Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாய்லாந்தில் பிரதமர் மோடி, திருக்குறள் நூலை வெளியிட்டார்

Featured Replies

தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளை வெளியிட்டார். 

தாய்லாந்துக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற சவாஸ்தி பிஎம் மோடி எனும் இந்திய வம்சாவளியினர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது தாய்லாந்து மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளை அவர் வெளியிட்டார். மேலும் சீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு குருநானக்கின் 550ஆவது பிறந்த தினத்தையொட்டி நினைவு நாணயத்தையும் மோடி வெளியிட்டார்.

இதையடுத்து அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான இந்திய வம்சாவளி மக்கள் மத்தியில் பேசிய மோடி வணக்கம் என்று கூறி உரையை தொடங்கினார். இந்தியா-தாய்லாந்து இடையே நிலவும் சிறந்த நட்புறவை கண்டு தாம் மிகவும் பெருமைப்படுவதாக அவர் தெரிவித்தார்.

தாய்லாந்தில் இருப்பது தமது சொந்த வீட்டில் இருப்பது போன்ற உணர்வை தருவதாகவும், இந்தியாவுடன் தாய்லாந்து அரச குடும்பத்தினருக்கு இருக்கும் உறவு, இருநாடுகள் இடையேயான வரலாற்று ரீதியிலான உறவுகளையும், ஆழ்ந்த நட்புறவையும் வெளிப்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

மொழியின் அடிப்படையில் மட்டுமல்லாமல், உணர்வுகள் அடிப்படையிலும் இந்தியாவும், தாய்லாந்தும் ஒன்றே என்றும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து, நாளை நடைபெறும் ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.

இதேபோல, இந்தியா, சீனா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு இடையேயான விரிவான பொருளாதார கூட்டை ஏற்படுத்துவது தொடர்பான உச்சி மாநாடும், 14ஆவது கிழக்காசிய உச்சி மாநாடும் வரும் 4ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாடுகளிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

https://www.polimernews.com/dnews/87206/தாய்லாந்தில்-பிரதமர்-மோடி,திருக்குறள்-நூலைவெளியிட்டார்

  • கருத்துக்கள உறவுகள்

பிஜேபி செம்புகளின் வேலை..

pjimage--23--jpg_1200x630xt.jpg

  • கருத்துக்கள உறவுகள்

கண்டனத்துக்குரியது

‘செந்நாப் போதார்’ திருவள்ளுவருக்குக் காவி உடையா? வைகோ எதிர்ப்பு

செந்நாப் போதார்' திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவித்து, மதச் சாயத்தைப் பூசி பா.ஜ.க. டிவிட்டரில் படம் வெளியிட்டு இருப்பது கண்டனத்துக்கு உரிய செயலாகும் என மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்பியுமான வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை....

சென்னையில் சாலை விதிகளை மீறுவோருக்கு, போக்குவரத்துக் காவல்துறை வழங்கும் ரசீதுகளில் இந்தி, ஆங்கில மொழி மட்டுமே இடம் பெற்று இருக்கிறது. "இந்தி மொழி இடம் பெற்ற அபராத ரசீதுகளை மத்திய அரசின் தேசிய தகவல் மையம் வடிவமைத்து, அதனை தமிழகத்தில் பயன்படுத்திட உத்தரவிடப்பட்டிருக்கிறது. முற்றிலும் தமிழைப் புறக்கணித்துவிட்டு அபராத ரசீதுகளைத் தயாரித்து இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.

தமிழக மக்கள் இச்செயலை மன்னிக்கவே மாட்டார்கள். பிரதமர் மோடி, அவ்வப்போது தமிழ் மொழியின் பெருமையை பறைசாற்றிக் கொண்டே இருக்கும்போது, இன்னொரு பக்கத்தில் தமிழ் மொழியை அழிக்கும் செயலில் பா.ஜ.க அரசு ஈடுபட்டு இருக்கிறது.

கடந்த செப்டம்பர் 14 இல் இந்தி நாளில், இந்திதான் இந்தியாவின் தேசிய மொழியாக இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். இத்தகைய சூழலில், தமிழக அரசு இந்தியை நடைமுறைப்படுத்தத் தீவிரம் காட்டும் செயல் தமிழ் நாட்டு இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவிடும். எனவே தமிழக அரசு இந்தித் திணிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற மனிதத் தத்துவத்தை நிலைநாட்டிய திருக்குறள், உலகப் பொதுமறையாகப் போற்றப்படுகிறது. நாடு, மொழி, இன, மத வேறுபாடுகள் இன்றி அனைவரும் பின்பற்றக் கூடிய வாழ்வியல் நெறியை போதிப்பதால்தான் திருக்குறள் மனித சமூகத்தின் வழிகாட்டும் நூலாகத் திகழ்கின்றது.

லத்தீன், ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு உள்ளிட்ட உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறப்பு திருக்குறளுக்குத்தான் இருக்கிறது. எனவேதான் "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என்று மகாகவி பாரதி பொருத்தமாகப் பாடினார்.

அத்தகைய திருக்குறளைத் தந்த ‘செந்நாப் போதார்' திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவித்து, மதச் சாயத்தைப் பூசிய பா.ஜ.க. இது தொடர்பான படம் டிவிட்டரில் வெளியிட்டு இருப்பது கண்டனத்துக்கு உரிய செயலாகும்.

திருக்குறள் நெறியை இந்துத்துவ ‘சிமிழுக்குள்' அடக்க நினைக்கும் மதவாத சனாதன சக்திகளின் இதுபோன்ற பண்பாடற்ற செயல்பாடுகளை பா.ஜ.க. நிறுத்த வேண்டும். இல்லையெனில் தமிழக மக்கள் மென்மேலும் கோபாவேசமாய் கொதித்து எழுந்து பதிலடி கொடுப்பார்கள் என்று என்று தெரிவித்துக்கொள்கின்றேன். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/vaiko-condemns-saffronising-thiruvalluvar-367387.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.