிய அனுமதி மற்றும் இடம் தொடர்பான பதிவுகளைப் பெற்றிருக்கவேண்டும் எனவும் அவர் கூறினார்.

பொன்னாலை மக்கள் கிறிஸ்தவ மதமாற்றச் செயற்பாடுகளை மக்கள் விரும்பவில்லை எனக் கூறிய சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், உரிய சட்டத்தின் அடிப்படையில் தாங்கள் அதைத் தடுப்பார்கள் எனவும் காவல்துறை பொறுப்பதிகாரிக்கு தெரிவித்தனர்.  #மத போதனைகள்  #அனுமதி #வட்டுக்கோட்டை #பொன்னாலை

http://globaltamilnews.net/2019/127747/

  • கருத்துக்கள உறவுகள்

Sunday-School-700x450.jpg

யாழில் மதம் மாற்றும் செயற்பாடுகள்: உரிய அனுமதியின்றி நடத்த முடியாது என அறிவிப்பு

மதபோதனைகளை நடத்துகின்ற இடம் தொடர்பாக உரிய வகையில் அனுமதி பெறப்பட்டு அந்த நிலையத்தை பதிவுசெய்த பின்னரே அங்கு மதக்கூட்டங்கள் மற்றும் பிரசாரங்களை நடத்த முடியும் என வட்டுக்கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி அறிவித்துள்ளார்.

பொன்னாலையில் குடும்பம் ஒன்றுக்கு இந்திய அரசால் வழங்கப்பட்ட வீட்டில் அக்குடும்பம் வசிக்காத நிலையில் அந்த வீட்டில் கிறிஸ்தவ மதமாற்ற சபையொன்று ‘சண்டே ஸ்கூல்’ என்ற பெயரில் மதபோதனையை நடத்திக் கொண்டிருந்தது.

இதற்கு எதிராக அப்பகுதி மக்கள் திரண்டு அவர்களை வெளியேறுமாறு வற்புறுத்தினர். எனினும் தொடர்ந்தும் அங்கு மதக்கூட்டம் நடத்தப்படும் எனக் கூறியதால் மக்கள் கடுந்தொனியில் அவர்களை எச்சரித்து வெளியேற்றினர். இந்த சம்பவம் கடந்த 28ஆம் திகதி இடம்பெற்றது.

இது தொடர்பாக குறித்த கிறிஸ்தவ சபையின் போதகர், பொன்னாலையைச் சேர்ந்த சிவில் சமூக செயற்பாட்டாளர்களான ந.பொன்ராசா மற்றும் செ.ரதீஸ்வரன் ஆகியோருக்கு எதிராக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

ரதீஸ்வரன் தன்னைத் தாக்க முற்பட்டார் எனவும் பொன்ராசா ஊடகங்கள் வாயிலாக செய்திகளைப் பரப்பிவிட்டார் எனவும் இதனால் தங்களுக்கு அவமானம் நேர்ந்தவிட்டது எனவும் போதகர் தனது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பொலில் பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணை இடம்பெற்றது.

இதன்போது, எவரும் எந்த மதத்தையும் பின்பற்ற உரிமை இருக்கின்றது எனக்கூறிய பொலிஸ் பொறுப்பதிகாரி, மதபோதனை செய்தவர்களுடன் முரண்பட்டமை தவறான செயல் எனக் கூறினார்.

தமது பிரதேசம் சைவக்கிராமம் என்பதைச் சுட்டிக்காட்டிய சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கிறிஸ்தவ சபைகளின் மதமாற்றச் செயற்பாடுகளை மக்கள் விரும்பவில்லை எனக் கூறினர்.

மதம் மாற்றும் சபைகளின் செயற்பாடுகளை மக்கள் விரும்பாவிட்டால் உரிய சட்டத்தின் அடிப்படையில் அவர்களின் செயற்பாடுகளை நிறுத்துமாறு பொலிஸ் பொறுப்பதிகாரி அறிவுறுத்தினார். கிராம சேவையாளர், பிரதேச செயலாளர் போன்றோருக்கு அறிவிப்பதன் மூலம் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, உரிய அனுமதியின்றி பொன்னாலையில் மதச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம் என குறித்த கிறிஸ்தவ சபையின் போதகருக்கு பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

சபைக்குரிய அனுமதி இருக்கின்ற போதிலும், பிரதேசங்களில் கிளை நிலையங்களை நடத்துவதாயின் அதற்குரிய அனுமதி மற்றும் இடம் தொடர்பான பதிவுகளைப் பெற்றிருக்கவேண்டும் எனவும் அவர் கூறினார்.

இதையடுத்து, பொன்னாலை மக்கள், கிறிஸ்தவ மதமாற்றச் செயற்பாடுகளை விரும்பவில்லை எனக்கூறிய சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உரிய சட்டத்தின் அடிப்படையில் அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு தெரிவித்தனர்.

http://athavannews.com/யாழில்-மதம்-மாற்றும்-செய/

6 hours ago, பிழம்பு said:

இதேவேளை, உரிய அனுமதி இன்றி பொன்னாலையில் மதச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம் என குறித்த கிறிஸ்தவ சபையின் போதகருக்கு காவல்துறை பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

சபைக்குரிய அனுமதி இருக்கின்ற போதிலும், பிரதேசங்களில் கிளை நிலையங்களை நடத்துவதாயின் அதற்குரிய அனுமதி மற்றும் இடம் தொடர்பான பதிவுகளைப் பெற்றிருக்கவேண்டும் எனவும் அவர் கூறினார்.

இதை தான் நானும் சுட்டிக்காட்டி மற்ற திரியில் எழுதியிருந்தேன். (அனுமதி, பதிவு தேவைப்பட்டிருக்கலாம் என).

Edited by Lara

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.