Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணை

(ஆர். யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

 அவசர கால சட்டத்தை மேலும் ஒரு மாத காலம் நீடிப்பதற்கான இடம்பெற்ற வாக்கெடுப்பில் 40 வாக்குகள் ஆதரவாகவும் 2எதிராவும் அளிக்கப்பட்டன. அதன் மூலம் அவசரகால சட்டம் மீதான பிரேரணை   40 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

67484687_1296362660535683_45904603372951

அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பதற்கான விவாதம் இன்று மாலை 6.30 மணிவரை இடம்பெற்ற பின்னர் இறுதியில்  சபாநாயகர்  கருஜயசூரிய பிரேரணைக்கு எதிர்ப்பு இருக்கின்றதா என வினவியபோது, தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் பிரேரணை மீது வாக்கெடுப்பு கோரினார். 

அதன் பிரகாரம் சபாநாயகர் பிரேரணை மீது வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தார்.  இதனையடுத்து இடம்பெற்ற இலத்திரனியல் முறை வாக்கெடுப்பில் அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கு ஆதரவாக 42 வாக்குகளும் எதிராக 2 வாக்குகளும் அளிக்கப்படநிலையில் அவசரகால சட்டம் 40 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

67409209_639609363213692_236915646644879

அவசரகால சட்ட நீடிப்புக்கு ஆதரவாக அரசாங்கத்துடன் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வாக்களித்த அதேவேளை மக்கள் விடுதலை முன்னணி வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பில் சார்பில் ஸ்ரீதரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகிய எம்.பி.க்கள் மட்டுமே  எதிராக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.virakesari.lk/article/61655

  • கருத்துக்கள உறவுகள்

parliament.jpg

அவசரகாலச் சட்டத்தை நீடிக்கும் பிரேரணை நிறைவேறியது

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலம் நீடிப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் 40 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 42 வாக்குகளும் எதிராக 2 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

யோசனைக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சிவஞானம் ஸ்ரீதரன் ஆகியோர் வாக்களித்துள்ளனர்.

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒருமாத காலத்துக்கு நீடிப்பதற்கான ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த 22ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்றின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக யோசனை இன்று சபையில் முன்வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் மற்றும் அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் காரணமாக அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில், அப்போதிலிருந்து தொடர்ந்தும் இது நீடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/அவசரகாலச்-சட்டத்தை-நீடிக/

முஸ்லீம் அமைச்சர்கள் மற்றும் அவர்கள் தம் கட்சியை சார்ந்தவர்கள் ஆதரித்தார்கள்?

On ‎7‎/‎9‎/‎2019 at 8:48 AM, ampanai said:

நாட்டில் அமுலில் இருக்கும் அவசரகாலச் சட்டத்தை, இனியும் நீடிக்கப்போவதில்லை என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திலிருந்து பதவி விலகிய அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியூதீன், ஏ.எச்.எம். பௌஸி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா உள்ளிட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகளின் எம்.பிக்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று, நேற்று (09) இரவு இடம்பெற்றது.  

இதன்போது, நாட்டில் அமுலில் இருக்கும் அவசரகாலச் சட்டத்தின் கீழ், நாட்டிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களும் இலக்கு வைக்கப்படுவதாகவும் துன்புறுத்தப்படுவதாகவும், ஜனாதிபதியிடம் அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது.  

இதன்போதே, அவசரகாலச் சட்டத்தை இனியும் நீடிக்கும் எண்ணமில்லை என்று, ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.   

 

  • கருத்துக்கள உறவுகள்

அவசரகாலச்சட்டம் நீடிப்பு – 2 எம்.பிக்களே எதிர்ப்பு

sri-lankan-parliament-300x199.jpgஅவசரகாலச்சட்டத்தை மேலும் ஒரு மாதம் நீடிப்பதற்கான பிரேரணையை சிறிலங்கா நாடாளுமன்றம் மீண்டும் அங்கீகரித்துள்ளது. 

அவசரகாலச்சட்டத்தை நீடித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட அரசிதழுக்கு அனுமதி அளிக்கும் பிரேரணை நேற்று நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், அவசரகாலச்சட்டத்தைப் பயன்படுத்தி தமிழர்கள் துன்புறுத்தப்படுவதாக குற்றம்சாட்டினார். அத்துடன் அதனை எதிர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்கப் போவதாகவும் தெரிவித்தார்.

இந்த விவாதத்தை அடுத்து நேற்று மாலை சபையில் வாக்கெடுப்பு நடத்துமாறு, கூட்டமைப்பின் உறுப்பினர் சிறிதரன் கோரினார்.

இதையடுத்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், அவசரலகாலச்சட்டத்தை நீடிக்கும் பிரேரணைக்கு ஆதரவாக 42 வாக்குகள் அளிக்கப்பட்டன. எதிராக, 2 வாக்குகள் அளிக்கப்பட்டன. இதனால் 40 மேலதிக வாக்குகளால் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிதரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் மாத்திரம் எதிர்த்து வாக்களித்தனர்.

கூட்டமைப்பின்  ஏனைய உறுப்பினர்கள், ஜேவிபி உள்ளிட் கட்சிகளின் பெரும்பாலான உறுப்பினர்கள் சபையில் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2019/08/01/news/39275

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.