Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்காலில் மீண்டும் ஒரு பேரவலம் ; உணவின்றி பசியுடன் பாடசாலை செல்லும் மாணவர்கள்

Featured Replies

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றிற்கு தினமும் உணவு இன்றி 24 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் செல்கின்றனர். மேற்பிரிவு மாணவர்களான தாய் தந்தையை இழந்து உறவினர்களுடன் வசித்து வரும் இவ்வாறான மாணவர்களே தினமும் பாடசாலைக்கு உணவு இன்றி பசியுடன் செல்கின்றனர். 

IMG-cb4d7caef7244bb893dbe1af88b7b06b-V.j

இதனால் அவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு இடையூறுகள் ஏற்படுவதுடன் இச் செயற்பாட்டினால் மாணவர்கள் சிலர் பல்வேறு சட்டவிரோதமான செயற்பாடுகளை முன்னெடுக்க தூண்டுவதாகவும் மாணவச்சமூகம் ஒரு சீர்கேடான நிலைக்குத்தள்ளப்பட்டு வருவதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.விக்கினேஸ்வரன் தமது பாடசாலையின் மாணவர்களின் தேவை கருதியும் தற்போது பருகிவரும் குடிநீரில் இரும்பு பொருட்கள், அமிலங்கள் கலந்து கொண்டுள்ள காரணத்தினால் மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க முடியாமலிருப்பதாகவும் குடிநீரை வடிகட்டி மாணவர்களுக்கு வழங்க குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரம் பாடசாலைக்கு வழங்குமாறு விடுத்த கோரிக்கையினப்படையில் அங்கு சென்ற வன்னி மக்களின் காப்பகத்தின் தமிழ் சிங்கள சகோதரர்களிடம் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

பல்வேறு பௌதீகவள குறைபாடுகளுடன் இயங்கிவரும் குறித்த பாடசாலைக்கு அவசியத் தேவையான குடி தண்ணீர் சுத்திகரிக்கும் இயந்திரத்தினை முதலில் பெற்றுத்தருவதாக அங்கு சென்ற பிரதிநிதிகளால்  அதிபருக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு ஆனந்தபுரம் பாடசாலையின் அதிபரினால் விடுக்கப்பட்ட கோரிக்கையினடிப்படையில் அங்கு சென்று மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிக்கவும் அப்பாடசாலையில்  இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் ஒன்பது மாணவர்கள் பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்கள். 

அவர்களுக்கு மதிப்பளிப்பதற்கும் மாணவர்களை கௌரவிப்பதற்கும் உதவி வழங்குமாறு பாடசாலையின் அதிபரினால் விடுக்கப்பட்ட கோரிக்கை ஏற்றுக்கொண்டு அதற்கான நிதி உதவிகளை வழங்குவதாகவும் பாடசாலை சென்ற பிரதிநிதிகளினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/67800

  • கருத்துக்கள உறவுகள்

இத்தகைய அவலம் போராளிகளின் இரத்தம் தோய்ந்த பணத்தை வைத்திருக்கிறவர்களின் வம்சத்தையே தின்றுவிடும். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, poet said:

இத்தகைய அவலம் போராளிகளின் இரத்தம் தோய்ந்த பணத்தை வைத்திருக்கிறவர்களின் வம்சத்தையே தின்றுவிடும். 

உங்கள் சாபம் பலிக்கட்டும்.  ஆனால் எங்கள் மீதும் சாபம் விழாதிருக்க நாங்களும் ஏதாவது செய்யவேண்டுமல்லவா ? 

Edited by Maharajah
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்

சமயக் காவலர்களும்,  சமயம் பரப்ப போராடுவோரும் இவர்களுக்கு எங்களால் முடிந்ததை செய்ய முன் நிற்கலாமே.  முன்வருவீர்களா  ? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.