Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ஆறு பேர் விண்ணப்பம்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ஆறு பேர் விண்ணப்பம்!

In கிாிக்கட்     August 2, 2019 5:02 am GMT     0 Comments     1166     by : Anojkiyan

2019-06-05T093250Z_1639580507_RC1E7B3FA4D0_RTRMADP_3_CRICKET-WORLDCUP-ZAF-IND_1559824907775_1559824961501-720x450.jpg

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ஆறு பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த நிலையில், பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த 30ஆம் திகதியுடன் முடிவடைந்தது.

இந்த நிலையில், தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உட்பட, அவருடன் 6 பேர் பயிற்சியாளர் பதவிக்கான போட்டியில் உள்ளனர்.

ஐ.பி.எல்.லில் ஐதராபாத் அணியின் பயிற்சியாளராக இருக்கும் டொம் மூடி, நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெஸ்சன், தென்னாபிரிக்காவின் முன்னாள் வீரர் கேரி கிர்ஸ்டன், இலங்கை முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்தன, இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் ரொபின் சிங், லால்சந்த் ராஜ்பூட் ஆகியோர் பயிற்சியாளராக விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் அளித்து உள்ளனர்.

கபில்தேவ், கெய்க்வாட் உள்ளிட்டோர் அடங்கிய 3 பேர் கொண்ட குழு பயிற்சியாளரை தேர்வு செய்து வருகிறது. 13 அல்லது 14ஆம் திகதி நேர்காணலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல பந்து வீச்சாளர் பயிற்சிக்கு வெங்கடேஷ் பிரசாத்தும், களத்தடுப்பு பயிற்சிக்கு தென்னாபிரிக்காவின் ஜோன்டி ரோட்சும் விண்ணப்பித்து உள்ளனர்.

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரோடு இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்தரி, பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண், துடுப்பாட்ட பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், களத்தடுப்பு பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் ஆகியோரின் பதவிக்காலம் முடிந்தது.

எனினும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான தொடர் வரை அவர்களின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

உலகக்கிண்ணத்தை இந்தியக் கிரிக்கெட் அணி வென்றிருந்தால், ரவி சாஸ்தரி மற்றும் அவரின் உதவியாளர்களின் பதவிக்காலம் தொடர்ந்து நீடிக்கப்படிருக்கும்.

ஆனால் இந்தியா அணி, அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்ததால் அணி நிர்வாகம் மீது விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் பயிற்சியாளர்கள் பதவிக்கான விண்ணப்பங்களை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வெளியிட்டுள்ளது.

இதனால் ரவி சாஸ்திரியும் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவருடன் துணைப் பயிற்சியாளர்களும் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். வரவேற்கப்படும் விண்ணப்பங்கள் அடிப்படையில் பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ரவி சாஸ்திரி, பரத் ஸ்ரீதர், சஞ்சங் பாங்கர் ஆகியோர் மீண்டும் விண்ணப்பம் செய்தால் போதுமானது. அவர்களுக்கு தொடக்க நிலை தேர்வு நடத்தப்படாமல் நேரடியாக தேர்வுக்கான பட்டியலில் இடம் பிடிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷங்கர் பாசு, பிசியோ பாட்டிரிக் பர்கட் ஆகியோருக்குப் பதிலாக புதியவர்களை நியமிக்கவும் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை திட்டமிட்டுள்ளது.

ரவி சாஸ்திரி கடந்த 2017ஆம் ஆண்டு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பதவி ஏற்றார். இவரின் பதவிக்காலத்தில்தான் இந்தியா அணி, அவுஸ்ரேலியா மண்ணில் முதன்முதலாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனைப் படைத்தது.

இதேவேளை, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர் ஒருவர் குறைந்தது மூன்று வருடங்கள் ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்கும் அணியொன்றை பயிற்றுவித்திருக்க வேண்டும் என்பது, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தமது அணியின் பயிற்சியாளராக வரக்கூடிய நபருக்கு இருக்க வேண்டிய கட்டாய தகைமைகளில் ஒன்றாக குறிப்பிட்டுள்ளது.

இதேநேரம், பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர் இரண்டு வருடங்கள் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணியொன்றை பயிற்றுவித்திருக்க வேண்டும் அல்லது மூன்று வருடங்கள் அங்கத்துவ நாடு ஒன்றினையோ அல்லது ஏ அணி ஒன்றினையோ பயிற்றுவித்திருக்க வேண்டும் என்பது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தமது தலைமை பயிற்சியாளராக வர விண்ணப்பிப்பவருக்கு இருக்க வேண்டிய வேறு தகுதிகளாக குறிப்பிட்டிருக்கின்றது.

அதேவேளை, குறித்த பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர் குறைந்தது 30 டெஸ்ட் போட்டிகள் அல்லது 50 ஒருநாள் போட்டிகள் என்பவற்றிலும் விளையாடியிருக்க வேண்டும் என்பதும் முக்கியமான விடயமாகும்.

இதில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன, ஐ.பி.எல். தொடரின் மூலம் தான் சிறந்த பயிற்சியாளர் என உலகிற்கு அறிய தந்தவர்.

இவரின் வழிநடத்தலின் மூலம் இரண்டு முறைகள் மும்பை இந்தியன்ஸ் அணி, சம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளது.

மேலும், கேரி கிஸ்டன் இந்திய அணி, 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வெல்லும் போது அதன் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார். கேரி கிஸ்டன் தற்போது ஐ.பி.எல். அணிகளில் ஒன்றான றோயல் செலஞ்சர்ஸின் பயிற்சியாளராகவும் உள்ளார்.

http://athavannews.com/இந்திய-கிரிக்கெட்-அணியி-5/

  • கருத்துக்கள உறவுகள்

ராகுல் திராவிட்டின் பெயர் எங்கும் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது.

இந்திய கிரக்கெட் அணியின் பயிற்சியாளர் தேர்வுக்கு 2,000 விண்ணப்பங்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் தேர்வுக்கு 2 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்து உள்ளதாக தெரிவித்த இந்திய கிரிக்கெட் நிறுவனம், அதில் யாருக்கு அதிகம் வாய்ப்பு உள்ளது என்பது விரைவில் தெரிய வரும் என்றும் குறிப்பிட்டுள்ளது. 

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, துப்பாட்ட பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், பந்து வீச்சுப் பயிற்சியாளர் பாரத் அருண், களத்தடுப்பு பயிற்சியாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 7 பேரின் பதவிக்காலம் நாளை ஆரம்பமாகவுள்ள மேற்கிந்தியத் தொடருடன் முடிகிறது. 

புதிய பயிற்சியாளர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த ஜூலை மாதம் 31 ஆம் திகதியுடன் அவகாசம் முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை 2 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்து  உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போதுள்ள பயிற்சியாளர்கள் விண்ணப்பிக்கவில்லை என்ற போதிலும், தேர்வில் பங்கேற்கலாம். இதனிடையே 2007 இல் இந்தியாவுக்கு இருபதுக்கு - 20 உலக கிண்ணத்தை வெற்றி கொள்ள முக்கிய பங்கு வகித்த லால்சந்த் ராஜ்புட், ராபின் சிங், பிரவீண் ஆம்ரே உள்ளிட்டோர் போட்டியில் குதித்துள்ளனர். 

சர்வதேச அளவில் ஜெயவர்தனா, டொம் மூடி (ஆஸ்திரேலியா), மைக் ஹசன் (நியூசிலாந்து) உள்ளிட்டோர் பயிற்சியாளருக்கு விண்ணப்பித்துள்ளனர். அத்துடன் தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ், களத்தடுப்பு பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்.

INDIA.jpg

இவர்களில் சரியான பயிற்சியாளரை, இந்திய உயர் நீதிமன்ற வழிகாட்டுதல் படி நியமிக்கப்பட்ட கபில்தேவ் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனை குழு தேர்வு செய்யவுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி இந்திய கிரிக்கெட் நிறுவன (பி.சி.சி.ஐ.,) தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் பயிற்சியாளர் யார் என்பது முடிவு செய்யப்படலாம். தலைமை பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரி தெரிவாக அதிகம் வாய்ப்புள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

https://www.virakesari.lk/article/61824

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.