Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மடு தேவாலய பெருநாளுக்கு மக்களின் வருகையில் வீழ்ச்சி

Featured Replies

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில் மடு மாதா ஆலய ஆடிப் பெருநாளுக்கு வருகை தந்த மக்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி இமானுவேல் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம், கொழும்பு உள்ளிட்ட சிங்களப் பிரதேசங்களில் இருந்து மக்கள் வருகை தரவில்லையென ஆயர் கூறியுள்ளார். மடு மாதா திருத்தலத்தின் இவ்வருட ஆடி மாதப் பெருநாள் கடந்த யூன் மாதம் 26 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. யூலை மாதம் 2 ஆம் திகதி மடுத்திருப்பதியின் இறுதி நாள் உற்சவம் ஆயர் கலாநிதி இமானுவேல் பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்றது.

பெருநாளை முன்னிட்டு மடு ஆலயப் பகுதியில் இலங்கை இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர். ஆலய வழிபாட்டிற்கு வந்த மக்களையும் இலங்கைப் படையினர் சோதனையிட்டனர்.

இதன் காரணமாகவும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் மக்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கலாமென மடுமாதா ஆலய அருட்தந்தையொருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் சுமார் நான்கு இலட்சம் மக்கள் மடு தேவாலயப் பெருநாளுக்கு வருகை தந்தனர். ஆனால் இம்முறை இருபத்து நான்காயிரத்து அறுநூறு பேர் மாத்திரமே வருகை தந்ததாகவும் அந்த அருட்தந்தை கூறினார்.

போர்க் காலத்தில் கூட கொழும்பு உள்ளிட்ட சிங்களப் பிரதேசங்களில் இருந்து அதிகளவு மக்கள் மடு ஆலயப் பெருநாளுக்கு வருகை தந்திருந்தனர். ஆனால் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில் மக்கள் மடுவுக்கு வருகைதர அஞ்சுவதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

எதிர்வரும் ஓகஸ்ட் 15 ஆம் திகதி மடுத்திருப்பதியின் மேலும் ஒரு திருவிழா நிகழ்வு நடைபெறவுள்ளது. குறித்த திருவிழாவிறகான ஆரம்ப நிகழ்வுகள் இம்மாதம் ஆறாம் திகதி மடுத்திருத்தலத்தில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளன.

http://thinakkural.lk/article/32601

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ampanai said:

கடந்த காலங்களில் சுமார் நான்கு இலட்சம் மக்கள் மடு தேவாலயப் பெருநாளுக்கு வருகை தந்தனர். ஆனால் இம்முறை இருபத்து நான்காயிரத்து அறுநூறு பேர் மாத்திரமே வருகை தந்ததாகவும் அந்த அருட்தந்தை கூறினார்.

 

3 hours ago, ampanai said:

திருவிழாவிறகான ஆரம்ப நிகழ்வுகள் இம்மாதம் ஆறாம் திகதி மடுத்திருத்தலத்தில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளன.

 

  • தொடங்கியவர்
5 hours ago, Paanch said:

திருவிழாவிறகான ஆரம்ப நிகழ்வுகள் இம்மாதம் ஆறாம் திகதி மடுத்திருத்தலத்தில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளன.

இந்த தகவல் சரியானதாகவே தெரிகின்றது. கடந்த வருடங்களிலும் கூட இவ்வாறான செய்திகள் இணைக்கப்பட்டு இருந்தன. 

 

9 hours ago, Paanch said:

 

நான் நினைக்கிறேன் நீங்கள் ஆடி மாதப் பெருநாளையும் ஆவணி மாதம் நடக்கவிருக்கும் திருவிழாவையும் கலந்து வாசித்து விட்டீர்கள் என்று. 😀

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Lara said:

நான் நினைக்கிறேன் நீங்கள் ஆடி மாதம் ஆரம்பித்த பெருநாளையும் ஆவணி மாதம் நடக்கவிருக்கும் திருவிழாவையும் கலந்து வாசித்து விட்டீர்கள் என்று. 😀

உண்மைதான் லாறா அவர்களே, கலந்ததுமட்டுமல்ல கலங்கியும் விட்டேன். தவறுக்கு வருந்துகிறேன்.

77ம் ஆண்டு ஆடிமாதம் மடுமாதா பெருநாளின்போது நான் குடும்பத்துடன் அனுராதபுரத்தில் அகப்பட்டு உயிர்தப்பிவந்த ஞாபகத்தை இந்தப்பதிவு மீட்டுவிட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.