Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உடல்நலக்குறைவால் காலமானார்.. வயது 95!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Senior Advocate Ram Jethmalani passed away this morning

மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உடல்நலக்குறைவால் காலமானார்.. வயது 95!

மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் காலமானார். ராம் ஜெத்மலானிக்கு வயது 95.

இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற வழக்கறிஞர்களில் ஒருவர் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி. பாகிஸ்தானில் பிறந்த இவர் இந்தியா - பாக் பிரிவினையின் போது, இந்தியாவில் குடியேறினார். 17 வயதில் பாம்பே பல்கலைக்கழகத்தில் இவர் எல்எல்பி பட்டம் பெற்று வழக்கறிஞரானர். அப்போது தொடங்கிய இவரின் வழக்கறிஞர் பயணம் 2017 வரை நீடித்தது.

ராம் ஜெத்மலானி மத்திய சட்டத்துறை அமைச்சராக இருந்துள்ளார். பாஜக மறைந்த தலைவர் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் 1996-2000 வரை மத்திய சட்டத்துறை அமைச்சர் மற்றும் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்துள்ளார்.

அதன்பின் 2004ல் இவர் லக்னோ தொகுதியில் வாஜ்பாயை எதிர்த்து நின்று போட்டியிட்டார். ஆனால் மீண்டும் 2010ல் இவர் பாஜகவில் சேர்ந்தார். அதன்பின் ராஜஸ்தானில் இருந்து ராஜ்ய சபாவிற்கு தேர்வு செய்யப்பட்டார்.

ராம் ஜெத்மலானி பார் கவுன்சில் ஆப் இந்தியாவின் தலைவராகவும் இருந்தவர். முக்கிய வழக்குகள் பலவற்றில் இவர் ஆஜராகி வாதம் செய்தவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கும் 7 தமிழர்களுக்காக இவர் 2011ல் சென்னை ஹைகோர்ட்டில் ஆஜர் ஆனார்.

பாஜக மூத்த உறுப்பினர் அத்வானியின் ஹவாலா வழக்கு, 2 ஜி வழக்கில் திமுக எம்பி கனிமொழிக்காக ஆஜர் ஆனார்.ஜெகன் மோகன் ரெட்டி சிபிஐ வழக்கு, எடியூரப்பா பண மோசடி வழக்கு, ஆசாரம் பாபு பாலியல் குற்ற வழக்கு, லாலு பிரசாத் யாதவ் ஊழல் வழக்கு, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு ஆகிய வழக்குகளில் இவர் ஆஜர் ஆகி இருக்கிறார்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் இவர் ஆஜர் ஆகி செய்த வாதங்கள் நாடு முழுக்க பிரபலம். இந்த நிலையில் கடந்த 2017ல் இவர் வழக்கறிஞர் பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

அதே போல் அரசியல் வாழ்க்கை, பொது வாழ்க்கை இரண்டில் இருந்தும் ஓய்வு பெற்று வீட்டில் நாட்களை கழித்துக் கொண்டார். கடந்த சில நாட்களாக இவர் உடல் நலக்குறைபாடு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் இன்று காலை வயோதிகம் மற்றும் உடல்நல குறைபாடு காரணமாக காலமானார். இவரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவரின் உடலுக்கு இன்று முக்கிய அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read more at: https://tamil.oneindia.com/news/delhi/senior-advocate-ram-jethmalani-passed-away-this-morning-362373.html

ராம் ஜெத்மலானி: 'ராஜீவ் காந்தி கொலை இந்தியாவுக்கு எதிரான குற்றம் இல்லை'

ராம் ஜெத்மலானியை தமிழகத்தில் பரவலாக தெரிய காரணமாக அமைந்தது ராஜீவ் காந்தி கொலையாளிகள் தொடர்பான வழக்கு. பேரறிவாளன்,சாந்தன், முருகன் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த வேண்டும் என வாதாடியவர் ராம் ஜெத்மலானி.

சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக வாதாடும்போது அவர், "தங்களுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை குறைக்கக் கோரி கருணை மனு அனுப்பி ஏறத்தாழ 11 ஆண்டுகள் 4 மாதங்கள் இவர்கள்  காத்திருந்து இருக்கிறார்கள். ஏன் இத்தனை ஆண்டுகள் இவர்கள் கருணை மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர்களுக்கு விளக்கப்பட்டவில்லை. இது நியாயமற்றது. என்னை பொறுத்த வரை அரசமைப்பு எதிரானது," என்றார்.

அந்த சமயத்தில் வேலூர் சிறைக்கு சென்ற அவர்  பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் அப்பாவிகள் என்றார். இது பின்னர் சர்ச்சையாகவும் ஆனது.

"இத்தனை ஆண்டுகளாக ராம் ஜெத்மலானி என்ன செய்து கொண்டு இருந்தார். குறிப்பாக சட்ட அமைச்சராக இருந்தபோது. அவர்கள் பயங்கரவாதிகள் அந்த கண்ணோட்டத்தில்தான் இந்த வழக்கை பார்க்க வேண்டும்," என்று ஜெத்மலானியை விமர்சித்தார் சுப்பிரமணிய சுவாமி.

2014ஆம் ஆண்டு இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் வாதாடும்போது ராம் ஜெத்மலானி, "ராஜிவ் கொலை நாட்டிற்கு எதிரான குற்றமல்ல. மேலும், இவர்களுக்கு இந்த கொலையில் நேரடியான தொடர்பு இல்லை. 23 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்துவிட்டார்கள். இந்த வழக்கை கருணை அடிப்படையில் அணுக வேண்டும்" என்றார்.

இவற்றை எல்லாம் கடந்து அவர் சார்ந்திருந்த பாரதிய ஜனதா கட்சிக்குள்ளேயும் அவர் கலகக்காரராகத்தான் இருந்தார்.

2012ஆம் ஆண்டு அப்போது பாரதிய ஜனதா கட்சி தலைவராக இருந்த நிதி கட்கரி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

இதன் காரணமாக 2013இல் கட்சியிலிருந்து ஆறு ஆண்டுகள் தற்காலிகமாகவும் நீக்கப்பட்டு இருக்கிறார்.

https://www.bbc.com/tamil/india-49625823

  • கருத்துக்கள உறவுகள்

பல பல ஊழல் அரசியல்வாதியள் ஜாமீன் கிடைக்காம தடுமாற போகினம் ..👌

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.