Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமைதிக்கான நோபல் பரிசை வென்றார் எத்தியோப்பிய பிரதமர் அபி அஹ்மத்

Featured Replies

அமைதிக்கான நோபல் பரிசை வென்றார் எத்தியோப்பிய பிரதமர்

படத்தின் காப்புரிமைREUTERS

2019ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு எத்தியோப்பிய பிரதமர் அபி அஹ்மத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

"அமைதியை நிலைநாட்டவும், சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும்" நடவடிக்கைகளை எடுத்ததற்காக அபிக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1998-2000 இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற எல்லைப் போரைத் தொடர்ந்து, ஏரிட்ரேயாவுடன் 20 ஆண்டுகாலமாக எத்தியோப்பியாவுக்கு நிலவி வந்த ராணுவ ரீதியிலான சிக்கலை கடந்த ஆண்டு சமாதான ஒப்பந்தத்தின் மூலம் இவர் முடிவுக்கு கொண்டுவந்தார்.

அமைதிக்கான நோபல் பரிசை பெறும் 100ஆவது நபர்/அமைப்பு எனும் பெருமையை அபி அஹ்மத் பெற்றுள்ளார்.

வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள விழாவில், அபிக்கு நோபல் பரிசுடன் இந்திய மதிப்பில் சுமார் ஆறரை கோடி ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்படும்.

இந்தாண்டுக்கான நோபல் பரிசுக்கு 223 தனிநபர்கள், 78 அமைப்புகள் உள்பட 301 பரிந்துரை விண்ணப்பங்கள் வந்திருந்தன.

மற்ற துறைகளுக்கான நோபல் பரிசுகளை விட இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகளவில் நிலவியது.

https://www.bbc.com/tamil/global-50014805

 

யார் இந்த அபி அஹ்மத்?

அமைதிக்கான நோபல் பரிசை வென்றார் எத்தியோப்பிய பிரதமர்

படத்தின் காப்புரிமைGETTY IMAGES

மிகவும் இறுக்கமாக கட்டுப்படுத்தப்பட்ட நாடாக இருந்து வந்த எத்தியோப்பியாவின் பிரதமராக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பதவியேற்ற அபி, அந்நாட்டில் தாராளவாத சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார்.

ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்களை சிறையில் இருந்து விடுவித்ததுடன், நாடுகடத்தப்பட்ட அதிருப்தியாளர்களை நாடு திரும்புவதற்கு அனுமதி அளித்தார். மிகவும் முக்கியமாக, எத்தியோப்பியாவின் அண்டை நாடான ஏரிட்ரேயாவுடன் ஒரு சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் அந்நாட்டுடனான இரண்டு தசாப்த கால மோதலை முடிவுக்கு கொண்டுவந்தார்.

அதே சமயத்தில், இந்த சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக எத்தியோப்பியாவில் ஏற்பட்ட இன ரீதியிலான பதற்றம் மற்றும் அதைத்தொடர்ந்து நடைபெற்ற வன்முறைகளின் காரணமாக சுமார் 2.5 மில்லியன் மக்கள் தங்களது வீடுகளிலிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

பிற செய்திகள்:

 

 

  • தொடங்கியவர்

சிறந்த தெரிவாக தெரிகின்றனது.
இந்த தெரிவு, ஆசிய, ஆப்ரிக்க நாட்டு தலைவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும்.

இதன் மூலம், பல்லின சமூகங்கள் ஒடுக்கப்பட்டு வாழும் நாடுகளில் உள்ள தலைவர்களுக்கு நோபல் சபை ஒரு செய்தியை கூறியுள்ளது.

ஒரு தலைவராக மட்டும் இருக்காமல் ஒரு தேசிய சிற்பியாகவும் இருங்கள் என்று,

  • கருத்துக்கள உறவுகள்

எதியோப்பிய பிரதமர் அபி அஹமெட்டுக்கு 2019-சமாதானத்துக்கான நோபல் பரிசு

ஆபிரிக்காவை வளம்படுத்தும் புதிய தலைமுறை
சிவதாசன்

2019 ம் ஆண்டின் சமாதானத்துக்கான நோபல் பரிசு எதியோப்பிய பிரதமர் அபி அஹமட் அலிக்குக் கிடைத்திருக்கிறது. அயல் நாடான எறித்திரியாவுடனான நீண்டநாட் போரை முடிவுக்குக் கொண்டுவந்து நெடுங்கால சமாதானத்தை நிலைநட்டியமைக்காக அவருக்கு அப் பரிசு வழங்கப்பட்டிருப்பது நியாயமானது.

எதியோப்பியாவும் எரித்திரியாவும் நீண்டகால எதிரிகள். 1998 முதல் 2000 வரையில் எல்லைச் சண்டை தொடர்ந்துகொண்டிருந்தது. 2018 இல் தான் உறவு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

download-2-3.jpg
எதியோப்பியா

மேற்கு எதியோப்பியாவின் ஜிம்மா பிரதேசத்தில் முஸ்லிம் தந்தைக்கும் கிறிஸ்தவ தாய்க்கும் 1976 இல் பிறந்தவர் அபி. அப்போது ஆடிசியிலிருந்த மெங்கிஸ்து ஹேய்ல் மரியாமின் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் களமிறங்கிப் பின்னர் 1993 இல் இராணுவ உளவுப் பிரிவில் சேர்ந்து லெப்டினண்ட் கேணல் தரத்துக்கு உயர்ந்தவர்.

1994 ஆம் ஆண்டு றுவாண்டா இனப்படுகொலையின்போது ஐ.நா. பாதுகாப்புப் படையில் இணைந்து பணியாற்றியபின் 2010இல் ஒரோமோ மக்கள் ஜனநாயக அமைப்பில் இணைந்ததன் மூலம் அரசியலுக்குள் பிரவேசித்தார். 2018 இல், தனது 43 வயதில், பிரதமரானதும் பல சீர்திருத்தங்களை மிகவும் விரைவாகச் செய்து முடித்தார். அப்போதே எரித்திரியாவுடன் சமாதானப் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கப்போவதாக உறுதியளித்தார்.

காலனித்துவ ஆதிக்க சக்திகள் ஆபிரிக்கக் கண்டத்தை விட்டு அகன்ற போது அவர்கள் தங்களுக்குத் தேவையான வளங்களைத் தொடர்ந்தும் தடையின்றிச் சுரண்டுவதற்காகத் தமக்கு இசைவான இராணுவத் தலைவர்களை ஆட்சியில் இருத்தியதோடல்லாமல் தொடர்ந்தும் அவர்களை ஆட்சியில் இருத்துவதற்கான உதவிகளையும் செய்து வந்தார்கள்.

1970 களில் ஆரம்பித்த சிம்பாப்வேயின் புரட்சிகர மாற்றம் காலனித்துவ பிடியைத் தளர்த்த ஆரம்பித்தது. தென்னாபிரிக்காவின் மண்டேலா போன்றவர்களின் வருகையின் பின்னர் மாற்றம் மக்கள் மனதில் நம்பிக்கையைத் தந்தது. ஆபிரிக்காவை ஆபிரிக்கர்களே நிர்வகிக்கலாம் என்ற நம்பிக்கை விதைக்கப்பட்டது.

2000 ஆம் ஆண்டில் ருவாண்டா படுகொலையைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த இளைய தலைவரான போல் ககாமேயின் துணிச்சலான நடவடிக்கையின் மூலம் ஹூட்டு, டுட்சி குலங்களுக்கிடையேயான நீண்டகாலப் பகைமைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். சமாதானம் அன்நாட்டில் இப்போது தழைத்தோங்குகிறது. எதியோப்பியாவின் அபி அஹமெட் போல இவரும் ஒரு முன்னாள் இராணுவ வீரர்.

AP_18189375579061-640x400.jpg
ஜூலை 15, 2018 எரித்திரியாவிற்கும் எதியோப்பியாவிற்குமிடையில் சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. படத்தில் இடமிருந்து இரண்டாவதாக எரித்திரிய அதிபர் இசையாஸ் ஆப்வேர்கி, எதியோப்பிய பிரதமர் அபி அஹமெட் (படம்: AP)

2018 இல் அபி அஹமெட் பதவிக்கு வந்ததும் எரித்திரியாவின் அதிபர் இசையாஸ் ஆப்வேர்கியுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து சமாதான ஒப்பந்தமொன்றிற்கான அடித்தளத்தை உருவாக்கினார். அரச கட்டுப்பாட்டிலிருந்த பொருளாதாரத்தை முதலில் விடுவித்தார். ஆட்சியைத் தன் இரும்புக் கரங்களில் வைத்திருந்த இராணுவ கட்டமைப்பில் பல மாற்றங்களைக் கொண்டுவந்தார். 100 மில்லியன் மக்களது தளைகள் சிறுகச் சிறுகக் கழன்றன.

நாட்டின் பிரதமராக வந்து 100 நாட்களில் அவசரகாலச் சட்டத்தை நீக்கினார். ஆயிரக் கணக்கான அரசியல் கைதிகளுக்குப் பொதுமன்னிப்புக் கொடுத்தார். ஊடகத் தணிக்கையை மீளப் பெற்றார். தடைசெய்யப்பட்ட எதிர்க்கட்சிகளைச் சட்டபூர்வமாக்கினார். ஊழல் பேர்வழிகளை வீட்டுக்கு அனுப்பினார். பெருமளவிலான பெண்கள் அரசியலிலும், சமூகத் தளங்களிலும் இடம்பெற ஊக்கம் கொடுத்தார். இவையெல்லாவற்றையும் ஆட்சியேற்று ஒரு வருடத்தில் செய்து முடிக்க நெஞ்சில் உறுதியும், னேர்மையிம் திறனும் வேண்டும். இந்த இளைய தலைமுறைத் தலவருக்கு அது இருக்கிறது.

எதியோப்பியா மட்டும் முன்னேறவில்லை ஆபிரிக்காவையும் இழுத்துச் செல்கிறது. நமது நாடுகளிலும் இப்படியான தலைவர்கள் தேவை.

பிரதமர் அபி அஹமெட்டுக்கு வாழ்த்துக்கள்!

https://marumoli.com/எதியோப்பிய-பிரதமர்-அபி-அ/?fbclid=IwAR1B-cGf7xzPhO5uVawTwHmF5S7oAy8zcC5X2ThJYLGQg-7JPMidLklYrK0

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.