Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பௌத்த விகாரை வளாகத்தில் இந்து ஆலய மகா கும்பாபிசேகம் மட்டக்களப்பில் மத நல்லிணக்கம்

Featured Replies

இனங்களுக்கிடையில் மத இன நல்லிணகத்தை ஏற்படுத்தும் வகையில் மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பௌத்த விகாரை விகாராதிபதி பட்ட பொல ஸ்ரீ குனானந்த நாயக்க தேரரின் ஆலோசனைக்கு அமைய  மட்டக்களப்பு ஜெயந்திபுரம் கிராம மக்களின் ஒத்துழைப்புடன் ஜெயந்திபுரம் பௌத்த விகாரை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஸ்ரீ கண் திருஷ்டி கணபதி  ஆலயத்தின் பிரதிஷ்டா மகாகும்பாபிஷேக விஞ்ஞாபனம் நிகழ்வு மிக சிறப்பாக நேற்று நடைபெற்றது.

கள்ளியங்காடு ஸ்ரீ ஆஞ்சநேய ஆலய பிரதம குரு சிவஞான திலகம் சிவஸ்ரீ உத்தம ஜெகதீஸ்வரக் குருக்கள் தலைமையில் விநாயர் வழிபாடுகளுடன் கிரிகைகள் ஆரம்பமாகி  தானிய வாசம் ,வாஸ்து சாந்தி ,,தூபி ஸ்தாபனம்  யாக பூஜைகள் இடம்பெற்று ஸ்ரீகண் திருஷ்டி கணபதி பிரதிஷ்டை செய்யப்பட்டு எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு  இடம்பெற்றது.

விநாயர் வழிபாடுகளுடன் விசேட யாக பூஜைகளுடன்     கும்பம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஸ்ரீ கண் திருஷ்டி கணபதி ஆலய மகா கும்பாபிஷேகம்  நிகழ்வுகள்  சிறப்பாக நடைபெற்றது.

IMG_6817.JPG

 

 

விநாயர் வழிபாடுகளுடன் விசேட யாக பூஜைகளுடன்     கும்பம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஸ்ரீ கண் திருஷ்டி கணபதி ஆலய மகா கும்பாபிஷேகம்  நிகழ்வுகள்  அடியார்கள் புடை சூழ   அடியார்களின் ஆரோகரா கோசங்களுடன்  கோலாகலமாக நடைபெற்றது .

தொடர்ந்து பிரதான  கும்பம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மூல மூர்த்தியாகிய  கணபதிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது .பிரதிஸ்டா மகா கும்பாபிஷேக விஞ்ஞாபன பிரதம குரு கள்ளியங்காடு ஸ்ரீ ஆஞ்சநேய ஆலய பிரதம குரு சிவஞான திலகம் சிவஸ்ரீ உத்தம ஜெகதீஸ்வரக் குருக்கள் தலைமையில்  நடைபெற்ற  மகா கும்பாபிஷேக விஞ்ஞாபன  நிகழ்வில் ஜெயந்திபுரம் கிராம  மக்கள்  கலந்து சிறப்பித்தனர் .

https://www.virakesari.lk/article/64348

IMG_6824.JPG

IMG_6857.JPG

IMG_6871.JPG

  • தொடங்கியவர்

"பௌத்த விகாரை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஸ்ரீ கண் திருஷ்டி கணபதி  ஆலயத்தின்..."

 

நீண்ட கால அடிப்படையில் இதனால் சைவர்களுக்கு பாதிப்பு என நாம் எண்ணலாம்.

ஆனால், நிகழ்காலத்திற்கு உதவும். இது சைவத்தை அது சார்ந்த மொழி, கலாச்சாரத்தை இன்றுடன் அழிக்கப்படாமல் வைத்திற்குக்க உதவும். இன்று இருந்தால் தான் நாளை பற்றி எண்ணலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ampanai said:

நீண்ட கால அடிப்படையில் இதனால் சைவர்களுக்கு பாதிப்பு என நாம் எண்ணலாம்.

ஆனால், நிகழ்காலத்திற்கு உதவும். இது சைவத்தை அது சார்ந்த மொழி, கலாச்சாரத்தை இன்றுடன் அழிக்கப்படாமல் வைத்திற்குக்க உதவும். இன்று இருந்தால் தான் நாளை பற்றி எண்ணலாம்.

புத்த பெருமானைச் சைவர்களும், சைவக்கடவுளரை பெளத்தர்களும் வணங்கிக் கொண்டாடுவது, இலங்கையில் தொன்றுதொட்டு நடைபெற்றுவரும் நிகழ்வு. இன்று கேடுகெட்ட சில அரசியல்வாதிகள் தோற்றம்பெறும் வரையில், அவரவர் மொழிக்கும் கலாச்சாரத்திற்கும் இடையூறுகள் ஏற்பட்டதாகவும் தெரியவில்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ.... இது, இறால்  போட்டு... சுறா பிடிக்கிற மாதிரி இருக்கு.
நாளைக்கு சைவ கோவிலுக்குள், ஒரு மூலையில்  புத்தரை வைத்து மத நல்லிணக்கம் செய்வம்  என்று,
புத்த பிக்குமார் ஆரம்பித்தால்.... அதனை தடுக்க முடியாமல், போகும்.
கதிர்காம கந்தனுக்கு நடந்த மாதிரி, மூலக்  கடவுளை ´...  ஒரு மூலையில்  இருத்தி விடுவார்கள். :grin:

சிங்களவன் லேசுப்  பட் ட ஆள் இல்லை. அவன் செய்யும் ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும்,
பெரிய காரண, காரியங்கள் இருக்கும். சூதனமாக  நடந்து கொள்ளுங்கோ.....

Edited by தமிழ் சிறி

கண்டி தலதாமாளிகளியில் சம முக்கியத்துவம் கொடுத்து சர்ச்சும், கோவிலும், மசூதியும் கட்டும் போது தான் உண்மையான மத நல்லிணக்கத்துக்கு முதற்படியாக அமையும்.

  • தொடங்கியவர்

முதன்மை மதமாக பௌத்தம் ஒரு பல்லின மத சமூக நாட்டில் இருப்பதே இந்த நாட்டின் சாபக்கேடுகளில் ஒன்று. இருந்தாலும் இந்த முயற்சி  பாராட்டுக்குரியதே.

  • கருத்துக்கள உறவுகள்

மதம்பிடித்தால் அந்த மதத்தால் ஆட்கொண்ட மனிதர்கள் செய்வது என்னவென்று அவர்களுக்கே தெரியாது. மதம்கொண்ட யானைபோல் செயற்பட்டு மனிதவாழ்வையே  நாசம் செய்துவிடுவார்கள். அதனால்தான் எம் முன்னோர்கள் சைவத்தை மதம் என்று பெயரிட்டு அழைக்காது சைவ சமயம் என்று அழைத்தார்களோ.?  

  • கருத்துக்கள உறவுகள்

ஐயர் புத்தருக்கு அபிசேகம் செய்திருக்க வேணும்....

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

ஐயர் புத்தருக்கு அபிசேகம் செய்திருக்க வேணும்....

ஐயர் பிராமண குலவழி வந்தவராக இருந்தால் வரும்படி இல்லாமல் செய்யமாட்டார். :shocked:

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Paanch said:

ஐயர் பிராமண குலவழி வந்தவராக இருந்தால் வரும்படி இல்லாமல் செய்யமாட்டார். :shocked:

அதுதான் அவையள் புத்தரை தூக்கிபிடிக்கவில்லை என்று நினைக்கிறன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

அதுதான் அவையள் புத்தரை தூக்கிபிடிக்கவில்லை என்று நினைக்கிறன்

பாவம் புத்தர். 😢

அவரைத் திருப்பதிக்குக் கொண்டுசென்று பிரதிட்டை செய்தால் என்ன....? :100_pray:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.