Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தட்டிக் கேட்கவேண்டும்: நடிகை திரிஷா பேச்சு

Featured Replies

சென்னை: பெண்களுக்கு எதிரான  கொடுமைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கக்கூடாது.  பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சமூகத்தில் உள்ள அனைவரும் முன்வர வேண்டும் என எர்ணாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை திரிஷா  கூறினார்.


ஐக்கிய  நாடுகளின் சிறுவர், சிறுமியர் நிதியத்தின் தூதுவரான நடிகை திரிஷா  குழந்தை  திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் குறித்து  விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இதன்படி எர்ணாவூர் சுனாமி  குடியிருப்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில்  நடிகை திரிஷா கலந்து  கொண்டு பெண்கள் மற்றும் சிறுவர்களின்  தற்போதைய வாழ்க்கை சூழ்நிலை   மற்றும் கடந்த கால சோக நிகழ்வுகளை   கேட்டறிந்தார். பின்னர்  நடிகை திரிஷா  பேசியதாவது: குழந்தைகள் திருமணத்தை குழந்தைகளே விரும்புவதில்லை. இதை  அவர்களது பெற்றோர்களும், உறவினர்களும் உணர்ந்து கொள்ளமாட்டார்கள். அதுபோன்ற  சூழ்நிலையில் சமூகத்தில்  காவல்துறையினர், பெண்கள் பாதுகாப்பு  அமைப்பினர், தொண்டு நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து போராடினால்  மட்டுமே குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த முடியும்.

பெண்களுக்கு  எதிரான கொடுமைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கக்கூடாது.  பாதிக்கப்பட்டவர்களுக்கு  உதவ சமூகத்தில் உள்ள அனைவரும் முன்வர வேண்டும்.   காதல் திருமணங்களால் தவறு கிடையாது. ஆனால் அதற்கு உரிய  வயதில் மட்டுமே காதல்  செய்ய வேண்டும்.  கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். குறைந்தபட்சம்  பன்னிரண்டாம் வகுப்பு வரையாவது பெண்கள் படிக்க வேண்டும். காரணம் பள்ளி  பாடம்  சமூக அக்கறை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும். காதலிப்பது  தவறு இல்லை. ஆனால் 15 வயதில் காதலித்து ஓடிப்போய் திருமணம் செய்வதை ஏற்றுக்  கொள்ள கூடாது. அதனால் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டுமே. ஆகையால் அதற்கான  தகுதியான வயது வந்த பிறகு காதல் திருமணம்  செய்ய வேண்டும். குறிப்பாக 18 வயது  21 வயதுக்குப் பிறகு  திருமணம் செய்துகொள்ளவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=522182

  • கருத்துக்கள உறவுகள்

திரிஷாவின்ர சமூக பொறுப்புணர்வு பாராட்டுக்குரியது.. 👌

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

திரிஷாவின்ர சமூக பொறுப்புணர்வு பாராட்டுக்குரியது.. 👌

செம்பு... நெளிந்தால் மட்டுமே,  நடிகைகள் கூக்குரல்  இடுவார்கள்.
திரிசா... குஸ்புவின்... வாரிசு  போல கிடக்குது. :grin:

அம்மணி,  எங்கையோ ..... சரியாக, அடி  வாங்கி விட்டார் போல உள்ளது.
அவர்கள்.... பிரபலமாக இருக்கும் போது,  இவை கண்ணுக்கு  தெரிய மாட்டுதோ... 😎
விளக்குமாறு... பிய்ய, முதல்... ஓடிப் போயிடுங்கோ... 🤣

Edited by தமிழ் சிறி

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல இந்தம்மாவுக்கு ஒரு திருமணம் செய்து வைக்க வேண்டும்.....!   🤔

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.