Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகாப், புர்கா அணியலாம்; ஆளடையாளத்தை நிரூபிக்க வேண்டும்

Featured Replies

a4.jpg?itok=5G65tEtH

ஜனாதிபதி தேர்தலின் பொது வாக்களிக்கச் செல்லும் முஸ்லிம் பெண்கள் புர்கா, நிகாப் ஆகியவற்றை அணிந்து சென்றால் வாக்களிப்பு நிலையத்தில் அவர்களது ஆளடையாளத்தை நிரூபிக்கும் பொருட்டு அவற்றை நீக்கி முகத்தை முழுமையாக அடையாளப்படுத்துவது அவசியம் என உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சிரீன் பொரலஸ்ஸ தெரிவித்தார்.  

அடையாளத்தை உறுதி செய்து கொண்டதன் பின்னரே அவருக்கு வாக்குச் சீட்டு வழங்கப்படும் எனவும் பிரதி ஆணையாளர் குறிப்பிட்டார்.  

அடையாளத்தை உறுதிப்படுத்த தேசிய அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணைக்குழுவினால் அங்கிகரிக்கப்பட்ட, வெளிநாட்டு கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம், ஓய்வுபெற்ற அடையாள அட்டை, முதியோர்ர் (சிரேஷ்ட பிரஜை) அடையாள அட்டை, மதத்தலைவர்களுக்கான அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிப்பதன் மூலம் வாக்களிக்க முடியும்.  ஆனால், முகத்தை மூடிக்கொண்டுவருவோர், தாம் அணிந்திருக்கும் நிகாப், புர்கா போன்ற முகத்தை மூடியுள்ள அங்கியை அகற்றி அதிகாரியால் அடையாளத்தை உறுதிப்படுத்த உதவவேண்டும்.  பதுகாப்புக் கடமைகளிலிருக்கும் அதிகாரிகளுக்கும் வாக்களிப்பு நிலைய அதிகாரிகளுக்கும் தமது அடையாளத்தை விரைவாக உத்தரவாதப்படுத்துவதன் மூலம் வாக்களிப்பை விரைவாக முடித்துக் கொண்டு திரும்ப முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.    

 

http://www.thinakaran.lk/2019/11/13/உள்நாடு/43809/நிகாப்-புர்கா-அணியலாம்-ஆளடையாளத்தை-நிரூபிக்க-வேண்டும்

12 hours ago, ampanai said:

ஜனாதிபதி தேர்தலின் பொது வாக்களிக்கச் செல்லும் முஸ்லிம் பெண்கள் புர்கா, நிகாப் ஆகியவற்றை அணிந்து சென்றால் வாக்களிப்பு நிலையத்தில் அவர்களது ஆளடையாளத்தை நிரூபிக்கும் பொருட்டு அவற்றை நீக்கி முகத்தை முழுமையாக அடையாளப்படுத்துவது அவசியம் என உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சிரீன் பொரலஸ்ஸ தெரிவித்தார்.  

அடையாளத்தை உறுதி செய்து கொண்டதன் பின்னரே அவருக்கு வாக்குச் சீட்டு வழங்கப்படும் எனவும் பிரதி ஆணையாளர் குறிப்பிட்டார்.  

முஸ்லிம்களின் மதவெறியை சிங்கள அரச இயந்திரம் எக்காலத்திலும் அனுமதிக்காது!
ஹக்கீம்கள், பதியுதீன்கள் வாய் திறக்கமாட்டார்கள்.

அந்த நாட்களில் முஸ்லீம் பெண்கள் சாரி உடுத்தி முக்காடு போடுவார்கள். இப்போ இவர்கள் ஏதோ அரபு நாடுகளில் இருந்து வந்தவர்கள்போல எல்லாம் மூடி உடுத்துகிறார்கள். தீவிரவாதிகள் பணத்தை அனுப்பி இங்குள்ளவர்களையும் பயங்கரவாதிகளாக மாத்துகிறார்கள். அந்த பணத்தில்தான் மதரஸாக்கள் ஷரியா பல்கலைக்கழகம் முஸ்லீம் குடியேற்றங்கள் எல்லாம் நடக்கின்றன. வன்னியில் றிஷாத்தும் கிழக்கில் ஹிபுள்ளவும் இதை தலைமை தங்கி நடத்துகிறார்கள். இலங்கை அரசாங்கம் இதட்கு ஒரு முடிவு கடட வேண்டும். 

  • தொடங்கியவர்

சகல முஸ்லிம்களிடமும் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாசபையின் வேண்டுகோள்

(எம்.ஆர்.எம்.வஸீம்)

நேரகாலத்துடன் வாக்களித்துவிட்டு  தாமதிக்காது தத்தமது வீடுகளுக்கு திரும்புமாறும் தேர்தல் சட்ட திட்டங்களை மதிக்கும் வகையில் முகத்திரை அணியும்  பெண்கள் வாக்குச்சாவடிக்குள் நுழையும்போது முகத்திரையை நீக்கி  ஆளடையாளத்தை உறுதிப்படுத்தும்வகையில் தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாசபை சகல முஸ்லிம்களையும் கேட்டுக்கொள்கின்றது.

இதுதொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பிரதித்தலைவர் அஷ்ஷேக் ஏ.ஸீ. அகார் முஹம்மத் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுள்ளதாவது,

தேர்தல் தினத்தன்று வாக்குரிமை பெற்ற அனைவரும் மாலை வரை தாமதிக்காமல் காலையில் நேர காலத்துடன் வாக்குச்சாவடிக்களுக்குச் சென்று தாம் விரும்புகின்ற வேட்பாளருக்கு வாக்களிப்பதில் கவனமெடுக்குமாறும் வாக்குச்சாவடியில் கடமையில் ஈடுபட்டிருக்கும் உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை சிறப்பாகச் செய்வதற்கு ஒத்தாசையாக நடந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

JAMIYYATHULULAMA.jpg

அத்துடன்  வாக்களிக்கும்போது தமது ஆள்அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான தேசிய அடையாள அட்டை போன்ற அனுமதிக்கப்பட்ட ஆவணங்களை தம்முடன் வைத்துக் கொள்ளுமாறும் வேண்டிக் கொள்கின்றோம்.

மேலும் வாக்குச் சாவடிக்குள் நுழையும் போதே ஆள்அடையாளத்தை உறுதிப்படுத்தும் அவசியம் இருப்பதால், குறிப்பாக முகத்திரை அணியும் பெண்கள் வாக்குச் சாவடிக்குள் நுழையும்போது அவர்களது முகத்திரையை நீக்கி  ஆள்அடையாளத்தை உறுதிப்படுத்தி தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

பொதுவாக பெண்கள் வாக்குச் சாவடிக்குச் செல்லும்போது தனியாகச் செல்லாமல் மஹ்ரமான ஆணுடன் செல்லுமாறும் முடிந்தளவு வாகனத்தில் செல்வதற்கு ஒழுங்கு செய்து கொள்ளுமாறும் வாக்களித்தவுடன் தாமதிக்காது தத்தமது வீடுகளுக்கு திரும்புமாறும் வேண்டிக்கொள்கின்றோம். இவ்வாறு நடந்து கொள்வதன் மூலம் வீணான பிரச்சினைகள் உருவாகுவதைத் தடுக்க வழியாக அமையும் என்பதை ஆலோசனையாக முன்வைக்கின்றோம்.

அத்துடன் வாக்களித்த பின்னர் வீதிகளில் கூடி நின்று வீணாக நேரத்தைக் கழித்துக் கொண்டிருக்காமல் பயனுள்ள பணிகளில் ஈடுபடுமாறும் தேர்தலில் வெற்றி பெறுபவர் நாட்டை நேசிக்கின்ற, குடிமக்களின் நலனுக்காக உழைக்கின்ற, நாட்டைக் கட்டியெழுப்பும் உணர்வும் வல்லமையும் மிக்கவராக இருப்பதற்கு பிரார்த்தனைகளில் ஈடுபடவேண்டும். இதுதொடர்பாக  உலமாக்கள், மஸ்ஜித் நிருவாகிகள் ஜம்இய்யாவின் பிரதேச கிளை உறுப்பினர்கள்  மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.