Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளைஞர் - யுவதிகளை ஒன்றிணைத்து தேசிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்போம்

Featured Replies

-க. அகரன்

எதிர்வரும் காலங்களில் இளைஞர் - யுவதிகளை முன்னிறுத்தி, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவித்த ஈழவர் ஜனநாயக முண்ணனியின் தலைவர் க. துஷ்யந்தன், அவர்களை அரசியல் ரீதியாக  ஒன்றிணைத்து, தமிழ் - சிங்கள மக்களிடையே சகோதர ஒற்றுமையை உருவாக்கி, தமக்கு இருக்கின்ற அடிப்படை, தேசிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் செயற்பாட்டில் ஈடுபடவுள்ளதாகவும் கூறினார்.

வவுனியாவில், இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், தமிழ் மக்களின் முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுடனான சந்திப்பின் போது, விரிவாக பேசியிருந்ததாகவும் அதற்கு பசில் சாதகமான பதில்களை தமக்கு வழங்கியிருந்தாரெனவும் தெரிவித்தார். 

கோட்டாபயவுக்கு தமிழ் மக்கள் அதிகமாக வாக்களிப்பார்களென்று எண்ணியிருந்ததாகத் தெரிவித்த அவர், ஆனால் அது நடைபெறவில்லையெனவும் கூறினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் அரசியல் வாழ்க்கை இப்போதுதான் ஆரம்பித்திருப்பதாகத் தெரிவித்த அவர், எதிர்கால செயற்பாட்டின் மூலம் தான், மக்களின் மனங்களை அவரால் வெல்லமுடியுமெனவும் கூறினார்.

இன்று அமைந்திருக்கின்ற இந்தப் புதிய அரசாங்கம், தமிழர்களின் பிரச்சினைகளில் கூடிய கவனம் செலுத்துமென நம்புவதாகவும், துஷ்யந்தன் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகளுக்கு எதிராக அநல்லாட்சி அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லையெனவும் இதனாலேயே நல்லாட்சி அரசாங்கத்துக்கு தாம் ஆதரவை வழங்கவில்லையெனவும், அவர் கூறினார்.

http://www.tamilmirror.lk/வன்னி/இளைஞர்-யுவதிகளை-ஒன்றிணைத்து-தேசிய-பிரச்சினைகளுக்குத்-தீர்வு-காண்போம்/72-241196

  • தொடங்கியவர்

சிங்கள, தமிழ் சமூகங்களையும் ஒன்றிணைக்கும் தேசிய தேவையின் முயற்சியில் ஜனாதிபதி வெற்றியடையவேண்டும் சி.வி.கே.சிவஞானம்

சிங்கள, தமிழ் சமூகங்களையும் மிகத் துரிதமாக ஒன்றிணைக்கும் தேசிய அவசியத் தேவையின் முயற்சியில் ஜனாதிபதி வெற்றியடையவேண்டும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்

 

இது தொடர்பில் அவரது கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை நாட்டின் ஏழாவது நிறைவேற்று அதிகாரமுடைய  ஜனாதிபதியாக தாங்கள் தெரிவு செய்யப்பட்டமை குறித்து எமது பாராட்டுக்களை தெரிவித்து மகிழ்ச்சியடைகின்றேன்.

மும்மக்களின் ஆசீர்வாதம் தங்களுக்கு கிடைக்க வேண்டும்.தாங்கள் சத்தியப் பிரமாணம் செய்ததும் நாட்டு மக்களுக்கு அற்றிய உரையை கேட்ட பின்பே இக்கடிதத்தை எழுதுகிறேன்.

தங்களுக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்பதற்கு அப்பால் தாங்கள் இந்த முழு நாட்டுக்குமான ஜனாதிபதியாவீர்கள் என்ற தங்களது கூற்றை மிகவும் பாராட்டுகின்றேன்.

கணிசமான எண்ணிக்கையிலான தமிழ் மக்கள் தங்களுக்கு வாக்களிக்காமை பற்றிய தங்களது ஏமாற்றத்தை தாங்கள் நேரடியாகவே வெளிப்படுத்தியமை வரவேற்கத்தக்கது.

தமிழர்கள் ஆகிய நாம் இனவாதிகள் அல்ல என்பதை தங்களுக்கு வலியுறுத்த விரும்புகிறேன்.

உண்மையாகவே ஒன்றிரண்டு தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்ட போதும் அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் ஒரு சிங்கள பௌத்த தலைவருக்கே நாம் எப்பொழுதும் வாக்களித்திருக்கின்றோம்.

ஒரு பொறுப்பு வாய்ந்த இந்த நாட்டின் குடிமகன் என்ற வகையில் முன்னைய எல்லா தேர்தல்களையும் பார்க்க இந்த தேர்தலில் தமிழர்களும், சிங்களவர்களும் துருவமயப்பட்டுள்ளமை பற்றி கவலையடைகிறேன்.

எனது விசுவாசமான அபிப்பிராயத்தில் சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களையும் மிகத்துரிதமாக ஒன்றிணைக்கும் சவாலுக்குத் தாங்கள் முகம் கொடுக்கின்றீர்கள் எனக்கருதுகின்றேன்.

இந்த தேசிய அவசியத் தேவையின் முயற்சியில் தாங்கள் வெற்றியடைவீர்கள் என நம்புகின்றேன்.

மிக அவசியமான பல்வேறு விடயங்கள் உள்ள போதும் சுமார் எழுபதாயிரம் வரையிலான யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்தவக் குடும்பங்கள் சுய ஆதரவில் வாழ்வதற்கான புனர்வாழ்வுத்திட்டமொன்றை உடன் வகுத்து அமுல் செய்யும்படி தங்களிடம் வேண்டிக் கொள்கின்றேன். 

தாங்கள் கூறியபடியும் தேர்தலகள் ஆணைக்குழுவின் தலைவர் வேண்டிக் கொண்டபடியும் மாகாண சபைகள் தேர்தலை கூடிய விரைவில் நடாத்த நடவடிக்கை எடுப்பீர்கள் எனவும் நம்புகின்றேன் என்றுள்ளது.

https://www.virakesari.lk/article/69255

  • தொடங்கியவர்

வட கிழக்கிற்கும் தெற்கிற்கும் இடைவெளியை குறைப்பதற்கான ஆணையை பெரும்பான்மை மக்கள் வழங்கியுள்ளனர் - ஜனகன்

கோத்தாபய ராஜபக்சவின் வெற்றி இந்த நாட்டில் வடக்கு மற்று கிழக்குக்கும் தெற்கும் இடையில்இருக்கும் பாரிய இடைவெளியினை குறைப்பதற்கு உதவும் என்று நம்புகிறேன் என ஜனநாயக மக்கள்முன்னணியின் அமைப்புச் செயலாளரும் அக்கட்சியின் வன்னி தேர்தல் மாவட்ட அமைப்பாளர் ஜனகன் விநாயகமூர்த்தி தெரிவித்தார்.

 

janagan.jpg

அவர் மேலும் குறிப்பிடும் போது.. 

தொலைத்த இடத்தில் தான் தேட வேண்டும் என்று கூறுவார்கள். அந்த அடிப்படையில் பெருபான்மை மக்களின்ஆணித்தரமான ஆணையினைப் பெற்ற ஜனாதிபதிக்கு வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ்மக்களுக்கும் தெற்கில் வாழும் பெரும்பான்மை மக்களுக்குமான இடைவெளியினை குறைத்து தன்னுடைய வரலாற்றுச் சாதனையாகச் செயற்படுத்த முடியும் என்று நம்புகிறேன். போர் முடிவுக்கு கொண்டுவந்த பிறகும்கூட இந்த இடைவெளியினை அன்றைய அரசு காலத்தில் நிரப்ப முடியவில்லை என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டுகிறது. 

இன்று வடக்கு, கிழக்கு உட்பட தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் பிரதேசத்தில் கோத்தாபய ராஜபக்சவுக்கு வாக்கு வழங்கி இல்லாது போனது அந்த மக்கள் போர் முடிந்த பிறகு இருந்த சூழ்நிலையினால் ஏற்பட்ட அவநம்பிக்கையை மட்டுமே காட்டுகிறது.

ஆகவே ஒரு நாட்டின் தலைவராக இந்த மக்களின் அவநம்பிக்கையினை இல்லாமல் செய்வதற்கு பெருபான்மை மக்களின் ஏகோபித்த ஆதரவும் உதவும் என்று நம்புகிறோம். 

இந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள், தமிழ்தேசிய கூட்டமைப்பு உட்பட அனைத்து தமிழ் கட்சிகள் மற்றும் தலைமைகளின் கோரிக்கைகளுக்கு உட்படாமல் தமது சொந்த முடிவில் தங்கள் அவநம்பிக்கையின் வெளிப்பாட்டையே வாக்குகளாக வழங்கிஉள்ளார்கள் என்பதை ஆட்சி அமைப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

அதேவேளை மீண்டும் தமிழ் பேசும்மக்களால் புறக்கணிக்கப்பட்ட தலைமைகளை புதிய அரசின் பக்கம் முழுமையாக உள்வாங்கப்பட்டால் மக்களின் அவநம்பிக்கை தொடரும் என்பதையும் அதனால் நாம் இலங்கையர் என்ற எண்ணம் தமிழ் பேசும்மக்கள் மத்தியில் உருவாவது மந்தம் அடையும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். 

இதே சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச,  தனது உத்தியோகபூர்வ டுவிட்டர்தளத்தினூடாக இந்த புதிய ஜனாதிபதி மீதோ அல்லது அமையப்போகும் அரசாங்கத்தின் மீதோ வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் அச்சமோ அவநம்பிக்கையோ அடைய வேண்டிய அவசியமில்லை எனக்குறிப்பிட்டதை வரவேற்க வேண்டும். இளைய தலைமுறை இரண்டு பக்கத்திலும் முற்போக்குடன் சிந்திப்பதை இது எடுத்துக்காட்டுகின்றது. 

மேலும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தங்களுடைய ஒற்றுமையினை இந்த தேர்தலில் வலிமையாகக்காட்டியுள்ளார்கள். இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு தன்னுடைய வெற்றியாகப் பார்க்குமானால் அதற்கானபதிலையும் பாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கு மக்கள் வழங்குவார்கள் என்று நம்புகிறேன் என்று அவர்குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/69254

1 hour ago, ampanai said:

வட கிழக்கிற்கும் தெற்கிற்கும் இடைவெளியை குறைப்பதற்கான ஆணையை பெரும்பான்மை மக்கள் வழங்கியுள்ளனர் - ஜனகன்

இவரின் மூளை என்னமா சுருண்டு சுருண்டு வேலைசெய்யுது🤣🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.