Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாணவனின் வீட்டுக்கு தீ வைத்த மாணவி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் கதிரியை சேர்ந்தவர் ரேகா (பெயர் மாற்றம்) அங்குள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவன் பார்ப்பதற்கு அழகாக இருப்பாள்.

அதே பகுதியை சேர்ந்தவன் ராஜா. இவன் அனந்தபுரத்தில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறான்.

ராஜா மாணவி ரேகாவை ஒருதலையாக காதலித்து வந்தான். ஆனால் அவள் அவனது காதலை ஏற்க மறுத்தாள். இதனால் ரேகா எங்கு சென்றாலும் ராஜா பின் தொடர்ந்து சென்று ஈவ்டீசிங் செய்து வந்தான்.

தொடக்கத்தில் அவன் என்ன சொன்னாலும் ரேகாதலை குனிந்தபடி அந்த இடத்தை விட்டு சென்று விடு வாள்.

அவளது மவுனத்தை பார்த்து அவர் தன்னைத்தான் விரும்புகிறாள் என்று தினமும் பின் தொடர்ந்து சென்று காதல் கடிதம் கொடுப்பது, சைகை காட்டுவது... என்று தொல்லை கொடுக்கத் தொடங்கினான். கடந்த சில நாட்களாக அவனது ஈவ் டீசிங் எல்லை மீறி யது. ரேகா தனியாகச் செல்லும் போது ஆபாசமாகப் பேசத் தொடங் கினான்.

நேற்று மாலை அவள் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண் டிருந்தாள்.

அப்போது ராஜா ஆபாச இரட்டை அர்த்த பாடல் பாடி ஈவ்டீசிங் செய்தான். இது அவளுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

நேராக வீட்டுக்கு சென்ற அவள் ராஜாவின் ஈவ்டீசிங் தொல்லை பற்றி தனது தாயிடம் கூறினாள்.

உடனே ரேகாவும், அவளது தாயும் உறவினர்களைத் திரட்டிக்கொண்டு ராஜாவின் வீட்டுக்கு சென்றனர். அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த ராஜாவை அடித்து உதைத்தனர். அவன் அலறினான். ஆனாலும் ரேகாவுக்கு ஆத்திரம் தீர வில்லை.

திடீரென ஆவேசம் அடைந்த ரேகா ராஜாவின் வீட்டு கூரைக்கு தீ வைத்தாள். இதில் வீடு முழுவதும் தீப் பிடித்து எரிந்தது. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.

ராஜாவின் உறவினர்கள் அங்குள்ள போலீஸ் நிலையத் திற்கு திரண்டு சென்று வீட்டுக்கு தீவைத்த ரேகா மற்றும் உறவினர்களை கைது செய்ய வேண்டும் என்று புகார் கொடுத்தனர். பின்னர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படாமல் தடுக்க போலீஸ் படை குவிக்கப்பட்டது.

Thanks to Malaiamalar..

சைட் அடிக்கிறனிங்கள் எல்லாம் இனி கவனமா இருங்கப்பா..

தலைப்பை பார்த்தவுடனேயே விளங்கிவிட்டது இது இந்தியாவில்தான் நடந்து இருக்கும் என்று.. :rolleyes: இதைவைத்து ஒரு தமிழ்ப்படம் எடுப்போமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தபோச்சு..பட் எடுக்கிற எங்கட வீட்ட எரிக்கமா விட்டா சரிப்பா..

சபாஷ் சரியான பதிலடி மாப்பு டோன் வொறி உங்க வீடு கல் வீடுதானே சீக்கிரம் எரியாது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைப்பை பார்த்தவுடனேயே விளங்கிவிட்டது இது இந்தியாவில்தான் நடந்து இருக்கும் என்று.. :rolleyes: இதைவைத்து ஒரு தமிழ்ப்படம் எடுப்போமா?"""

எனக்கும் தான் தலைப்பைப் பார்த்தவுடனேயே விளங்கிவிட்டது.! இந்தியா புண்ணிய பூமிதான் ஆனால் அங்கு சனம் செய்யிற கொடுமைகள் எல்லாம் பாவச் செயல்கள்!

'மகாத்மா" சொன்ன சுதந்திரம் அங்கு இன்னமும் கிடைக்கவில்லை.!.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதுவா தமிழ் தங்கை இன்னா மட்டார்னா பாரதி கண்ட புதுமை பெண்கள் அப்பிடி பன்னிறாங்க...இனி அந்த ஏரியா பசங்களே பொண்ணுங்க கிட்ட வம்பு பண்ண பயப்பிடுவாங்க..

  • கருத்துக்கள உறவுகள்

மனித உணர்வுகளை மதிக்கத் தெரியாத மிருகங்களுடன் காதலென்ன அன்பென்ன பாசமென்ன..! எல்லாம் அர்த்தமற்றவை..! :unsure::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பை பார்த்தவுடனேயே விளங்கிவிட்டது இது இந்தியாவில்தான் நடந்து இருக்கும் என்று.. :lol: இதைவைத்து ஒரு தமிழ்ப்படம் எடுப்போமா?

முதல்ல புல அகதித்தமிழன் செய்யிறதுகளை பாருங்க, அப்புறம் மற்றவனிண்ட பீத்தல்களை கவனிக்கலாம், இங்கிலண்டில இந்த 'காம' லவ் வினால் கோஸ்ரி மோதல்கள் நடாந்துக்கொண்டு இருக்கின்றது, இதைவிட கேவலம் கனடா, சுவிஸ்.

இங்கிலாந்தில் ஒரு அழகான இளம் தமிழ் அகதி பெண்ணுக்கு பின்னால் ஒரு கும்பல் இருக்கும், (அந்த அகதி பெண்ணின் பாய்பிரண்டின் நண்பர்கள் இந்த கும்பலில் இருப்பார்கள்), எவனாச்சும் தன் காதலியை கிண்டல் செய்தால் இந்த கும்பல் அந்த இளைஞனை உண்டு இல்லை எண்டு ஆக்கிவிடுவார்கள், ஆனால் இந்த நா*** மற்றைய பெண்களை கிண்டல் செய்யலாம். இதில பரிதாபம் என்னவெண்டால், சிட்டிசன் ஒவ் இங்கிலந்த், எண்ட பட்டம் கிடைத்ததும், வெள்ளையள்ட குணத்துக்கு மாறுகிறார்கள் இந்த ஊத்தவாளிகள், அகதி வெளி நாட்டவனாக இங்கிலாந்தில் இருப்பவன், வேலை உண்டு தான் உண்டு எண்டு இருக்கிறான்.

சிட்டிசன் ஒவ் இங்கிலாந்த் தமிழ் அகதி குரங்குகளை வன்னிக்கு அனுப்பி பாடம் கற்றுக்கொள்ள செய்யவேண்டும். அப்பொழுதாவது திருந்துகின்றார்களா எண்டு பார்ப்பம்/ :angry:

பி.கு: இங்கிலாந்து எண்டு குறிப்பிடப்பட்டவற்றை சோமாலியாவாக நினைக்கவும். :unsure::unsure:

Edited by Danklas

முதலில் நம்ம டங்கை வன்னிக்கு அனுப்பி எடுக்க வேண்டும்

:unsure::(

டண் இங்கிலாந்து எண்டாலும் பரவாயில்லை போணதுகள் ஏதோ வெள்ளைக்காரன் செய்யிறதைப்பாத்துப் போட்டு இருப்புக் கொள்ளாமல் இருக்குதுகள் எண்டா .........இஞ்சை யாழ்ப்பாணத்திலை இருந்நு கொழும்புக்குப் போணதுகளே இப்பிடித்தானே திரியப் பாக்குதுகள் ........ இப்பிடிப் பாத்தா வன்னியிலை மாத்திரம் தான் .....................................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.